siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 ஜனவரி, 2023

மஹியங்கனையில் பிள்ளையினை காப்பாற்ற தன் உயிரினை மாய்த்த தாய்

இலங்கையில் மஹியங்கனை பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 35 வயதுடைய இளம் தாயொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவத்தில் 
உயிரிழந்த தாய் 
தனது பிள்ளை மற்றும் கணவருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் வந்த காட்டு யானையொன்று வீட்டின் சில பகுதிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளது.
இதன்போது உறங்கிக்கொண்டிருந்த குழந்தையுடன் அயலவர் வீட்டிற்கு கணவன், மனைவி தப்பித்து செல்லும் வழியில் காட்டு யானை இடைமறித்து தாக்கியுள்ளது.தாய் பிள்ளையின் உயிரை காப்பாற்ற பல மணி நேரம் போராடியுள்ளதுடன், யானையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அயலவர்கள் தீயினை மூட்டி கடும் போராட்டத்தின் பின்னர் யானையினை விரட்டி காயமடைந்த குழந்தை மற்றும் தாயை வைத்தியசாலையில் 
அனுமதித்துள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் தாய் மற்றும் குழந்தை சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 30 ஜனவரி, 2023

கொழும்புக்கு யாழிலிருந்து எரிவாயுவினை வாகனத்தில் கொண்டு சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த கதி

யாழிலிருந்து கொழும்புக்கு தனது உறவினர்கள் வீட்டுக்கு செல்லும் போது புதிதாக ஒரு எரிவாயு நிரப்பின நிலையில் சிலிண்டரினை வாகனத்தின் பின் பகுதியில் எடுத்து செல்லும் பொழுது
இடை நடுவே எரிவாயு மனம் வாகனத்தில் வந்த பொழுது அதிர்ச்சியான குடும்பம் இடை நடுவே வாகனத்தினை நிறுத்து பார்த்த பொழுது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை அருகில் உள்ள 
உணவுக்கடையில்
கொடுத்து விட்டு கொழும்பு வந்ததாக முகநூலில் தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளார்கள். தயவு செய்து உங்களது வாகனங்களில் எரிவாயு நிரப்பிய வண்ணம் கொண்டு செல்லாதீர்கள். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில் பத்து மாதக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

 நாட்டில் 10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி கலேகான, நாகருக்காராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொத்தல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெயிண்ட் அடிக்கும் தொழிலில்  ஈடுபடும் இவர்இ குடித்துவிட்டு வந்து குழந்தையை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 28 ஜனவரி, 2023

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி தற்போது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது சகோதரனின் நண்பர்களால் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில்
 தெரியவந்துள்ளது.
சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர்கள் சிறுமிக்கு ஒரு வகையான இனிப்பு வழங்கி பின்னர் வன்புணர்விற்கு உட்படுத்தி வந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரியினால் புதுக்குடியிருப்பு காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 27 ஜனவரி, 2023

அலையபத்து பகுதியில் தாயும், இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகிஉயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் அலையபத்து பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - மஹாமன்கடவல, அலையபத்து பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் தீயில் கருகி 
உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் காயமடைந்த தந்தை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று 
வருகின்றார்.
தாயும், இரண்டு குழந்தைகளும் படுத்திருந்த அறையில் தீப்பிடித்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது தந்தை வேறொரு அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், இதனால் அவர் உடனடியாக 
பீதியடைந்து அறைக்கு வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்றும் போது அறையில் தீ முற்றாக பரவியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதான தாய், 10 வயது மகள் மற்றும் 05 வயது மகன் ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை காப்பாற்ற முற்பட்ட போது பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான தந்தை, தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், தனது குடும்பத்தை இழந்து கண்ணீர் மல்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அனுராதபுர பதில் நீதவான் திரு.சந்தன வீரகோன் இன்று (27) பிற்பகல் வந்து நீதவான் விசாரணைகளை 
மேற்கொண்டார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனினும், தீ விபத்து ஏற்பட்ட போது அறையில் பெற்றோல் போத்தல் இருந்ததாக தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 26 ஜனவரி, 2023

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு -மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதினால் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாட வேண்டும் என பொது மக்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு 
தெரிவித்துள்ளது.
கொழும்பில் 640 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 625 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹாவில் 412 பேரும், கல்முனையில் 369 பேரும், யாழ்ப்பாணத்தில் 343 பேரும் பதிவாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 25 ஜனவரி, 2023

தீ விபத்தில் சிக்கி தாய்லாந்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள அம்னாட் சரோயன் மாகாணத்தில் இருந்து நகோன் பாத்தோம் மாகாணத்துக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. 
வேனில் 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் இருந்தனர். கியாஸ் மூலம் இயங்கும் இந்த வேன் தலைநகர் பாங்காங் அருகே ஷி கியூ மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. 
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுவே இருந்த தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் வேனில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து 
வேனில் தீப்பிடித்தது. 
தீ பரவுவதற்கு முன் இளைஞர் ஒருவர் மட்டும் வேனில் இருந்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இந்த தீ விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 11 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



அகாலமரணம் அமரர்கள் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் ரஜிதன் 21.01.23

பிறப்பு: 19-09-1970 ; இறப்பு: 28-01-2023
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா தனபாலசிங்கம் அவர்கள் 28-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா, 
அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,பவானி அவர்களின் 
அன்புக் கணவரும்,ரஜிதா, காலஞ்சென்ற ரஜிதன், தர்சிகா 
ஆகியோரின் அன்புத் தந்தையும்,தனுஷா(கொழும்பு), ரேணுகா(மணி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார்(லண்டன்), சாந்தினிதேவி(டென்மார்க்), ஜெயக்குமார்(லண்டன்), வரதகுமார்(லண்டன்), தர்மினிதேவி(லண்டன்), நந்தகுமார்(ராஜன்- நோர்வே), தயானி(டென்மார்க்), குமுதினி(லண்டன்), சிவகுமார்(லண்டன்), மகேந்திரன்(கொழும்பு), விக்கினேஸ்வரமூர்த்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்மப்பிரியா, சின்னராஜா, வசந்தராஜா(கொழும்பு), லதாங்கி, சாரங்கி, சுருதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.செல்வன் தனபாலசிங்கம் ரஜிதன்:
(பிறப்பு: 11-10-2004 ; இறப்பு: 21-01-2023)சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரஜிதன் தனபாலசிங்கம் அவர்கள் 21-01-2023 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.அன்னார், செல்வராஜா அன்னம்மா தம்பதிகள், குமாரகுலசிங்கம் மனோன்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,தனபாலசிங்கம் பவானி தம்பதிகளின் 
அன்புப் புதல்வனும்,ரஜிதா, தர்சிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,தனுஷா, ரேணுகா(மணி), உதயகுமார், ஜெயக்குமார், வரதகுமார், நந்தகுமார்(ராஜன்) சிவகுமார் ஆகியோரின் அன்பு மருமகனும்,சாந்தினிதேவி, தர்மினிதேவி, தயானி, குமுதினி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் 
ஆவார்.இவர்கள் இருவரின் இறுதிக்கிரியை 01-02-2023 புதன்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் Oberhaldenstrasse 25, 9016 St. Gallen, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் Friedhof Feldli, Feldlistrasse 18, 9000 St. Gallen, Switzerland எனும் முகவரியில் பூதவுடல்கள் தகனம் செய்யப்படும்.
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அமரர்கள் இருவரின்  பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!!!
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 24 ஜனவரி, 2023

பாகிஸ்தானில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்த மகளை நீதிமன்றத்தில் சுட்டுக்கொன்ற தந்தை

பாகிஸ்தானில் பழங்குடியினர் வசிக்கும் வஜிரிஸ்தான் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தந்தையின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் 
செய்து கொண்டார். 
அந்த இளம்பெண் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த டாக்டரை சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். இதனால் அப்பெண் மீது தந்தை கடும் ஆத்திரத்தில் இருந்தார். 
இளம்பெண் தனது கணவருடன் கராச்சியின் பிரபாத் பகுதியில் வசித்தார். இந்த நிலையில் காதல் திருமணம் செய்த அப்பெண் கராச்சி நகர கோர்ட்டில் தான் சுதந்திரமாக திருமணம் செய்து கொண்டதை உறுதிப்படுத்துவதற்காக வாக்குமூலம் அளிக்க வந்தார். 
அங்கு அவரது தந்தையும் வந்திருந்தார். அப்போது கோர்ட்டு அறையில் இளம்பெண் மீது தந்தை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். 
ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார். துப்பாக்கியால் 
சுட்ட தந்தையை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 
இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ஷபீர் சேதர் கூறும்போது, கவுரவ கொலையின் பின்னணியில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தந்தை, கணவர், சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் 
உள்ளனர் என்றார்.
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 23 ஜனவரி, 2023

முருகண்டி கோவிலில் மாமிச உணவு..உண்டதை கண்டுகொள்ளாத சில பக்த்தர்கள்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி கோவிலுக்கு அருகிலே மாமிசம் சாப்பிடும் சகோதர இனத்தவர்கள்..!கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் போது முருகண்டியில் கும்பிட்டு செல்வது சாதாரண வழக்கமாக அனைத்து பிரயாணிகளும் இறங்கி கும்பிடுவது வழக்கம்.
இரவு 10.30மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாக்கு வந்த சகோதர இனத்தவர்கள் பலர் சுற்றுலாவினை முடித்து விட்டு ஊருக்கு புறப்படுகின்ற வேளையில் இரவுச் சாப்பாட்டினை சாப்பிடுவதற்காக முறிகண்டி 
கோவிலுக்கு வருகை
தந்து தங்கள் சமைத்து வைத்த உணவினை தண்ணீர் தொட்டிக்கு அருகாமையில் எல்லோரும் சேர்ந்து சோறு இறால் கறிகளுடன் சாப்பாடினை பரிமாறி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவ் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் மனதுக்குள் திட்டி தீர்த்த படியே அவ் இடத்தினை கடந்து 
சென்று விட்டனர்.
அதுமட்டுமல்லாமல் அருகில் கடை வைத்திருப்பவர்கள் கூட அதனை தெரியப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அதில் வந்த இளைஞர்கள் அதனை தட்டி கேட்ட போது அவ் சகோதர இனத்தவர்கள் தங்களுக்கு இதில் மாமிசம்
சாப்பிடுவது பற்றி தெரியதென்றும் எங்களை தயவு செய்து மன்னித்துவிடுங்கள் என்று மிகவும் தயவுடன் கேட்டு அவ்இடத்தில் சாப்பிட வந்த எல்லோரும் சேர்ந்து அவ் இடத்தினை நன்கு சுத்தம் செய்துவிட்டு அவ் இடத்தினை விட்டு உடனே விலகியுள்ளனர். ( தயவு செய்து முடிந்தவரை உங்கள் சகோதர இனத்தவர்களுக்கு
 இவ்வாறான எமது சைவ பழக்க வழக்கங்களினை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.!

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





ஞாயிறு, 22 ஜனவரி, 2023

யாழ் வடமராட்சியில் விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில்  இ.போ.ச சொந்தமான பேருந்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார்க் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,பருத்தித்துறை கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பருத்தித்துறை சாலை பேருந்து உடுத்துறை வேம்படி பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விபத்தில் படுகாயமைந்துள்ள நிலையில், அருகிலுள்ள மக்களால் உடனடியாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.விபத்து தொடர்பான விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.சம்பவ இடத்திற்கு வந்த மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 21 ஜனவரி, 2023

சீனாவில் திபெத் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

னாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த புதன்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினரும், அவசரகால வாகனங்களும் விரைந்தனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் 
முடுக்கி விடப்பட்டன. 
இந்நிலையில், பனிச்சரிவில் இருந்து நேற்று சில சடலங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள்
 தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 20 ஜனவரி, 2023

திபெத்தில் சுரங்கப்பாதை பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத்தின் தென்மேற்கில் உள்ள நியிஞ்சி நகரத்தை மெடாக் கவுண்டியுடன் இணைக்கிற நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென 
பனிச்சரிவு ஏற்பட்டது. 
நியிஞ்சி நகரமானது பிராந்திய தலைநகரமான லாசாவில் இருந்து 5 மணி நேர பயணத்தில் 3,040 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பனிச்சரிவு பல வாகனங்களை மூடிக்கொண்டு விட்டன. 
மேலும் இந்தப் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவல்கள் புதன்கிழமை இரவில் 
தெரிய வந்தது. 
சம்பவ இடத்துக்கு 131 மீட்பு படையினரும், 28 அவசரகால வாகனங்களும் விரைந்துள்ளனர். அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



நானுஓயா பிரதேசத்தில் பயங்கர விபத்து: ஏழு பேர் பலி! 41 மாணவர்கள் படுகாயம்

கொழும்பில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் நுவரெலியா நானுஓயா பகுதியில்.20-01-2023. இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 விபத்து இடம்பெற்ற போது பஸ் அதிவேகமாக பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் மீது பஸ் மோதியதில் இரு வாகனங்களும் 60 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் மேலும்
 தெரிவித்தனர்.
விபத்தில் 7 பேர் மரணித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள்  தெரிவிக்கின்றன. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 19 ஜனவரி, 2023

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

இலங்கையில் அனைத்து தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது.
2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.
2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதி கட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




இலங்கையில் வீடொன்றில் இருந்து இளம் காதல் ஜோடி சடலமாக மீட்பு

இலங்கை கலேவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவி மற்றும் இளைஞன் ஒருவனின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
14 வயதுடைய பாடசாலை மாணவி மற்றும் 17 வயதான இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவி கலேவெல அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவருக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாகவும், இதற்கு முன் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர்.
இதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணையின் போது இருவரும் கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த பாடசாலை மாணவியை அவரது தாயாரின் காவலில் வைக்க நீதிமன்றம் 
உத்தரவிட்டிருந்தது.
பின்னர் அண்மையில் மீண்டும் இருவரும் வீட்டை விட்டு ஓடி, அந்த இளைஞனின் கிராமப் பகுதியான ஆண்தாவளயில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டில் தங்கியுள்ளனர்.
இதனை அறிந்த வீட்டார் அவர்களை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளனர்.
இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 18 ஜனவரி, 2023

கொழும்புபில் பல்கலைக்கழக மாணவியை கொலை செய்த சந்தேக நபர் விளக்கமறியலில்

கொழும்பு பந்தய மைதானத்தில் பல்கலைக்கழக மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான இளைஞரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று 
உத்தரவிட்டுள்ளது.
குருந்துவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸின் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இது 
இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து குருதுவத்தை பொலிஸார் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், தேசிய மனநல மருத்துவ நிறுவனத்தின் விசேட வைத்தியரிடம் அனுப்பிவைத்து, அவரது மன நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் 
தெரிவித்தார்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை தேசிய மனநல மருத்துவ நிறுவகத்தின் விசேட வைத்தியரிடம் பரிந்துரைத்ததோடு, அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக நெத் நியூஸ் நீதிமன்ற செய்தியாளர் 
தெரிவித்தார்.
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் 03ஆம் ஆண்டு மாணவர் ஒருவர் கொழும்பு பந்தயப் பாதையில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 17 ஜனவரி, 2023

யாழ் தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கடலில் குளிக்கச்சென்றவருக்கு நேர்ந்த கதி.

யாழ். தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீரேரியில் இருந்து முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம்  (11.01.2023) அன்று
 காலை மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு நீராடச் சென்றவர்கள் சடலமொன்று மிதப்பதாக வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனை தொடர்ந்து நீரில் மூழ்கிய நிலையில் முதியவரின் 
சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஆலயத்திற்கு வந்த முதியவர் நீரேரியில் நீராட முற்பட்ட சந்தர்ப்பத்தில் நீரில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





திங்கள், 16 ஜனவரி, 2023

சீனாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோனா.. 60000 பேர் மரணம்.

சீனாவில் வேகமாக பரவி வரும் கோவிட் பாதிப்பால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உயிரிழந்ததோரின் எண்ணிக்கை 60000 நெருங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும்
கோவிட் பரவல் 95 விழுக்காடு நீங்கி இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் சீனாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கோவிட் பரவல் மீண்டும் அதிகரிக்கத் ஆரம்பித்துள்ளது.கோவிட் பரவலைத் 
தடுக்க ஜீரோ
கோவிட் என்ற கொள்கையை சீன அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளது.அதன்படி பல்வேறு முக்கிய நகரங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியதோடு, வணிக ரீதியிலான பாதிப்பும் அதிகரித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 15 ஜனவரி, 2023

கணவன் இறந்த பின் மீண்டும் திருமணம் செய்யும் பெண்கள் படும் வேதனைகள்.

. ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்n ஆணிற்கொரு மறுமணம் என்றால் வயதில்லை,எந்தவொரு தடையில்லை இறந்த மனைவியின் நினைவில்லை..அவள் இல்லையென்ற 
வேதனை இல்லை.
பெண்ணிற்கு மறுமணம் என்றால் மட்டும்,இறந்தவனின் நினைவு வந்துவிடும்.அவன் குடும்பம் தழைக்க ஓர் வாரிசு இல்லையென்ற வருத்தம் வந்துவிடும்.மூன்று மாத வாழ்வில் மூளைச்சாவில் கணவன் போனால் மூலையில் அமரவைத்து,மூக்குசிந்தி செல்லும் கூட்டம் சொல்லுது.வாரிசு இல்லை.இறந்தவன் நினைவின்றி,உடலுக்காக அடுத்தவனை கைப்பிடிக்கிறாளென்று.
பிள்ளையொன்று பிறந்துவிட்டால் பிரிதொரு வாழ்க்கை அமைக்க நினைக்குமோ இக் கூட்டம்? பிள்ளைக்காக வாழ்ந்திடு என்று சொல்லி,தங்கள் மகிழ்வைக் கூட தளர்த்திடாது,நகர்ந்து செல்லும் கூட்டம் சொல்லுது இறந்தவனின் நினைவு அவளிற்கு 
இல்லையென்று
இறந்தவனை மட்டுமே நினைத்திருந்தால்,இவள் வாழ்க்கை மீண்டிடுமோ? இல்லை..குழந்தை
ஒன்றுதான் பிறந்திட்டால் குடும்பமாக ஆகிடுமோ? கண்ணீரில் கரைந்தபடி காலமெல்லாம் இவள் வாழ,கலகலவென சிரித்தபடி செல்லும் கூட்டம்..அடுத்த சோலி பார்க்க,மூலையில் அமர்ந்தவள்
மீண்டுமொரு மாலை ஏந்தினால் மட்டும்,மூலைக்கு மூலை நின்று பேசுது கதை.இல்லாமல் போனவனுக்காக,இவள் இடிவிழுந்த மரமாக பட்டுப் போக வேண்டுமோ?துளிர்த்திடல் ஆகாதோ?? இறந்தவன் குலம் வாரிசற்று போனதற்க்காய்.இவள் குலம் தழைக்க கூடாதோ? வாரிசுக்காக பெண்களின் வாழ்க்கையை பாழாக்காது. வாழவையுங்கள்.மீண்டும் வாழ்வளித்து.வாழச் சென்றால் வாழ்த்திடுங்கள்
வழி மறைக்காது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 14 ஜனவரி, 2023

காரைநகரில் வசிக்கிக்கும் .70 வயது முதியவரின் உழைப்பாளியின் கதை.

யாழில் ஓர் உழைப்பாளியின் கதை.. 70 வயது முதியவர் ஒருவர், யாழ்ப்பாணம் காரைநகரில் வசிக்கிறார். வயதாகிவிட்டதே, உடல் தளர்ந்துவிட்டதே என்றெல்லாம் நினைக்காமல், சுயதொழில் 
உற்பத்தியில் ஈடுபடுகிறார்.பனையில் இருந்து கிடைக்கக்கூடிய ஓலை, ஈர்க்கு, நார், மட்டை போன்றவற்றைப் பயன்படுத்தி, ஓலைப்
 பெட்டிகள், கடகங்கள், தட்டைப் பெட்டி, நீர்த்துப் பெட்டி, திருகணை போன்றவற்றை இவர் உருவாக்குகிறார். இதை ‘பன்ன வேலை’ என்று அழைப்போம்.
மேலும் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு நிறங்களில் ‘பின்னல் பெட்டிகளையும்’ இவர் இழைக்கிறார். திருமணத்தின் போது ‘நாலாம் சடங்கில்’ பலகாரங்களை எடுத்துச் செல்ல இவ்வகைப் பெட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அத்துடன் கூறைச்சேலை, தாலி போன்றவற்றை எடுத்துச்செல்ல பயன்படும் ‘அலங்காரப் பெட்டிகளும்’ இவரது கைவண்ணத்தில் உருவாகின்றன.
பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் கலைவேலைப்பாடுகள் நிறைந்ததுமான இந்த பனையோலைப்பெட்டிகளை இழைப்பதன்மூலம் அவருக்கு குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. வயதான காலத்தில்கூட யாரையும் நம்பியிராமல், தனது உழைப்பைமட்டும் நம்பிவாழும் இவரின் பெயர் செல்லைய்யா கந்தசாமி.
பனையோலைப் பெட்டிகளில் கூறைச்சேலை, தாலிகளை எடுத்துச் செல்வது அந்தக்கால வழக்கமாக இருந்தாலும் அதைநாம் மீளவும் கொண்டுவந்து, Trend ஆக்க முடியும்.
வெளிநாடுகளில்வாழும் நாம், தாயக உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்யவேண்டும். இதன்மூலம் எமது பாரம்பரியத்தை கட்டிக்காப்பதோடு, திரு. கந்தசாமி போன்ற உழைப்பாளிகளின் வாழ்வில் ஒளியேற்றியதாகவும் இருக்கும்.
தாயகத்தின் இவர்போல மேலும் பல உழைப்பாளிகளும் சுயதொழில் முனைவோரும் இருக்கிறார்கள். இவர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஒன்றுசேரும்போது அங்கு பெரும் பொருளாதாரப் புரட்சியே நிகழும். இதன் முதல்கட்டம் ஏற்கனவே துவங்கிவிட்டது. 70 வயதிலும் ஓயாது உழைக்கும் திரு. கந்தசாமி அவர்களை வணங்குகிறேன். ‘பொருளாதார முன்னேற்றமே ஏனைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை
என்பது குறிப்பிடத்தக்கது இந்தஎம் இணையங்களன் 
 வாழ்த்துக்கள் ஐயா

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 13 ஜனவரி, 2023

யாழ் தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு.

நாட்டில் அனைவரையும் பொங்கவைப்போம்”
கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. 
அவர்களின் நிதிப் பங்களிப்புடன்.12/01/2023 .அன்று  தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் 
வழங்கி வைக்கபட்டன.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 12 ஜனவரி, 2023

நாட்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை

நாட்டில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் தனது குடும்பத்திற்கு உதவுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெறத் தவறியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அக்குரஸ்ஸவிலுள்ள தனது இல்லத்தில் கடிதம் ஒன்றை விட்டுவிட்டு, பெற்றோருக்கு உதவ முடியாமல் போனதில் வருந்திய அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் உறவினர்கள் அவரை அக்குரஸ்ஸ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக 
அறிவிக்கப்பட்டது.
கொரிய மொழிப் பரீட்சையில் 5 புள்ளிகளை இழந்து சித்தி பெறத் தவறியதால் குறித்த இளைஞன் மனமுடைந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
அவரது தாயாரின் கூற்றுப்படி, அவர் மூன்று குழந்தைகளில் மூத்தவர், குடும்பத்திற்கு உதவ முடியாமல் சோகத்தில் இருந்ததாக 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 11 ஜனவரி, 2023

உடல்நலக் குறைவால் கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் பதவி வகித்த இரண்டாம் கான்ஸ்டன்டைன் மரணம்

கிரீஸ் நாட்டின் மன்னராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் இரண்டாம் கான்ஸ்டன்டைன். இவர் தனது 23-ம் வயதில் கிரீசின் மன்னராக 
அரியணை ஏறினார். 
கிரீசில் மன்னாராட்சி முறைக்கு 1967-ம் ஆண்டு எதிர்ப்பு எழுந்த நிலையில் 2-ம் கான்ஸ்டன்டைன் நாட்டை விட்டு வெளியேறினார். 
அதன்பின், 1974-ம் ஆண்டு மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு மக்களாட்சி நடைமுறைக்கு வந்ததால் அவர் அதிகாரப்பூர்வமாக மன்னர் பதவியில் 
இருந்து நீக்கப்பட்டார். 
மக்களாட்சி மலர்ந்த நிலையில் பின்னர் நாடு திரும்பினார். இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெண்டைன் இன்று மரணமடைந்தார். 
வயது முதிர்வு, உடல்நலக் குறைவு காரணமாக தனது 82 வயதில் அவர் மரணமடைந்தார். உடல்நலக் குறைவால் ஏதென்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2-ம் கான்ஸ்டண்டைன் மரணமடைந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>