siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 மே, 2026

ஏற்பட்ட தீ விபத்தில் கனடாவின் கேடினோவில் இருவர் மரணம்

கனடா கியூபெக் நகரின் கேடினோ நகரின் மையப்பகுதியில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர். 
ஒரு குடியிருப்பில் சிறிய தீ விபத்து ஏற்பட்டிருப்பதையும், மயக்க நிலையில் இருந்த இருவரைக் கண்டதாகவும் காவல்துறை
 விவரித்தது.
சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
34 வயதான ஆண் ஒருவர் தனது 30 வயதான துணைவியைக் கொலை செய்துவிட்டு, பின்னர் அவர்களது குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மரணங்கள் "கொலை-தற்கொலையுடன் ஒத்துப்போகின்றன" என்று காவல்துறை பிரெஞ்சு மொழி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மட்டக்களப்பில் உரிமை கோரப்படாத சடலங்களால் பரபரப்பு

நாட்டில் .மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் .07-05-இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத சடலங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.
மட்டக்களப்பு சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில், இரண்டு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை அப்பகுதி மக்கள் அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் பிரிவு அதிகாரிகளினால் சடலங்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது, நீதிமன்ற அனுமதியைப் பெற்று சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர்; முன்னெடுத்து வருகின்றனர். 
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் காவல்துறையினர்; மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 6 மே, 2026

யாழ் புங்குடுதீவில் சொகுசு பேருந்து மோதி இளைஞன் பலி

யாழ் புங்குடுதீவு, வாணர் பாலத்திற்கு அருகே இன்று இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 
இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு வாணர் பாலம் பகுதி, மடத்துவெளி கடற்படை முகாமிற்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
புங்குடுதீவில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர் மீது, எதிர் திசையில் வந்த 'ஜெட்விங்' ஹோட்டல் நிறுவனத்திற்குச் சொந்தமான சொகுசுப் பேருந்து பலமாக
 மோதியுள்ளது.
குறித்த பேருந்து மிக அதிவேகமாகப் பயணித்ததே இந்த உயிரிழப்பிற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் துரதிர்ஷ்டவசமாகச் சம்பவ இடத்திலேயே 
உயிரிழந்தார்.
தற்போது பொலிஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், பேருந்து ஓட்டுநரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 5 மே, 2026

நள்ளிரவில் யாழில் அதிவேகத்தால் மதிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், அதிவேகம் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதியுள்ளது.
விபத்தில் சிக்கிய 22 மற்றும் 24 வயதுடைய கரவெட்டி வடக்கைச் சேர்ந்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. 
கோப்பாய் பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் கரவெட்டியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
நண்பர்களின் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 4 மே, 2026

டெங்கு தாக்கத்தினால் இலங்கையில் பன்னிரண்டு மரணங்கள் பதிவு

இலங்கையில் .இந்த ஆண்டு இதுவரை 12 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட, டெங்கு தாக்கத்தினால்  12 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு 
அறிவித்துள்ளது. 
 சமூக மருத்துவர் டாக்டர் பிரஷில சமரவீர இன்று இந்த தகவலை அறிவித்துள்ளார். 
தொடர்ந்து தெரிவித்த அவர்,  கொழும்பு மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் இருந்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகத் 
தெரிவித்தார்.
 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 25,846 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் 
குறிப்பிட்டார்.
 இடைவிட்டு பெய்யும் மழையும், கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகளும் டெங்கு
 பரவல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன 
என்றும், அவர் மேலும் கூறினார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது..

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 3 மே, 2026

நாட்டில் .காலி சிறைச்சாலையில் தப்பியோடி முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச்சூடு

நாட்டில் காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று.03-05-026. இன்று பதிவாகியுள்ளது. 
 போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டபோது பொலிஸ் அதிகாரிகளால் மேற்படி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதில் கைதி ஒருவரின் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 2 மே, 2026

நாட்டில் உயிரிழந்தவரின் கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள்

நாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச கால் மற்றும் கையில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் இது தவறான 
முடிவெடுத்தமையா அல்லது கொலையா என்பது குறித்து காவல்துறை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் 
தெரிவித்திருந்தனர்.
அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த மரணத்திற்கான காரணம் தவறான முடிவெடுத்தமையே என மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவ நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச கடந்த 30ஆம் திகதி தனது வீட்டுத்தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில்
 மீட்கப்பட்டார்.
அவரது  சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் குறித்த மரணப் பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று 
நியமிக்கப்பட்டது.
அதன்படி, தவறான முடிவெடுத்து அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களால் குறித்த மரணம் ஏற்பட்டது  என்று விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுதிப்படுத்தியுள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 1 மே, 2026

நாட்டில் களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தில் தீ விபத்து

நாட்டில் களுத்துறை உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் இரண்டாம் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 
கணினித் தரவு அமைப்புப் பிரிவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
தீ விபத்துக்கான காரணம் அல்லது அதனால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
 களுத்துறை நகர சபை தீயணைப்புத் துறை தற்போது 
தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிற நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. . என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm