siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் பாண்னின் விலை எதிர்காலத்தில் நூறு ரூபாவாக குறைக்கப்படும்

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் 
தெரிவித்துள்ளது.
 விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக் 
குறைக்க முடியும்.
 அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் ரொட்டியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 23 செப்டம்பர், 2023

-நாட்டில் பல்லும்மஹர பகுதியில் பேருந்து விபத்து :பதின் மூண்று பேர் காயம்

கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் 
அறிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் 22-09-2023.அன்று  இடம்பெற்றுள்ளது. 
கொழும்பு - கன்னட பிரதான வீதியின் பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்,   திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

,மல்லாகம் நீதிமன்றம் ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு ,மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை ஜூஸ் பக்கெட்களை , 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது. 
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு 
தொடரப்பட்டது. 
  “குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெட்களை ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் 
பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் 
மாத்திரமின்றி 
நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது" என பொதுசுகாதார பரிசோதகர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.  
அதனை அடுத்து , மன்று அனைத்து ஜூஸ் பக்கெட்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததுடன்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல ஜூஸ் பக்கெட்களையும் மீளபெற்று அழிக்குமாறும் உத்தரவிட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 செப்டம்பர், 2023

பகவந்தலாவ பகுதியை சேர்ந்த மாணவி உலக சாதனை படைத்துள்ளார்

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி 54 கிலோமீற்றர் தூரத்தை தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார்.
 10ம் தரத்தில் படித்து வரும் வசந்தகுமார் நபிஷ்னா என்ற 15 வயது மாணவியே இந்த சாதனை படைத்துள்ளார்.
 நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  20-09-2023.அன்று காலை 6.05 மணிக்கு நடைபயணத்தை ஆரம்பித்த அவர், பக்வந்தலாவ நகர மையத்தில் இருந்து 8 மணி 30 நிமிடங்களில் மதியம் 2.35 மணிக்கு அணிவகுப்பை
 நிறைவு செய்தார்.
 நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன் ஊடாகச் செல்லும் போது, ​​வீதியின் இருபுறமும் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பூரண ஆதரவை பாடசாலை 
மாணவி பெற்றார்.
 இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் பகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக நடைபயணத்தை பார்வையிட வந்த இலங்கை பிரதிநிதி சி.நாகவாணி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 செப்டம்பர், 2023

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழப்பவர்கள் அதிகரிப்பு


மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர 
தெரிவித்துள்ளார்.  
கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேபரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.  
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சீதுவ யில் சூட்கேஸில் மீட்கப்பட்ட சடலம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட ஆறு பேர் கைது

சீதுவ பகுதியில்    நபரொருவரை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை 
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு 
பிடிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட நபரை சந்தேகநபர்கள் ,புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 18 செப்டம்பர், 2023

கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்து இருவர் படுகாயம்

திருகோணமலை - பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ - 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக 
தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திருமதி நடராசா திலகவதி ( திலகம் )17.09.2023

துயர் பகிர்வு-மறைவு-17-09-2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்கள் 17-09-2023.ஞாயிருக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அப்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும் திரு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2023 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 18-09-2023..திங்கள்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!