siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பொன்னையா கமலநாதன் (கமலு)

துயர் பகிர்வு-தோற்றம் -00.00---மறைவு-00-09-2026
யாழ்  அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியேலை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கமலநாதன் (கமலு) இடைக்காட்டில் காலமானார்;;
அன்னார் பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் நான்காவது மகனும்;;

விஜயலட்சுமியின் அன்புக் கணவரும்; காயா, கோபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்;;
காலஞ்சென்ற இராமச்சந்திரன், காகுந்தநாதன் அவுஸ்திரேலியா, காலஞ்சென்ற கமலலோஜினி, Dr. சிறீராகவன் அவுஸ்திரேலியா, வனிதரதி இங்கிலாந்து, காலஞ்சென்ற வைகுந்தவாசன் (Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்;;இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்;;

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு 
வனிதரதி
(ரதி, லண்டன்) 
— Idaikkadu, வட மாகாணம், இலங்கை இல்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html


மரண அறிவித்தல் அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) 13.09.26

 

துயர் பகிர்வு-தோற்றம் 00-00--மறைவு-13-09-2026
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமது பாடசாலையின் பழைய மாணவியுமான அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) அவர்கள்  13.09.26 ஞாயிறு அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சுப்பண்ணை) அவர்களின் 
அன்பு மனைவியும், 
பழைய மாணவர்களான ரஞ்சினி ( ரஞ்சி - கனடா) சாந்தினி, ரவீந்திரன் ( ரவி - இலண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
இராசம்மா, கனகரத்தினம், இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16-09-2026 புதன்கிழமை காலை 7.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சுமார் காலை 10 மணியளவில் அன்னாரின்  பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தொடர்புகளுக்கு
 ரவி (மகன்- இலண்டன்)
00447947 227002
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html





திங்கள், 14 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் பாக்கியம் 14.09.26

துயர் பகிர்வு-தோற்றம் -05-08-1947--மறைவு-14-09-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் 
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம் பாக்கியம்   அவர்கள் 14-09-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்  அவர்களின் அன்பு மனைவியும் 
வசந்தி( இலங்கை ) ஜேந்தி (லண்டன் ) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலம்சென்ற முத்தமா(பெத்தாச்சி )காலம்சென்ற  இலட்சுமி (பரிமளம்) வேலுப்பிள்ளை சிங்கம்  சின்னத்துரை பாலர்  ஆகியோரின் சகோதரியும் ஆவர்  அன்னாரின் இறுதிக்கிரியை
 பற்றிய விபரம் இந்த இணையத்தில் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2026/01/blog-post_31.html


ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

நாட்டில் மாவடிப்பள்ளி! ஆற்றில் கரையொதுங்கிய ஆண் சடலம்

இலங்கை  அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம்-13-09-2026- இன்று 
 ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் கரையொதுங்கியுள்ளதாக கிடைத்த 
தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 12 செப்டம்பர், 2026

நாட்டில் களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒரு சடலம் மீட்பு

இலங்கை களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
 ஹன்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை (11) இந்தச் சடலம் மீட்கப்பட்டது. 
 உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். 
 இச்சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், ஹன்வெல்ல பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் பாப்பையா காலமானார்

துயர் பகிர்வு--தோற்றம் 22-02--1936---மறைவு-11-09-2026.
புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  காலமானார். 
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். 
அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். 
இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 
மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 
சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்து அவற்றின் சுவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். 
அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் 
இவர் நடித்துள்ளார். 
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். 
'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை 
எழுதியுள்ளார். 
திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார். 
மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார். 
மதுரை கம்பன் கழகத்தின் திங்கள் சொற்பொழிவுகளையும் ஆண்டுதோறும் தொகுத்து வெளியிட்டு வருகிறார். 
தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு
 வழங்கப்பட்டது. 
மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html



சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தில் ஐவர் பலி 40 காயமடைந்தர்

சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால மீட்புக் குழுக்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக உள்ளூர் காவல்துறை 
தெரிவித்துள்ளது.
இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி
 வெளியிட்டுள்ளது. 
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF 
தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 9 செப்டம்பர், 2026

நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு

 தற்போது   இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்


தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.


எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது
. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை
 செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html