siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 ஜூன், 2018

துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி முல்லைத்தீவில் இளைஞன் பலி

முல்லைத்தீவு காட்டு பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞன் ஒருவரின் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது.
முள்ளியவளை, கற்பூரவெளி காட்டுப்பகுதியில் சடலம் ஒன்று இருப்பதாக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் முள்ளியவளை 1ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22வயதுடைய மனோகரன் கஜிந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலத்தின் தலைப்பகுதியில் துப்பாக்கி சூட்டுகாயங்கள் காணப்பட்டமையினால் இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் பதில் நீதிபதி ரி.பரஞ்சோதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 28 ஜூன், 2018

யாழ் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அருகில் விபத்து

யாழ் புத்தூர் மீசாலை வீதியில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகில், வேக கட்டுப்பாட்டை
 இழந்த கப் ரக் வாகனம், வீதியை விட்டு பாய்ந்து மின்கம்பத்தை மோதியதில் மின்கம்பம் உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வீட்டில் உறங்கிய இளைஞன் யாழில் திடீர் மரணம்

யாழ்ப்பாணத்தில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞன் திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
20 வயதான அகிலகுமார் நிலவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய அவர் உறங்கச் சென்றுள்ளார். இதன்போது அவருக்கு மூச்சுத் திணறல் 
ஏற்பட்டுள்ளது.
உடனடியாக கோப்பாய் வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார். உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய உடற்கூறுகள் கொழும்புக்கு
 அனுப்பப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 ஜூன், 2018

ஊரெழுவைச் சேர்ந்த பெண் கொட்டாஞ்சேனையில் கொலை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணத்திலிருந்து கொட்டாஞ்சேனைக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக வந்த பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து சென்றவர்களே இந்தக் கொலையை செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகப் 
பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
ஊரெழு கிழக்கைச் சேர்ந்த குணரட்ணம் விஜிதா (வயது -36) என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
"கணவனைப் பிரிந்து வாழும் இந்தப் பெண், கொட்டாஞ்சேனையிலுள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாக உள்ளார்.
வேலை செய்யும் வீட்டிலேயே அவர்  கொலை செய்யப்பட்டுள்ளார். கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஒருவரோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ இந்த கொலையை
 செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்" என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

மீனவரின் வலையில் மன்னார்பகுதியில் சிக்கிய பிள்ளையார்

மன்னார் பிரதான பாலத்தடி கடற்பகுதியில் இன்று காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் பிள்ளையார் சிலை ஒன்று மாட்டியுள்ளது.இதனைப் பார்க்கப் பலர் அங்கு 
ஒன்று கூடினர். மர்மப் பொருள் என நினைத்து அதனைக் கரைக்குக் கொண்டு வந்த மீனவர் பொருளில் இருந்த மண்ணை அகற்றிய போது
 பிள்ளையார் சிலை
 எனத் தெரிய வந்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 19 ஜூன், 2018

துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞன் மருத்துவ அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி

மல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான இளைஞனின் மரணத்திற்கான காரணமும், மேலும் பல அதிர்ச்சியான விடயங்களும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது.உயிரிழந்த இளைஞனின் உடலில் இருந்து அதிகளவான
 குருதி வெளியேறியமையே உயிரிழப்புக்கு காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றிருந்தால் குறித்த இளைஞரை காப்பாற்றியிருக்கலாம்
 என சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனையை யாழ். போதனா வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரி எஸ்.மயூரதன் மேற்கொண்டார். இவருடைய அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் ‘இளைஞனின் முதுகு பக்கத்தால் சென்ற துப்பாக்கி குண்டானது அவரது இடது பக்க நெஞ்சு பகுதியால் வெளியேறியுள்ளது.
இன்னுமொரு துப்பாக்கி குண்டு தோள் மூட்டு பகுதியால் சென்றுள்ளது. எனினும் இருதயத்தில் எந்தவொரு பாதிப்பும்
 இல்லை.நுரையீரல் பகுதியில் இருந்து அதிகளவான குருதி வெளியேறியமையால் மரணம் சம்பவித்துள்ளது.ஆனால், சம்பவம் நடைபெற்று 15 நிமிடங்களுக்குள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்திருந்தால் 
காப்பற்றியிருக்க முடியும்.
அத்துடன் இளைஞனின் முகத்தில் இரண்டு இடங்களில் தாக்கப்பட்டமைக்கான காயங்கள் உள்ளன. மற்றும் அவரது உடைகளும் கிழிந்திருந்ததாக’ விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை
 மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாப்படுத்தபடும். எனவும் தெரிவிக்கப்பட்டது.
மல்லாகம் சகாய மாதா தேவாலயம் முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த 34 வயதான மேசன் தொழிலாளியான பாக்கியராஜா சுதர்சன் என்பவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நபரொருவர் ஐந்து சந்தி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார்

யாழ். ஐந்து சந்தி பகுதியில் நபரொருவர் தனக்கு தானே நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
55 வயதான நபரொருவரே வீட்டில் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தையடுத்து குறித்த நபரை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
 இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 18 ஜூன், 2018

கோர விபத்து புகையிரதக் கடவையில் இருவர் ஸ்தலத்தில் பலி!

ராகம, பேரலந்த புகையிரத வீதியில் 17.06.2018. மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபத்தில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த
 புகையிரதத்தில், மோட்டார் சைக்கிள் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.புகையிரத பாதுகாப்பு கடவை மூடி
யிருந்த நிலையில் அதன் ஊடாக பயணக்க முயற்சித்த இருவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டுள்ளனர்.கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம் புகையிரத கடவைக்கு அருகில் இருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.¨
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 14 ஜூன், 2018

கிளிநொச்சி இளைஞன் தாமரைக் கோபுரத்திலிருந்த தவறி வீழ்ந்தது காரணம் வெளியாகியுள்ளது

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து தமிழ் இளைஞன் விழுந்தமைக்கான காரணம்  தற்போது வெளியாகியுள்ளது.கிளிநொச்சியை சேர்ந்த கோணேஸ்வரன் என்ற இளைஞன் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்திருந்தார்.மரணத்திற்கான உண்மையான காரணத்தை கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர வெளியிட்டுள்ளார்.
தாமரைக் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது. அதற்கான கதவுகளும் பூட்டப்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை. மின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.அந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட வரும் அதியுயர் கோபுரமான தாமரை கோபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில்இ 19 வயதான கோணேஸ்வரன் உயிரிழந்தார்.மிகவும் குடும்ப வறுமை காரணமாக தனது மகன் வேலை தேடி கொழும்புக்கு வந்ததாக கோணேஸ்வரனின் தந்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 13 ஜூன், 2018

திருப்பாம்புரத்தில் பூமணத்தோடு நடமாடும் பாம்பு

காரைக்கால் அருகேயும் ஒரு திருப்பாம்புரம் இருக்கிறது. இங்குள்ள பாம்புரநாதர் கோயில் கருவறையில் இன்றும் பாம்பின் நடமாட்டம் உள்ளது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமை
 நாட்களில் ஆலயத்தினுள் மல்லிகைப்பூ, தாழம்பூ வாசனை வீசுகிறது. அச்சமயங்களில் அங்கு பாம்புகள் நடமாட்டம் இருப்பது வழக்கமாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 11 ஜூன், 2018

இளவாளையில் கோழி இரத்தம் குடிக்கும் பேய்

யாழ் இளவாளையில் தனது வீட்டில் பேய் ஒன்று கோழியைப் பிடித்து இரத்தம் உறுஞ்சியதாக முகப்புத்தகத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இதனை உண்மை என்றே தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.
அவரது முகப்புத்தக கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளோம். யாழ் இளவாலை வீட்டில் நேற்றிரவு இடம் பெற்ற உண்மை சம்பவம்.... சுமார் 1:20(அதிகாலை) மணியளவில் நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டு யன்னல் வழியாக பார்த்த போது .... ஊஞ்சலில் யாரே ஆடிக் கொண்டிருந்தார்கள்...பயத்துடன் மெதுவாக அடுத்த அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி...
இந்த உருவம் ஒரு கோழியை பிடித்து தின்று கொண்டிருந்தது.... உடனே சைகை மூலமாக லைட்டை போடும் படி சொல்லி விட்டு திரும்பினால் கோழி மட்டும் கீழே கிடக்கிறது....
வெள்ளை உருவம் இல்லை... பயத்துடன் இரவு கழிந்தது... காலையில் 6மணியளவில் வெளியே வந்து கோழியை பார்த்தால் கறுத்த இரத்ததுடன் செத்து கடக்கின்றது...(வேறு இடத்தில் நாய் தூக்கி போட்டிருக்கலாம்.) பின்பு ஜயர் ஒருவரை அழைத்து செய்ய வேண்டியவைகள் 
எல்லாம் செய்தாயிற்று.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




சனி, 9 ஜூன், 2018

உடுவில் பகுதியில் இறதந்த குழந்தை இறுதிக் கிரியையின் போது உயிருடன் விழிப்பு

யாழ். உடுவில் பகுதியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தைக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறும் போது உயிர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.உடுவில் ஆலடிப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக அந்தக் குழந்தைக்கு அவரது பெற்றோர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர். காய்ச்சல் குறையாத காரணத்தால், குறித்த குழந்தையைப் பெற்றோர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் சடலம் குழந்தையின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் இறுதிச் சடங்கு உடுவில் ஆலடியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் பகல் இடம்பெற்றது. இதன் போது குழந்தையின் சடலத்திலிருந்து சலம், மலம் வெளியேறியுள்ளது. அத்துடன் குழந்தையின் கைகள் அசைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், குழந்தை உயிருடன் இருப்பதாகப் பலராலும் நம்பிக்கை வெளியிடப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெறியுடன் தன்னைக் கொன்றவனை பழிவாங்கிய பாம்பு


அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து இளைஞரை கடித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது குறித்த இளைஞர் செல்லும் பாதையில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.அதை பார்த்த அவர் பாம்பின் தலையை வெட்டியுள்ளார். அதை அங்கிருந்து அகற்றி தூக்கிச் சென்றுள்ளர். அப்போது வெட்டிய பாம்பின் தலைக்கு உயிர் வந்து அவரை கொத்தியுள்ளது.
பாம்பின் வி‌ஷம் கடுமையானது. அது அவரது உடலில் வேகமாக பரவியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இதேவேளை அவர் கண் பார்வையை இழந்து விட்டார். உடலில் உள்ள உறுப்புகளில் ரத்தக் 
கசிவு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால், சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், உயிர் பிழைக்க மாட்டார் எனவும் அறிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 8 ஜூன், 2018

தெரனியகல நகரில் குழந்தையின் உயிரை பறித்த மண்மேடு!

கேகாலை மாவட்டத்தில் தெரனியகல நகரில் மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் மூன்று வயது குழந்தையின் உயிர் காவுகொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவிவருகின்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அனர்த்தத்தில் மூவர் படுகாயமடை
ந்துள்ள நிலையில், அவர்கள் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த 3 வயது குழந்தையின் தாய், தந்தை மற்றும் நான்கரை வயது உடன்பிறப்பு ஆகியோரே அனர்த்தத்தில் 
காயமடைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 6 ஜூன், 2018

மரண அறிவித்தல், திருமதி செல்வநாயகம் யோகானந்தசிவம்

பிறப்பு : 2 யூலை 1966 — இறப்பு : 5 யூன் 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், வளலாய், ஆவரங்கால் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் 05-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னமணி தம்பதிகளின் 
அன்பு மருமகளும்,
செல்வநாயகம்(செல்வா காட்வெயர்- ஆவரங்கால்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சாமினா அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தசிவம், ஸ்ரீஆனந்தன், தர்மானந்தசிவம், கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, அமிர்தலிங்கம், குமரகுருலிங்கம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற இராயேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-06-2018 புதன்கிழமை அன்று ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் ஆவரங்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் 
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துவாரகன்(பெறாமகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +447448554744
க.செல்வநாயகம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94770474141
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 3 ஜூன், 2018

யாழில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கி கொள்ளை

யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்கு இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் மானிப்பாய் ஆனந்தா வீதியில் இன்று (02) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றது.
கொள்ளையர்களின் தாக்குதலில் தலையில் காயமடைந்த குருநாதர் இரட்ணம் (வயது 69) என்ற வயோதிப மாது யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், தடயவியல் பொலிஸாருடன் விசாரணைகளை முன்னெடுத்தள்ளனர்.
விசாரணைகளின் பின்னரே கொள்ளையிடப்பட்ட பொருள்கள் தொடர்பில் சரியான தகவலை வழங்க முடியும் என்று 
பொலிஸார் கூறினர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 2 ஜூன், 2018

கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்: பிணவறையில் விழித்தெழுந்தார்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை 
ஏற்றியுள்ளார்.
அதன் பின்னர் குறித்த பெண் அசைவின்றி காணப்பட்டுள்ள நிலையில், அப் பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி 
அறிவித்துள்ளனர்.
பின்னர், குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை உறவினர் ஒருவர் கண்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் போது
 குறித்த வைத்தியர்கள், மற்றும் தாதியினரின் அசமந்தபோக்கை பெண்ணின் உறவினர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 1 ஜூன், 2018

யாழில் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தை பலி

யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.அராலி கிழக்குப் பகுதியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த
 சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,வீட்டிற்குள் தாயார் சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 
சகோதரர்களான இரு குழந்தைகளும் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது ஒரு குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டின்
 முன்பாக அமைந்துள்ள தண்ணீர்த் தொட்டிற்குள் தவறி விழுந்துள்ளது.
குறித்த குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும்
, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.யாழ். அராலி கிழக்கு வாலையம்மன் கோயிலடியைச் சேர்ந்த பா.சானுஜா எனும் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இணைந்தசேவைக்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்ப நிலை

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்தசேவை மேற்கொள்வதில் தனியார் மற்றும் இ.போ.சபைக்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த சேவை மேற்கொள்வதில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இணைந்த சேவை மேற்கொள்ளுமாறு இ.போ.ச.சாலை சாரதிகளுக்கு அறிவித்தல் தலைமை அலுவலகத்திலிருந்து வழங்கப்படவில்லை என இ.போ.ச ஊழியர்கள் 
தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனியார் , இ.போ.ச பேரூந்துகள் பேரூந்து நிலையத்தில் பேரூந்துகளை தரித்து நிறுத்தாமல் பேரூந்து நிலையத்திற்கு முன்பாக (வெளிசெல்லும் பாதையில்) பேரூந்துகளை தரித்து 
பயணிகளை ஏற்றி வருகின்றனர்.
இதன் போது தனியார் பேரூந்து ஒன்று பேரூந்து நிலையத்தில் வெளிச்செல்லும் பாதையூடாக உட்செல்ல முயன்ற சமயத்தில் மீண்டுமொரு குழப்ப நிலை ஏற்பட்டது
தமது பயணங்களை மேற்கொள்ளச் சென்ற பயணிகள் பெரும் இக்கட்டான நிலையிலுள்ளதுடன் இணைந்சேவை மேற்கொள்வதில் இழுபறி நிலை காணப்படுகின்றது.
தற்போது பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எனினும் இது வரை இ.போ.ச , தனியார் பேரூந்து பிரச்சனை சுமுகநிலைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>