siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 22 ஜூலை, 2026

தமிழ் கட்சிகளை யாழில். சந்தித்த ஐரோப்பிய தூதுக்குழு

இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பில் இருந்து  விமானம் மூலம் யாழ்ப்பாணத்தை 
வந்தடைந்தனர்
யாழ்ப்பாணத்தை வந்தடைந்த குழுவினர் , யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
அரசியல் கட்சிகளின் கலந்துரையாடலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் 
க.சர்வேஸ்வரன், யாழ் மாநகர சபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் குழுவை சந்தித்து கலந்துரையாடினர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 21 ஜூலை, 2026

யாழில் தலைகள் துண்டிக்கப்பட்டு புதைகுழியினுள் படுகொலை

யாழ் .செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக புதைக்கப்பட்டமை இன்றைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
செம்மணி மனித புதைகுழியின் இன்றைய அகழ்வு பணிகளின் போது மண்டையோடுகள் அற்ற என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை சில மண்டையோடுகள் என்புக்குவியல்களுடன் தனித்தும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
"மண்டையோடுகள் அற்ற நிலையில் சில என்பு கூடுகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சில மண்டையோடுகள் குவியலாக காணப்படுகிறது. மனித என்புக்கூடுகளின் ஆய்வுகளின் பின்னரே குவியலாக காணப்படும் மண்டையோட்டு தொகுதிகள் , மண்டையோடு அற்ற என்புக்கூடுகளுக்கு உரியனவா என்பதனை தீர்மானிக்க முடியுமென
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராயங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு மற்றும் தூதுவர் எட்டுப் பேர் அடங்கிய உயர்மட்ட குழு நாளை காலை செம்மணி மனித புதைகுழி அகழ்வு பகுதிக்கு களவிஜயம் செய்யவுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

மரண அறிவித்தல் அமரர் முருகேசு கமலாசினிதேவி (வவி )

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-21-07-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட அமரர் முருகேசு  கமலாசினிதேவி  (வவிஅக்கா  ) 21-07-2026.-அன்று  காலமானார் 
 அன்னார் காலம்சென்ற  முருகேசு அவர்கனின் பாசமிகு மனைவியும் காலம்சென்ற சுந்தரமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகளும் காலம்சென்ற ஆறுமுகம் தம்பதியினரின் அன்பு மருமகளும் சிவரூபி பிரபன் 
ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  22-07-2026.. புதன்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
22-07-2026..புதன்கிழமை  அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 வீட்டு முகவரி: 
இலங்கை 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html




திங்கள், 20 ஜூலை, 2026

நாட்டில் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்

கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற
 பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
 அனுமதிக்கட்டுள்ளனர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், குறித்த வீட்டின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல்
 கிடைத்துள்ளது.
 இதனையடுத்து, சந்தேக நபர்கள் பிலியந்தலை நோக்கி தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களில் இருவர் பொகுந்தர, வீரசிங்க மாவத்தையில் உள்ள வீடொன்றை நோக்கி மோட்டார் சைக்கிளில் வருவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பொலிஸாரை அவதானித்த சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருப்பி தப்பிச் செல்ல முயன்ற போது, பொலிஸார் அவர்களை
 சுற்றிவளைத்துள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியதுடன், பின்னால் அமர்ந்திருந்த நபர் கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை 
 தாக்கியுள்ளார்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த சந்தேக நபர் காயமடைந்து கீழே விழுந்துள்ளார். எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திய மற்றைய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து வெற்றுத் தோட்டா உறை ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொரலஸ்கமுவ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவரும், சந்தேக நபர்களை துரத்திச் சென்ற போது விபத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரிகளும்
, துப்பாக்கிச் சூட்டில் 
இடுப்பில் குண்டு பாய்ந்து காயமடைந்த பண்டாரகம, வீதியகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரும் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் போதைப்பொருள் தொடர்பான தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
மேலும், சந்தேக நபர்கள் பிரபல திட்டமிட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கொஸ் மல்லி’ என்பவரின் கும்பலைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரலஸ்கமுவ மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஜூலை, 2026

நாட்டில் கொடிகாமத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழப்பு

நாட்டில்.யாழ் தென்மராட்சி  கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் நேற்று  இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்
 உயிரிழந்துள்ளார். 
 வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் என்ற  இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில்
 தெரியவந்துள்ளது. 
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 தற்போது சடலம் பருத்தித்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைகள் நடைபெற்ற பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஜூலை, 2026

நாட்டில் வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி பொலிஸ் உயிரிழப்பு

இலங்கையில். வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் 
உயிரிழந்தார்.
இரட்டப்பெரியகுளம்-வவுனியா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் அவ் அதிகாரி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்களில் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். 
 உயிரிழந்தவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த 45 வயது பொலிஸ் சார்ஜென்ட் என்றும், மாத்தளையைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 
 இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 17 ஜூலை, 2026

ஆண்டுதோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு

மின்னல் தாக்குதலால் ஆண்டு தோறும் நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர்  
உயிரிழப்பதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குநரான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  மின்னல் பாதுகாப்புக்கு போதிய கவனம் செலுத்தப்படாத காரணத்தால், ஏராளமானோர் மின்னல் தாக்குதலால் காயமடைகின்றனர் என்றும் அவர்
 குறிப்பிட்டுள்ளார். 
 இந்த நிலையைக் கட்டுப்படுத்த,  தேசிய மின்னல் பாதுகாப்பு மையத்தை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 16 ஜூலை, 2026

நாட்டில் வாய் புற்றுநோயால் ஒவ்வொரு நாளும் மூன்று பேர் மரணம்

நாட்டில்  வாய் புற்றுநோயால் சராசரியாக ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் என வாய் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தனுஜா தக்ஷினி பத்திராஜா
 தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய டாக்டர் பத்திராஜா, இலங்கையில் ஆண்களிடையே வாய் புற்றுநோயே மிகவும் பொதுவான புற்றுநோயாகும் என்றும், பெண்களைப் பாதிக்கும் பத்து பொதுவான புற்றுநோய்களில் இதுவும் ஒன்றாகும் என்றும் 
குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை பயன்பாடு, சிகரெட் புகைத்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களாகத் தொடர்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, வெற்றிலையுடன் பொதுவாக மெல்லப்படும் பாக்கில் காணப்படும் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் மிகவும் அபாயகரமானவை என்றும், அவை இந்நோய் உருவாகும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்கள், மீனவர்கள், இரத்தினக்கல் மற்றும் சுரங்கத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்கள் வாய் புற்றுநோயால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்றும் டாக்டர் பத்திராஜா மேலும் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, இந்தத் தொழில்களுடன் தொடர்புடைய அதிகப்படியான மன அழுத்தம், சோர்வு மற்றும் உடல் களைப்பு ஆகியவை, அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகளாக வெற்றிலை 
மெல்லுதல், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சிகரெட் புகைத்தல் போன்ற செயல்களில் தனிநபர்களை அடிக்கடி ஈடுபடுத்துகின்றன. 
இதன் மூலம், அவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, சுகாதார அதிகாரிகள், பொதுமக்கள் இந்தத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்க்குமாறும், வாயில் ஏற்படும்
 அசாதாரண மாற்றங்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். 
மேலும், வெற்றிகரமான சிகிச்சையில் ஆரம்பத்திலேயே கண்டறிவது ஒரு முக்கியப் பங்காற்றும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html