siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 ஜனவரி, 2017

நாவற்குழியில் 50 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள்?

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்
2017 ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளை கொண்ட மாதிரி கிராமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்களில் 50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளே அமைத்து கொடுக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு வீட்டிற்கும் சுமார் 5 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன், குறித்த மாதிரிக் கிராமத்திலே அனைத்து வீடுகளும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக