siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 24 ஏப்ரல், 2026

இரண்டு பேருந்துகள் பென்டகன் அருகே மோதி விபத்து - 23 பேர் காயம்

இரண்டு பேருந்துகள்  .பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் 
காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் 
கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் 
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

நாட்டில் பெண் உயிரிழப்பு, முச்சக்கரவண்டிச் சாரதிக்குப் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளம் திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு எதிர்ப் பக்கமாக அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்
 கடவையில் இன்று 

வியாழக்கிழமை (23-04-2026) முற்பகல்- 10.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதுண்டதில் அதில் பயணித்த பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார். 
முச்சக்கர வண்டியின் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

                                                                                                                                                                                                                                                                                                                                

புதன், 22 ஏப்ரல், 2026

யாழ் .உரும்பிராயில் கோர விபத்து- தந்தையும் மகனும் பலி

யாழ் உரும்பிராய் பகுதியில்.22-04-2026. இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது
. விபத்தில், மோட்டார் 
சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் வசந்தகுமார்

துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை  
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம்  வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள் 
  லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  தம்பதியினரின் அன்பு மகனும் 
 மலர்வதான ( வதான ) சுகந்தி   ஆகியோரின்  அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும் 
 சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
பற்றிய விபரம் இந்த இணையத்தில் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html

திங்கள், 20 ஏப்ரல், 2026

நாட்டில் சிறுப்பிட்டி பகுதியில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த பெண்

யாழில், சிறுப்பிட்டி யில் தேநீரை குடித்துவிட்டு தான் செய்த சிற்றுண்டியை அவரது கணவர் சாப்பிடவில்லை என்ற காரணத்தாலும், கணவர் தாக்கியதாலும் மனைவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.அவரது கணவர் சனிக்கிழமை (18) வீட்டுக்கு வந்துள்ளார். இதன்போது அவரது மனைவி தேநீரும் ரோல்ஸூம் கொடுத்துள்ளார்.
இதன்போது தேநீரை குடித்துவிட்டு ரோல்ஸினை சாப்பிட மறுத்துள்ளார். இந்நிலையில் அந்த ரோல்ஸினை சாப்பிடுமாறு கணவரிடம் வற்புறுத்தியுள்ளார்.
இதன்போது கணவர் அவரை தாக்கிவிட்டு வெளியே சென்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் ஏற்கனவே தனது உடலில் பெற்றோலினை ஊற்றிவிட்டு இருந்துள்ளார். கணவன் வந்ததும் தனக்கு தானே தீமூட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்நிலையில் அவரை மீட்டு கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று (19) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் நீராடிய போது சுழியில் அகப்பட்டு மரணம்

நாட்டில் பெந்தோட்டை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது

. இவர் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் என்பதும், ஏனைய மாணவர்களுடன் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

மதியாமடு பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி

நாட்டில் வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற கோர விபத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 நேற்றைய தினம் குறித்த நபர் தமது அத்தியாவசியத் தேவை ஒன்றின் நிமித்தம் உழவியந்திரத்தைச் செலுத்திச் சென்றுள்ளார். இதன்போது, எதிர்பாராத விதமாக உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து திடீரெனத் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது உழவு இயந்திரத்தைச் செலுத்திச் சென்ற சாரதி பலத்த
 காயங்களுக்கு உள்ளாகி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 18 ஏப்ரல், 2026

நாட்டில் கடந்த 12 நாட்களில் நீரில் மூழ்கி 26 பேர் பலி; மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விடுமுறை காலப்பகுதியை அடுத்து, நீர்நிலைகளில் நீராடச் சென்றவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் சடுதியாக 
அதிகரித்துள்ளன.
கடந்த 12ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 26 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினமும் (17) இரு வேறு இடங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. மிஹிந்தலை - மரதன்குளம் குளத்தில் நீராடச் சென்ற 55 வயதுடைய நபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக
 உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் 11 வயதுடைய மகனும், 12 வயதுடைய மற்றுமொரு சிறுவனும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த போது திடீரென நீரில் 
மூழ்கியுள்ளனர்.
அவர்களைக் காப்பாற்றுவதற்காக நீரில் குதித்த தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும், இரு சிறுவர்களும் எவ்வித பாதிப்புமின்றி பொதுமக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெஹியோவிட்ட - ஹிங்குரலகந்த பகுதியில் சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற 17 வயதுடைய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் தெஹியோவிட்ட பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது குறித்த இளைஞர் திடீரென நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ச்சியாக பதிவாகும் இவ்வாறான மரணங்களை அடுத்து, நீர்நிலைகளில் நீராடும் போது பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html