siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 11 ஏப்ரல், 2026

கார் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

பிரித்தானியாவில், கார் ஒன்று சாலைப் பாலத்திலிருந்து விலகி, கீழே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதியதில், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் 
உயிரிழந்தனர்.
லெய்செஸ்டர்ஷையரில் உள்ள லட்டர்வொர்த்தை நோக்கி கில்மோர்டன் லேனில் சென்றுகொண்டிருந்த ஒரு நீல நிற கார், சாலைப் பாலத்திலிருந்து எம்1 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தக் கார், எம்1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற ஃபியட் டுகாடோ மீதும் மோதியதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
நீல நிற காரில் இருந்த பதின்ம வயது இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மினிபஸ்ஸில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

நாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பலி

 

நாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது
விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 9 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் நாகமுத்து குமாரசிங்கம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-09-04-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட 
அமரர் நாகமுத்து குமாரசிங்கம் 
அவர்கள் 09-04-2026.வியாழக்கிழமை .இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற
 நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும் திருமதி  ராசு (கனடா )அவர்களின் அன்புக்கணவரும் 
திருமதி சுபா (சுவிஸ் )திருமதி சொக்கி (கனடா )திரு செட்டி(கனடா )
திரு  கண்ணன் (கனடா )
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின்  நல்லடக்க விபரம்  
இந்த இணையத்தில்  இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.

நாடில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில்  நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம்
 ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது
மக்களே அவதானமாக இருங்கள் மின்னல் மழை போன்ற நேரங்களில் உங்கள் பாதுகாப்பினை முதலில் பார்த்து கொள்ளுங்கள்
தொலைபேசிகளை பாவிப்பதை குறைத்து கொள்ளுங்கள் மின்சாரங்களை கவனமாக பாவிங்கள் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஏப்ரல், 2026

திருகோணமலையில் திடீரென தீக்கிரையான ரயில் இயந்திரம்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த ரயிலின் பெட்டிகளை இடமாற்றும் பணியில் குறித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே, திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், “தீப்பிடித்தமைக்கான காரணம் குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனினும், தீயணைப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் தகவல்களை வழங்குவார்கள்,” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தினால் ரயில் இயந்திரம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

யாழ்மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம்.07-06-2026. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

முதியவரை மோதி விட்டு யாழில். தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி - விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் 
குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு தனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரை மோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து 
தப்பி சென்றுள்ளனர்.
முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான விடயத்தினை வீட்டாருக்கு தெரிவித்த பின்னர் , சிறிது நேரத்தில்
 மயங்கி சரிந்துள்ளார். 
உடனடியாக வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார். 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


. கெருடாவிலில் இடிமின்னலுடன் பலத்த மழை - மின்னல் தாக்கத்தால் வீடொன்று சேதம்

யாழில்  மின்னல்  தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய 
மழை பெய்தது. 
அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன் , ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும்
 சேதமடைந்துள்ளன. 
இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டனர். 
தென்னை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்  
அதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

யாழ் போதனா வைத்தியசாலை உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

யாழ்  போதனா வைத்தியசாலை  இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது.
Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து, 
அறுவை சிகிச்சை இல்லாமல் (Angiogram, Angioplasty) சிகிச்சை அளிக்கும் உபகரண தொகுதி. இதில் x-ray உதவி உடன் இதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகள் மற்றும் Pacemaker போன்ற சிகிச்சைகள் 
அளிக்க படுகிறது.
சுகாதார அமைச்சு,   இவ் உபகரணத்துக்கு பதிலாக புதிய cath lab உபகரண தொகுதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாத இறுதிப்பகுதியில் புதிய உபகரணம் சேவையை
 ஆரம்பிக்கும்.
இதே சமயம் இம்மாதம்  மேற்படி சிகிச்சைகள் வைத்தியசாலையில் இருக்கின்ற DSA இயந்திரத்திலும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருக்கின்ற Cath lab பகுதியிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த  இயந்திரத்தை இவ்வளவு காலம் சரியான முறையில் பயன்படுத்தி வந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கதிரியக்கவியலாளர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள், இதனை வழங்கிய நிறுவன பொறியாளர் உள்ளிட்டோருடன் பணிப்பாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html