siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 12 மார்ச், 2026

யாழ் வடமராட்சியில் மருமகன் மாமி வெட்டி படுகொலை மாமனர் வெட்டி படுகாயம்

யாழ்  மராட்சியில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் 
கைது செய்துள்ளனர்
வடமராட்சியில்.(11-03-2026.) நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது
 வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , 
மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி,  கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , 
வீட்டில் இருந்து
 தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர். 
அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று 
இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு
 சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை
 செய்துள்ளார். 
பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார். 
அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  
சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 11 மார்ச், 2026

பேருந்து தீப்பற்றி எரிந்ததில் சுவிட்சர்லாந்தில் ஐந்து பேர் படுகாயம் ஆறு பேர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்து, பிரிபொங் மாகாணம், கெர்சர் நகரில் பேருந்தொன்று தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயானது விரைவாக பேருந்து முழுவதிலும் பரவியதால் பயணிகளால் வெளியில் வர முடியாத சூழ்நிலை
 ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் இருந்த 11 பயணிகளில் ஆறு பேர் உயிரிழந்ததோடு, 5 பயணிகள் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்து காயமுற்றவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தில் திடீரென தீப்பற்றியதன் பின்னணியைக் கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 10 மார்ச், 2026

யாழ் நாவலப்பிட்டியை சேர்ந்த நபரொருவர் நயினாதீவில் குத்திக்கொலை

யாழ் நயினாதீவு பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் 
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர்
 நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முரண்பாடு காரணமாக மற்றொரு நபர் கத்தியால் குத்தி இவரைக் கொலை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 7 மார்ச், 2026

மரண அறிவித்தல் திருமதி தவராஜசிங்கம் நாகேஸ்வரி

துயர் பகிர்வு-தோற்றம் 00.மறைவு-07-03-2026.
யாழ் பருத்தித்துறையை   பிறப்பிடமாகவும்   வதிவிடமாகவும்  திருமதி தவராஜசிங்கம் நாகேஸ்வரி  அவர்கள் .07-03-2026..சனிக்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார்
 அன்னார் காலம்சென்ற  தவராஜசிங்கம்  அவர்களின் அன்பு  மனைவியும் காலம்சென்ற 
 திரு திருமதி   கணபதிப்பிள்ளை  சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகளும்  காலம்சென்ற பிரபாகரன் மற்றும் 
கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் திருமதி தனலட்சுமி  மற்றும் காலம்சென்ற வரதன்ஆகியோரின் 
 அன்புச்சகோதரியும்  ஆவர்  அன்னாரின் இறுதிச்சடங்கு திகரைபுலோலி  வடக்கில்  திகதி-  08-03-2026 ஞாயிற்க்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்
  நல்லடக்கம்
08-03-2026 ஞாயிற்க்கிழமை  அன்று ; கோரியடி பருத்தித்துறை  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/blog-post_7.html





 

வெள்ளி, 6 மார்ச், 2026

யாழ் பாலைதீவு படகு விபத்து உயிாிழப்பு அதிகாிப்பு

யாழ் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவிற்குப் பக்தர்களை ஏற்றிச் சென்ற படகு குருநகர் கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின்
 எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் இருவரும் 
யாழ். குருநகர் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய எம்.ஜோசப் மற்றும் 57 வயதுடைய பிரான்ஸிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் சடலங்கள் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், 13 வயது சிறுவன் ஒருவன், 4 பெண்கள்
 மற்றும் 8 ஆண்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் ஒரு ஆணும் இரு பெண்களும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 4 மார்ச், 2026

நாட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டிக்குள் சடலம் மீட்பு

நாட்டில்  மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காலி வீதியில், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வீதியில், கருச சந்தியிலிருந்து மொரட்டுவை நோக்கி அமைந்துள்ள வீரபுரன் அப்பு வித்தியாலயத்திற்கு முன்னால் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த முச்சக்கர வண்டியின் பின் ஆசனத்திற்கு அடியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
விசாரணைகளின் போது, உயிரிழந்தவர் மொரட்டுவை, வில்லோரவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் என அடையாளம் 
காணப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக பல 
வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, ஒரு வழக்கு தொடர்பாக சிறையில் இருந்து விடுதலையாகி 21 நாட்களுக்கு பின்னரே இவர் வீடு திரும்பியுள்ளார். 
சடலம் இருந்த இடத்தை கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு ஆய்வு கூட திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்டதுடன், மொரட்டுவை பிரதான நீதவான் சம்பத் கமகே வருகை தந்து ஸ்தல ஆய்வை
 மேற்கொண்டார். 
சடலம் பாணந்துறை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு மரண பரிசோதனை
 நடத்தப்படவுள்ளது.
மேலும், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மொரட்டுவை பொலிஸார் விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 மார்ச், 2026

நாட்டில் ஹபரணை - பொலன்னறுவை வீதியில் விபத்து:ஏழு பேர் காயம்

இன்று பிரதான வீதியில் மின்னேரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு அருஹபரணை - பொலன்னறுவைகில்  இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, வீதியில் பழுதடைந்து நின்ற பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது எதிரே வந்த அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டருடன் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. பேருந்தில் பயணித்த 4 ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர்களும், டிராக்டரில் இருந்த 3 பேரும் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் முன் இருக்கையில் பயணித்த பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
காயமடைந்தவர்கள் ஹபரணை, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஹபரணை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html