siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 11 ஜூலை, 2026

அமரர் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி,12 07.26

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- 
திதி 12-07-2026-,ஞாயிருக்கிழமை  அன்று
 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 12-07-2026.அன்று  அன்னார் காலம்சென்ற 
 திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மனைவியாரும்  காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
காலம்சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்  
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
12-07-2026-,ஞாயிருக்கிழமை   அன்று  பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் பிள்ளைகளின்  இல்லங்களில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலச்சுழற்சியில் இரண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
சகோதர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்
அன்னாரின்  ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள்  நவற்கிரி சுவிஸ் ஜெர்மன் கனடா நோர்வே   நண்பர்களும் 
இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
.இங்கனம் -
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/07/03-0724.html




வெள்ளி, 10 ஜூலை, 2026

காட்டுத்தீயில் சிக்கி தெற்கு ஸ்பெயினில் பன்னிரண்டு பேர் மரணம்

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் 
உயிரிழந்தனர்.
இந்தப் பகுதியில் இதுவரை பதிவானதிலேயே இதுதான் மிகவும் கொடிய தீ விபத்து என்றும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வரும் வேளையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் 
கண்டறியவில்லை.
அல்மேரியா மாகாணத்தில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் நகராட்சியில், N-340 நெடுஞ்சாலைக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. 
பலத்த காற்று, தீப்பிழம்புகளை அண்டை நகராட்சியான பெடாருக்கு விரைவாகப் பரப்பியது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 9 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறை கலவரம் இந்திய பிரஜை ஒருவரும் பலி

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 
உயிரிழந்தவர் 73 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த இந்திய நாட்டவரின் மரணம்
 குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஜூலை, 2026

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஏழு பேருக்கு மரண தண்டனை

நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 20 வருடங்களாக மிக நீண்ட மற்றும் விரிவான விசாரணைகள் 
நடைபெற்று வந்தன. 
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு, இறுதியாக இன்று (08) குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
சட்டவிரோதமாகக் கூடுதல், திட்டமிட்டுக் கொலை செய்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 7 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனித படுகொலையானது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2006ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் இழைக்கப்பட்ட இந்த பாரிய மனித படுகொலைச் சம்பவம் அக்காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று நீதி கிடைத்துள்ளதாக சட்டத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை
 விதிக்கப்பட்டுள்ள 
போதிலும், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணிகள் அடுத்த 14 நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ரீதியிலான 
வாய்ப்புகள் உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்திய காரணத்தை வெளியிட்ட காவல்துறை

 

நாட்டில் .சிறைச்சாலைகளில் இரண்டு பிரதான கதவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக இருப்பது இரும்புக் கதவு, அடுத்ததாக இருப்பது மரப்பலகையிலான கதவு ஆகும். 
இந்த கைதிகள் இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரப்பலகை கதவை நோக்கி வந்துள்ளனர்.
இந்த இரும்பு கதவுக்கும் மரப்பலகை கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் பார்சல் ஸ்கேன் இயந்திரம் (Parcel scan machine), பாடி ஸ்கேன் இயந்திரம் (Body scan machine) மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, இந்த கைதிகள் இரும்பு கதவையும் உடைத்துக் கொண்டு, இந்த மரக் கதவையும் கடந்து வெளியே வந்திருந்தால், அங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளைப் பற்றி என்னால் இந்த சந்தர்ப்பத்தில் 
மதிப்பிட முடியாது. 
அவர்கள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், அனைவரும் தப்பியிருப்பார்கள், அனைவரும் சமூகத்திற்குள் வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை பற்றி என்னால்
 கூற முடியாது என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 6 ஜூலை, 2026

இலங்கையில் தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்


நாட்டில் பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் 06-07-2029இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
இந்த விழிப்புணர்வு வேலை திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆரம்பித்து வைக்கவுள்ளார். 
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 5 ஜூலை, 2026

மரண அறிவித்தல் அமரர் சின்னையா இராசையா

 

துயர் பகிர்வு-தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் சின்னையா இராசையா  ( ராசு )அவர்கள் 04-07-2026...அன்று காலமானார் அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  )திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  07-07-2026.. செவ்வாய்க்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
07-07-2026.. செவ்வாய்க்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html