siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 19 நவம்பர், 2014

நவக்கிரி புத்தூர் கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலம் மீட்பு

யாழ். நவக்கிரிபுத்தூர்ரயை சேர்ந்த பெண்ணொருவர் 17.11.14. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்திருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் கொள்ளை!

குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற கார் ஒன்றில் நேற்று  மாலை 3.45 அளவில் வருகை தந்த சிலரே ஆலயத்தில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாவத்தகம  பரந்தன வீதியிலுள்ள அம்மன் கோவிலிலே பெறுமதியான தங்க நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் கொள்ளையிடப்பட்டுள்ள பணம் மற்றும் தங்க நகைகளின் மொத்த பெருமதி இதுவரை கணிப்பிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

, பொலிஸ் நிலையம் முன்பு திரண்ட மக்கள் !

கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ்
உத்தியோகஸ்தர் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
நேற்று மாலை கல்முனை சிறீ முருகன் கோயிலில் பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதனை அறிந்த பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இருவரையும் நேரடியாக பிடித்துள்ளனர். அதன்பின்னர்
பொதுமக்களிடம் தாங்கள் இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த  பொலிஸார்  அங்கு நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்காமல் ஆலய பிரதம குருவையும்
 இரண்டு இளைஞர்களையும் வலாத்காரமாக பிடித்து பொலிஸ் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்
 இந்த சம்பவத்தால் கல்முனை மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு  சம்மந்தப்பட்டவர்களை  கைது செய்யும்படியும்  அப்பாவிகளை விடுமாறு கோசம் எழுப்பினர்அப்பகுதியில் கட்டுக்கோப்பிற்கு  கொண்டுவரும் பொருட்டு கைது செய்தவர்களை விடுவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ள போலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>

சனி, 5 ஏப்ரல், 2014

அமரர் திரு நடராசா அற்புதராசா


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

        தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசாஅவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.0.....திங்கட்கிழமை


விழிநீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா.

நன்றி நவிவிலல்

 மலர்வு.17 ஒக்ரோபர் 1957.,,உதிர்வு.08 மார்ச் 2014.
                                        
    அமரர் திரு நடராசா அற்புதராசா.
 தோற்றமும்.மறைவும் இயற்கை வகுத்த நியதி என்றாலும்
இன்பமும்துன்பமும் வாவின்மேடயில் அரங்கேறும்நாடகமானாலும்பார்த்த்துப்பழகியகண்களும்பேசிப்பழகியவாயும்
கேட்டு மகிழ்ந்தகாதுகளும்நினவுகள்பதித்தநென்சமும்அய்யகோ
அன்னாரின் பிரிவுத்துயரால் தவிக்கிறதே குடும்பம்!
 காலமே விரைந்துவந்து இவர்களுக்குஅறுதல்தராயோ!!
ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!அன்னாரின்பிரிவால் துயரும்!!அன்பு மனைவி பிள்ளைகள்அன்பு உறவுகள்!!!
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
 

செவ்வாய், 25 மார்ச், 2014

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி சாருகா (25 -03 -2014)

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா தனது 12வது
 பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று (25 -03 -2014)  கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார்
 மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று
 பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து http://lovithan.blogspot.ch
நவற்கிரி இணையங்களும் நிலாவவரை இணையங்களும்  உறவு இணையங்களும் வாழ்த்துகின்றன,.


புதன், 19 மார்ச், 2014

குறை நிறைகளை தெரிவிக்க அபிப்பிராய பெட்டிகள்

 
வவுனியா வைத்தியசாலையில் உள்ள குறை நிறைகளை நோயாளர்கள் அறிவிப்பதற்காக அபிப்பிராய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் கு. அகிலேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வைத்தியசாலையின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு நோயாளர்களின் கருத்தக்கள் உள்வாங்கப்படவேண்டிய தேவையுள்ளது.
எமது வைத்தியசாலையில் நோயாளர்களின் அபிப்பிராயங்களை கேட்பதனூடாக எமது வைத்தியசேவையை இன்னுமோர் தரத்திற்கு முன்னோக்கி நகர்த்த முடியும் என கருதப்பட்டதன் காரணமாக நாம் வைத்தியசாலையில் 12 அபிப்பிராய பெட்டிகளை பொருத்தியுள்ளோம்.
இவ்வாறான பெட்டிகள் சிகிச்சை நிலையங்கள் மற்றும் விடுத்திகள் வைத்தியசாலையின் வாயில் பகுதி என்பன வற்றில் பொருத்தப்பட்டுள்ளது.
எனவே பொது மக்கள் மற்றுமு; நோயாளர்கள் தாம் வைத்தியசாலையில் எதிர்நொக்கும் பிரச்சனைகள் மற்றும் தமக்கு திருப்திகரமான சேவை என்பனவற்றின் கருத்துக்களை இப் பெட்டியினுள் இடமுடியும்.
அத்துடன் நோயாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் சேவையை வழங்க மறுப்பவர்கள் தொடர்பிலும் ஆலோசனைகளை வழங்க முடியும். அத்துடன் வதை;தியசாலையின் மேம்பாட்டுக்கான ஆலோசனைகளையும் தெரிவிக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
அத்துடன் இப் பெட்டிகள் அனைத்தும் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக எனக்கு முன்னால் திறக்கப்பட்டு என்னால் பரிசீலிக்கப்படும் என்பதனால் உடனடி தீர்வுகளையும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் வைத்தியசாலையின் அத்தியட்சகர் தெரிவித்தார்.


புதன், 12 பிப்ரவரி, 2014

நாஜி கால ஓவியங்கள் கண்டுபிடிப்பு !

 ஜேர்மனியில் நாஜி கால கலைப்படைப்புகளில் 60 ஓவியங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஜேர்மனியில் ஹிட்லரின் ஆட்சி நடைபெற்று வந்த போது, 1930- 40 ஆண்டு காலகட்டத்தில் ஹில்டிபிரான்ட் குர்லிட் என்பவர் கலைப்படைப்புகளை விற்பனை செய்து வந்தார்.
அப்போது அரசு அதிகாரிகள், யூதர்களிடமிருந்து திருடிய மற்றும் சிதைந்ததாக கருதிய ஓவியங்களை இவரிடம் விற்பனைக்கு கொடுத்துள்ளனர்.

ஆனால் காலப்போக்கில் விற்பனையாகாமல் இவரிடமே இருந்த இவ்வோவியங்கள் தற்போது இவரது மகன் கோர்னிலியஸ் குர்லிட் வசித்துவரும் மியூனிச் வீட்டில் இருப்பது கலைப்பொருள் முதலீட்டாளர்களின் கவனத்திற்கு வந்தது.

இதனைதொடர்ந்து ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் வீட்டில் பிக்காசோ, ரெனோயர், மோனெட் போன்ற பழம்பெரும் ஓவியர்களின் 60 கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோர்னிலியசின் தகவல் தொடர்பாளர் ஸ்டீபன் ஹோல்சிங்கர் தெரிவித்துள்ளார்.

இது யூதர்களிடமிருந்து திருடப்பட்ட கலைப்பொருட்களா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு திருடப்பட்டதாய் இருந்தால் உரியவர்களிடம் கலைப்பொருட்கள் திருப்பி கொடுக்கப்படும் என ஜேர்மனி அரசு குறிப்பிட்டுள்ளது.
                           

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

100 அடி உயரம் வரை பறக்கும் காணொளி


சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது   தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பாம்புகள் காற்றில் மிதக்கும் ஆற்றலைப் பெறுகின்றன என இக்குழுவினர் கூறுகின்றனர்.