siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 04.09.26

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 -நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026-அன்று 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026வெள்ளிக்கிழமை  அன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் 
திருமதி சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்
 சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா செல்வி பண்ணீர்தாஸ் ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) அமரர் சண்முகம் மற்றும்திருமதி  நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞானன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர்  )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (கனடா)  சின்னவட்டன் (இலங்கை) கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (குட்டி ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலங்கள் பல கடந்தாலும்,கண்ணை விட்டு மறைந்தாலும்,இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் 
நீங்காத நினைவுகள் அவை!
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!
– நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
https://navakkiri.blogspot.com/2023/09/1-070923.html




 

வியாழன், 3 செப்டம்பர், 2026

காட்டு யானை தாக்கியதில் கதிர்காம வீதியில் பேருந்து கவிழ்ந்து பலர் காயம்

நாட்டில் யாலா தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள புட்டேலாலா அருகே, சிலாவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை காட்டு யானை ஒன்று நெருங்கியதால், அந்தப் பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
உணவு தேடி யானை ஒன்று பேருந்தின் ஓட்டுநர் பக்கத்திற்கு வந்தபோது, ​​வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக காவல்துறை 
தெரிவித்துள்ளது.
மொத்தம் 25 பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாயினர். அவர்களில் பதின்மூன்று பேர் கதிர்காம மருத்துவமனையிலும், மேலும் பன்னிரண்டு பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



புதன், 2 செப்டம்பர், 2026

யாழ் இந்துக் கல்லுாரியின் பிரபல ஆசிரியர் மரணம்

யாழ் இந்துக் கல்லூரியின் பௌதீகவியல் (Physics) ஆசிரியர் அவர்களின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 

https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_488.html




 

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து) உடுவில் பிரதேச செயலகத்தால் தவிர்த்திருக்கக் கூடிய மரணம்

துயர் பகிர்வு--தோற்றம்: 08.12.1989-மறைவு: 30.08.2026
திருமதி நிஷாந்தன் சிந்துபிரியா (சிந்து)(அபிவிருத்தி உத்தியோகத்தர் – உடுவில் பிரதேச செயலகம்)இல.83, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நிஷாந்தன் சிந்துபிரியா அவர்கள் கடந்த 30.08.2026 அன்று அகால மரணமடைந்தார்.
தவிர்த்திருக்கக் கூடிய மரணம்>>
உடுவில் பிரதேச செயலக உயர் அதிகாரிகளின் அசமந்த போக்கே மின்சாரம் பாய்ந்து வெளிக்கள உத்தியோகத்தர் நிஷாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தற்போது விசாரணையில் 
தெரிய வந்துள்ளது.
உடுவில் பிரதேச செயலக மூலிகை தோட்டப் பகுதியில் மின்சாரக் கசிவு ஏற்கனவே இருப்பது தொடர்பில் 1 வருடத்துக்கு முன் சில உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக
 தெரிவிக்கப்படுகிறது.  
உயர் அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளாமல்  அதனை சீர் செய்யாத காரணத்தினால்  வெளிக்கள அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துபிரியா உயிரிழக்கக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
 உற்பத்தித்திறன் போட்டிக்கு உயரதிகாரிகள் இன்று(31) பிரதேச செயலகத்துக்கு வருகை தருகின்ற  நிலையில் நேற்றைய தினம்(30)  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குறித்த விடயம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சித்த மருத்துவ துறைக்கு பொறுப்பான குறித்த உத்தியோகத்தர் மூலிகை தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பொழுது அந்த வாயிலாக சென்ற மின்சார வயர் மற்றவர்கள் மீது தாக்கப்படும் என்பதனால் அதனை அவர் அகற்ற முற்பட்ட போது மின்சாரம் அவர் மீது பாய்ந்து உயிரிழக்க காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
 இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல் 
வழங்கப்பட்டுள்ளது.
அன்னாரின்  நல்லடக்கம் சிறுப்பிட்டி இந்துமனத்தில் நல் அடக்கம் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஊழியர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html


திங்கள், 31 ஆகஸ்ட், 2026

யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி 
உயிரிழந்துள்ளார் 
உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தாயாரான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37) என்பவரே 
உயிரிழந்துள்ளார்.
அரச அலுவலகங்களுக்கிடையில் நடைபெறும் உற்பத்தித் திறன் போட்டிக்காக மதிப்பீடு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறவிருந்தமையால் , நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  அலுவலகத்தை அழகுபடுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளில் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர். 
அதன் போது குறித்த உத்தியோகஸ்தர் மூலிகை தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த வேளை , தோட்டத்திற்குள் காணப்பட்ட மின்சார வயர் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக , மின்சார தாக்குதலுக்கு
 இலக்கானார். 
அவரை சக உத்தியோகஸ்தர்கள் மீட்டு  , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர் 
சம்பவம் தொடர்பில் , சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்  என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026

துப்பாக்கிச் சூடு சுவிஸ் ஆராவ் நகரில் ஒருவர் உயிரிப்பு: ஐவர் காயம்

சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடைபெற்ற ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாக  காவல்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர்  படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறை மேலும்
 தெரிவித்தது.
அடையாளம் தெரியாத குற்றவாளிகளைத் தேடும் வேட்டை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்திற்கான நோக்கம் மற்றும் சரியான சூழ்நிலைகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
ஆர்காவ் மாகாண காவல்துறையின் பெரும் படையினர் குவிக்கப்பட்டு, சம்பவம் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆராவ் பகுதிக்கு அப்பாலும் காவல்துறையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒரு பெரிய நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியிலிருந்து மக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் கண்டோனல் காவல்துறை முன்னதாகத் தெரிவித்திருந்தது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் அல்லது படங்களைப் பகிருமாறு அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் 
விடுத்துள்ளனர்.
சுவிஸ் செய்தித்தாளான பிளிக்கின்படி , வருடாந்திர ஆராவர் ரேவ் நிகழ்ச்சியின் போது, ​​உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:00 மணிக்கு (0100 GMT) முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
டெக்னோ இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த ஷாச்சென் பந்தய மைதானத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் வனேசா ரம்போல்ட் கூறியதாக அந்தச் செய்தித்தாள் மேற்கோள் காட்டியுள்ளது
ஆராவ் சுமார் 22,300 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் சூரிச்சிலிருந்து மேற்கே சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 29 ஆகஸ்ட், 2026

வெள்ளப்பெருக்கில் நேபாள-திபெத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறுநூறு ஐத் தாண்டியுள்ளது

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள் நான்காவது
 நாளாகத் தொடர்ந்தன.
நேபாளத்தின் பேரிடர் முகமையின்படி , நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 626 ஆக உள்ளது. மேலும், வெளிநாட்டினர் உட்பட 2,426 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்
எல்லையின் மறுபுறத்தில் உள்ள திபெத்தில், சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா, ஏழு பேர் உயிரிழந்ததை உறுதிசெய்துள்ளதுடன், 554 பேர் காணாமல் போனதாகவும்
 தெரிவித்துள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட ஒரு பனியாறு சரிவின் காரணமாக, பாறை, பனி, சேறு மற்றும் சிதைவுகள் கீழே உள்ள இமயமலை ஆற்றுப் படுகைகள் வழியாகப் பெருக்கெடுத்து ஓடின.
சீன எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து, முழு நகரங்களையும் நாசமாக்கியதுடன், நீர்மின் நிலையங்களையும் சேதப்படுத்தியது. என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html