siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் 
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 100ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இராணுவ வாகனம் மோதி யாழ். மயிலிட்டியில் முதியவர் பலி

இன்று யாழ் மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

கிளிநொச்சி நீதிமன்றம் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது

.நாட்டில்  கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02) மரண தண்டனை
 வழங்கப்பட்டுள்ளது.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மேற்படி
 தீர்ப்பளித்துள்ளது. 
கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில்  வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
 அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு  மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் 03 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நாட்டில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் A9 வீதியில் 
இடம்பெற்றுள்ளது. 
 கொழும்பு நோக்கி பயணித்த காரினது சக்கரம் காற்று போன நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே பயணித்த வேனுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வேனுடன்
 மோதியுள்ளது.
 முதல் விபத்தில் சிக்கிய வேன் தடம் புரண்டுள்ளது. வேனில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் பிரதேச மக்களின் உதவியுடன் வெளிவேற்றப்பட்டனர். 
 விபத்துக்குள்ளான மற்ற வேனின் சாரதி விபத்தை தவிர்க்க முயற்சித்த போதிலும், குறித்த வேனும் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த வேனில் பயணித்தவர்களும் சிறு காலங்களுடன் 
வெளியேறினர். 
 விபத்து காரணமாக A9 வீதி ஊடான போக்குவரத்து 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பித்தது. விபத்தினை ஏற்படுத்திய காரினை பிரதேச மக்கள் இணைந்து வீதி போக்குவரத்துக்கு தடை இல்லாதவாறு
 அப்புறப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு 1990 இலக்க சேவையை பெற்றுக்கொள்ள அழைத்தபோது, குறித்த சேவையை அணுக முடியாத நிலையில், 021 2 285329 இலகத்திற்கு அழைத்து கிளிநொச்சி வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவையை தருமாறு ஊடகவியலாளர் உதவி கோரினார். 
 தம்மால் சேவை வழங்க முடியாது எனவும், 1990 சேவைக்கே மீண்டும் மீண்டும் அழைக்குமாறு கூறி தொடர்பு 
துண்டிக்கப்பட்டுள்ளது. 
 தொடர்ந்து அவ்வீதி ஊடாக பயணித்த தேர்தல்கள் திணைக்கள வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டமை  என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 31 ஜனவரி, 2026

மரண அறிவித்தல் அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-31-01-2'026
யாழ் அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணவதிப்பிள்ளை சிவநாதன்  .31-01-2'26..சனிக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் அமரர் கணவதிப்பிள்ளை தம்பியிரின் 
அன்பு மகனும்
 அன்னார்  காலம்சென்ற ஆறுமுகம்  முத்தமா(பெத்தாச்சி ) தம்பியிரின் அன்பு மருமகனும் ஞானமணி(சின்னக்கிளி) யின் பாசமிகு கணவரும் வியிதா  கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்    திரு.ஆ. நவரத்தினத்திம் அவர்களின்  அன்பு மச்சானும் ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்கு திகதி-  04-02-2026 புதன்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
04-02-2026 புதன்கிழமை  அன்று ;(முகவரி) நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
நவற்கிரி புத்தூர்  
தகவல்
குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



வெள்ளி, 30 ஜனவரி, 2026

நாட்டில் ஒட்டுசுட்டானில் குடும்பஸ்தரை அடித்து கொன்ற மச்சான் கைது;

நாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத நபரால் தாக்கப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் கடந்த 27ஆம் திகதி இரவு, கடைக்கு சென்று உணவு வாங்கிக் கொண்டு வீடு நோக்கி திரும்பிய வேளையில், அவரது தலையின் பின்பகுதியில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் அதிக இரத்தகசிவால் உயிரிழந்ததாக
 தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, அப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய மரணமடைந்த நபரின் மச்சான் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கொலை செய்ததை பொலிஸ் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
மரணமடைந்தவரின் மகளை கொலை செய்வதாக அவர் மிரட்டியதாகக் கூறப்படுவதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக, கோடரி பிடியினால் தலையில் தாக்கியதாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் பழம்பாசி - கரடிப்புலவு பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நாகையா நாகராஜா என்பவர் உயிரிழந்தமை என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 29 ஜனவரி, 2026

பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரான்சில் தீ விபத்து


பிரான்சிலுள்ள கோச்செவேல் என்னும் பனிச்சறுக்கு ரிசார்ட்டில் அமைந்துள்ள க்ராண்ட்ஸ் ஆல்ப்ஸ் என்னும் ஹோட்டலில்
 தீப்பற்றியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, தீவிபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை என ஹொட்டலின் இணையதளம
 தெரிவிக்கிறது. 
அந்த ஹொட்டலில் தங்கியிருந்த 90 பேரும், அதற்கு அருகில் இருக்கும் லே லானா என்னும் ஹோட்டலில் தங்கியிருந்த
 200 பேரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வேறு ஹோட்டல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 28 ஜனவரி, 2026

நாட்டில் கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் டிப்பர் அரச பேருந்து மோதி விபத்து

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A9 பிரதான வீதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி பயணித்த 
அரச பேருந்துடன் முறிகண்டி பகுதியில் இருந்து
 மணல் ஏற்றி யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளகியுள்ளது.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி நோக்கி பயணித்த அரச பேருந்துடன் மோதியதில் அரச பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் 2 இருவர் மற்றும்
 டிப்பர் சாரதி சாரதி
 உட்பட நான்கு 04பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html