siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஏப்ரல், 2024

யாழ் வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை: மேலுமொருவர் கைது

யாழ்
 வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
 கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு
 மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு ,வீடு 
திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி
 சென்று , கணவனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை
 செய்துள்ளதுடன் , மனைவியை வீதியில் இறக்கி விட்டு
 சென்று இருந்தனர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் காரைநகர் பகுதியில் தலைமறைவாக இருந்த
 நிலையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைது 
செய்யப்பட்டுளளார்.
 கைது செய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் 
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது


வியாழன், 25 ஏப்ரல், 2024

வெப்பமான காலநிலையால் தாய்லாந்தில் முப்பது பேர் உயிரிழப்பு

தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் 
கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷ
நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த
 பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம்

 

தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது



 

புதன், 24 ஏப்ரல், 2024

எச்சரிக்கை காட்டுத்தீ அபாயத்தில் கனடா: பெடரல் அரசு விடுத்துள்ளன

வழக்கத்துக்கு மாறாக, குளிர்காலத்தில் உஷ்ணம், அதிகரித்து வரும் வறட்சி மற்றும் எதிர்வரும் மாதங்களில் வழக்கத்தைவிட வெப்பம் 
அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ள 
வானிலை ஆராய்ச்சி 
மையம் என பல காரணங்களால், மீண்டும் ஒரு பயங்கர 
அழிவை ஏற்படுத்தும் காட்டுத்தீ சூழலை கனடா எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதாக பெடரல் அரசு எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டில் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள மேற்கு கெலோனா நகரில் வீடுகளை அழித்து பெரும் சேதத்தையும் மக்களுக்கு கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். 
அப்போது, கண்ணுக்கு முன்னே, காட்டுத்தீயில் வீடு பற்றி எரிவதைக் கண்டும் ஒன்றும் செய்ய இயலாமல் கண்ணீருடன் மக்கள் நின்ற காட்சிகள் பல வெளியாகின.
இந்நிலையில், இந்த இளவேனிற்காலம் மற்றும் கோடையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு மீண்டும் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
தெற்கு கியூபெக், கிழக்கு ஒன்ராறியோ மற்றும் மேற்கு கனடா முதலான பல பகுதிகள் ஏப்ரல் மாதத்தில் காட்டுத்தீ அபாயத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன. அந்த அபாயம், மே மாதத்திலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசர கால ஆயத்தங்கள் துறை அமைச்சரான Harjit Sajjan இது குறித்துக் கூறும்போது, கோடை எப்படி இருக்கும் என்பதை 
கணிக்க இயலாத நிலை இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் மோசமாகிக்கொண்டே செல்வதால், கனடாவுக்கு காட்டுத்தீ
 பெரும் சவாலாக இருக்கும் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துகொள்ளமுடிகிறது, காட்டுத்தீயால் கனேடியர்களுக்கு ஏற்படும் பண இழப்பும், ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்கிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது 




செவ்வாய், 23 ஏப்ரல், 2024

நாட்டில் எரிவாயு விலை குறைப்பு சாத்தியமா முதித பீரிஸ் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிவாயு இறக்குமதி செய்யும் நாடுகள் தொடர்பான நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் உலக சந்தையில் எரிவாயுவின் விலை 
குறையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் 
தெரிவித்தார். 
 அதற்கிணங்க, இந்நாட்டு மக்களுக்கு நன்மைகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 22 ஏப்ரல், 2024

நாட்டில் பண்டாரகமவில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம்

நாட்டில் பண்டாரகம கலனிகம நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 
சடலம் பிரேத பரிசோதனைக்காக பண்டாரகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 
அவர் 05 அடி 4 அங்குல உயரம் கொண்ட உயரமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர் நீல நிற ஸ்லீவ்லெஸ் சட்டை  அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

நாட்டில் எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து மூவர் பலி

 நாட்டில் எல்பிட்டிய – அவிட்டாவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.  
முச்சக்கர வண்டியொன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்
 தெரிவித்தனர். 
இந்த விபத்தில் 68 வயதான முச்சக்கரவண்டி சாரதியும் அவரது 10 வயது பேரனும் ஏழு வயது பேத்தியும் உயிரிழந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


