siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 20 மார்ச், 2026

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.15ம் ஆண்டு நினைவஞ்சலி 21.03.2026


மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி./(திதி)  21-03-2026.சனிக்கிழமை அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 

தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
பதின் ஐந்து   ஆண்டுகளாய்  
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக

தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம்.கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்

இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் ,பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:-குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2023/03/12-24032023.html




வியாழன், 19 மார்ச், 2026

யாழ். பல்கலைக்கழக மாணவி நுவரெலியா விற்கு சுற்றுலா வந்தவர் தவறி விழுந்து வைத்தியசாலையில்

யாழ் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர் சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், 
, மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தில் இருந்து நுவரெலியா மாவடத்தில் சுற்றுலா வந்திருந்த மாணவர்களில், மாணவியொருவர்
 சின்ன உலக முடிவில் (பட்டிப்பொலவில்) கீழே தவறி விழுந்து விட்டதாகவும், அவர், மீட்கப்பட்டு, நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




புதன், 18 மார்ச், 2026

நாட்டில் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி,40 பேர் காயம்

நாட்டில் அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 17 மார்ச், 2026

நாட்டில் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் பவுசர் மோதி இருவர் பலி

யாழில்  இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 
யாழ் கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பிரட்லீ (வயது 24) மற்றும் அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 16 மார்ச், 2026

நாட்டில் ஏழாவது ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞன் மரணம்

நாட்டில் கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரெட்டிக்கா வீதியில் நிர்மாணிக்கப்படும் வரும் கட்டிடத்தில் இருந்த விழுந்து 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் உடவலவே, ஒலிமட பகுதியைச் சேர்ந்த புவனேஷா ராசா ஸ்ரீகாந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நிர்மாணிப்பில் இருந்த 10 மாடி கட்டிடத்தின் 7வது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, ​​லிப்டில் இருந்து விழுந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது   என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 14 மார்ச், 2026

மரண அறிவித்தல் திருமதி சர்வானந்தம் பிறேமா 13.03.26

துயர் பகிர்வு-தோற்றம் -29-.june -1973-மறைவு-13-03-2026.
யாழ் கொக்குவில் மேற்கை   பிறப்பிடமாகவும்  கனடாவை  வதிவிடமாகவும்  திருமதி சர்வானந்தம் பிறேமா    அவர்கள் .13-03-2026..வெள்ளி க்கிழமை  அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம்சென்ற பாலசந்திரன்
மற்றும் சந்திரகுமாரி ஆகியோரின் மகளும் காலம்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியலட்சுமியின் 
 அன்பு  மருமகளும்  சர்வானந்தம் (செல்வா )அவர்களின் ஆருயிர் மனைவியும் ஆவர் அன்னாரின்
  நல்லடக்கம் கனடாவில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.

எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html

அன்னாரின்  நல்லடக்க விபரம் 









 

வெள்ளி, 13 மார்ச், 2026

லிஸ்டீரியோசிஸ் தொற்று காரணமாக பிரான்சில் இருவர் மரணம் - 12 பேர் பாதிப்பு

பிரான்சில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2026 ஜனவரி வரை லிஸ்டீரியோசிஸ் நோயின் 12 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. 
இந்த தொற்றுகள் சமைத்த இறைச்சி உணவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அதிகாரிகள்
 தெரிவித்துள்ளனர். 
இந்த 12 பேரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளின் சராசரி வயது 81 ஆகும். அவர்களில் 7 பெண்களும் 5 ஆண்களும் உள்ளனர். 12 பேரில் 11 பேர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பலருக்கு ஏற்கனவே மற்ற உடல்நலப் பிரச்சினைகளும் இருந்தன.
இந்த நோயுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் உணவுகள் caillettes, pâtés en croûte மற்றும் பிற சமைத்த இறைச்சி உணவுகள். 
இவை “Drôme salaisons” மற்றும் “Jules Courtial” என்ற பெயர்களில் விற்பனை செய்யப்பட்டன. லிஸ்டீரியா பக்டீரியா இருப்பதால் இப்பொருட்கள் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html