siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 1 ஜூன், 2026

நாட்டில் வெசாக் தானம் பெற காத்திருந்த மக்கள் மீது மோதி உயிரிழப்பு

நாட்டில் மீகோடா சந்திப்பில் உள்ள வெசக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்தின் மீது வாகனம் மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 
ஹோமகமவில் உள்ள மீகோடா பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாடகைக் கார், சாலையிலிருந்து விலகி, வெசக் தானசாலை அருகே வரிசையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளது. 
இதில் குறைந்தது 12 பேர் காயமடைந்து ஹோமகம  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 31 மே, 2026

நாட்டில் வெள்ளவத்தை அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில்  வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே பெண் ஒருவர் ரயிலில் மோதி  உயிரிழந்ததாக பொலிஸார் 
 தெரிவித்துள்ளனர். 
பானந்துறையில் இருந்த  கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயிலே பெண் மீது மோதியுள்ளது. 
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் விபத்து நடந்தபோது அப்பெண் வெள்ளை மற்றும் பழுப்பு நிறச் சேலை அணிந்து, பச்சை நிறப் பை ஒன்றை வைத்திருந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். 
சடலம் தற்போது களுபோவில போதனா மருத்துவமனையின் பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. 
 வெள்ளவத்தை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 30 மே, 2026

நாட்டில் ஹுங்கமவில் கடலில் பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்

இலங்கை ஹுங்கமவில் உள்ள கலமதியா கடலில் குளித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல்
 போயுள்ளனர். 
12 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
தற்போது, ​​அவர்களைத் தேடும் பணியை உயிர்காப்பாளர்கள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 29 மே, 2026

நாட்டின் .கடலுக்குள் சென்ற நான்கு கடற்தொழிலாளிகளை காணவில்லை

யாழ் பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. 
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் பகுதிகளிலிருந்து கடற்றொழிலிற்கு 2 படகுகளில்  4 தொழிலாளர்கள் சென்றனர். யாழ்ப்பாண கலாச்சாரம்

குறித்த நால்வரும் கரை திரும்பாத நிலையில் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடுமையான காற்று வீசி வருவதனால் படகுகள் கடலில் அடிபட்டு திசை மாறி சென்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 28 மே, 2026

மரண அறிவித்தல் ஆசிரிர் அமரர் நடராஜா மயூரன்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-28-05-2026
யாழ் கலட்டி முந்தல் வீதி கொக்குவில் கிழக்கு கொக்குவிலை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
யாழ் /கோண்டாவில் இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தின் 
முன்னை நாள் ஆங்கில ஆசிரிர்  
அமரர் நடராஜா மயூரன்  28-05-2026.இன்று காலமாகிவிட்டார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
அன்னாரின்
வீ ட்டு முகவரி
  கலட்டி முந்தல் வீதி கொக்குவில் 
கிழக்கு கொக்குவில்
https://navakkiri.blogspot.com/2026/05/blog-post_28.html


புதன், 27 மே, 2026

மரண அறிவித்தல் திருமதி சுப்பையா சரஸ்வதி

துயர் பகிர்வு-தோற்றம் 00-00-00-மறைவு-27-05-2026

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
திருமதி சுப்பையா சரஸ்வதி
27-05-2026. இன்று இறைவனடி அடைந்து விட்டார்  அன்னார்  ,தயா. ரத்தினம். சுகந்தி. வசந்தி ஆகியோரின் அன்புத்தாயரும் ஆவார்
அன்னாரின் இறிதிக்கிரிகைகள் 27-05-2026.அன்று புதன்கிழமை 
திகதி-  27-05-2026. அன்று புதன்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 திகதி-  27-05-2026.  புதன்கிழமை   அன்று ;(முகவரி) சிறுப்பிட்டி மேற்க்கு  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீ ட்டு முகவரி-
சிறுப்பிட்டி மேற்க்கு
 நீர்வேலி 
தகவல்
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/11/281124_28.html

செவ்வாய், 26 மே, 2026

நாட்டில் கிரிந்த கடலில் விபரீதம்: மாணவியைக் காப்பாற்ற முயன்ற அதிபர் உயிர் உயிரிழந்தார்.

இலங்கை. மாத்தறை, படல்கும்பர பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிலிருந்து கிரிந்த பகுதிக்கு கல்விச் சுற்றுலா சென்ற குழுவினரே இந்த எதிர்பாராத கொடூர விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். 
இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படல்கும்பர, அலுப்பத்தை பகுதியிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் கிரிந்த விகாரையை தரிசித்துவிட்டு, பின்னர் அங்குள்ள கடற்கரைக்குச் சென்றுள்ளனர். 
இதன்போது, 14 வயதுடைய மாணவி ஒருவர் கடலில் இறங்கி நீராடியபோது, திடீரென எழும்பிய இராட்சத அலையொன்று அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. மாணவி மரண ஓலமிடுவதைக் கண்ட பாடசாலை அதிபர், தனது உயிரையும் பொருட்படுத்தாது உடனடியாகக் கடலில் குதித்து அவரை மீட்கப் போராடியுள்ளார். 
எனினும், அந்தப் பகுதியில் நிலவிய கடுமையான கடல் நீரோட்டம் மற்றும் அலை காரணமாக அதிபரும் அலைகளினால் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்துக் கரையில் இருந்த 
ஏனையவர்களும், கிரிந்த கடற்கரையில் கடமையில் இருந்த
 கடற்படை மற்றும் பொலிஸ் உயிர் பாதுகாப்புப் பிரிவினரும் (Life Guards) உடனடியாகச் செயற்பட்டு, இருவரையும் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்டெடுத்தனர்.
மீட்கப்பட்ட போது இருவரும் ஆபத்தான நிலையில் இருந்ததால், உடனடியாக தெபரவெவ ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 56 வயதுடைய அதிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக 
உயிரிழந்தார்.
அதிபரால் காப்பாற்றப்பட்டு, கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதுடைய மாணவி, தற்போதும் தெபரவெவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, விசேட வைத்தியர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் 
பெற்று வருகின்றார்.
உயிரிழந்த அதிபர் படல்கும்பர அலுப்பத்தை, பீலிமலை பகுதியைச் சேர்ந்த ஒருவராவார். தனது பாடசாலை மாணவியின் உயிரைக் காப்பற்றுவதற்காகத் தனது உயிரைத் தியாகம் செய்த அதிபரின் செயல் அப்பகுதி மக்களையும், கல்விச் சமூகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

 https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html