siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 21 ஜனவரி, 2017

இளைஞன் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மரணம்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன் தோட்டப்பகுதியில் 19.01.2017 அன்று பகல் 2.00 மணியளவில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் பலியாகியுள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவத்தின் உயிரிழந்தவர் கிங்கொரா தோட்டத்தை சேர்ந்த ஜெபமாலை ஸ்டீபன் என வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சம்பவத்தில் காயமடைந்த அந்தோனி செல்வம் வயது 34, ஞானசேகரன் கருணாநிதி வயது 25 என்பவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை கொழுந்தினை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு வரும் போது திடீரென கலைந்த குளவிகள் இவர்களை சராமரியாக தாக்கியுள்ளதாகவும் இதனால் இவர்கள் மயக்கமுற்றதாகவும் அதனைத்தொடர்ந்தே பொதுமக்களால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை பலனின்றி ஒருவர் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக