siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

நடந்த வாகன விபத்தில் கனடாவில் இரண்டு இளைஞர்கள் மரணம்

 நடந்த வாகன விபத்தில்.கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை 
கொடுத்துள்ளனர்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 5 ஆகஸ்ட், 2026

நாட்டில் கம்பஹா ரயில் நிலையம் அருகே சடலம் ஒன்று கண்டெடுப்பு - ரயில் சேவைகள் தாமதம்

நாட்டில்.கம்பஹா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அத்துறை கூறியுள்ளது.
 சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதத்துடன் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கனடாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மரணம்

கனடாவின் ஸ்டோனி டிரெயில் சாலையில் தவறான திசையில் சென்ற வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில், சூட்'இனா பார்க்வே அருகே நிகழ்ந்துள்ளது. அப்போது, ​​வடக்கு நோக்கிய பாதையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 30 வயது நபர் ஓட்டி வந்த 2011 மெர்சிடிஸ் பென்ஸ் C350, எதிரே வந்த 2016 சுபாரு இம்ப்ரேசா மீது மோதியதாக 
காவல்துறை நம்புகிறது.
"சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கார் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் கண்டறிந்தனர்" என்று காவல்துறை அதிகாரி 
தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், கால்கரி தீயணைப்புத் துறை, சம்பவ இடத்திற்கு வந்தவுடன், குழுவினர் "உடனடியாக தீவிர தீயணைப்புப் பணியைத் தொடங்கினர்.
மெர்சிடிஸ் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூவரும், சுபாரு காரில் தனியாக இருந்த 43 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
52 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த செவி ஈக்வினாக்ஸ் காரும் மெர்சிடிஸ் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது. அவரும் மூன்று இளைஞர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாடில் கேகாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:பதின் எட்டு பேர் காயம்

நாடில் கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று 03 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 18 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அமரர் சின்னையா இராசையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி

தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி மாணிக்கப்  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட  அமரர் சின்னையா இராசையா  ( ராசு)   அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-08-2026-சனிக்கிழமை அன்று அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  
)திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் அன்றுஅவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
 01-08-2026-  ,சனிக்கிழமை  அன்று காலை 07,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையினிலும் ஆத்மா   சாந்திப்பிரத்தனையும்  வீட்டுக்கிருத்திய கிரியைகள்     
03-08-2026-அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்கள்  மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.htm





 

சனி, 1 ஆகஸ்ட், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மேலும் மூன்று படகுகளைத் தேடும் பணிகள்

நாட்டில்  நீர்கொழும்பு கடற் பகுதியில் மேலும் மூன்று படகுகள் காணாமல்போயுள்ளதாக, கடற்படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா சூரியன் செய்திப் பிரிவுக்கு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நீர்கொழும்பு துறைமுகத்தில் படகொன்று காணாமல் போயிருந்தது. குறித்தப் படகில், 4 பேர் பயணித்துள்ள நிலையில், மூன்று பேர் காணாமல் போனதாக கடற்படைக்கு
 அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவரிடன் உடலம் மீட்க்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், குறித்த படகில் பயணித்த ஒருவர் பாதுகாப்பாக கரை வந்து சேர்ந்ததாக இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
இதனையடுத்து, இன்றைய தினம் மேலும் மூன்று படகுகள் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் சூரியன் செய்திப் பரிவுக்கு கூறினார்.
அதற்கமைய, நீர்கொழும்பு துறைமுக கடற்பகுதியில், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இந்திக டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 31 ஜூலை, 2026

மசூதியில் கனடாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரதமர் கார்னி கண்டனம்

கனடா பிரதமர் மார்க் கார்னி, வின்னிபெக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, இஸ்லாமிய வெறுப்பின் "அதிர்ச்சியூட்டும்" செயல் என்று 
கண்டித்துள்ளார்.
கனடாவின் மனிடோபா மாகாணத்தின் தலைநகரில் உள்ள ரஹ்மா இஸ்லாமிய மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் 
காயம் ஏற்படவில்லை.
"இஸ்லாமிய வெறுப்பின் இந்த வன்முறைச் செயல் அதிர்ச்சியூட்டுகிறது, இதற்கு கனடாவில் இடமில்லை. யாருக்கும் காயம் ஏற்படாததற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று கார்னி 
குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சட்ட அமலாக்கத் துறைக்கு எனது முழு ஆதரவும் உண்டு" என்று கார்னி குறிப்பிட்டுள்ளார்  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html