siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 20 ஏப்ரல், 2015

இயந்திரத்தில் திடீர் தீ: பல லட்சம் ரூபாய் சாம்பல்!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஏ.டி.எம். இயந்திரத்தில் தீப்பிடித்ததில், அதில் இருந்த பல லட்ச ரூபாய் எரிந்து நாசமானது.
ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் சன்ட்போல் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் திடீரென தீப்பிடித்தது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். ஆனால், அதற்குள்ளாக ஏ.எடி.எம். இயந்திரம் அதிலிருந்த பணத்தோடு முழுவதும் தீக்கிரையானது.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து 
நிகழ்ந்திருக்கலாம் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீவிபத்தில் எரிந்து போன பணத்தின் அளவு குறித்து வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக