siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

நாட்டில் அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

நாட்டில் அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக 
தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள்
 இருந்துள்ளன.
அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை
 கவனமாக
 சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

அடுக்குமாடிக் கட்டிடத்த்தில் சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் இருவர் மரணம்

 

சுவிட்சர்லாந்தில் தீயில் எரிந்துபோன அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. 
கிழக்கு சுவிட்சர்லாந்தின் துசிஸ் பகுதியில், உணவகம் மற்றும் குடியிருப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
இந்நிலையில், "கட்டிடத்திற்குள் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன" என்று கிராபுண்டன் மாகாண காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
மேலும், "இறந்தவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் நிலுவையில் உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது
தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து பதினான்கு பேர் தப்பித்ததாகவும் அவர்களில் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 22 ஆகஸ்ட், 2026

இந்து வியாபாரி ஒருவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை

இந்து வியாபாரி ஒருவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில்,  ராகேஷ் குமார் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நொஷ்கி பஜாரின் காதிராபாத் ஸ்டாப் பகுதியில் உள்ள அவரது கடைக்குள் சில ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மாவட்ட மருத்துவமனைக்கு
 கொண்டு சென்றனர். 
அங்கு உயிரிழந்தவர் ராகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

மரண அறிவித்தல் ஆசிரியர் அமரர் ஞானசுந்தரம் (சுந்தரம்) ஐயா

துயர் பகிர்வு-தோற்றம் 00--மறைவு-21-08--2026..
யாழ்.புத்தூரை பிறப்பிடமாகவும்  (புத்தூர் வைரவர் கோவிலடியை) வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் ஐயா ஞானசுந்தரம் ஆசிரியர் ( யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா முன்னாள்)-மற்றும் ரியூசன் ஆசிரியர் சுந்தரம் ஐயா) அவர்கள் 21-08--2026..அன்று காலமானார் 
அன்னாரின்  நல்லடக்கம் பின்னர் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: ஐயா 
புத்தூர் வைரவர் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
மற்றும் யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா பழைய மாணவர்கள் 
ரியூசன் பழைய மாணவர்கள் 

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html


வியாழன், 20 ஆகஸ்ட், 2026

டெங்கு நோயால் பாதிப்பு இலங்கையில் 93,000ஐ கடந்தது

டெங்கு பாதிப்பு    இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோயால் 93 ஆயிரத்து 115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் டெங்கு நோயால் 71 பேர்
 உயிரிழந்துள்ளனர். 
ஆகஸ்ட் மாதத்தின் கடந்த 19 நாட்களில் 7,777 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 19 ஆகஸ்ட், 2026

நாட்டில் நிலாவெளிப் பகுதியில் தீ விபத்தில் புதுமணப்பெண் உயிரிழந்துள்ளார்

நாட்டில் திருகோணமலை, நிலாவெளிப் பகுதியில் புதுமணப்பெண் ஒருவர் குப்பைக்கு தீவைத்தபோது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நிலாவெளி இக்பால் நகரைச் சேர்ந்த 31 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த மே மாதம் 20ம் திகதி திருமணம் செய்துகொண்ட இவருக்கு, கடந்த 6ம் திகதி வீட்டு வளாகத்தில் குப்பைகளை எரியூட்டும்போது
 இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குப்பைகளை எரியூட்டுவதற்கு மண்ணெண்ணெய் கிடைக்காத காரணத்தால், வீட்டில் எஞ்சியிருந்த பெயிண்ட் தின்னர்(Paint Thinner) திரவத்தைப் பயன்படுத்தியுள்ளார். அதிலிருந்து பரவிய தீ அவரது 
ஆடைகளிலும் பிடித்துள்ளது. 
இதனால் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான அவர், முதலில் திருகோணமலை பொது வைத்தியசாலையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் பரணீதரன் 18.08.26


துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-18-08-2026.
யாழ் இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு பொன்னம்பலம் பரணீதரன்[இணுவில் அண்ணா தொழிலக செல்வராணி அக்காவின் கணவர் மற்றும் மறைந்த இளந்தாரி கோயில் பூசகரின் மருமகன்]அவர்கள் 18.08.2026 இன்று செவ்வாய்க் கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இறுதிக் கிரியைகள் ,
19.08.2026 அன்று  புதன்கிழமை காலை 11.00 மணிக்கு அன்னாரது இல்லத்தில் நடைபெற்று .
பின்னர் இணுவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம்
 செய்யப்படும்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
 https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_488.html