siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 நவம்பர், 2021

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் திரு இராமசாமி கிருஷ்ணமூர்த்தி 04 11 2021

பிறப்பு-12 03 1941-இறப்பு-05 10 2021
யாழ். கோண்டாவில் கிழக்கு கொட்டைக்காடு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை இன்று அந்தியேட்டி கிரியை 31ம் நாள்  அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 04-11-2021, அன்று வியாழக்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி மரியாய் தம்பதிகளின் மூத்த மகனும், 
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவயோகம் அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான தவராசா, கிருஷ்ணராசா மற்றும் கணேசலிங்கம்(சுவிஸ்), கலாரஞ்சினி(சுவீடன்), ஜெகதீஸ்வரன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,சரோஜினிதேவி(சுவிஸ்), ஸ்ரீபதி(சுவீடன்), ஸாரா(சுவிஸ்), மேர்வின்(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மாமனாரும்,சாதனா, சாரங்கி, அபிநயன், அருண்கோபி,
 அஸ்வின், றொனீசன், றொசிக்கா, நத்தாஷா, லவுரா, அவ்ரோரா, அர்ஜுன், ஆதித்யா ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்றவர்களான மருதையா, அன்னக்கிளி, சுப்பிரமணியம் மற்றும் 
சகாதேவன், பார்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,விமலேஸ்வரன்(விம்மி) அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,சரண்யா(தீபா) அவர்களின் அன்பு மாமாவும்,தர்ஷன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அப்பா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா! 
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அம்மா .பிள்ளைகள்,சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
வீட்டு முகவரி:
இல.05 கொட்டைக்காடு வீதி,
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக