siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 1 செப்டம்பர், 2022

மகனின் தலையில் தந்தை பறித்த தேங்காய் விழுந்து மகன் மரணம்

தந்தை பறித்த தேங்காய் மகனின் தலையில் விழுந்து மகன் உயிரிழந்துள்ளதாக நமுனுகுள காவல்துறையினர் தெரிவித்தனர்.
மியானகந்துர மகா வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நமக்குள மியானகந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட எச்.எம்.சமீரா என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.
அவர் குடும்பத்தில் ஒரே பிள்ளை.கடந்த 29ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் தந்தை தோட்டத்திலுள்ள 50 அடி உயர மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது, ​​மகன் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவ்வேளையில் தேங்காய் பறிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 31.08-2022.அன்று  உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக