siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 8 பிப்ரவரி, 2024

பாகிஸ்தானில் தேர்தல் தினத்தன்று நடந்த வன்முறை சம்பவங்களில் ஒன்பது பேர் உயிரிழப்பு

பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நீடித்தது. வாக்கெண்ணும் பணிகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சுமையிலிருந்து மீள உதவும் அடுத்த தலைவர் யார் என்பதை அறிய அனைவரும் பெரும் 
ஆவலுடன் உள்ளனர்.
மேலும் இன்றைய நாளில் நாடு முழுவதும் பல வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
 அதில் நாடு முழுவதும் சந்தேகத்திற்கிடமான ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.என்பது குறிப்பிடத்தக்கது     



0 கருத்துகள்:

கருத்துரையிடுக