siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 6 ஜூன், 2026

யாழ் புத்தூர் விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழப்பு; மேலும் மூவர் படுகாயம்

யாழ் புத்தூர் பகுதியில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற கொடூர விபத்து குறித்த மேலதிக செய்தி டிப்பர் மோதி முச்சக்கர வண்டி நசுங்கியதில் 21 வயது இளைஞன் காஜானன் பரிதாப மரணம்; இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில்.05-06-2026. அன்று இரவு  இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் சிக்கி 21 வயதுடைய இளம் குடும்பஸ்தர்/இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
மேலும் இரு இளைஞர்கள் கால்கள் நசுங்கிய நிலையில் ஆபத்தான கட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட 
வாசன் காஜானன் (வயது 21) என்ற இளைஞனே இன்று (06) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவராவார். மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் (Tipper) வாகனத்தின் குறுக்கே, திடீரென முச்சக்கர வண்டி (Three-Wheeler) ஒன்று
 நுழைந்துள்ளது. 
இதன் போது எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது
 ஏறி நசுக்கியுள்ளது. இந்த கொடூர விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி, கால்கள் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அதிகாலை வேளையில் வாசன் காஜானன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய இரு இளைஞர்களின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு 
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதியின் அலட்சியமே விபத்துக்குக் காரணமா அல்லது முச்சக்கர வண்டியின் திடீர் திருப்பமா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முடுக்கிவிட்டுள்ளனர்.
நள்ளிரவில் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக பயணிப்பதே இதுபோன்ற கொடூர விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 5 ஜூன், 2026

உலகளவில் பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஆண்டுதோறும் மரணங்கள்- உலக சுகாதார அமைப்பு

.பாதுகாப்பற்ற உணவு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 866 மில்லியன் நோய்களையும் 1.5 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்துகிறது என்றும் இதில் சிறு குழந்தைகள் விகிதாசார அடிப்படையில் அதிக சுமையை எதிர்கொள்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) 
தெரிவித்துள்ளது.
புதிய WHO மதிப்பீடுகளின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெரியவர்களை விட அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். 
அவர்கள் உலகின் மக்கள்தொகையில் வெறும் 9% மட்டுமே என்றாலும், உணவு மூலம் பரவும் அனைத்து நோய்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு அவர்களே காரணமாக உள்ளனர் என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறந்த அணுகல் ஆகியவற்றின் மூலம் பல நோய்களையும் இறப்புகளையும் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு கருத்தியல் பிரச்சினை அல்ல - அது ஒவ்வொரு உணவையும், ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு நாளையும் பாதிக்கிறது," என்று WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 4 ஜூன், 2026

நாட்டில் நாவலப்பிட்டியில் : முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மூவர் பலி

நாவலப்பிட்டியில் 04.06.2026:இன்று  காலை சுமார் 6:45 மணியளவில், மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து
 நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும், 34 மற்றும் 51 வயதுடைய இரு பெண்களும் அடங்குவர். பலியானவர்களில் மாணவனின் தாயாரும் ஒருவர் என ஆரம்பகட்டத் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வீதியோரத்தில் இருந்த ஒரு பெரிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இந்த மரம் நீண்டகாலமாக உளுத்துப் போய், ஆபத்தான நிலையில் இருந்ததாகப் பிரதேச மக்கள் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த மரம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும், அதனை 
அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 
எனினும், அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது
 வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதன் சாரதி சிறு
 காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது
.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 3 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் வேலும் மயிலும் குருபரன்

துயர் பகிர்வு-தோற்றம் -28-09-1963--மறைவு-03-05-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை  வாழ்விடமாகவும் தற்போது 
இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 
அச்சுவேலி-சூர்யா மருந்தக உரிமையாளர் அமரர்அமரர் வேலும் மயிலும் குருபரன்  அவர்கள்
03-06-2026-புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற வேலும் மயிலும்
இரத்தினசிகாமணி  தம்பதியினரின் பாசமிகு மகனும் காலம்சென்ற ஜேசு தாசன் எலிசபேத் 
தம்பதியினரின் பாசமிகு மருமகனும் மொறீன் சாந்தினியின் அன்புக்கணவரும் 
சலோமி சரணியா  தேனு கானான் பாசமிகு தந்தையும் முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் )சசிகலா 
(austria )நளினி கலா (கொழும்பு )ஆகியோரின் அன்புச்  சகோதரனும் ஆவார் 
கிருஷாந்த் (dfcc வங்கி முகாமையாளர் ) சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
விஸ்ரு த்தின்  பாசமிகு பேரனும்  ஆவர்   
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026.வியாழக்கிழமை அன்று நண்பகல் 12-மணிஅளவில் 
 அன்னாரின் இல்லம்  இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தில் நடைபெற்று அங்கிருந்து 
 பூதவுடல் தகனக் கிரியைக்காகக  பிற்பகல் 02-00.மணியளவில் 
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
இலங்கை-TP -0766422308
தகவல்
குடும்பத்தினர்.




https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_03.html


செவ்வாய், 2 ஜூன், 2026

இராணுவ விமானம் விபத்தில் தைவானில் இரண்டு விமானிகள் பலி

தெற்கு தைவானில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். 
 விமானத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
 விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 1 ஜூன், 2026

நாட்டில் வெசாக் தானம் பெற காத்திருந்த மக்கள் மீது மோதி உயிரிழப்பு

நாட்டில் மீகோடா சந்திப்பில் உள்ள வெசக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
ஹோமகமவில் உள்ள மீகோடா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் கார், சாலையிலிருந்து விலகி, வெசக் தானசாலை அருகே வரிசையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. 
இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 31 மே, 2026

நாட்டில் வெள்ளவத்தை அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில்  வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி  உயிரிழந்ததாக பொலிஸார் 
 தெரிவித்துள்ளனர். 
பானந்துறையில் இருந்த  கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலே பெண் மீது மோதியுள்ளது. 
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் விபத்து நடந்தபோது அப்பெண் வெள்ளை மற்றும் பழுப்பு நிறச் சேலை அணிந்து, பச்சை நிறப் பை ஒன்றை வைத்திருந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். 
சடலம் தற்போது களுபோவில போதனா மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 
 வெள்ளவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html