siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 8 ஜூலை, 2026

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஏழு பேருக்கு மரண தண்டனை

நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 20 வருடங்களாக மிக நீண்ட மற்றும் விரிவான விசாரணைகள் 
நடைபெற்று வந்தன. 
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு, இறுதியாக இன்று (08) குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
சட்டவிரோதமாகக் கூடுதல், திட்டமிட்டுக் கொலை செய்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 7 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனித படுகொலையானது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2006ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் இழைக்கப்பட்ட இந்த பாரிய மனித படுகொலைச் சம்பவம் அக்காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று நீதி கிடைத்துள்ளதாக சட்டத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை
 விதிக்கப்பட்டுள்ள 
போதிலும், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணிகள் அடுத்த 14 நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ரீதியிலான 
வாய்ப்புகள் உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்திய காரணத்தை வெளியிட்ட காவல்துறை

 

நாட்டில் .சிறைச்சாலைகளில் இரண்டு பிரதான கதவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக இருப்பது இரும்புக் கதவு, அடுத்ததாக இருப்பது மரப்பலகையிலான கதவு ஆகும். 
இந்த கைதிகள் இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரப்பலகை கதவை நோக்கி வந்துள்ளனர்.
இந்த இரும்பு கதவுக்கும் மரப்பலகை கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் பார்சல் ஸ்கேன் இயந்திரம் (Parcel scan machine), பாடி ஸ்கேன் இயந்திரம் (Body scan machine) மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, இந்த கைதிகள் இரும்பு கதவையும் உடைத்துக் கொண்டு, இந்த மரக் கதவையும் கடந்து வெளியே வந்திருந்தால், அங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளைப் பற்றி என்னால் இந்த சந்தர்ப்பத்தில் 
மதிப்பிட முடியாது. 
அவர்கள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், அனைவரும் தப்பியிருப்பார்கள், அனைவரும் சமூகத்திற்குள் வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை பற்றி என்னால்
 கூற முடியாது என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 6 ஜூலை, 2026

இலங்கையில் தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்


நாட்டில் பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் 06-07-2029இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
இந்த விழிப்புணர்வு வேலை திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆரம்பித்து வைக்கவுள்ளார். 
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 5 ஜூலை, 2026

மரண அறிவித்தல் அமரர் சின்னையா இராசையா

 

துயர் பகிர்வு-தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் சின்னையா இராசையா  ( ராசு )அவர்கள் 04-07-2026...அன்று காலமானார் அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  )திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  07-07-2026.. செவ்வாய்க்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
07-07-2026.. செவ்வாய்க்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html



சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் பெற்றோரின் கவனத்திற்கு குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

நாட்டில் குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் 
டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். 
அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு 
வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். 
வழக்கமாக குணமடைய ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், சில காலங்கள் கழித்தும்கூட பசி திரும்புதல், சுறுசுறுப்பாகவும் 
மகிழ்ச்சியாகவும் மாறுதல் போன்ற முன்னேற்றத்தின்
 அறிகுறிகள்
 தென்படாமல் போகலாம் எனவும் அவர எச்சரிக்கை விடுத்துள்ளார்த. 
அது ஹீமோஃபேகோசைடிக் லிம்ஃபோஹிஸ்டியோசிஸ் (HLH) எனப்படும் அரிதான நோயெதிர்ப்பு தொடர்பான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தொடர்ந்து அகற்றுமாறும், குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொசுக்கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து

நாட்டில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில்-03-07-2026- இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற கன்ரர் வாகன விபத்தில் நால்வர் 
காயமடைந்துள்ளனர்.
கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நேரிட்ட சமயம் வாகனத்தில்
 ஐவர் பயணித்த 
நிலையில், காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் விபத்துகளால் தினமும் முப்பது பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில்  சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இலங்கையில் வருடாந்தம் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை விபத்துகளால் உயிரிழப்பதாக
 மதிப்பிடப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பொதுவாக நாட்டில் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அதைத் தவிர வேறு பல முக்கிய காரணங்களாலும் அதிகளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றன.
உயரமான இடங்களிலிருந்து கீழே வீழ்தல்.
நீரில் மூழ்குதல்.
மின்சாரம் தாக்குதல்.
பாம்புக் கடிக்குள்ளாகுதல்.
இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை ஆகும். 
எனினும், முறையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்மையால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிர்கள் நாளாந்தம் இழக்கப்படுவது தேசிய அளவில் ஒரு பெரும் துயரம் என மருத்துவ நிபுணர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகள் என அனைத்து இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html