siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து

நாட்டில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில்-03-07-2026- இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற கன்ரர் வாகன விபத்தில் நால்வர் 
காயமடைந்துள்ளனர்.
கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நேரிட்ட சமயம் வாகனத்தில்
 ஐவர் பயணித்த 
நிலையில், காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் விபத்துகளால் தினமும் முப்பது பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில்  சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இலங்கையில் வருடாந்தம் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை விபத்துகளால் உயிரிழப்பதாக
 மதிப்பிடப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பொதுவாக நாட்டில் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அதைத் தவிர வேறு பல முக்கிய காரணங்களாலும் அதிகளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றன.
உயரமான இடங்களிலிருந்து கீழே வீழ்தல்.
நீரில் மூழ்குதல்.
மின்சாரம் தாக்குதல்.
பாம்புக் கடிக்குள்ளாகுதல்.
இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை ஆகும். 
எனினும், முறையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்மையால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிர்கள் நாளாந்தம் இழக்கப்படுவது தேசிய அளவில் ஒரு பெரும் துயரம் என மருத்துவ நிபுணர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகள் என அனைத்து இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 1 ஜூலை, 2026

மே மாத வெப்ப அலை காரணமாகபிரான்சில் முண் நூறு மரணங்கள் பதிவு

வெப்ப அலை காரணமாக, 17 மாகாணங்களில் ஆரஞ்சு எச்சரிக்கைகளைத் தூண்டிய மே மாத வெப்ப அலை காரணமாக, ​​பிரான்சில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சகம்
 தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைக்கப்படாத அனைத்துக் காரணங்களாலும் ஏற்படும் இறப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த இறப்பு எண்ணிக்கை ஒரு பூர்வாங்க மதிப்பீடு என்றும், இதில் பெரும்பாலும் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே அடங்குவர் என்றும் அமைச்சகம்
5 குறிப்பிட்டுள்ளது.
மே 24-28 திகதிகளில் வடமேற்கு பிரான்சின் ஆறு மாகாணங்களில் 95 மரணங்கள் பதிவாகியுள்ளது. 
மே 26 மற்றும் மே 30க்கு இடையில் மேற்கு மற்றும் மத்திய பிரான்ஸில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் 14 சதவீதம் அதிகமாகும்.
இந்தக் கூடுதல் இறப்புகளில் சுமார் 230 பேர் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர். 
பிரெஞ்சு வானிலை ஆய்வு நிறுவனமான மெட்டியோ-பிரான்ஸ், மே 26ம் திகதி அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான நாளாகப் பதிவானதாகவும் அன்றைய தேசிய சராசரி வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 30 ஜூன், 2026

குழந்தை கருவில் இழந்த துயரத்திலும் களமிறங்கிய காக்போ: கோலுக்குப் பின் கண்ணீர்

காக்போ: தனது குழந்தை 3 நாட்களுக்கு முன்னர் கருவிலே உயிரிழந்தநிலையில், நெதர்லாந்து வீரர் கோல் அடித்ததும் மைதானத்திலே கதறி அழுதுள்ளார். 2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் மொரோக்கோவிற்கு இடையேயான போட்டியில், முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. 
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ(cody gakpo) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 
ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தினை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. 
நெதர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த 
போட்டியில், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 
கோல் அடித்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த சனிக்கிழமை கோடி காக்போவின் துணைவி நோவா வான் டெர் பிஜ்(Noa van der Bij), தங்களது குழந்தை கருவிலே
 உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார். இந்த சோகமான சூழலில் கோடி காக்போ அவருடயை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அணி நிர்வாகம் விடுப்பு வழங்கியது. ஆனால், இது தனது தேசிய அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் கோடி காக்போ ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
கோடி காக்போ கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், வீரர்கள் சுற்றி நின்று அவருக்கு ஆதரவு வழங்கினர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து பேசிய நெதர்லாந்து 
கோமன், "எங்களால் இயன்றவரை அவருக்கு ஆதரவளித்து வருகிறோம். 
நிச்சயமாக, முதல் சில நாட்களுக்கு அவர் தனது 
குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடன் இருப்பதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் 'நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்' என்று அவர் ஒரு கணம் கூட கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் கென்டக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நால்வர் மரணம்

.நாட்டில் கென்டக்கி முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது நான்கு பேர் 
இறந்துள்ளனர்.
இந்நிலையில், அவசரகால குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு சேதத்தை மதிப்பிடுவதற்கும் கூட்டாட்சி பேரிடர் உதவியைப் பெறுவதற்கும் பணிபுரிந்த் 
வருகின்றனர்.
"நாங்கள் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு கட்டத்தில் இருக்கும்போது, ​​கூட்டாட்சி உதவிக்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக சேதத்தை ஆய்வு செய்ய நாங்கள் விரைவாகச் செயல்படுகிறோம்" என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கென்டக்கி கவர்னர் அவசரகால நிலையை அறிவித்தார் மற்றும் இருட்டிற்குப் பிறகு சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்-23-03-1959---விண்ணில்-14-07- -2022 
திதி -28-06-2026.இன்று 
முல்லைத்தீவு துணுக்காயைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் புத்தூர் மற்றும் நவற்கிரியை
 வாழ்விடமாகவும் தற்போது சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen)  மாநிலத்தில் வசித்துவந்த அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )அவர்களின்  நான்காம் ஆண்டு ..நினைவஞ்சலி  திதி -28-06-2026-இன்று  அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னார் திரு குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ராசா றயித்தா பிரபா ஆகியோரின் அன்புத்தாயாரும் 
 காலஞ்சென்ற வீரகத்தி  மற்றும் நாகம்மா தம்பதியினரின் 
பாசமிகு மருமகளும் ஆவர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_28.html

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி 
சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen) 

சனி, 27 ஜூன், 2026

திரைக்கதை மன்னன்' கே.பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்



பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் .27-06-2026.இன்று  காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர்.
இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும். இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால்  கொண்டாடப்படுகிறது. 
அவருக்கு திரைத்துறையினர் மற்றும் இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






வெப்ப அலை காரணமாக பிரான்சில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

வெப்ப அலை காரணமாக பிரான்சில்  உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள்
 தெரிவித்தனர். 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html