siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 31 ஜனவரி, 2026

மரண அறிவித்தல் அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-31-01-2'026
யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்  .31-01-2'26..சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் அமரர் ககத்திகேசு தம்பியிரின் அன்பு மகனும்

 அன்னார்  காலம்சென்ற ஆறுமுகம்   தம்பியிரின் அன்பு மருமகனும் சின்னக்கிளி யின் பாசமிகு கணவரும் அன்னாரின் பிள்ளைகளின் பெயர்  பின்பு இணைக்கப்படும் திரு.ஆ. நவரத்தினத்திம் அவர்களின்  அன்பு மச்சானும் ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்குபற்றிய   விபரம்  பின்னர் இதே இணையத்தில் இணைக்கப்படும்

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
நவற்கிரி புத்தூர்  
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



வெள்ளி, 30 ஜனவரி, 2026

நாட்டில் ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரை அடித்து கொன்ற மச்சான் கைது;

நாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக
 தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பழம்பாசி - கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நாகையா நாகராஜா என்பவர் உயிரிழந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 29 ஜனவரி, 2026

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரான்சில் தீ விபத்து


பிரான்சிலுள்ள கோச்செவேல் என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள க்ராண்ட்ஸ் ஆல்ப்ஸ் என்னும் ஹோட்டலில்
 தீப்பற்றியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம
 தெரிவிக்கிறது. 
அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் லே லானா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்த
 200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 28 ஜனவரி, 2026

நாட்டில் கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் டிப்பர் அரச பேருந்து மோதி விபத்து

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த 
அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து
 மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளகியுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியதில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் 2 இருவர் மற்றும்
 டிப்பர் சாரதி சாரதி
 உட்பட நான்கு 04பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 27 ஜனவரி, 2026

இராணுவ வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி யாழில் விபத்து

இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு யாழ்ப்பாணத்தில் நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
யாழ் நகர் பகுதியை அண்மித்த மடத்தடி பகுதியில்.27-01-2026. இன்றைய தினம்  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் எவருக்கும் பாரிய காயங்கள் ஏற்படாத நிலையில், விபத்து தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 26 ஜனவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி முதியவர் ஒருவர் மரணம்

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதயநகர் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 
துவிச்சக்கர வண்டியில் கடவையை கடக்க முட்பட்ட முதியவர் அனுராதபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்ராணி ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் சம்பவத்தில் கிளிநொச்சி ஆனந்தபுரம் சேர்ந்த சபாபதி என்ற 82 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி   பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

நாட்டில் தம்புள்ளை - ஹபரண வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி கோர விபத்து

நாட்டில் தம்புள்ளை-ஹபரண பிரதான வீதியில் லொறி மற்றும் ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தம்புள்ளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் ஆம்புலன்ஸ் சாரதி மற்றும் பெண் ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களும் தம்புள்ளை பொது 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
அறிவிக்கப்பட்டுள்ளது. 
 லொறி சாரதியின் கவனக்குறைவான ஓட்டுதலே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ள பொலிஸார்  மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html