siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 9 செப்டம்பர், 2026

நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு

 தற்போது   இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்


தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.


எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது
. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை
 செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 7 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26

துயர் பகிர்வு-தோற்றம் 08-05-1987---மறைவு-04-09-2026..
 யாழ் அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த அமரர் பதுமதிதி – அறியுகுலராணி (ராணி) தம்பதிகளின் இளைய மகளும் பிரஷாந்தின் அன்பு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04 -09-2026 அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
அச்சுவேலி, பத்தமேனி
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html


ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மூவரை தேடும் பணிகள்

 

நாட்டில் நீர்கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகக் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆபத்தில் சிக்கிய படகுகளையும் மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 5 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)

துயர் பகிர்வு-தோற்றம் 10-04-1969---மறைவு-05-09-2026..
யாழ் மந்துவில் வடக்கினை பிறப்பிடமாகவும் நவற்கிரி  வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்   கிஷ்ணன்  பரமேசுவரன்(கிளி அண்ணை)அவர்கள்  05.09.2026  சனிக்கிழமை அன்று நவற்கிரி  இறைவனடி சேர்ந்து விட்டார். .
 அன்னார்  கிஷ்ணன் தம்பதியினரின்அன்பு அன்பு மகனும் அன்னார்  காலம்சென்ற சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருமதி பவானி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும் ஆவர் 
 அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில்  மந்துவில் வடக்கு கொடிகாமத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
மந்துவில் வடக்கு கொடிகாமம் 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

நாட்டில் கொழுப்பிட்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

நாட்டில் கொழுப்பிட்டியாவில் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த
 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளிப்புறத்தில் இருந்த இருவரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் 
சூடு நடத்தினார். 
தனிப்பட்ட காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்ததோடு, துப்பாக்கிச் சூடு நடத்திய 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 04.09.26

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 -நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026-அன்று 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026 வெள்ளிக்கிழமை  அன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் 
திருமதி சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்
 சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்.பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  சுருதிகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) அமரர் சண்முகம் மற்றும்திருமதி  நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞானன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர்  )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (கனடா)  சின்னவட்டன் (இலங்கை) கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (குட்டி ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலங்கள் பல கடந்தாலும்,கண்ணை விட்டு மறைந்தாலும்,இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் 
நீங்காத நினைவுகள் அவை!
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!
– நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
https://navakkiri.blogspot.com/2023/09/1-070923.html




 

வியாழன், 3 செப்டம்பர், 2026

காட்டு யானை தாக்கியதில் கதிர்காம வீதியில் பேருந்து கவிழ்ந்து பலர் காயம்

நாட்டில் யாலா தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள புட்டேலாலா அருகே, சிலாவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை காட்டு யானை ஒன்று நெருங்கியதால், அந்தப் பேருந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
உணவு தேடி யானை ஒன்று பேருந்தின் ஓட்டுநர் பக்கத்திற்கு வந்தபோது, ​​வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக காவல்துறை 
தெரிவித்துள்ளது.
மொத்தம் 25 பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாயினர். அவர்களில் பதின்மூன்று பேர் கதிர்காம மருத்துவமனையிலும், மேலும் பன்னிரண்டு பேர் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். யாருக்கும் பலத்த காயங்கள் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html