siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 1 ஆகஸ்ட், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மேலும் மூன்று படகுகளைத் தேடும் பணிகள்

நாட்டில்  நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ளதாக, கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது. குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு
 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், குறித்த படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.
அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 31 ஜூலை, 2026

மசூதியில் கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் கார்னி கண்டனம்

கனடா பிரதமர் மார்க் கார்னி, வின்னிபெக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, இஸ்லாமிய வெறுப்பின் "அதிர்ச்சியூட்டும்" செயல் என்று 
கண்டித்துள்ளார்.
கனடாவின் மனிடோபா மாகாணத்தின் தலைநகரில் உள்ள ரஹ்மா இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் 
காயம் ஏற்படவில்லை.
"இஸ்லாமிய வெறுப்பின் இந்த வன்முறைச் செயல் அதிர்ச்சியூட்டுகிறது, இதற்கு கனடாவில் இடமில்லை. யாருக்கும் காயம் ஏற்படாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று கார்னி 
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சட்ட அமலாக்கத் துறைக்கு எனது முழு ஆதரவும் உண்டு" என்று கார்னி குறிப்பிட்டுள்ளார்  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 30 ஜூலை, 2026

நாட்டில் .கனகராயன்குளத்தில் கோர விபத்தில் இரு இளைஞர்கள் பலி

நாட்டில் வவுனியா, கனகராயன்குளம் பகுதி ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறை நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற சிறிய ரக பாரவூர்தி ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் பலமாக மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்புப் படையினரால் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 29 ஜூலை, 2026

நாட்டில் ஊழல் ஒழிப்பு அதிரடிப் படை அதிகாரி பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை

நாட்டில் வலன ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனது பணித் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காயமடைந்த காவலர், பனதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தக் காவலர், பேராதனை, முருதலாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

செவ்வாய், 28 ஜூலை, 2026

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் ஆறு பேர் உயிரிழப்பு

இலங்கையில் பல பகுதிகளில் நேற்று (27) பதிவான தொடர் சாலை விபத்துகளில் ஆறு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். 
 திருக்கோவில்–பொத்துவில் சாலையில் உள்ள வினயகபுரம் 01 என்ற இடத்தில் நேற்று நடந்த முச்சக்கர வண்டி விபத்தில் 49 வயதுடைய  பெண் ஒருவர் உயிரிழந்தார். 
பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த முச்சக்கர வண்டி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையிலிருந்து விலகி ஒரு கான்கிரீட் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் காயமடைந்த ஓட்டுநர் மற்றும் பின்  இருக்கையில் பயணித்த இரண்டு பெண்கள், ஒரு சிறுமி மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் திருக்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
அங்கு அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 
அதேபோல்   பேட்டை–கொத்தட்டுவா சாலையில் கொத்தட்டுவா நகருக்கு அருகே நடந்த மற்றொரு விபத்தில், எதிர் திசையில் பயணித்த ஒரு முச்சக்கர வண்டி, பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த 
பேருந்துடன் மோதியது.
 இதில 37 வயதான முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஓட்டுநர், ஒரு ஆண் பயணி மற்றும் பின் இருக்கையில் பயணித்த ஒரு பெண் ஆகியோர் முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
இருப்பினும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
மேலும் வேரபொலவில் குருநாகல்-புத்தளம் சாலையில் நடந்த மோதலில் 67 வயதான இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 
 பொலிஸாரின் கூற்றுப்படி, புத்தளத்தை நோக்கிச் சென்ற 
ஒரு கார் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, ​​எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து
 நிகழ்ந்துள்ளது. 
வாரியபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருசக்கர வாகன ஓட்டுநர் உயிரிழந்தார், அதே சமயம் கார் ஓட்டுநரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் 6 கி.மீ. மைல்கல் அருகே நேற்று அதிகாலை மற்றொரு கோர விபத்து
 நிகழ்ந்துள்ளது. 
 கெரவலபிட்டியாவிலிருந்து கொட்டாவா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு சரக்குந்து, இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லருடன் கூடிய ஒரு பிரைம் மூவர் மீது மோதியது. 
 சரக்குந்து ஓட்டுநரும், முன் இடது இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு பயணியும் படுகாயமடைந்து ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 21 வயதான அந்தப் பயணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 
இதற்கிடையே  திஸ்ஸமஹாராமவில், நேற்று இரவு திஸ்ஸமஹாராம குளக்கரைச் சாலையில் 6 கி.மீ. கல் அருகே, தெபரவெவவிலிருந்து கதிர்காம நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மோதியதில் 38 வயதான பாதசாரி ஒருவர் உயிரிழந்தார். 
படுகாயமடைந்த அவர், தெபரவெவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நேற்று இரவு நடந்த மற்றொரு சம்பவத்தில், சிலாவ் பொலிஸ் பிரிவில் உள்ள பங்காதெனிய–பல்லம சாலையில் 5 கி.மீ. கல் அருகே, தனது மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இழந்து 
சாலையிலிருந்து விலகி ஒரு வடிகாலில் விழுந்த 24 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். 
 வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்து, சிலாவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 
 அனைத்து சம்பவங்கள் குறித்தும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 27 ஜூலை, 2026

உணவுத் திருவிழாவில் .அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு இரண்டு பேர் பலி, ஐந்து பேர் காயம்

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், சிறு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர். 
வொஷிங்டன் மாநிலத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவின் போது திடீரென இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
தாக்குதல் நடத்திய நபர் குறித்தோ அல்லது இதற்கான காரணம் குறித்தோ இதுவரை தகவல்கள் வெளியாகாத நிலையில், தப்பியோடிய நபரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஜூலை, 2026

வீட்டின் கூரையின் மீது ஜெர்மனியில் விமானம் மோதியதில் இருவர் மரணம்

வடமேற்கு ஜெர்மனியில் ஒரு வீட்டின் கூரையின் மீது சிறிய தனியார் விமானம் மோதியதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஓல்டன்பர்க்கிற்கு அருகிலுள்ள காண்டர்கேசி என்ற குடியிருப்புப் பகுதியில், சிறிய விமானம் ஒரு வீட்டின் சாய்வான கூரையின் மீது
 நேருக்கு நேர் மோதியது.
பிரேமனைச் சேர்ந்த 65 மற்றும் 77 வயதுடைய இரு ஆண்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றொருவரைக் காணவில்லை என்றும் காவல்துறை முதலில் தெரிவித்திருந்தது.
ஆனால், விமானத்தின் சிதைவுகளை மீட்கும் நீண்ட மற்றும் சிக்கலான மீட்புப் பணிகளுக்குப் பிறகு விபத்தில் இரு ஆண்களும் உயிரிழந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html