siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 21 மார்ச், 2023

எல்லாவல நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்களுக்கு நேர்ந்த நிலை!

 

வெல்லவாய - எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றவர்களில் நான்கு இளைஞர்கள்  நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (21-03-2023) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
10 பேர் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று இங்கு நீராட சென்றதாகவும் அவர்களில் 4 பேர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 20 மார்ச், 2023

. நெடுஞ்சாலையில் பங்களாதேஷில் கோர விபத்து! 17 பேர் பலி

பங்களாதேஷில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 
நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேலியை தகர்த்துக்கொண்டு பஸ் வீதியோர கால்வாய்க்குள் விழுந்ததில் இந்த உயிரிழப்புகள் 
ஏற்பட்டுள்ளன.
பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 19 மார்ச், 2023

நாட்டில் குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 
தெரிவித்துள்ளது.
நிலச்சரிவுகள், பாறைகள் சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 18 மார்ச், 2023

அராலி சந்தியில் பட்டா ரகவாகனம் பேருந்து மீது மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில்.18-03-2023. இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார். 
3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
ஊர்காவல்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம்  நோக்கி சென்ற பட்டா ரக வாகனம் நயினாதீவிலிருந்து வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  
இச்சம்பவத்தில் பட்டா ரக வாகனத்தின் சாரதி ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்நிலையில் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும்  ஊர்காவல்துறை பொலிஸாரால் கைது 
செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

வெள்ளி, 17 மார்ச், 2023

நாட்டில் மரவெள்ளி கிழங்கின் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கையில்  சமீபகாலமாக நாடு முழுவதிலும் உள்ள கிராம புறங்களில் 60 – 70 ரூபாய் வரை விற்க்கப்பட்ட மரவெள்ளி  மரவள்ளிக்கிழங்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 200விலும் குறைவான விலையில் விற்கப்பட்ட நிலையில் தற்போது மரவெள்ளி கிழங்கின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டு 230 ரூபாவிற்கு விற்பனை 
செய்யப்படுகின்றது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




மரண அறிவித்தல் திரு வைரமுத்து விநாயகமூர்த்தி 16.03.2023

 

பிறப்பு-15 03 1938-இறப்பு-16-03-2023.
யாழ். கோண்டாவில் கிழக்கை பிறப்பிடமாகவும், நவற்கிரியை ,வாழ்விடமாகவும்  கனடா வை  வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2023 வியாழக்கிழமை 
அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலாதேவி(இலங்கை), துரைராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணாவும்,நிமல்ராஜ், விமலராணி, 
காலஞ்சென்ற ஆனந்தராஜா, 
வசந்தராஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,ஜெயக்குமாரி, ரவீந்திரன், மேகலா, காலஞ்சென்ற சிவசாந்தினி, ஜெயலட்சுமி, சரோஜினி , வனஜா, பவகோபிதன், டக்சிகா, காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், 
ராஜேந்திரன், கலாநிதி, யுகாநந்தி, யுகதர்ஷினி 
ஆகியோரின் அன்பு மாமனாரும்,துசியந்தன், துசியா, உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் பெரியப்பாவும்,காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், 
கிருஷ்ணபிள்ளை, செல்வராணி 
மற்றும் தானையா,
 இராசம்மா, இராசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,மகேஸ்வரி, சிவஞானமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகலனும்,சஞ்ஜீவன், அபினா, ஆருணி, பிரவீனா, நிவேதன், நிஷானி, அதித்திரி, அதித்தன்
 ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 19 Mar 2023 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 20 Mar 2023 11:30 AM - 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 20 Mar 2023 12:30 PM - 2:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 20 Mar 2023 3:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 நிமால் - மகன்Mobile : +14168881128 சாந்தி - மகள்Mobile : +16472896545 வசந்த் - மகன்Mobile : +16478853012

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 16 மார்ச், 2023

சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இங்கிலாந்தில் ஹோட்டலில் திடீர் தீ விபத்து

இங்கிலாந்தில் உக்ரைன் அகதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் ஹோட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தைத் தொடர்ந்து அங்கிருந்த 30 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக தகவல் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் தெற்கு பகுதியான சசெக்ஸ்சில் சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஹோட்டல் மற்றும் அதன் பக்கத்து கட்டடத்தில் தீ பற்றியதாகவும், சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள்
 மூலமாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை 
நடத்தி வருகின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 15 மார்ச், 2023

ஈரானின் தீ மிதிப்பு திருவிழாவில் பலியான பல உயிர்கள்: ஆயிரக்கணக்கானோர் காயம்

பாரசீக புத்தாண்டை முன்னிட்டு ஈரானின் பாரம்பரிய தீ மிதி திருவிழாவில் கலந்து கொண்டவர்களில் 11 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விழாவில் பங்கேற்றவர்களில் 3,500 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உள்ளூர் பத்திரிகைகள் தகவல் தெரிவித்துள்ளன. ஃபார்சி மொழியில் சாஹர்ஷன்பே சூரி என்று அழைக்கப்படும் தீ மிதி திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஈரானிய நாட்காட்டி ஆண்டின் கடைசி செவ்வாய்க்கிழமை இரவு கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவானது மார்ச் மாதம் 20ம் திகதி முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 20ம் திகதியில் இருந்தே குறித்த விழா தொடர்பில் மொத்தம் 26 பேர்கள் மரணமடைந்துள்ளதாக 
கூறப்படுகிறது.
இந்த தீ மிதி திருவிழாவானது ஈரானின் இஸ்லாமியத்திற்கு முந்தைய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் ஷியா பிரிவு மதகுருக்களால் பொதுவாக புறக்கணிக்கப்பட்டே வருகிறது. இருப்பினும் இளையோர்களிடத்தில் இந்த விழாவிற்கு பெரும் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>