siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருபது மாத குழந்தை ஜெர்மனியில் மரணம் இலங்கைத் தமிழ் தாய் கைது

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல்
 .உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் 
புறப்பட்டுள்ளார். 
ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் 
சென்றுள்ளார்.
பின்னர், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்பகுதியில் நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.

சனி, 20 ஜூன், 2026

தொடருந்துகள் இங்கிலாந்தில் ஒன்றுடன் ஒன்று மோதில் பலர் :காயம் ஓட்டுநர் பலி

இரண்டு தொடருந்துகள்   லண்டனுக்கு வடக்கே  ஒன்றுடன் ஒன்று மோதியதில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 99 பேர் 
காயமடைந்தனர். 19-06-2026-
வெள்ளிக்கிழமை பிற்பகல் பெட்ஃபோர்டுக்கு தெற்கே ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் தொடருந்து சேவையால் இயக்கப்படும் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர் என்று
 காவல்துறை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 

வெள்ளி, 19 ஜூன், 2026

நாட்டில் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்தால் வைத்தியசாலைகள் : நெருக்கடி நிலை

நாட்டில்  டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், வைத்தியசாலைகளால் சமாளிப்பது கடினமாக இருக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதித்த
 தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மக்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
வீடுகள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பிற இடங்களைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது சுகாதார அமைப்பின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர்
 சுட்டிக்காட்டினார்.
பேருவளை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, "நீண்ட காலத்திற்கு நாம் என்ன செய்தாலும், டெங்கு நோயாளிகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே குறுகிய கால தீர்வு, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அழிப்பதே ஆகும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதுதான். இதைவிட அதிகமான நோயாளிகள் பதிவாகத் தொடங்கினால், நமது வைத்தியசாலைகளால் அதைச்
 சமாளிக்க முடியாது. 
இது போன்ற ஒரு பிரச்சினை தொடர்ந்தால் இதுதான் நடக்கும். அப்படி நடந்தால், நோயாளி பராமரிப்பு சீர்குலைந்துவிடும். இதை இன்னும் கட்டுப்படுத்த முடியும்." என்றார்..என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் .

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html 


வியாழன், 18 ஜூன், 2026

நாட்டில் காதலியின் சடலத்தை காரில் கைவிட்டுச் சென்ற காதலன் பொலிஸார் விசாரணையில்

இலங்கை தெல்தெனிய பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பில் பொலிஸார் தீவர விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த சடலம்  பெண் உடற்பயிற்சி நிபுணருக்கு சொந்தமானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  குறித்த பெண்ணின் காதலன் சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
பொலிஸாரின் தொடர் விசாரணைகளில் குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் உடற்பயிற்சி நிபுணராகப் பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது. 
 அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர். அ
தன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. 
 இதேவேளை, தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு அவரது சடலம் குறித்துத் தகவல் வழங்கியவர், உயிரிழந்த பெண்ணின் காதலன் என 
சந்தேகிக்கப்படும் நபரே என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது. 
 எவ்வாறாயினும், அந்த நபர் தற்போது தலைமறைவாகியுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை
 மேற்கொண்டு வருகின்றனர். 
 நீதவான் விசாரணைக்குப் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு படுகொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் ஏற்பட்ட மரணமா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 17 ஜூன், 2026

கொடூர விபத்து யாழ் - கண்டி வீதியில் பாரவூர்திகள் மோதி இருவர் பரிதாப பலி

.யாழ் கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 16 ஜூன், 2026

நாட்டில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு- பொலிஸ் காயம்

கொழும்பு- ப்ளூமெண்டல் காவல் நிலையத்தில், சார்ஜன்ட் ஒருவரின் வசம் இருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக இயங்கியதில், பொலிசார் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ப்ளூமெண்டல் பொலிஸார் தெரிவித்தனர். உதவிச் சேவைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
.தமது கடமைக்கான துப்பாக்கியைப் பொறுப்பேற்று அதனைப் பரிசோதிக்கும்போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி இயங்கியுள்ளது. இதன்போது அதிலிருந்து ஒரு ரவை வெளியேறி, தரைத்தளத்தில் உள்ள டைல்ஸ் (Tiles) மீது பட்டு, அதன் சிதறல் துண்டு
 உதவிச் சேவையில் ஈடுபட்டிருந்த காவலரின் இடது கால் கணுக்காலுக்கு சற்று மேலே பாய்ந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





திங்கள், 15 ஜூன், 2026

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து

நாட்டில் பாடசாலை வேன் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளாகியதில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த விபத்து இன்று கண்டி - யாழ்ப்பாணம் A-9 வீதியின் கட்டுகஸ்தோட்டை, கலுகல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இந்த விபத்தில் 17 பாடசாலை மாணவ, மாணவிகளும் வேனின் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
 தனியார் பேருந்து கண்டி திசை நோக்கியும், பாடசாலை வேன் அதற்கு எதிர் திசையிலும் பயணித்துக்கொண்டிருந்த போதே
  விபத்து நேர்ந்துள்ளது. 
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html