siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 ஏப்ரல், 2026

இலங்கை மகாவலி கங்கையில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயம்

நாட்டில் திருகோணமலை சோமாவதி மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேரி
ல் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, காணமல் போயுள்ளனர். சேருநுவர காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு, இதனை 
உறுதிப்படுத்தினர்.
புத்தாண்டு தினமான நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட 3 பேர் மகாவலி கங்கை குறுக்காகச் செல்லும் ஆற்றில் 
நீராடியுள்ளனர்.
இதன்போது, மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேருவில காவல்துறையின் பொறுப்பதிகாரி சூரியன் செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 14 ஏப்ரல், 2026

நாட்டில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் பலத்த மின்னல் குறித்த எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று 14-04.2028 -பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல்,சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, 
அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையால் 
தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கும் அபாயத்தைக் குறைக்க மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 13 ஏப்ரல், 2026

யாழ் புத்தூர் வாள்வெட்டுச் சம்பவம்: சிறுப்பிட்டி வயல் பகுதியில் நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ் புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரங்கள்:
புத்தூர் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த சில நபர்கள், சிறுப்பிட்டி வயல் பகுதியில் பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விழிப்புடன் செயற்பட்ட கிராம மக்கள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர். இதன்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு:
பிடிபட்ட நபர்களின் கைகளைக் கட்டிய பொதுமக்கள், உடனடியாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலை:
பிடிபட்டவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர
குறித்த நபர்கள் வாள்வெட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்களா அல்லது வேறு ஏதும் பின்னணி கொண்டவர்களா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுங்கியிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சிறுப்பிட்டி மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

நாட்டில் தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

நாட்டில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் 
என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு 
நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த
 முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 11 ஏப்ரல், 2026

கார் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

பிரித்தானியாவில், கார் ஒன்று சாலைப் பாலத்திலிருந்து விலகி, கீழே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதியதில், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் 
உயிரிழந்தனர்.
லெய்செஸ்டர்ஷையரில் உள்ள லட்டர்வொர்த்தை நோக்கி கில்மோர்டன் லேனில் சென்றுகொண்டிருந்த ஒரு நீல நிற கார், சாலைப் பாலத்திலிருந்து எம்1 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தக் கார், எம்1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற ஃபியட் டுகாடோ மீதும் மோதியதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
நீல நிற காரில் இருந்த பதின்ம வயது இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மினிபஸ்ஸில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

நாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பலி

 

நாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது
விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 9 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் நாகமுத்து குமாரசிங்கம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-09-04-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட 
அமரர் நாகமுத்து குமாரசிங்கம் 
அவர்கள் 09-04-2026.வியாழக்கிழமை .இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற
 நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும் திருமதி  ராசு (கனடா )அவர்களின் அன்புக்கணவரும் 
திருமதி சுபா (சுவிஸ் )திருமதி சொக்கி (கனடா )திரு செட்டி(கனடா )
திரு  கண்ணன் (கனடா )
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின்  நல்லடக்க விபரம்  
இந்த இணையத்தில்  இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.

நாடில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில்  நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம்
 ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது
மக்களே அவதானமாக இருங்கள் மின்னல் மழை போன்ற நேரங்களில் உங்கள் பாதுகாப்பினை முதலில் பார்த்து கொள்ளுங்கள்
தொலைபேசிகளை பாவிப்பதை குறைத்து கொள்ளுங்கள் மின்சாரங்களை கவனமாக பாவிங்கள் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html