குறிகாட்டுவான் – நயினாதீவு இடையே படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளரகள் நேற்றுத் தமது சேவைகளை நிறுத்தினர். அவர்களின் சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் திடீரென இங்கு படகுச் சேவையில் ஈடுபடுகின்றனர். அதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாததால் நாளையும் போராட்டம் தொடரும் என்று அவர்கள்
தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக