siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் வசந்தகுமார்

துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை  
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம்  வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள் 
  லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  தம்பதியினரின் அன்பு மகனும் 
 மலர்வதான ( வதான ) சுகந்தி   ஆகியோரின்  அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும் 
 சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் இந்த இணையத்தில் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் சிறுப்பிட்டி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்

யாழில், சிறுப்பிட்டி யில் தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.
இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் நீராடிய போது சுழியில் அகப்பட்டு மரணம்

நாட்டில் பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது

. இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

மதியாமடு பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி

நாட்டில் வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 நேற்றைய தினம் குறித்த நபர் தமது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த
 காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த 12 நாட்களில் நீரில் மூழ்கி 26 பேர் பலி; மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக 
அதிகரித்துள்ளன.
கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமும் (17) இரு வேறு இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மிஹிந்தலை - மரதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக
 உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் 11 வயதுடைய மகனும், 12 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் 
மூழ்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும், இரு சிறுவர்களும் எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெஹியோவிட்ட - ஹிங்குரலகந்த பகுதியில் சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக பதிவாகும் இவ்வாறான மரணங்களை அடுத்து, நீர்நிலைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

நாட்டில் முன்நூறு அடி பள்ளத்தில் பாய்ந்த சிற்றூந்து : ஒருவர் பலி

நாட்டில்  பாலங்கொடையிலிருந்து கண்டிக்குச் சென்று கொண்டிருந்த சிற்றூந்து 300 அடி உயரமான செங்குத்தான பாறையிலிருந்து கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிற்றூந்து விபத்தில், மேலும் இரண்டு பெண்கள் படுகாயமடைந்து டிக்கோயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 16 ஏப்ரல், 2026

நாட்டில் ஆறு . நாட்களில் 44 பேர் விபத்துகளில் பலி

நாட்டில் ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்களில் மாத்திரம் 19 விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன், அந்த விபத்துக்களில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.
வாகன வகைகளின் அடிப்படையில் விபத்துக்களை பகுப்பாய்வு செய்ததில், அதிகபட்சமாக 16 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் 4 முச்சக்கரவண்டிகள், 4 வேன்கள், 2 கார்கள், 2 கெப் வாகனங்கள், 2 துவிச்சக்கர வண்டிகள் மற்றும் ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் என்பன இதில் உள்ளடங்குவதாக அவர் மேலும்
 தெரிவித்தார்.
அதேபோல், 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினங்களில் 25 விபத்துக்களும் 26 மரணங்களும் பதிவாகியிருந்த நிலையில், இவ்வருடம் அந்த எண்ணிக்கை 19 ஆகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர்
 சுட்டிக்காட்டினார்.
இந்த விபத்துக்களுக்கு மதுபோதையில் வாகனம் செலுத்தியமையே பிரதான காரணம் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர மேலும் தெரிவித்துள்ளார்..என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 15 ஏப்ரல், 2026

இலங்கை மகாவலி கங்கையில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்

நாட்டில் திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரி
ல் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணமல் போயுள்ளனர். சேருநுவர காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு, இதனை 
உறுதிப்படுத்தினர்.
புத்தாண்டு தினமான நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட 3 பேர் மகாவலி கங்கை குறுக்காகச் செல்லும் ஆற்றில் 
நீராடியுள்ளனர்.
இதன்போது, மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேருவில காவல்துறையின் பொறுப்பதிகாரி சூரியன் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html