siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 4 ஜூன், 2026

நாட்டில் நாவலப்பிட்டியில் : முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மூவர் பலி

நாவலப்பிட்டியில் 04.06.2026:இன்று  காலை சுமார் 6:45 மணியளவில், மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து
 நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும், 34 மற்றும் 51 வயதுடைய இரு பெண்களும் அடங்குவர். பலியானவர்களில் மாணவனின் தாயாரும் ஒருவர் என ஆரம்பகட்டத் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வீதியோரத்தில் இருந்த ஒரு பெரிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இந்த மரம் நீண்டகாலமாக உளுத்துப் போய், ஆபத்தான நிலையில் இருந்ததாகப் பிரதேச மக்கள் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த மரம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும், அதனை 
அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 
எனினும், அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது
 வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதன் சாரதி சிறு
 காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது
.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 3 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் வேலும் மயிலும் குருபரன்

துயர் பகிர்வு-தோற்றம் -28-09-1963--மறைவு-03-05-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை  வாழ்விடமாகவும் தற்போது 
இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 
அச்சுவேலி-சூர்யா மருந்தக உரிமையாளர் அமரர்அமரர் வேலும் மயிலும் குருபரன்  அவர்கள்
03-06-2026-புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற வேலும் மயிலும்
இரத்தினசிகாமணி  தம்பதியினரின் பாசமிகு மகனும் காலம்சென்ற ஜேசு தாசன் எலிசபேத் 
தம்பதியினரின் பாசமிகு மருமகனும் மொறீன் சாந்தினியின் அன்புக்கணவரும் 
சலோமி சரணியா  தேனு கானான் பாசமிகு தந்தையும் முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் )சசிகலா 
(austria )நளினி கலா (கொழும்பு )ஆகியோரின் அன்புச்  சகோதரனும் ஆவார் 
கிருஷாந்த் (dfcc வங்கி முகாமையாளர் ) சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
விஸ்ரு த்தின்  பாசமிகு பேரனும்  ஆவர்   
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026.வியாழக்கிழமை அன்று நண்பகல் 12-மணிஅளவில் 
 அன்னாரின் இல்லம்  இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தில் நடைபெற்று அங்கிருந்து 
 பூதவுடல் தகனக் கிரியைக்காகக  பிற்பகல் 02-00.மணியளவில் 
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
இலங்கை-TP -0766422308
தகவல்
குடும்பத்தினர்.




https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_03.html


செவ்வாய், 2 ஜூன், 2026

இராணுவ விமானம் விபத்தில் தைவானில் இரண்டு விமானிகள் பலி

தெற்கு தைவானில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். 
 விமானத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
 விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 1 ஜூன், 2026

நாட்டில் வெசாக் தானம் பெற காத்திருந்த மக்கள் மீது மோதி உயிரிழப்பு

நாட்டில் மீகோடா சந்திப்பில் உள்ள வெசக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
ஹோமகமவில் உள்ள மீகோடா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் கார், சாலையிலிருந்து விலகி, வெசக் தானசாலை அருகே வரிசையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. 
இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 31 மே, 2026

நாட்டில் வெள்ளவத்தை அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில்  வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி  உயிரிழந்ததாக பொலிஸார் 
 தெரிவித்துள்ளனர். 
பானந்துறையில் இருந்த  கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலே பெண் மீது மோதியுள்ளது. 
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் விபத்து நடந்தபோது அப்பெண் வெள்ளை மற்றும் பழுப்பு நிறச் சேலை அணிந்து, பச்சை நிறப் பை ஒன்றை வைத்திருந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். 
சடலம் தற்போது களுபோவில போதனா மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 
 வெள்ளவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 30 மே, 2026

நாட்டில் ஹுங்கமவில் கடலில் பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்

இலங்கை ஹுங்கமவில் உள்ள கலமதியா கடலில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல்
 போயுள்ளனர். 
12 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை உயிர்காப்பாளர்கள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 29 மே, 2026

நாட்டின் .கடலுக்குள் சென்ற நான்கு கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ் பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2 படகுகளில்  4 தொழிலாளர்கள் சென்றனர். யாழ்ப்பாண கலாச்சாரம்

குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html