siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 3 மார்ச், 2026

நாட்டில் ஹபரணை - பொலன்னறுவை வீதியில் விபத்து:ஏழு பேர் காயம்

இன்று பிரதான வீதியில் மின்னேரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு அருஹபரணை - பொலன்னறுவைகில்  இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, வீதியில் பழுதடைந்து நின்ற பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது எதிரே வந்த அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டருடன் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. பேருந்தில் பயணித்த 4 ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர்களும், டிராக்டரில் இருந்த 3 பேரும் காயமடைந்துள்ளனர்.
பேருந்தின் முன் இருக்கையில் பயணித்த பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
காயமடைந்தவர்கள் ஹபரணை, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஹபரணை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 2 மார்ச், 2026

இலங்கையர் எவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில்காயமடையவில்லை-இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் அருஷா குரே
 தெரிவித்துள்ளார். 
இதேவேளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்களை விடுத்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் இலங்கையர்கள் 
வசிக்கின்றனர். 
இலங்கைக்கான தூதரகம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் உள்நாட்டு அமைச்சு ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர்
 குறிப்பிட்டுள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசரத் தேவைகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக விசேட சேவையொன்றை ஏற்பாடு செய்துள்ளது. 
போக்குவரத்து, பாதுகாப்பான இடங்கள் மற்றும் விமான நிலைய அணுகல் தொடர்பான ஆலோசனைகளைத் தூதரகம் மற்றும் டுபாய் கொன்சியூலர் அலுவலகம் தமது பேஸ்புக் பக்கத்தின் ஊடாகத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், அவற்றைச் சரிபார்க்கவும். இதற்கிடையில், யாரேனும் அந்நாட்டிற்குச் சுற்றுலாப் பயணமாகச் சென்றிருந்தால், விமானச் சேவை மற்றும் தமது பயண முகவர்களுடன் 
தொடர்பைப் பேணுவும். 
உத்தியோகபூர்வ அறிவிப்புகள் மற்றும் அதிகாரபூர்வ செய்திகளை மட்டுமே நம்புமாறும், இராச்சியத்தில் உள்ள தமது நாட்டுப் பிரஜைகள் மற்றும் அங்கு வருபவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான 
அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 1 மார்ச், 2026

நாட்டில் வெல்லம்பிட்டியில் வீடு புகுந்து ஒருவர் வெட்டிப் படுகொலை

நாட்டில் .கொழும்பு, வெல்லம்பிட்டி - சாதம்வத்தை பகுதியில் நேற்று வீடு புகுந்த இனந்தெரியாத கும்பல் நடத்திய வாள்வெட்டுத் தாக்குதலில் நபர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், சாதம்வத்தை - ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குறித்த வீட்டின் உரிமையாளருடன் தற்காலிகமாகத் தங்கியிருந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைக்கான பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருக்கலாம் எனப் பொலிஸார் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர். வீட்டின் உரிமையாளர் தற்போது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக, போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கிடையே நிலவும் நீண்டகாலப் பகை அல்லது பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
நேற்று வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்த இனந்தெரியாத 
நபர்கள், அங்கிருந்த நபரை வாளால் வெட்டித் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

யாழில் கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

யாழ் - பருத்தித்துறை கொட்டடி பகுதியில் 28.02.2026 அன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்ற இருவரில் ஒருவர் கடலுக்குள் தவறி விழுந்து 
காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் 01.03.2026 இன்று பருத்தித்துறை கொட்டடி மீனவர்களால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக கொட்டடியைச் சேர்ந்த 24 வயதுடையநவரத்தினம் நிச்சன் என்னும் இளைஞனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் 
தற்பொழுது இறந்த இளைஞனின் சடலம் தற்போது கரைக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

நாட்டில் பட்டா ரக வாகனம் மின் கம்பத்தில் மோதி பாரிய விபத்து

நாட்டில் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதான வீதியில் அமைந்துள்ள கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இன்று அதிகாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பகுதியிலிருந்து மருதமுனை நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம் கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலிருந்த மின் கம்பத்தில் மோதுண்டு விபத்துள்குள்ளாகியுள்ளது.

பட்டா ரக வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி எதுவித ஆபத்துக்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 
எனினும் குறித்த வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மின்கம்பமும் உடைந்து வீழ்ந்துள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 பிப்ரவரி, 2026

நாட்டில் .ரத்மலானை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

நாட்டில் ரத்மலானை கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகொன்றில் நேற்று (25) இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை 
ஆரம்பித்துள்ளனர். 
இறந்தவர் ரத்மலானையைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணம் சந்தேகத்திற்குரியது என்று பொலிஸார் வகைப்படுத்தியுள்ள நிலையில், கல்கிசை பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுது வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 25 பிப்ரவரி, 2026

நாட்டில் .ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக் கொலை

நாட்டில் ஹொரணை, பொருவதந்தவில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர். 
பாதிக்கப்பட்டவர், அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வீட்டினுள் இருந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் நிலைமை குறித்துத் தெரிவித்தார்.
பின்னர் மனைவி சம்பவ இடத்திற்கு வந்து, மற்ற பெண்ணுடன் சேர்ந்து, மரக் கம்பத்தைப் பயன்படுத்தி அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
சம்பவம் தொடர்பில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

நாட்டில் குருநாகல் – தம்புள்ள வீதியில் பாரிய விபத்து

நாட்டில் குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் யக்கபிடிய சந்தியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர்
 படுகாயமடைந்துள்ளார் 
வண்டியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் வாகனக் கட்டுப்பாட்டை இழந்து வண்டியை, வீதியின் வலப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றிய லொரியில் மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தில் பாரவூர்தியில் இருந்த சாரதி கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், லொரியில் ஏற்றப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html