 

சனி, 20 ஏப்ரல், 2024

நாட்டில் ரம்பே பகுதியில் மோட்டார் சைக்கள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ரம்பே - மல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.  
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்து 19-04-2024.அன்று  இரவு இடம்பெற்றுள்ளதாக 
பொலிஸார் தெரிவித்தனர்.  
விபத்தில் சாரதியும் பின்னால் பயணித்தவரும் படுகாயமடைந்துள்ளதுடன், பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சாரதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் கலதன்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவராவார். காயமடைந்த மற்ற நபர்மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது  


வெள்ளி, 19 ஏப்ரல், 2024

இரு இந்திய மாணவர்கள் ஸ்காட்லாந்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பு


ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். 

அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவர்கள் மறைவு குறித்த தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக்கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இன்று பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது   



வியாழன், 18 ஏப்ரல், 2024

மரண அறிவித்தல் திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)

துயர் பகிர்வு-- உதிர்வு -17-04-2024
யாழ் தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கம் ஒன்றாரியோவை வதிவிடமாகவும் கொண்ட  திரு செல்லையா திருஞானசம்பந்தன் (சம்பந்தன்)அவர்கள் .17-04-2024.புதன் கிழமை அன்று  Markham Ontario வில்  இறைவனடி சேந்தார். 
 அன்னாரின் ஈமக்கிரியை பற்றிய விபரங்கள் இந்த இணையத்தில்
                                                பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
.தகவல் குடும்பத்தினர் 
 ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


புதன், 17 ஏப்ரல், 2024

வவுனியாவில் குழந்தை மீது கத்தி வைத்து பயமுறுத்தி நகைகள் மோட்டார் சைக்கி ல் வழிப்பறி

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் 
சென்றுள்ளனர்.
 குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில்.17-04-2024. இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
 குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் இன்றையதினம் அதிகாலை தனது தொழில் நிமித்தம் வவுனியா
 தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் தனது
 குழந்தையுடன் சென்றார். 
 இவ்வாறு சென்று கொண்டிருந்தவேளை வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி 
அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
 இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 16 ஏப்ரல், 2024

நாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள் தொடர்பானா அதிர்ச்சி தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோயாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் கணிசமான அளவு உணவுப் பொருட்கள் தரமற்றவை என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்க்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.
 மேலும், சில நேரங்களில் நோயாளிகளின் உணவுக்காக வழங்கப்படும் காய்கறிகள் ஓரளவு அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
வழங்கப்படும் தேநீருக்கு பயன்படுத்தப்படும் மாவு மற்றும் சீனியும் காலாவதியாகவும் காணப்படுகின்றன. 
 சில சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் உணவுக்கு தகுதியற்ற மீன்களுடன் உணவை வழங்குகின்றன.
 இது குறித்து பல ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் முடிவெடுக்கப்பட வேண்டும் 
எனவும் வைத்தியசாலை அதிகாரிகளால் எதுவும் செய்ய 
முடியாது எனவும் வைத்தியர் பெல்லன தெரிவித்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 15 ஏப்ரல், 2024

யாழில் மீண்டும் பரவும் கொரோனாத் தொற்று: பெண் ஒருவர் மரணம்

மீண்டும் நீண்ட காலத்துக்குப் பின்னர் கொரோனோ தொற்று காரணமாக யாழ் மாவட்டத்தில் பெண்ணொருவர் 
உயிரிழந்துள்ளார்.
 பிரான்ஸ் நாட்டில் இருந்து தனக்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
 இந்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களாக யாழ்ப்பாணம் போதனா
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை 
பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி 
கடந்த 12-06-2024.வெள்ளிக்கிழமை  
உயிரிழந்துள்ளார்.
 உயிரிழப்பின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2024

நாட்டில் மின்னல் தாக்கம் பல மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய
 மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


சனி, 13 ஏப்ரல், 2024

நாட்டில் கரையோர ரயில் சேவை தாமதமாகும் என அறிவிப்பு

நாட்டில் கடலோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 
தெற்கு களுத்துறை ரயில் தடம் புரண்டதன்
 காரணமாக
 இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 12 ஏப்ரல், 2024

முரவத்தையில் தாய்க்கு தெரியாமல் சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழப்பு

தாயிக்கு தெரியாமல் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 9 வயது சிறுவன் ஒருவன் மொரட்டுவை - முரவத்தை ரயில் கடவைக்கு அருகில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 விபத்தில் உயிரிழந்தவர், மொரட்டுவை - மொரட்டுவெல்ல - க்ளோவியஸ் மாவத்தையில் வசித்து வந்த மொரட்டுவை ஜனஜய பாடசாலையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் எம். ஆர்.ரந்தரு என்று மாணவர் ஆவார். ரயிலை இயக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ரயிலின் பாதுகாப்பு கடவையும் மூடப்பட்டிருந்தது. 

 இந்நிலையில் உயிரிழந்த சிறுவன், புதிய காலி வீதியில் இருந்து தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது ரயில் பாதுகாப்பு கடவை அருகில் துவிச்சக்கரவண்டியை அவர் நிறுத்தியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அப்போது, ​​கொழும்பில் இருந்து காலி நோக்கி ரயில் பயணித்து கொண்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடவையை திறக்கப்படுவதற்கு முன்னர், குறித்த சிறுவன் தனது துவிச்சக்கரவண்டியை தண்டவாளத்தின் ஊடாக செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். அப்போது, ​​பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலும் மற்றைய ரயில் மார்க்கத்தின் ஊடாக பயணித்த போது, சிறுவனின் துவிச்சக்கர வண்டி அதில் மோதியுள்ளது.

 இந்த விபத்தில், சிறுவன் சுமார் 13 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டதாகவும் பின்னர் சம்பவம் இடம்பெற்ற, அருகில் ரயில் நிறுத்தப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது. விபத்தில் சிறுவனின் கால் துண்டிக்கப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில், மொரட்டுவை மரண விசாரணை அதிகாரி கவிந்து பெரேஸ் தலைமையில் நடைபெற்றது. மொரட்டுவை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

வியாழன், 11 ஏப்ரல், 2024

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.13ம் ஆண்டு நினைவஞ்சலி 11.04.2024

மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
திதி : 11 -04- 2024.வியாழக்கிழமை இன்று  
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதின் மூன்று ஆண்டுகள் கழிந்தும் என்றும் எம்மோடு இருக்கும் ஏந்தலே!!
பதின் மூன்று ஆண்டுகள் போனதையா!
ஏங்கியே அழுகின்றோம் ஏந்தலே!!
தாங்கியே பிடிக்க தலைவனின்றி
தவிக்கின்றோம் ஐயா!
.இன்று நீங்கள் இல்லாமல்
தனியாய் தவிக்கின்றோம் நாம் வாழும்
காலம் வரை உங்கள் நினைவுகளும்
 எங்கள் உள்ளத்தில் வற்றாத
ஊற்றாகப் பொங்கிப் பெருகும்.எத்தனை உறவுகள் இருந்தாலும்
தோள்சாய அப்பா இல்லையே! என
கதறியழும் பிஞ்சுகளை அரவணைக்காது
அநாதரவாய் தவிக்க விட்டுவழி தெரியாத்
 தூரம் விரைந்தோடி சென்றதேனோ!எங்களை தவிக்க விட்டு நீர்
 தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?
 உங்கள் நினைவுகள் அழியவில்லை
 எங்கள் கண்ணீரும்
நிற்கவில்லை அப்பா... அப்பா...
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவால் வாழ்ந்திடுவோம் |
பதின் மூன்று ஆண்டுகள்  நினைத்து நீர் மல்கும்நாங்கள்  
..என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன்
வாழும் பிள்ளைகள்
,மருமக்கள் சகோதரர்கள்
தகவல் குடும்பத்தினர்
எமது நவற்கிரி,கொம் 
 . நவக்கிரி  கொம் http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை,.கொம்  நவக்கிரி .கொம் இணையங்களின் 
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ,,ஓம்சாந்தி ஓம்சாந்தி 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திகின்றோம்...
ஓம்சாந்தி .சாந்தி .சாந்தி ..



புதன், 10 ஏப்ரல், 2024

லவுசனே Lausanne) சுவிஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று கண்டெடுப்பு

சுவிட்சர்லாந்தின் Lausanne ரயில் நிலையத்துக்கருகில் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 சடத்திற்கு அருகில் இரத்தக்கரை காணப்படும் காட்சிகள் 
பிரபல ஊடகமான Blick செய்தித்தாளில் 
வெளியிடப்பட்டுள்ளது. 
பொலிசார் அந்த இடத்தில் கூடாரம் அமைத்து சோதனை நடத்திவரும் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. 
இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாரும் நீதிமன்ற அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 9 ஏப்ரல், 2024

நாட்டில் மட்டக்களப்பில் வீட்டில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

நாட்டில் மட்டக்களப்பு - திருமலை வீதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் வீட்டில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். திருமலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட சசிக்குமார் டினேஸ் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
08-04.2024.திங்கட்கிழமை தனிமையில் தனது வீட்டில் வெல்டிங் - இரும்பு ஒட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த போதே இவர்
 மின்சாரம் தாக்கி மயக்கிய நிலையில் 
இருந்துள்ளார். 
சகோதரி அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு
 கொண்டு சென்ற போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம்..09-04-2024. இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 8 ஏப்ரல், 2024

இலங்கை விமானப்படை வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

பாதுக்கை - அங்கமுவ பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, ​​பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்று
 சென்றதுடன் அதனை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இந்நிலையில் பொலிஸார் பதிலுக்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் 26 வயதுடைய இலங்கை விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

நாட்டில் சிறைச்சாலைகளில் ஐம்பது கைதிகள் உயிரிழப்பு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் 50 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
 தவறான முடிவு, சுகவீனம் மற்றும் தாக்குதல்கள் என்பனவற்றால் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் காமினி பி .திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 கடந்த வருடம் சிறைச்சாலைகளுக்குள் 209 பேர் உயிரிழந்துள்ளனர் 
என்றும் அவர் கூறியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 
 




 

சனி, 6 ஏப்ரல், 2024

வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் ஹிக்கடுவை கடலில் நீராடிய நபர் நீரில் மூழ்கி பலி

 

ஹிக்கடுவை நகரத்துக்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 57 வயதுடைய லிதுவேனிய பிரஜையாவார். 
இவர் ஹிக்கடுவை நகரத்திற்கு அருகில் உள்ள கடலில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ள
 நிலையில் சம்பவ 
இடத்தில் இருந்த உயிர்காப்பாளர்கள் இவரை மீட்ட்டு பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 






 

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

கொரோனாவை விட நூறு மடங்கு கொடிய பறவைக் காய்ச்சல் நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை 
விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி
 தெரிவிக்கையில்,
H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும்
 அவர் கூறினார்.
மேலும், இது புதிதாக உருவாகி வரும் வைரஸ் அல்ல என்றும், இது ஏற்கனவே உலகம் முழுவதும் உள்ளதாகவும் டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி 
தெரிவித்தார்.
இதனை எதிர்கொள்ள உடனடியாக தயாராக வேண்டும் என்றும் அவர் கூறினார். இதனிடையே, கனடாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஜான் ஃபௌல்டனும் பறவைக் காய்ச்சல் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.
. என்பது குறிப்பிடத்தக்கது  



வியாழன், 4 ஏப்ரல், 2024

யாழ் சங்கானையில் ஊடகவியலாளர் மயங்கி விழுந்து மரணம்

நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஊடகவியலாளர் 
ஒருவர்  03-04-2024.அன்று  திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
மகன் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தவரின் தாயாரும் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பதாகும்




 

புதன், 3 ஏப்ரல், 2024

நாட்டில் இரத்தினபுர பத்துல்பான பகுதியில் பஸ் லொறி மோதி விபத்து

நாட்டில் இரத்தினபுர -  பத்துல்பான பகுதியில் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பஸ் சாலையில் சறுக்கி முன்னால் சென்ற லாரி மீது மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.





 

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

இஸ்தான்புல்லில் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஊழியர்கள் பலி

துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் 
நடந்து வந்தது.
இந்நிலையில், இரவு விடுதியில்.02-04-2023. இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.
இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.
 விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.என்பது குறிப்பிடத்தக்கது