siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 19 மார்ச், 2026

யாழ். பல்கலைக்கழக மாணவி நுவரெலியா விற்கு சுற்றுலா வந்தவர் தவறி விழுந்து வைத்தியசாலையில்

யாழ் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர் சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், 
, மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர்
 சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், அவர், மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




புதன், 18 மார்ச், 2026

நாட்டில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி,40 பேர் காயம்

நாட்டில் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 மார்ச், 2026

நாட்டில் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் பவுசர் மோதி இருவர் பலி

யாழில்  இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
யாழ் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 16 மார்ச், 2026

நாட்டில் ஏழாவது ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞன் மரணம்

நாட்டில் கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்படும் வரும் கட்டிடத்தில் இருந்த விழுந்து 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிர்மாணிப்பில் இருந்த 10 மாடி கட்டிடத்தின் 7வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​லிப்டில் இருந்து விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது   என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 14 மார்ச், 2026

மரண அறிவித்தல் திருமதி சர்வானந்தம் பிறேமா 13.03.26

துயர் பகிர்வு-தோற்றம் -29-.june -1973-மறைவு-13-03-2026.
யாழ் கொக்குவில் மேற்கை   பிறப்பிடமாகவும்  கனடாவை  வதிவிடமாகவும்  திருமதி சர்வானந்தம் பிறேமா    அவர்கள் .13-03-2026..வெள்ளி க்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம்சென்ற பாலசந்திரன்
மற்றும் சந்திரகுமாரி ஆகியோரின் மகளும் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியலட்சுமியின் 
 அன்பு  மருமகளும்  சர்வானந்தம் (செல்வா )அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவர் அன்னாரின்
  நல்லடக்கம் கனடாவில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html

அன்னாரின்  நல்லடக்க விபரம் 









 

வெள்ளி, 13 மார்ச், 2026

லிஸ்டீரியோசிஸ் தொற்று காரணமாக பிரான்சில் இருவர் மரணம் - 12 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2026 ஜனவரி வரை லிஸ்டீரியோசிஸ் நோயின் 12 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 
இந்த தொற்றுகள் சமைத்த இறைச்சி உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர். 
இந்த 12 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் சராசரி வயது 81 ஆகும். அவர்களில் 7 பெண்களும் 5 ஆண்களும் உள்ளனர். 12 பேரில் 11 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலருக்கு ஏற்கனவே மற்ற உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.
இந்த நோயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவுகள் caillettes, pâtés en croûte மற்றும் பிற சமைத்த இறைச்சி உணவுகள். 
இவை “Drôme salaisons” மற்றும் “Jules Courtial” என்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்டன. லிஸ்டீரியா பக்டீரியா இருப்பதால் இப்பொருட்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வியாழன், 12 மார்ச், 2026

யாழ் வடமராட்சியில் மருமகன் மாமி வெட்டி படுகொலை மாமனர் வெட்டி படுகாயம்

யாழ்  மராட்சியில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் 
கைது செய்துள்ளனர்
வடமராட்சியில்.(11-03-2026.) நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது
 வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , 
மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி,  கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , 
வீட்டில் இருந்து
 தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். 
அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று 
இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு
 சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை
 செய்துள்ளார். 
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். 
அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  
சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html