siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 1 ஏப்ரல், 2026

ரஷ்ய விமானம் கிரிமியாவில் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை 
தெரிவித்தன.
சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை
 வழங்கவில்லை.
2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு 
தெரிவித்துள்ளது.
விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 31 மார்ச், 2026

பருத்தித்துறையில் வீட்டாருடன் முரண்பாடு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

யாழ், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு ,
 உடற்கூற்று 
பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 
வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். 
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதியவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 30 மார்ச், 2026

நினைவஞ்சலி முதலாம் ஆண்டு அமரர் செல்வராஜா பூமணி 30.03-2026

மண்ணில் 12.06-1934-விண்ணில் 30-03-2025.
முதலாம்  ஆண்டு திதி 28-09-2024  இன்று 
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த அமரர் செல்வராஜா பூமணி அவர்களின்  முதலாம்  ஆண்டு திதி .30-03-2026..திங்கள்ட்கிழமை இன்று .நவற்கிரியில்  அன்னாரின்  இல்லத்தில் ஆத்மசாந்திபிராத்தனையும்  மதிய போசனமும்  நடைபெறும் 
அன்னார் காலம்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற ராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மக்களும் காலம்சென்ற தம்பு மாணிக்கம்
தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா) நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
திரு பாலசுப்பிரமணியம் (பாலா.கனடா ) காலம்சென்ற சரஸ்வதி (சரஸ்) மற்றும்
திரு பாலேஸ்வரன் (பாலா.கனடா )திரு பாலராஜா (அப்பன்.கனடா )பாக்யராஜா (ராஜா.கனடா ) ஆகியோரின்
பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், 
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/


ஞாயிறு, 29 மார்ச், 2026

கொடிகாமத்தில் உயிரிழந்த பொலிஸ்சாரின் கொலையாளி கைதாகவில்லை

யாழ்   கொடிகாமத்தில் நேற்றையதினம் சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவுஇயந்திரம் மோதி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான கெட்டியாராட்சிக்கே அல்பிரட் இவர் தான்.
1969ஆம் ஆண்டு பிறந்த இவர் நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதனிடையே கொலையாளி கைதாகவில்லையென தகவல்கள்  தெரிவிக்கிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 27 மார்ச், 2026

தரிசனம் செய்ய சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் திடீர் மரணம்

 

நாட்டில் சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர்.27-03-2026. இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக 
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை – நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர்.
அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு 
செல்லப்பட்டார
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அ
திகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 மார்ச், 2026

ஏவுகணை சிதைவு விழுந்ததில் அபுதாபியில் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் ஏவுகணை சிதைவு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்த பின்னர், சிதறி விழுந்த பாகங்களால்
 ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 25 மார்ச், 2026

மர்மமான முறையில் காணாமல் போன தம்பதியினர் சடலங்களாகக் கண்டெடுப்பு.

நாட்டில்  கொரோனா காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட தம்பதியினர், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வாய்க்காலில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் 
வெளியாகியுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொட்டுவ வத்தை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று(24) இவர்களின் உடல் எச்சங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமண்டா சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இந்திகா லோகுஹெட்டி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.
 அதில், தனிப்பட்ட தகராறு காரணமாக தம்பதியினர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தம்பதி மற்றும் அவர்களது உதவியாளர் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html