siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 பிப்ரவரி, 2026

கத்திக்குத்து தாக்குதல் .லண்டனில் ஆபத்தான நிலையில் இரு சிறுவர்கள்

கத்திக்குத்து தாக்குதல்.வடமேற்கு லண்டனில் உள்ள பாடசாலையொன்றில் இரண்டு சிறுவர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லண்டன் கிங்ஸ்பரி உயர்நிலைப் பாடசாலையில் குறித்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றது.
இதில் 13 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்கள் தாக்கப்பட்ட நிலையில் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக 
கூறப்படுகிறது.
“சுற்றுப்புற சூழ்நிலைகள்” காரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இது ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்படவில்லை என்றும் துப்பறியும் அதிகாரி லூக் வில்லியம்ஸ் தெரிவித்தார். 
கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 13 வயதுடைய சிறுவன் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




புதன், 11 பிப்ரவரி, 2026

உயர்நிலை பாடசாலையில் கனடாவில் துப்பாக்கிச்சூடு -பத்துப் பேர் பலி

 மேல்நிலை பாடசாலையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். 
அங்குள்ள உயர்நிலை பாடசாலையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும்,  அங்கிருந்து 06 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். 
அத்துடன் தாக்குதல்தாரியும் இதில் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. 
இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.




 

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

கடும் குளிர் காரணமாக நியூயார்க்கில் பதினெட்டு பேர் உயிரிழப்பு

 கடும் குளிர் காரணமாக  அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை பாதித்த  குளிர் காலநிலை காரணமாக 18 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
ஜனவரி மாத இறுதியில் இருந்து நியூயார்க் நகரம் கடுமையான குளிர் காலநிலையை அனுபவித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
13 நாட்களாக வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸில் அல்லது அதற்குக் கீழே இருப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், வரும் நாட்களில் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகரம் முழுவதும் கடுமையான ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.



திங்கள், 9 பிப்ரவரி, 2026

நாட்டில் திடீரென டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து விபத்து

நாட்டில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டையிழந்து வீதியோர கால்வாயில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்துச் சம்பவம் வேளையில் கொஸ்கம சாலாவ பகுதியில்.09-02-2026. இன்று காலை , இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரியிலிருந்து பத்ரமுல்லை நோக்கி இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்களை 
ஏற்றிச் சென்ற அலுவலக பணியாளர் பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. 
குறித்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது பேருந்தின் முன்புற இடது பக்க டயர் திடீரென வெடித்ததால் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது. 
இதனையடுத்தே சாலையோரத்தில் இருந்த கால்வாயில் விபத்திற்குள்ளாகி முன்னோக்கி சென்று நிறுத்தப்பட்டது. 
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சிலர் காயமடைந்து கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

இலங்கையில் பல பகுதிகளில் இடம்பெற்ற சாலை விபத்துகளில் மூவர் பலி

 இலங்கையில்  பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் ஒரு இளைஞன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
கண்டி-யாழ்ப்பாணம் A9 வீதியில் கெக்கிராவ மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 65 வயதுடைய பெண் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, சியம்பளாண்டுவ வீதியில் மின்னிமரு சந்திக்கு அருகில் காய்கறிகளை ஏற்றிச் சென்ற லொறி, எதிர் திசையில் இருந்து வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். 
உயிரிழந்தவர் தல்கஸ்பிட்டிய, ஹபலன்காவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர். விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநர் மற்றும் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் காலி-கொழும்பு பிரதான வீதியில் ரண்டோம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒரு இளைஞன் 
உயிரிழந்துள்ளார். 
பலப்பிட்டிய நோக்கிச் சென்ற வேன் எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியதில் இந்த 
விபத்து நிகழ்ந்துள்ளது. 
 விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பயணி காயமடைந்து, பலப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அலுத்வல
 பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார். 
மேற்படி விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 7 பிப்ரவரி, 2026

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக 103 குழந்தைகள் பெற்றோர் இன்றி தவிப்பு

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் 103 குழந்தைகள் ஒரு தாய், தந்தை அல்லது இரு பெற்றோர்களையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் 
தெரிவித்தார். 
 பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவர் இந்தக் கருத்துக்களை
 தெரிவித்தார். 
 ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், இந்தக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக 
அமைச்சர் பால்ராஜ் கூறினார். 
 பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்,  அவர் மேலும் கூறினார். 
 இதுபோன்ற அனைத்து ஏற்பாடுகளும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கிரான்ஸ்-மொன்டானா விடுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

சுவிற்சர்லாந்தில் கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வலைஸ் மாகாணம் முதல்க்ட்ட அவசர உதவியாக 10,000 பிராங்கை வழங்கியுள்ளது.
48 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. “கோரப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டதும் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படுவதாக வலைஸ் மாகாணம் நேற்று அறிவித்துள்ளது.
செலுத்தப்பட்டுள்ள 48 கொடுப்பனவுகளில், 14 வெளிநாட்டு கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன, அவற்றில் பிரான்சில் ஏழு,
 இத்தாலியில் ஆறு மற்றும் பெல்ஜியத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html