siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 பிப்ரவரி, 2024

யாழ் புத்தூரில் சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்ற டிப்பர் மீது துப்பாக்கி சூடு

யாழ் .- புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது,07-02-2024. இன்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.சட்டவிரோத 
மணலுடன் , டிப்பர் வாகனமொன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புத்தூர் பகுதியில் அதனை வழிமறித்துள்ளனர்
டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால் , பொலிசார் அதன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அப்போது, டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது.
சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்றமையால் , சாரதி வாகனத்தை நிறுத்த வில்லை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில்தெரிய வந்துள்ளது.
டிப்பர் வாகன சாரதி , உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக