siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 மே, 2024

நாட்டில் மன்னாரில் கடல் ஆமை இறைச்சிகளுடன் இருவர் கைது

நாட்டில் மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடல் ஆமை
 இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் இன்று (30.05) கைது 
செய்யப்பட்டுள்ளனர். 
பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.  
இவர்களிடம் இருந்து 82 கிலோ கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.  
மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 30 மே, 2024

பண்டத்தரிப் பில் வைத்தியசாலைக்கு சென்று திரும்பிய பெண் கார் மோதி பலி

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் 29-05-2024.அன்று  கணவருடன் வைத்தியசாலைக்கு சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 61 வயதுடைய சரோஜினி தேவி அல்பேர்ட் வில்லியம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த சில நாட்களாக சுகவீனமடைந்திருந்த 
நிலையில் மருத்துவ சிகிச்சைபெற அருகில் உள்ள 
வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு , 
கணவனுடன் துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது , பின்னால் வேகமாக வந்த கார் இவர்களை
 மோதி தள்ளியுள்ளது.
இதன்போது குறித்த பெண் தூக்கி வீசப்பட்டு , படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் காரின் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது 


புதன், 29 மே, 2024

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாகிஸ்தானில் இருபத்தி எட்டு பேர் பலி

பாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பஸ்சில் பயணம் செய்த குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர்.
துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் நகருக்கு அருகே விபத்தில் சிக்கியது. 
இந்த விபத்துக்குக் காரணம் பஸ் அதிவேகத்தில் இயக்கப்பட்டதே என்று கூறப்படுகிறது. ஆனால், பஸ்சின் டயர் வெடித்து விபத்து நேரிட்டதாக, அந்நாட்டிலிருந்து வெளியாகும் சில ஊடக செய்திகள்
 தெரிவிக்கின்றன. 
விபத்தில் சிக்கி காயமடைந்த 22 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சாலை விதிகளை சரியாக பின்பற்றாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை போக்குவரத்துத் துறை கடைப்பிடிக்காததாலும் இதுபோன்ற சாலை விபத்துகள் அதிகம் நிகழ்கின்றன.
 இந்த மே மாதத்தில் மட்டும் 18-ம் தேதி நேரிட்ட விபத்தில் 13 பேரும், கடந்த 3-ம் தேதி நேரிட்ட விபத்தில் 20 பேரும் பலியானது
என்பது குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 28 மே, 2024

இலங்கைக்கு பிரிட்டனில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் உயிரிழப்பு

பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது குடும்பத்துடன் இணையாமைக்கு கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
 சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார்.
 செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆண் பெண் குழந்தைகளை விட்டு விட்டு அவர் பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டிய நிலையேற்பட்டது. அவரின் மனைவியின் தாயார் சுதர்சன் இதயசந்திரனை குடும்பத்தின் தூண் என 
வர்ணித்துள்ளார்.
 எனினும் நவம்பர் 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குடிவரவுதீர்ப்பாயத்தில் நீதிபதி பொனெவெரோ சுதர்சன் இதயசந்திரனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கு குடும்பத்துடன் இணைவதற்கான உரிமை உள்ளது என தெரிவித்தார். சுதர்சன் இதயசந்திரனிற்கு
 பிரிட்டனில் அவரது குடும்பத்தினருடன் வாழ்வதற்கான உரிமையுள்ளது என நீதிபதி தெரிவித்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் முறையீடு செய்யவில்லை எனினும் அவர் மீண்டும் பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விசாவை வழங்கும் ஏற்பாடுகளை மந்தகதியில் 
முன்னெடுத்தது. 
இந்த செயற்பாடுகள் பல மாதங்கள் நீடித்தன. இதன் காரணமாக அவர் இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் வசிக்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டார். அவரது 
குடும்பம் இலங்கை
 தமிழ் குடும்பம். எம்டிசி சொலிசிட்டர்சனின் நாக 
கந்தையா உள்துறை அமைச்சின் தாமதங்கள் குறித்த 
நீதிமன்ற ஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு 
மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதற்காக மன்;னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர்.அந்த கடிதத்தில்
 தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என 
தெரிவிக்கப்பட்டிருந்தது.
 மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் அவர் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
 செப்சிஸ் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என 
அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மனஉளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ள 
அவரது அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என
 குறிப்பிட்டுள்ளனர்.
 அவரது குடும்பத்தினர் இதிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றனர் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள நாகேந்திரா 
அவர் இங்கு வசித்தவேளை அவைரையும் பராமரித்தார் அவர் மிகவும் இளகிய
 மனம் கொண்ட ஆதரவான நபர் அவரது இழப்பை யாராலும் மீளநிரப்ப முடியாது உள்துறை அமைச்சு அவரை நாடு
 கடத்தாவிட்டால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என கருதுகின்றேன் அவரின் மரணத்திற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சே காரணம் என குற்றம்சாட்டுகின்றோம் என 
குறிப்பிட்டுள்ளார்.
 பிரிட்டனின் உள்துறை அமைச்சு இதயசந்திரனை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாகேந்திரா அவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும்அவர் மனமுடைந்தவராக 
காணப்பட்டார் தனது குடும்பத்துடன் மீள இணைவதற்காக தான் ஏன் காத்திருக்கவேண்டும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் நாகேந்திரா தெரிவித்துள்ளார். என்ற அமைப்பின் இயக்குநர் லூ கால்வே இந்த
 மனதிற்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் விவகாரம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும்,பிரிட்டனில் வசிப்பதற்கான தெளிவான உரிமை உள்ளபோது ஏன்சுதர்சன் நாடு கடத்தப்பட்டார் ?நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் உள்துறை அமைச்சு மந்தகதியில் செயற்பட்டது என தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது





 

திங்கள், 27 மே, 2024

இடம்பெற்ற கோர விபத்தில் துருக்கியில் பத்து பேர் பலி பலர் காயம்

துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  
தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. 
மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு கார்கள் மீது மோதியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.  இந்த விபத்தில் மேலும் 39 பேர் 
காயமடைந்துள்ளனர்.
மூன்று வாகனங்களிலும் லொறி ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் மேலும் 
தெரிவிக்கின்றன.  
சம்வம் குறித்த  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 




 

ஞாயிறு, 26 மே, 2024

இலங்கை மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வங்காள விரிகுடாவில் உருமாறிய சூறாவளியால்

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ரிமால் சூறாவளி காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும், வங்காள விரிகுடா கடற்பரப்பிலும் பலத்த மழை பெய்யக் கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டிருந்த ரிமால் சூறாவளி இன்று (26) காலை வேளையில் சந்தா சூறாவளியாக உருவெடுத்துள்ளதாக அதில் மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 25 மே, 2024

நாட்டில் பேசாலையில் வாள்வெட்டு குடும்பஸ்தர் யாழ் வைத்தியசாலையில்

மன்னார் - பேசாலை முருகன் கோவிலடி 7ஆம் வட்டார பகுதியில் இடம் பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலத்த காயமடைந்து, யாழ்ப்பாணம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் கடந்த 22 -05-2024.ஆம் திகதி புதன்கிழமை இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் அதே ஊரைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடந்த 23 -05-2024.ஆம் திகதி 
பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். எனினும், வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
  என்பது குறிப்பிடத்தக்கது


வெள்ளி, 24 மே, 2024

மரண அறிவித்தல் அமரர் கந்தையா இராஜரத்தினம்

துயர் பகிர்வு--- உதிர்வு -22-05-2024 
யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்,,புலோலி வடக்கு கலைமன்ற வீதி,பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ,ஓய்வு பெற்ற பிரதித் திட்டப்பணிப்பாளர் திரு  கந்தையா இராஜரத்தினம் அவர்கள் .22-05-2024.  புதன்கிழமைஅன்று  இறைவனடி சேந்தார்
அன்னார் கந்தையா சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும் சுப்பிரமணியம் பொன்னம்மா  இந்திராணி
ஆகியோரின்  பாசமிகு சகோதரனும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.05.2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது 
இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியை பருத்தித்துறை இந்துமயணத்தில் நடைபெற்றது 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்  . 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

வீட்டு முகவரி
புலோலி வடக்கு கலைமன்ற வீதி
,பருத்தித்துறை.


வியாழன், 23 மே, 2024

நாட்டில் கண்டி நோக்கி பயணித்த பேருந்துக்கு நேர்ந்தக் கதி சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரக்கிளை ஒன்று முறிந்து 
விழுந்துள்ளது. 
ஹட்டன்-கண்டிவார் பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில்.23-05-2024. இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை பேருந்து சபைக்கு சொத்தமான பஸ் வண்டியின் முன்னால் மரக்கிளை ஒன்று வீழ்ந்துள்ளது.
 இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்துள்ளதுடன், பயணிகளுக்கு பாதிப்பில்லை என
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது   


  


 

புதன், 22 மே, 2024

நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரடியாகக் குறைப்பு

நாட்டில்எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக்
 குறைக்கப்பட்டுள்ளது.
 நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம் (இந்தியன்) ஒரு கிலோ 40 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 250.00 ரூபா, ஒரு கிலோ கடலை (பெரியது) 38 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 450.00 ரூபா, ஒரு கிலோ வெள்ளைச் சீனியின் புதிய விலை 275.00 ரூபாவாகவும் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது.
 குறித்த பொருட்களை வாடிக்கையாளர்கள் நாடளாவிய 
ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும்.22-05-2024.  இன்று புதன்கிழமை  முதல் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 21 மே, 2024

யாழ் வாதரவத்தையை சேர்ந்த செல்வி சுதாகரன் சாருஜா இராணுவ வாகனம் மோதி உயிரிழப்பு

யாழ் வாதரவத்தையை சேர்ந்த செல்வி சுதாகரன் சாருஜா 
அவர்கள்.20-05-2024.அன்று  இராணுவ வாகனம் மோதி
 யுவதி உயிரிழப்பு இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் 20-05-2024.அன்று 
 இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனமொன்று வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதி மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
குறித்த விபத்தில் படுகாயமடைந்த சுதாகரன் சாருஜா என்ற 23 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.





 

திங்கள், 20 மே, 2024

இலங்கை ஜனாதிபதி ரணில் ஈரானிய ஜனாதிபதிக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன் மற்றும் பிற மூத்த ஈரானிய 
அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க X செய்தியில் தெரிவித்துள்ளார்.
 "அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஈரான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
எங்களது பிரார்த்தனைகள் ஜனாதிபதி ரைசி மற்றும் அவரது பரிவாரங்களின் குடும்பத்தினருடன் இருக்கின்றன" என்று ஜனாதிபதி கூறினார்.
என்பது குறிப்பிடத்தக்கது.



ஞாயிறு, 19 மே, 2024

வீடொன்றில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது. 
கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் வீடொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
தீவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 18 மே, 2024

நாட்டில் பல பகுதிளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  
கடும் மழை, பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மத்திய நிலையம் 
தெரிவித்துள்ளது. 
இரத்தினபுரி மாவட்டத்தில் 04 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேகாலை, ரம்புக்கன பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  
இதேவேளை, பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலக பிரிவுக்கு எச்சரிக்கை நிலை 2 இன் கீழ் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது. 
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் அபாய பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு எச்சரிக்கையும் 
விடுக்கப்பட்டுள்ளது.  
இந்த எச்சரிக்கை அறிவிப்பு.18-05-2024. இன்றுமாலை வெளியிடப்படும்.19-05-2024. நாளை  மாலை 4:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 17 மே, 2024

புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளதால் அமெரிக்காவில் நால்வர் மரணம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில், பலத்த புயல் காற்று வீசியது. 
இதைத் தொடர்ந்து பெய்த கனமழையால் நகரத்தின் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் நின்ற மரங்கள் வேறோடு சரிந்தன. புயல் மற்றும் கனமழையால் மின்கம்பங்கள் சரிந்து பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது. 
இதனால் நேற்று இரவு சுமார் 9 லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின. இதனிடையே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
புயல் பாதிப்பு காரணமாக ஹூஸ்டன் நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
ஹூஸ்டன் நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக புயல் தாக்கியுள்ளது என்பதாகும் 





 

வியாழன், 16 மே, 2024

யாழ் தாளையடியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் கைது

யாழ் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது 
செய்யப்பட்டார்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி 
பகுதியில் கடந்த 10ம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை 
செய்யப்பட்டார்.
கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த 
பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.
பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கைதான சந்தேக நபரை இன்றையதினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்பதாகும்






 

புதன், 15 மே, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து அமெரிக்கா-புளோரிடாவில் எட்டு பேர் மரணம்

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  




 

செவ்வாய், 14 மே, 2024

இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதி கார் விபத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச் சென்ற சென்ற கார் யாழ்ப்பாணம் இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து.13-05-2024. அன்று  மாலை 
இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் நாவலர் வீதியால் வருகை தந்த நகைக்கடை உரிமையாளரின் மனைவியின் வாகனம் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்டது
இந்நிலையில் யாழ்ப்பாணம் பலாலி வீதியூடாக புன்னாலைக் கட்டுவன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க முற்பட்ட போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனின் கால்கள் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த நகைக்கடை உரிமையாளரின் மனைவி சந்தியை கவனிக்காது வாகனத்தை நேராக பயணிக்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம் பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும் .



திங்கள், 13 மே, 2024

ஆண் ஒருவரின் முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் சடலம் மீட்ப

முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் பின் பகுதியில் சடலம் ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. 
மாங்குளம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
வவுனியா ஊர்மிலாந்தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஆசீர்வாதம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
சம்பவ இடத்துக்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற மேலதிக நீதவான் சடலத்தை பார்வையிட்டதுடன், கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது








 

ஞாயிறு, 12 மே, 2024

நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை சருமத்தில் இந்த பிரச்சினைகள் இருந்தால் மருத்துவரை அணுகுகவும்

வெப்பமான காலநிலையுடன் இந்த நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் இந்திரா கஹாவிட்ட 
தெரிவித்துள்ளார்.  
சில தோல் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
கடுமையான வெயிலில் வெளிப்படும் பகுதிகளில் தோலில் அரிப்பு புள்ளிகள் ஏற்படலாம் என்றும் சிறு குழந்தைகளுக்கு முகத்தில், 
குறிப்பாக கன்னங்களின் மேல், கண்களைச் சுற்றிலும் கொஞ்சம் தாழ்வாக வெள்ளைப் புள்ளிகள் ஏற்படும் என்றும்
 அவர் கூறியுள்ளார். 
பூஞ்சை தொற்று பெரிய பிரச்சனையாக இருப்பதைப் பார்க்கிறோம். மருத்துவம் போன்றவற்றை எந்த வகையிலும் செய்யாதீர்கள். உடனடியாக தகுதியான மருத்துவரை அணுகவும்.  ஏனென்றால் இருக்கும் நோய்கள் 
அதிகரிப்பதைக் காணலாம்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 மே, 2024

நாட்டில் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

நாட்டில்பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்.11-05-2024. இன்று  மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த 
மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் அபாயம் உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த 
மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 மே, 2024

யாழ் வல்வெட்டித்துறையில் இளம் பெண் தீக்குளித்து உயிர் மாய்த்தார்

யாழ் வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்ற பகுதியைச் சேர்ந்த, 26 வயதான இளம்பெண் ஒருவர், 09-05-2024.அன்று இரவு தீக்குளித்து
 உயிரை மாய்த்துள்ளார்.
காதல் உறவில் ஏற்பட்ட முறிவினால் உண்டான மனஅழுத்தம் காரணமாகவே, குறித்த பெண் இத்தகைய விபரீத முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கிராம உத்தியோகத்தர் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சடலம் உடற்கூற்று சோதனைக்காக 
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.





 

வியாழன், 9 மே, 2024

யாழ் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அதிக வெப்பம் காரணமாக மற்றுமொருவர் மரணம்

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் 
பகுதியில் 08-05-2024.அன்று  குடும்பஸ்த.ர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார். 
இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 45) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர்  08-05-2024.அன்று மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார். 
பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார். 
அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள்
 மேற்கொள்ளப்பட்டது.  
அவர் அதிக வெப்பம் காரணமாக உடலில் பத்துக்கு மேற்பட்ட எரிகாயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனைகளில்
தெரியவந்துள்ளது. 
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சடலம்.09-05-2024. இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
என்பது குறிப்பிடத்தக்கது.



புதன், 8 மே, 2024

நிலவும் வெப்ப அலையினால் யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா
 தெரிவித்துள்ளார்
யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு 
தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனை தாண்டும் போது, தீவிரமான 
பாதிப்புகள் ஏற்படும்.
அதனால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது "ஹீட் ஸ்ரோக்" ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். 
அதேவேளை குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை
 குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக 
பாதிக்கப்படும். 
மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.
யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் "ஹீட் ஸ்ரோக்" காரணமாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் 
உயிரிழப்புக்கு 
அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் 
காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாகும்.
எனவே, எம்மை வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும்.
" ஹீட் ஸ்ரோக்" வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய
 நீராகாரங்களை வழங்க வேண்டும். வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும்.
குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள
 வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை
 தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே "ஹீட் ஸ்ரோக்" வராமல் தடுக்க முடியும் என தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கதது