siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ரயிலில் மோதி இருபத்தி ஆறு வயது இளைஞன் மரணம்

நாட்டில்  தெமோதர கவரவெல பிரதேசத்தில் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு தபால் ரயிலில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் 
தெரிவித்தனர்.

றபர்வத்த பிரிவு, கவரவெல, தெமோதர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 விபத்து தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது






வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் மொனராகலையில் இடம்பெற்ற கோர விபத்து : இருவர் படுகாயம்

நாட்டில் மொனராகலை சியம்பலாண்டுவ பிரதான வீதியில் தொம்பகஹவெல பொலிஸ் எல்லைக்குட்பட்ட தொம்பகஹவெல எரிபொருள் நிரப்பு
 நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.  
பொலிரோ ரக கெப் வண்டியும் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற லொறியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து 
ஏற்பட்டுள்ளது. 
விபத்தின் பின்னர், கெப் வண்டியின் சாரதியும் அதில் பயணித்த மற்றுமொரு நபரும் வண்டிக்குள் சிக்கிக் கொண்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற பெரும் முயற்சிகளை 
மேற்கொண்டுள்ளனர்.  
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி தொம்பகஹவெல பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் துணுக்காய் பிரதேசத்தில் நெல்லு காவலுக்கு இருந்தவர் மீது துப்பாக்கிசூடு

நாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்லினை வீதியில் காயப்போட்டு காவல்காத்து உறங்கிக்கொண்டிருந்த விவசாயியும் கமக்கார அமைப்பின் செயலாளருமான குடும்பஸ்தர் ஒருவர் மீது இன்று அதிகாலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
 இதில் காயமடைந்த கமக்கார அமைப்பின் செயலாளர் மேலதிக சிசிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த சம்பவம் பற்றி தெரியவருகையில் 24.07.2024 இன்று துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 தனது நெல்லினை அறுவடை செய்து வீதியில் காயவைத்துவிட்டு இரவு காவல் காத்து வந்துள்ள நிலையில் வீதி ஓரமாக உறங்கிக்கொண்டிருந்துள்ளார் இன்று (24) அதிகாலை 3.00 மணியளவில் இனம் தெரியாத
 நபர்களால் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 கல்விளான்குளம் பகுதியினை சேர்ந்த கமக்கார
 அமைப்பின்
 செயலாளரான 42 அகவையுடைய செல்லையா கிருஸ்ணராஜா என்பவர் 
படுகாயமடைந்து மல்லாவி ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவுமனைக்கு
 மாற்றப்பட்டுள்ளார்.
 கல்விளான் கமக்கார அமைப்பின் செயலாளராக இவர் இருப்பதாகவும் அங்கு இடம்பெறும் குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் இடம்பெற்று வரும் போட்டி காரணமாகவே இந்த துப்பாக்கிசூடு
 நடத்தப்பட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள். மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது 




 

செவ்வாய், 23 ஜூலை, 2024

கொழும்பு, வார்ட் பிளேஸில் முச்சக்கரவண்டிக்குள் நடந்த கொலை

கொழும்பில் (23.07.2024) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை 
பொலிஸார் கண்டு 
பிடித்தனர். 119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த
 தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. 
விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது 


திங்கள், 22 ஜூலை, 2024

மரண அறிவித்தல் அமரர் ராசரத்தினம் பாலசிங்கம்

துயர் பகிர்வு-மறைவு-22-07-2024.
.யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  தோப்பு அச்சுவேலியை
 வதிவிடமாகக் கொண்ட   
 அமரர்  ராசரத்தினம்  பாலசிங்கம் அவர்கள்  22-07-2024.திங்கள்கிழமை  அன்று  இறைபாதம் அடைந்தார்
 அன்னார். காலஞ்சென்ற  ராசரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும் அவர்களின் பாசமிகு கணவரும் கலா(இலங்கை ) பாபு (சுவிஸ் )ஆகியோரின் அன்புத்  தந்தையும் ஆவர்  அன்னாரின் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நல்லடக்கம் பற்றிய விபரம் 
இந்த இணையத்தில் இணைக்கப்படும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர் .
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!


ஞாயிறு, 21 ஜூலை, 2024

எச்ஐவி எயிட்ஸ் நோய் தொடர்பில் இலங்கையில் வெளியான தகவல்

இலங்கையில் கடந்த ஆண்டு, எச்ஐவி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 40 குழந்தைகள் இனங்காணப்பட்டதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது.
 வயோதிபர்களின் எண்ணிக்கை 3,169 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய பாலியல் நோய் விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க 
தெரிவித்தார்.
 எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022ல் 607 ஆகவும், 2023ல் 694 ஆகவும் பதிவாகியுள்ளதாகவும், இது 14 சதவீதம் அதிகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த இந்த 694 நோயாளிகளில் 613 பேர் ஆண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரிடையே எய்ட்ஸ் பரவுவது அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் வினோ தர்மகுலசிங்க மேலும் குறிப்பிட்டார். என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 20 ஜூலை, 2024

இகிரியகொல்லேவ பகுதியில் எரிபொருள் பவுசருடன் மோதிய முச்சக்கரவண்டி

எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20.07) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2024) தினம்தெரிவித்தார்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் 
ஒன்றுடன் ஒன்று மோதியதில் நான்கு பேர் காயமடைந்து
 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மெதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர். 
கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் 
இன்று (20.07.2024) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுசர் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 
எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக இன்றைய (20.07.2924) தினம்தெரிவித்தார்.
 என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>