siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நாட்டில் வாளைச்சேனைப் பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

நாட்டில்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை 
பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரமே நேற்று (10) திங்கட்கிழமை இரவு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சீனாவில் டொல்பின்’ சூறாவளியால் பத்து இலட்சம் பேர் வெளியேற்றம்

சீனாவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய ‘டொல்பின்’ சூறாவளி, கனமழையுடன் சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.
1951ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு சீனாவைத் தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சுமார் 12 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 முல் 500 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனால் சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயமும் 
அதிகரித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, கிழக்கு சீனா முழுவதும் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 
மேலும், பல துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ‘டொல்பின்’ சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
அங்கு பெய்துவரும் கனமழை மற்றும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

நாட்டில் கொக்காவில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து

நாட்டில் .முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். 
ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 8 ஆகஸ்ட், 2026

நாட்டில் புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. 
விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்துள்ளார். 
மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
நாட்டில் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

நாட்டில் .புளத்சிங்களவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பதின் நான்கு பேர் காயம்

நாட்டில் களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் சிற்றூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
 பள்ளத்தில் கவிழ்ந்து
 விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

நடந்த வாகன விபத்தில் கனடாவில் இரண்டு இளைஞர்கள் மரணம்

 நடந்த வாகன விபத்தில்.கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை 
கொடுத்துள்ளனர்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 5 ஆகஸ்ட், 2026

நாட்டில் கம்பஹா ரயில் நிலையம் அருகே சடலம் ஒன்று கண்டெடுப்பு - ரயில் சேவைகள் தாமதம்

நாட்டில்.கம்பஹா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அத்துறை கூறியுள்ளது.
 சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதத்துடன் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html