siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

நாட்டில் கொக்காவில் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்து

நாட்டில் .முல்லைத்தீவு கொக்காவில் பகுதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கண்டி யாழ்பாண வீதியில் முல்லைத்தீவு கொக்காவில் பகுதியூடாக இளநீர் ஏற்றிக்கொண்டு பயணித்த பொலிரோ ரக வாகனத்துடன் டிப்பர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் டிப்பரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதனுள் சாரதி வெளியேறமுடியாது சிக்கிக்கொண்டார். 
ஒருமணித்தியால போராட்டத்தின் மத்தியில் சாரதி மீட்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 8 ஆகஸ்ட், 2026

நாட்டில் புளியங்குளம் பகுதியில் வாகன விபத்து: இளைஞன் உயிரிழப்பு

நாட்டில் வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூலர் ரக வாகனம் டிப்பர் வாகனத்துடன் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. 
விபத்தில் கூலர் வாகனத்தில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்துள்ளார். 
மேலும், விபத்து தொடர்பாக புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
நாட்டில் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

நாட்டில் .புளத்சிங்களவில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: பதின் நான்கு பேர் காயம்

நாட்டில் களுத்துறை, புளத்சிங்கள – அமரேகெதர வளைவுப் பகுதியில் சிற்றூந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து
 பள்ளத்தில் கவிழ்ந்து
 விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

நடந்த வாகன விபத்தில் கனடாவில் இரண்டு இளைஞர்கள் மரணம்

 நடந்த வாகன விபத்தில்.கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள லவால் பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பதிவு இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்றைக் கண்டு அதை நிறுத்துமாறு சமிக்ஞை 
கொடுத்துள்ளனர்.
பொலிஸார் வாகனத்தை நிறுத்த முயன்றதும், அது வேகத்தை அதிகரித்துத் தப்பிச் சென்றது. எனினும் பொலிஸார் வாகனத்தைத் துரத்திச் செல்லவில்லை" என லவால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் லோரண்ட் ஆர்செனோ தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கார், சில நிமிடங்களில் லோரண்டைட்ஸ் புலேவார்ட்டில் அமைந்துள்ள 'அட்லாண்டிஸ் ஜிம்' கட்டடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
வாகனத்தைச் செலுத்திய ஆண் ஓட்டுநரும், அதில் பயணித்த 19 வயது இளம் பெண்ணும் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தனர்.
மேலும், வாகனத்திலிருந்த மற்றொரு 19 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வாகனத்தில் உரிமத் தகடு இல்லை என்பதும், காரின் அதிகப்படியான வேகமே விபத்துக்கு முக்கியக் காரணம் என்பதும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 5 ஆகஸ்ட், 2026

நாட்டில் கம்பஹா ரயில் நிலையம் அருகே சடலம் ஒன்று கண்டெடுப்பு - ரயில் சேவைகள் தாமதம்

நாட்டில்.கம்பஹா ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 இந்தச் சம்பவம் குறித்து பொலிஸாருக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தற்போது இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அத்துறை கூறியுள்ளது.
 சடலம் அகற்றப்பட்டு, தேவையான விசாரணைகள் நிறைவடையும் வரை, அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் தாமதத்துடன் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கனடாவில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் மரணம்

கனடாவின் ஸ்டோனி டிரெயில் சாலையில் தவறான திசையில் சென்ற வாகனம் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய பாதையில், சூட்'இனா பார்க்வே அருகே நிகழ்ந்துள்ளது. அப்போது, ​​வடக்கு நோக்கிய பாதையில் தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த 30 வயது நபர் ஓட்டி வந்த 2011 மெர்சிடிஸ் பென்ஸ் C350, எதிரே வந்த 2016 சுபாரு இம்ப்ரேசா மீது மோதியதாக 
காவல்துறை நம்புகிறது.
"சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும், மற்றொரு கார் கடுமையாக சேதமடைந்திருந்ததையும் கண்டறிந்தனர்" என்று காவல்துறை அதிகாரி 
தெரிவித்துள்ளது.
ஒரு அறிக்கையில், கால்கரி தீயணைப்புத் துறை, சம்பவ இடத்திற்கு வந்தவுடன், குழுவினர் "உடனடியாக தீவிர தீயணைப்புப் பணியைத் தொடங்கினர்.
மெர்சிடிஸ் காரில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட மூவரும், சுபாரு காரில் தனியாக இருந்த 43 வயது ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
52 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த செவி ஈக்வினாக்ஸ் காரும் மெர்சிடிஸ் மீது மோதியதாக காவல்துறை தெரிவித்தது. அவரும் மூன்று இளைஞர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 3 ஆகஸ்ட், 2026

நாடில் கேகாலையில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து:பதின் எட்டு பேர் காயம்

நாடில் கேகாலை - கரடுப்பன சந்தியில் இன்று 03 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 18 பேர் காயமடைந்து கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html