siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 மார்ச், 2021

கோர விபத்து. உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் சிறுமி பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த மகிழுந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது என்றும் விபத்தின்போது, குறித்த வாகனத்தினுள் 5 பேர் இருந்துள்ளதாகவும் இராஜாங்கனை பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள்மார் மூவர் பெலிஅத்த பிரதேசத்திலுள்ள தமது உறவினர் வீட்டுக்குச் சென்று, மீண்டும் வீடு திரும்பியபோது, இராஜாங்கனை,அடம்பனே பிரதேசத்திலுள்ள தமது வீட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் இந்தக் கோர சம்பவம் சம்பவித்துள்ளது.
விபத்தில் இக்குடும்பத்தின் இளைய மகளே பலியாகியுள்ளார்,சாரதியான தந்தைக்கு நித்திரை ஏற்பட்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக