siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 15 ஆகஸ்ட், 2026

லண்டனில் உலகின் முதல் பாதசாரி கார் மோதி உயிரிழந்த 1896 இல் நடந்த சோக வரலாறு

உலகின் முதல் பாதசாரி  கார் மோதி  1896 ஆகஸ்ட் 17 அன்று லண்டனில் 44 வயதான பிரிட்ஜெட் டிரிஸ்கோல் (Bridget Driscoll) சாலையைக் கடக்கும்போது மோட்டார் கார் மோதி உயிரிழந்தார். அப்போது மோட்டார் வாகனங்கள் மக்களுக்கு மிகவும் புதுமையானவை. 
விபத்தை ஏற்படுத்திய கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் வேகம் தொடர்பாக விசாரணையில் பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் வரலாற்றுப் பதிவுகள் 
குறிப்பிடுகின்றன.
இந்த மரணம் தொடர்பான விசாரணையின் முடிவில், அது தற்செயலான மரணம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்ஜெட் டிரிஸ்கோல், பிரிட்டனில் பெட்ரோல் இயந்திர மோட்டார் கார் மோதி உயிரிழந்த முதல் பாதசாரியாக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
அந்த விசாரணையை நடத்திய அதிகாரி, “இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
130 ஆண்டுகளுக்கு முன்பு புதுமையாக இருந்த மோட்டார் வாகனம், சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உலகிற்கு உணர்த்திய ஒரு சோகமான வரலாற்றையும் உருவாக்கியது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

நாட்டில கொம்மாதுறையில் விபத்து மோட்டார்சைக்கிளை மோதிய அரச பேருந்து

நாட்டில் மட்டக்களப்பு – கொம்மாதுறை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார்சைக்கிளும், அதே திசையில் பின்னால் பயணித்த அரச பேருந்தும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில்
 விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை, பின்னால் வந்த அரச பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபரின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன், அவர் மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

நாட்டில் டெங்கு மரணங்கள் அதிகரிப்பு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தைக் கடந்துள்ளதுடன், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு
 தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 53 சதவீதமானோர் (48,244 பேர்) மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் அதிகளவான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். மேலும், கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களும் டெங்கு தாக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட முக்கிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஜூலை மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் 
பதிவாகியுள்ளனர்.
அத்துடன், ஓகஸ்ட் மாதத்தின் முதல் சில நாட்களிலேயே ஆயிரக்கணக்கான புதிய டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளமை 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 12 ஆகஸ்ட், 2026

நாட்டில் கிளிநொச்சி A9 வீதியில் விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரவூர்திகள் மோதியதில் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
முன்னால் சென்ற பாரவூர்தி வீதியில் நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த பாரவூர்தி அதன்மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பாரவூர்தியின் உதவியாளராக பணியாற்றிய 21 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நாட்டில் வாளைச்சேனைப் பகுதியில் உழவு இயந்திரம் தீக்கிரை

நாட்டில்  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமுனை கங்கை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை 
பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை கங்கை பகுதியில் மண் அகழ்வு பணியில் ஈடுபட்டு வந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான உழவு இயந்திரமே நேற்று (10) திங்கட்கிழமை இரவு தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச வாசிகள் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

சீனாவில் டொல்பின்’ சூறாவளியால் பத்து இலட்சம் பேர் வெளியேற்றம்

சீனாவில் மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசிய ‘டொல்பின்’ சூறாவளி, கனமழையுடன் சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.
1951ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு சீனாவைத் தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் சுமார் 12 நாட்கள் வரை நீடிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 முல் 500 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இதனால் சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயமும் 
அதிகரித்துள்ளது.
சூறாவளியின் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க, கிழக்கு சீனா முழுவதும் 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 
மேலும், பல துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே, ‘டொல்பின்’ சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
அங்கு பெய்துவரும் கனமழை மற்றும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 3 இலட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

நாட்டில் கொக்காவில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து

நாட்டில் .முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். 
ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html