siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 மே, 2026

நாட்டின் .கடலுக்குள் சென்ற நான்கு கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ் பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2 படகுகளில்  4 தொழிலாளர்கள் சென்றனர். யாழ்ப்பாண கலாச்சாரம்

குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 28 மே, 2026

மரண அறிவித்தல் ஆசிரிர் அமரர் நடராஜா மயூரன்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-28-05-2026
யாழ் கலட்டி முந்தல் வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவிலை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
யாழ் /கோண்டாவில் இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தின் 
முன்னை நாள் ஆங்கில ஆசிரிர்  
அமரர் நடராஜா மயூரன்  28-05-2026.இன்று காலமாகிவிட்டார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
அன்னாரின்
வீ ட்டு முகவரி
  கலட்டி முந்தல் வீதி கொக்குவில் 
கிழக்கு கொக்குவில்
https://navakkiri.blogspot.com/2026/05/blog-post_28.html


புதன், 27 மே, 2026

மரண அறிவித்தல் திருமதி சுப்பையா சரஸ்வதி

துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-27-05-2026

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
திருமதி சுப்பையா சரஸ்வதி
27-05-2026. இன்று இறைவனடி அடைந்து விட்டார்  அன்னார்  ,தயா. ரத்தினம். சுகந்தி. வசந்தி ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்
அன்னாரின் இறிதிக்கிரிகைகள் 27-05-2026.அன்று புதன்கிழமை 
திகதி-  27-05-2026. அன்று புதன்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 திகதி-  27-05-2026.  புதன்கிழமை   அன்று ;(முகவரி) சிறுப்பிட்டி மேற்க்கு  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
சிறுப்பிட்டி மேற்க்கு
 நீர்வேலி 
தகவல்
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/11/281124_28.html

செவ்வாய், 26 மே, 2026

நாட்டில் கிரிந்த கடலில் விபரீதம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற அதிபர் உயிர் உயிரிழந்தார்.

இலங்கை. மாத்தறை, படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து கிரிந்த பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற குழுவினரே இந்த எதிர்பாராத கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். 
இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படல்கும்பர, அலுப்பத்தை பகுதியிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கிரிந்த விகாரையை தரிசித்துவிட்டு, பின்னர் அங்குள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர். 
இதன்போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் இறங்கி நீராடியபோது, திடீரென எழும்பிய இராட்சத அலையொன்று அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. மாணவி மரண ஓலமிடுவதைக் கண்ட பாடசாலை அதிபர், தனது உயிரையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கடலில் குதித்து அவரை மீட்கப் போராடியுள்ளார். 
எனினும், அந்தப் பகுதியில் நிலவிய கடுமையான கடல் நீரோட்டம் மற்றும் அலை காரணமாக அதிபரும் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்துக் கரையில் இருந்த 
ஏனையவர்களும், கிரிந்த கடற்கரையில் கடமையில் இருந்த
 கடற்படை மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) உடனடியாகச் செயற்பட்டு, இருவரையும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட போது இருவரும் ஆபத்தான நிலையில் இருந்ததால், உடனடியாக தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 56 வயதுடைய அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 
உயிரிழந்தார்.
அதிபரால் காப்பாற்றப்பட்டு, கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுடைய மாணவி, தற்போதும் தெபரவெவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, விசேட வைத்தியர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் 
பெற்று வருகின்றார்.
உயிரிழந்த அதிபர் படல்கும்பர அலுப்பத்தை, பீலிமலை பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். தனது பாடசாலை மாணவியின் உயிரைக் காப்பற்றுவதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த அதிபரின் செயல் அப்பகுதி மக்களையும், கல்விச் சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 25 மே, 2026

நாட்டில் உருத்திரபுரம் பகுதியில் பாரிய விபத்து பெண்ணொருவர் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கரடிப்போக்கு உருத்திரபுரம் பகுதியில் இன்று நண்பகல் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் இரண்டு எதிர் எதிரே மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
விபத்தில் உருத்திரபுரம் பகுதியைச்சேர்ந்த 31வயதான ஒரு பிள்ளையின் தாயார் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 24 மே, 2026

நாட்டில் கரடியனாறு பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த நபர் உயிரிழப்பு

நாட்டில்  மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நபர்ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.23.-05-2026.அன்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
கரடியனாறு, கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுப்பையா வசந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
 குறித்த நபர் மதுபானம் அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் அவரது மனைவியால் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அந்த முறைப்பாட்டிற்கு அமைய, வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அவரைக் கைது 
செய்திருந்தனர்.
 கைது செய்யப்பட்ட நபர் விசாரணைக்காகக் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சற்று நேரத்தில் மயக்கமடைந்ததாகவும், அதனையடுத்து அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வேளையிலேயே மரணமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 எனினும், குறித்த நபர் பொலிஸாரால் தாக்கப்பட்டே உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் 
சுமத்தியுள்ளனர். 
இதேவேளை, உயிரிழந்தவரின் தலையின் பின்புறத்தில் இரத்தக் கசிவு காணப்படுவதாக வைத்தியசாலைத் தகவல்கள் 
தெரிவித்துள்ளன.
 அவரது சடலம் கரடியனாறு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 23 மே, 2026

நாட்டில் சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழப்பு - ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
 இதற்கிடையே  தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களில்   1,966 குடும்பங்களைச் சேர்ந்த    7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
 இவர்களில் 201 பேர் தற்போது 6 பாதுகாப்பான தற்காலிக தங்குமிட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரம்  123 வீடுகள் பகுதியளவிலும், 02 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html