siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

நாட்டில் புத்தளத்தில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் புத்தளத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து 
உயிரிழந்துள்ளார். 
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். திருமண 
விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை 
சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 
யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை வழங்கிய புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி 
குலேந்திர பிரேமதாச, மரணம் தொடர்பான மேலதிக 
பரிசோதனைகளுக்காக
 உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக