siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 18 அக்டோபர், 2016

விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ள இந்துக் கல்லூரி!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறையிலும் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ளது.
கண்டி போகம்பரை மைதானத்தில் இடம்பெற்றுவரும் தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் முதற்தடவையாக யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மூன்று பதக்கங்களினைப் பெற்று கல்லூரிக்கும், தென்மராட்சிப் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை
 சேர்த்துள்ளது.
கோலூன்றிப் பாய்தல் (17 வயதின் கீழ்) போட்டிப் பிரிவில்...
செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு
செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) பெண்கள் பிரிவு
கோலூன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் - பெண்கள்) போட்டிப் பிரிவில்...
செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)
அண்மைக் காலத்தில் பல சவால்களிற்கு 
முகம் கொடுத்த போதும் மனந்தளராது தொழிற்படும் கல்லூரி முதல்வர் திருவாளர் ந.சர்வேஸ்வரன் அவர்களது
 சீர்மிய நெறிப்படுத்தலிலும், விளையாட்டுத் துறையின் பொறுப்பாசிரியர் மதனரூபன் அவர்களது வழிப்படுத்தலிலும், பயிற்றுவிப்பாளர் கணாதீபனது மதிநுட்பம் வாய்ந்த பயிற்சியினாலும் இவ் வெற்றி
 சாத்தியமாகி உள்ளதாக கல்லூரி சமூகத்தினர் 
தெரிவிக்கின்றனர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக