siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூன், 2026

குழந்தை கருவில் இழந்த துயரத்திலும் களமிறங்கிய காக்போ: கோலுக்குப் பின் கண்ணீர்

காக்போ: தனது குழந்தை 3 நாட்களுக்கு முன்னர் கருவிலே உயிரிழந்தநிலையில், நெதர்லாந்து வீரர் கோல் அடித்ததும் மைதானத்திலே கதறி அழுதுள்ளார். 2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் மொரோக்கோவிற்கு இடையேயான போட்டியில், முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. 
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ(cody gakpo) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 
ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தினை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. 
நெதர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த 
போட்டியில், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 
கோல் அடித்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த சனிக்கிழமை கோடி காக்போவின் துணைவி நோவா வான் டெர் பிஜ்(Noa van der Bij), தங்களது குழந்தை கருவிலே
 உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார். இந்த சோகமான சூழலில் கோடி காக்போ அவருடயை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அணி நிர்வாகம் விடுப்பு வழங்கியது. ஆனால், இது தனது தேசிய அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் கோடி காக்போ ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
கோடி காக்போ கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், வீரர்கள் சுற்றி நின்று அவருக்கு ஆதரவு வழங்கினர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து பேசிய நெதர்லாந்து 
கோமன், "எங்களால் இயன்றவரை அவருக்கு ஆதரவளித்து வருகிறோம். 
நிச்சயமாக, முதல் சில நாட்களுக்கு அவர் தனது 
குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடன் இருப்பதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் 'நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்' என்று அவர் ஒரு கணம் கூட கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் கென்டக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நால்வர் மரணம்

.நாட்டில் கென்டக்கி முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது நான்கு பேர் 
இறந்துள்ளனர்.
இந்நிலையில், அவசரகால குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு சேதத்தை மதிப்பிடுவதற்கும் கூட்டாட்சி பேரிடர் உதவியைப் பெறுவதற்கும் பணிபுரிந்த் 
வருகின்றனர்.
"நாங்கள் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு கட்டத்தில் இருக்கும்போது, ​​கூட்டாட்சி உதவிக்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக சேதத்தை ஆய்வு செய்ய நாங்கள் விரைவாகச் செயல்படுகிறோம்" என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கென்டக்கி கவர்னர் அவசரகால நிலையை அறிவித்தார் மற்றும் இருட்டிற்குப் பிறகு சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்-23-03-1959---விண்ணில்-14-07- -2022 
திதி -28-06-2026.இன்று 
முல்லைத்தீவு துணுக்காயைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் புத்தூர் மற்றும் நவற்கிரியை
 வாழ்விடமாகவும் தற்போது சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen)  மாநிலத்தில் வசித்துவந்த அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )அவர்களின்  நான்காம் ஆண்டு ..நினைவஞ்சலி  திதி -28-06-2026-இன்று  அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னார் திரு குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ராசா றயித்தா பிரபா ஆகியோரின் அன்புத்தாயாரும் 
 காலஞ்சென்ற வீரகத்தி  மற்றும் நாகம்மா தம்பதியினரின் 
பாசமிகு மருமகளும் ஆவர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_28.html

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி 
சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen) 

சனி, 27 ஜூன், 2026

திரைக்கதை மன்னன்' கே.பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்



பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் .27-06-2026.இன்று  காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர்.
இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும். இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால்  கொண்டாடப்படுகிறது. 
அவருக்கு திரைத்துறையினர் மற்றும் இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






வெப்ப அலை காரணமாக பிரான்சில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

வெப்ப அலை காரணமாக பிரான்சில்  உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள்
 தெரிவித்தனர். 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 26 ஜூன், 2026

அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில் 21-01-1948--விண்ணில் -08-07-2025- 
திதி -27-06-2026.இன்று 
 யாழ் ஓட்டுமடத்தை  பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வசித்துவரும் தற்போது ஓட்டுமடத்தை   வசித்து வந்த   
( 08-07-2025-அன்று சிவபதமடைந்த) அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 
திதி -27-06-2026.அன்று ஓட்டுமடத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும் 
அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியரும் 
திரு சீலன் (டென்மார்)திருமதி சொரூபி (லண்டன் )திரு பாலமுரளி (நோர்வே ) திருமதி சுதா (டென்மார்)
ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவார் 
27-06-2026-,சனிக்கிழமை  கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி
 -ஓட்டுமடம் 
யாழ்பாணம்.


வியாழன், 25 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-24-06-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)அவர்கள் நவற்கிரியில் காலமானார்  அன்னார்  காலம்சென்ற
வல்லிபுரம்  தம்பதியினரின் பாசமிகு மககளும்  காலம்சென்ற அன்னலக்சுமி  காலம்சென்ற பரராஜசிங்கம்  காலம்சென்ற திருநாவுக்கரசு மற்றும் விசாலாட் சி   (தங்கராணி)  தங்கவேலு 
ஆகியோரின் அன்பு  சகோதரியும் விஜயலட்சுமி(விஜயாஇலங்கை.) பாஸ்கரன்  இலங்கை)  விஜயராணி(ராணி (பிரான்ஸ்  ) 
விஸ்ணுகுமார் (பிரான்ஸ் )  விஸ்னராஜா( இலங்கை) ஆகியோரின்அன்புத்தாயாரும்  
 ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  26-06-2026- வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 26-06-2026.. வெள்ளிக்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு  
  மகள் விஜயராணி(ராணி)
+33 7 69 25 94 22
+33664324453 பேரன் . சுமன் 

17 boulevard Camille saint sans 
77185 logne

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_25.html


புதன், 24 ஜூன், 2026

நாட்டில் .லாவோஸில் குகைக்குள் சிக்கிய நபர் பத்து நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் லாவோஸில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கியிருந்த கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து 
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் இரண்டாவது உயிர் பிழைத்த நபர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில், குகையின் குறுகிய மற்றும் வெள்ளநீர் நிரம்பிய வழித்தடங்களை கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரை வெளியே 
கொண்டு வந்தனர்.
குகைக்குள் சிக்கியிருந்த பலர் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காணாமல் போன மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நெகிழ்ச்சியான மீட்புக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html