siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஜனவரி, 2018

நாட்டில் காலநிலையில் திடீர் மாற்றம்

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தையடுத்து  நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம்
 தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கையை அண்டியுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
காலநிலை தொடர்பாக  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் அநேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 
விசேடமாக கிழக்கு - ஊவா மாகாணங்களிலும், மாத்தளை - பொலன்னறுவை மாவட்டங்களிலும் ஏனைய சில இடங்களிலும் அடைமழை பெய்யலாம். 
நாட்டின்  வடபாகத்திலும், அம்பாந்தோட்டை- மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் 
காற்று வீசும்.
அத்துடன் நாட்டை சூழவுள்ள வான்பரப்பு மேகமூட்டத்துடன் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் மேலும்
 தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக