தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி நவற்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட அமரர் சின்னையா இராசையா ( ராசு) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி 01-08-2026-சனிக்கிழமை அன்று அன்னார் காலம்சென்ற
(தேய்வானைலொறி உரிமையாளர் ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம்
மற்றும் திரு வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்
)திரு கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின் அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்
அன்னாரின் அன்றுஅவர்களின் 31ம் நாள் வீட்டுகிருத்திய் கிரீமலை அழைப்பிதழ்
01-08-2026- ,சனிக்கிழமை அன்று காலை 07,மணியளவில் கிரீமலை தித்தக்கரையினிலும் ஆத்மா சாந்திப்பிரத்தனையும் வீட்டுக்கிருத்திய கிரியைகள்
03-08-2026-அன்று பிற்பகல்,11,மணிஅளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும்
அழைப்பிதழ்கிடைத்தவர்கள் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இங்கனம் -குடும்பத்தினர்
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இபபோது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல்
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப்பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி
இலங்கை வீட்டு முகவரி:
நவற்கிரி கொட்டுவேளி
ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.htm