siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 26 ஜூன், 2026

அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில் 21-01-1948--விண்ணில் -08-07-2025- 
திதி -27-06-2026.இன்று 
 யாழ் ஓட்டுமடத்தை  பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வசித்துவரும் தற்போது ஓட்டுமடத்தை   வசித்து வந்த   
( 08-07-2025-அன்று சிவபதமடைந்த) அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 
திதி -27-06-2026.அன்று ஓட்டுமடத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும் 
அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியரும் 
திரு சீலன் (டென்மார்)திருமதி சொரூபி (லண்டன் )திரு பாலமுரளி (நோர்வே ) திருமதி சுதா (டென்மார்)
ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவார் 
27-06-2026-,சனிக்கிழமை  கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி
 -ஓட்டுமடம் 
யாழ்பாணம்.


வியாழன், 25 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-24-06-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)அவர்கள் நவற்கிரியில் காலமானார்  அன்னார்  காலம்சென்ற
வல்லிபுரம்  தம்பதியினரின் பாசமிகு மககளும்  காலம்சென்ற அன்னலக்சுமி  காலம்சென்ற பரராஜசிங்கம்  காலம்சென்ற திருநாவுக்கரசு மற்றும் விசாலாட் சி   (தங்கராணி)  தங்கவேலு 
ஆகியோரின் அன்பு  சகோதரியும் விஜயலட்சுமி(விஜயாஇலங்கை.) பாஸ்கரன்  இலங்கை)  விஜயராணி(ராணி (பிரான்ஸ்  ) 
விஸ்ணுகுமார் (பிரான்ஸ் )  விஸ்னராஜா( இலங்கை) ஆகியோரின்அன்புத்தாயாரும்  
 ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  26-06-2026- வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 26-06-2026.. வெள்ளிக்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு  
  மகள் விஜயராணி(ராணி)
+33 7 69 25 94 22
+33664324453 பேரன் . சுமன் 

17 boulevard Camille saint sans 
77185 logne

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_25.html


புதன், 24 ஜூன், 2026

நாட்டில் .லாவோஸில் குகைக்குள் சிக்கிய நபர் பத்து நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் லாவோஸில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கியிருந்த கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து 
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் இரண்டாவது உயிர் பிழைத்த நபர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில், குகையின் குறுகிய மற்றும் வெள்ளநீர் நிரம்பிய வழித்தடங்களை கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரை வெளியே 
கொண்டு வந்தனர்.
குகைக்குள் சிக்கியிருந்த பலர் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காணாமல் போன மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நெகிழ்ச்சியான மீட்புக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 23 ஜூன், 2026

நாட்டில் கொக்குவில் மற்றும் கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இருவர் பலி

நாட்டில் கொக்குவில் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் தனித்தனியாக நடந்த சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
கொக்குவில்–பானிச்சியாடி சாலையில் முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்களின் சாரதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் 
உறுதிப்படுத்தியுள்ளனர். 
இந்த விபத்து குறித்து கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
இதேவேளை கிளிநொச்சி நகரில் உள்ள வட மாகாண விளையாட்டு வளாகத்திற்கு அருகே ஏ9 சாலையில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து பதிவாகியுள்ளது. 
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சாலையைக் கடந்து சென்ற பாதசாரி மீது மோதியதாக 
தெரிவிக்கப்படுகிறது. 
பாதசாரி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர் ஆகியோர் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பாதசாரதி உயிரிழந்துள்ளார். 
62 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்தச் சம்பவம் குறித்து கிளிநொச்சி காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 22 ஜூன், 2026

நாட்டில் மன்னார் பாலத்தில் துப்பாக்கி தவறுதலாக வெடித்தது: ராணுவ வீரர் மரணம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள ராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரொருவர், துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், துப்பாக்கி வெடிப்பால் படுகாயமடைந்த குறித்த ராணுவ வீரர் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் சவுத் பார் ராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கோப்ரல் ஜெயத்திலக வயது 46 என்னும் ராணுவ வீரரே குறித்த வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது மன்னார் பிரதான பாலத்துக்கு அருகே உள்ள சோதனை சாவடியில் அவர் கடமையில் இருந்ததாகவும் குறித்த சோதனை சாவடியில் கடமையில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு அவரே துப்பாக்கிகளை வழங்கி வந்ததாகவும்.
அவ்வாறு வழங்க முற்படும்போது பெட்டிக்குள் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்தமையே விபத்திற்கு காரணம் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிழந்த ராணுவ வீரரின் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


நாட்டில் கேகாலையில் ஏழு வாகனங்கள் மோதி கோர விபத்து பெண் ஒருவர் பலி

நாட்டில் கேகாலையில் 07 வாகனங்கள் மோதி பாரிய விபத்து
 ஏற்பட்டுள்ளது. 
,மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காமயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
சாரதி பயிற்சிப் பாடசாலைக்குச் சொந்தமான பல வாகனங்களே இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 21 ஜூன், 2026

இருபது மாத குழந்தை ஜெர்மனியில் மரணம் இலங்கைத் தமிழ் தாய் கைது

ஜெர்மனியின் ஷோர்ண்டோர்ஃப் நகரில், காரின் உள்ளே மறதியாக விட்டுச் செல்லப்பட்ட இருபது மாதக் குழந்தை வெப்பம் தாங்காமல்
 .உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக அக்குழந்தையின் 44 வயதுடைய இலங்கைத் தமிழ் தாய் காவல் துறையினரால் கைது
 செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 18 அன்று காலை, வழக்கம்போல் தனது குழந்தையைக் காப்பகத்தில் கொண்டு போய் விடுவதற்காகத் தாய் காரில் 
புறப்பட்டுள்ளார். 
ஆனால், வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் காரணமாக, குழந்தையைக் காப்பகத்தில் இறக்கிவிட்டதாக நினைத்துக்கொண்டு, அவர் நேராகத் தனது வேலைத்தலத்திற்குச் சென்று காரை நிறுத்திவிட்டுச் 
சென்றுள்ளார்.
பின்னர், குழந்தையைக் காப்பகத்திலிருந்து மீண்டும் அழைத்து வருவதற்காகக் காரின் அருகே வந்தபோதுதான், குழந்தை காரின் பின் இருக்கையிலேயே இருப்பதை அவர் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்பகுதியில் நிலவிய கடுமையான வெயில் காரணமாக, நீண்ட நேரம் மூடியிருந்த காருக்குள் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பத்தினால் மூச்சுத் திணறி குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html.

சனி, 20 ஜூன், 2026

தொடருந்துகள் இங்கிலாந்தில் ஒன்றுடன் ஒன்று மோதில் பலர் :காயம் ஓட்டுநர் பலி

இரண்டு தொடருந்துகள்   லண்டனுக்கு வடக்கே  ஒன்றுடன் ஒன்று மோதியதில் தொடருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 99 பேர் 
காயமடைந்தனர். 19-06-2026-
வெள்ளிக்கிழமை பிற்பகல் பெட்ஃபோர்டுக்கு தெற்கே ஈஸ்ட் மிட்லாண்ட்ஸ் தொடருந்து சேவையால் இயக்கப்படும் இரண்டு தொடருந்துகள் மோதிக்கொண்டதில் பலர் காயமடைந்தனர் என்று
 காவல்துறை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்களும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html