siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 30 மே, 2022

இலங்கையில் உணவுகளை வீணடிப்பதை குறைக்குமாறு மக்களுக்கு கோரிக்கை

நாட்டில் உணவுகளை வீணடிப்பதை முடியுமான அளவு குறைக்குமாறு பேராதனை பல்கலைகழகத்தின் விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரம்பே வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு தட்டுப்பாடுக்கு முகங்கொடுப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இது அமையும் எனவும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை தற்போது உருவாகியுள்ளமை தெளிவாக உள்ளது. அதற்காக அச்சமடைந்து பதற்றமடைவதற்காக இந்த தகவல் வெளியிடப்படவில்லை. தற்போது முதல் அதற்கு முகங்கொடுப்பதற்கு தயாராக 
வேண்டும் என்பதற்காக இவ்வாறு அறிவுறுத்தப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உணவு பொருட்களை வீணடிப்பதை குறைத்து தேவையான அளவு உணவை மாத்திரம் தயார் செய்ய வேண்டும். அதனூடாக உணவு வீணடைவதை தவிர்க்க முடியும் என்றும் 
அறிவுறுத்தியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக