siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 8 ஜூன், 2026

யாழ் செம்பியன்பற்று கடலில் மாயமான மீனவர் சக மீனவர்களால் உயிருடன் மீட்பு

நாட்டில் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் ஒருவர், சக மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையின் மூலம் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று (ஜூன் 7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்
. எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்பாததால் குடும்பத்தினரிடையே அச்சமும், அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலையும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செம்பியன்பற்று வடக்கு சென். பிலிப் நேரிஸ் கடற்தொழிலாளர் சங்கத்தினர் உடனடியாக களத்தில் இறங்கி தேடுதல் பணிகளை ஆரம்பித்தனர். 
இத்தேடுதல் முயற்சிக்கு கடற்படையினரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பல மணித்தியாலங்கள் நடுக்கடலில் முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதலின் பயனாக, 
கரை பகுதியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டார்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்குக் பின்னால் உள்ள அவல நிலை குறித்தும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்:
பொருளாதார நெருக்கடி: அன்றாட வாழ்க்கையை நகர்த்தவும், குடும்பப் பொருளாதாரத்தைக் கொண்டு செலுத்தவும் வேறு வழியின்றி, ஆபத்தான சூழலிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிகரிக்கும் விபத்துக்கள்: இத்தகைய பொருளாதாரக் காரணங்களால், அண்மைக்காலமாக மீனவர்கள் கடலில் காணாமல் போகும் மற்றும் விபத்துக்களுக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன.
அரசாங்கத்திற்கு விடுக்கப்படும் அவசர கோரிக்கை
 மீனவர்களின் இந்த அவல நிலைக்கு உடனடியாகத் தீர்வு காணவும், அவர்களின் உயிர்களையும் வாழ்வாதார உபகரணங்களையும் பாதுகாக்கவும் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை 
விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காலங்களில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர விழிப்புணர்வு திட்டங்களை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
காலநிலை மோசமாக இருக்கும் காலங்களில், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான குறுகிய கால நிவாரண நிதியுதவிகளை அரசாங்கம்
 வழங்க வேண்டும்.
இத்தகைய காத்திரமான நடவடிக்கைகள் மூலமே எதிர்காலத்தில் மீனவர்களின் உயிர் இழப்புக்களையும், வாழ்வாதாரப் பாதிப்புக்களையும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்    

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 7 ஜூன், 2026

நாட்டில் ஹொரணையில் கணவனின் உயிரை பறித்த மனைவி

நாட்டில்  ஹொரணை, அரம்பகந்த பகுதியில்  கணவன் மனைவிக்கு இடையில் இடம்பெற்ற வாய்தர்க்கம் கொலையில்
 முடிந்துள்ளது. 
வாயத்தர்க்கம் முற்றிய நிலையில் கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் அரம்பகந்த, ஹொரணை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.
சம்பவம் தொடர்பில் மனைவி கைது 
செய்யப்பட்டுள்ளார். 
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்திலேயே பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹொரணை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
.என்பதும்  குறிப்பிடத்தக்கது   


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 6 ஜூன், 2026

யாழ் புத்தூர் விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழப்பு; மேலும் மூவர் படுகாயம்

யாழ் புத்தூர் பகுதியில் டிப்பர் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற கொடூர விபத்து குறித்த மேலதிக செய்தி டிப்பர் மோதி முச்சக்கர வண்டி நசுங்கியதில் 21 வயது இளைஞன் காஜானன் பரிதாப மரணம்; இருவர் கவலைக்கிடம்! யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில்.05-06-2026. அன்று இரவு  இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் சிக்கி 21 வயதுடைய இளம் குடும்பஸ்தர்/இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 
மேலும் இரு இளைஞர்கள் கால்கள் நசுங்கிய நிலையில் ஆபத்தான கட்டத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட 
வாசன் காஜானன் (வயது 21) என்ற இளைஞனே இன்று (06) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவராவார். மட்டுவில் பகுதியிலிருந்து புத்தூர் நோக்கி அதிவேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் (Tipper) வாகனத்தின் குறுக்கே, திடீரென முச்சக்கர வண்டி (Three-Wheeler) ஒன்று
 நுழைந்துள்ளது. 
இதன் போது எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் முச்சக்கர வண்டியின் மீது
 ஏறி நசுக்கியுள்ளது. இந்த கொடூர விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கி, கால்கள் நசுங்கிய நிலையில் படுகாயமடைந்தனர்.
விபத்து நடந்த உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அதிகாலை வேளையில் வாசன் காஜானன் என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றைய இரு இளைஞர்களின் நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்கு 
உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விபத்துச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகனத்தின் சாரதியின் அலட்சியமே விபத்துக்குக் காரணமா அல்லது முச்சக்கர வண்டியின் திடீர் திருப்பமா என்ற கோணத்தில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
முடுக்கிவிட்டுள்ளனர்.
நள்ளிரவில் வீதி ஒழுங்குகளைக் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக பயணிப்பதே இதுபோன்ற கொடூர விபத்துகளுக்குக் காரணம் என உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 5 ஜூன், 2026

உலகளவில் பாதுகாப்பற்ற உணவு காரணமாக ஆண்டுதோறும் மரணங்கள்- உலக சுகாதார அமைப்பு

.பாதுகாப்பற்ற உணவு ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 866 மில்லியன் நோய்களையும் 1.5 மில்லியன் இறப்புகளையும் ஏற்படுத்துகிறது என்றும் இதில் சிறு குழந்தைகள் விகிதாசார அடிப்படையில் அதிக சுமையை எதிர்கொள்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) 
தெரிவித்துள்ளது.
புதிய WHO மதிப்பீடுகளின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், பெரியவர்களை விட அசுத்தமான உணவால் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம். 
அவர்கள் உலகின் மக்கள்தொகையில் வெறும் 9% மட்டுமே என்றாலும், உணவு மூலம் பரவும் அனைத்து நோய்களிலும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கிற்கு அவர்களே காரணமாக உள்ளனர் என்று அந்த அமைப்பின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை, பாதுகாப்பான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான சிறந்த அணுகல் ஆகியவற்றின் மூலம் பல நோய்களையும் இறப்புகளையும் தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு கருத்தியல் பிரச்சினை அல்ல - அது ஒவ்வொரு உணவையும், ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு நாளையும் பாதிக்கிறது," என்று WHO தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் குறிப்பிட்டுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 4 ஜூன், 2026

நாட்டில் நாவலப்பிட்டியில் : முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்து மூவர் பலி

நாவலப்பிட்டியில் 04.06.2026:இன்று  காலை சுமார் 6:45 மணியளவில், மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நகரை நோக்கி முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து
 நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனும், 34 மற்றும் 51 வயதுடைய இரு பெண்களும் அடங்குவர். பலியானவர்களில் மாணவனின் தாயாரும் ஒருவர் என ஆரம்பகட்டத் தகவல்கள் 
தெரிவிக்கின்றன.
வீதியோரத்தில் இருந்த ஒரு பெரிய யூக்கலிப்டஸ் (Eucalyptus) மரமே இவ்வாறு முறிந்து விழுந்துள்ளது. இந்த மரம் நீண்டகாலமாக உளுத்துப் போய், ஆபத்தான நிலையில் இருந்ததாகப் பிரதேச மக்கள் விசனம் 
தெரிவித்துள்ளனர்.
குறித்த மரம் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பலமுறை அறிவித்தும், அதனை 
அகற்றுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். விபத்து நடந்தவுடன் பிரதேச மக்களும் பொலிஸாரும் இணைந்து மரத்தை வெட்டி அகற்றி, முச்சக்கர வண்டியில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். 
எனினும், அவர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது
 வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதன் சாரதி சிறு
 காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.விபத்துத் தொடர்பாக நாவலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும்  குறிப்பிடத்தக்கது
.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 3 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் வேலும் மயிலும் குருபரன்

துயர் பகிர்வு-தோற்றம் -28-09-1963--மறைவு-03-05-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் அச்சுவேலி பத்தமேனியை  வாழ்விடமாகவும் தற்போது 
இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட 
அச்சுவேலி-சூர்யா மருந்தக உரிமையாளர் அமரர்அமரர் வேலும் மயிலும் குருபரன்  அவர்கள்
03-06-2026-புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற வேலும் மயிலும்
இரத்தினசிகாமணி  தம்பதியினரின் பாசமிகு மகனும் காலம்சென்ற ஜேசு தாசன் எலிசபேத் 
தம்பதியினரின் பாசமிகு மருமகனும் மொறீன் சாந்தினியின் அன்புக்கணவரும் 
சலோமி சரணியா  தேனு கானான் பாசமிகு தந்தையும் முகுந்தன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் )சசிகலா 
(austria )நளினி கலா (கொழும்பு )ஆகியோரின் அன்புச்  சகோதரனும் ஆவார் 
கிருஷாந்த் (dfcc வங்கி முகாமையாளர் ) சஞ்சுகா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
விஸ்ரு த்தின்  பாசமிகு பேரனும்  ஆவர்   
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-06-2026.வியாழக்கிழமை அன்று நண்பகல் 12-மணிஅளவில் 
 அன்னாரின் இல்லம்  இல .157-4.ஆம்  குறுக்குத்தெரு யாழ்பாணத்தில் நடைபெற்று அங்கிருந்து 
 பூதவுடல் தகனக் கிரியைக்காகக  பிற்பகல் 02-00.மணியளவில் 
நவற்கிரி நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
மேலதிக தொடர்புகளுக்கு 
இலங்கை-TP -0766422308
தகவல்
குடும்பத்தினர்.




https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_03.html


செவ்வாய், 2 ஜூன், 2026

இராணுவ விமானம் விபத்தில் தைவானில் இரண்டு விமானிகள் பலி

தெற்கு தைவானில் நடந்த சிறிய ரக விமான விபத்தில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். 
 விமானத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
 விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை, மேலும் இச்சம்பவம் குறித்து அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றன.. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html