siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அம்பந்தோட்டையில் மோதலை தடுத்த இளைஞன் பலி

அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடொன்றின் 16.11.2019. சனிக்கிழமை இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் 
ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது படுகாயமடைந்த இளைஞன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பதகிரிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஹஷான் திவாங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக