siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில் தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் எரிந்துள்ளன

யாழ் புத்தூர் கலைமதி பகுதியில்.26-02-2024. திங்கட்கிழமை இரவு வீடொன்று தீக்கிரையானதில், பெறுமதியான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் என்பன தீயில் எரிந்துள்ளன.
வீட்டார் , அயலவர்களின் உதவியுடன் தீயினை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அது பயனளிக்காததால் யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து , தீயணைப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது .
குறித்த தீ விபத்து, மின் கசிவு காரணமாக ஏற்ப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் .
என்பது குறிப்பிடத்தக்கது





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக