siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் பாப்பையா காலமானார்

துயர் பகிர்வு--தோற்றம் 22-02--1936---மறைவு-11-09-2026.
புகழ்பெற்ற பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தமது 90 வது வயதில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை  காலமானார். 
வயது மூப்பு காரணமாக மதுரையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், தமிழ் இலக்கிய விளக்கவுரையாளருமான சாலமன் பாப்பையா, எளிய மற்றும் நகைச்சுவையான தமிழில் பேசி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆவார். 
அன்றாட சமூக நிகழ்வுகள் மற்றும் குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்டு இவர் நடத்தும் பட்டிமன்றங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 
சாலமன் பாப்பையா 1936ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்காவில் உள்ள சாத்தங்குடியில் பிறந்தார். 
இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், தியாகராசர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 
மேலும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். 
சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மூலம் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியப் பாடல்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளித்து அவற்றின் சுவைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினார். 
அத்துடன், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான முதல்வன், போய்ஸ் மற்றும் சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களிலும் 
இவர் நடித்துள்ளார். 
பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள இவர், இலக்கியத் திறனாய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். 
'பட்டிமன்றமும் பாப்பையாவும்” என்ற தன்வரலாற்று நூலை 
எழுதியுள்ளார். 
திருக்குறள் உரை, புறநானூறு புதிய வரிசை வகை, அகநானூறு உள்ளிட்ட உரை நூல்களையும், 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்: ஓர் பார்வை” என்ற இலக்கியத் திறனாய்வு நூலையும் எழுதியுள்ளார். 
மேலும், 'அவர்கள் கண்ட ராமன்”, 'இவர்கள் நோக்கில் கம்பன்”, 'கம்பவனத்தில் ஓர் உலா”, 'கம்பனின் தமிழமுது” போன்ற பல்வேறு நூல்களைத் தொகுத்துள்ளார். 
மதுரை கம்பன் கழகத்தின் திங்கள் சொற்பொழிவுகளையும் ஆண்டுதோறும் தொகுத்து வெளியிட்டு வருகிறார். 
தமிழ்த் துறைக்கும் இலக்கியத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டினைப் பாராட்டி பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 
குறிப்பாக, இந்தியாவின் நான்காவது உயரிய விருதான மத்திய அரசின் 'பத்மஸ்ரீ” விருது 2021 ஆம் ஆண்டு இவருக்கு
 வழங்கப்பட்டது. 
மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 'முத்தமிழ் பேரறிஞர்” விருதும், 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் 'கலைமாமணி' விருதும் இவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html



சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தில் ஐவர் பலி 40 காயமடைந்தர்

சுற்றுலா பேருந்து விபத்த்தில் சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள சுஷ் மலைக்கிராமத்திற்கு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர்
விபத்து நடந்த இடத்திற்கு அவசரகால மீட்புக் குழுக்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக உள்ளூர் காவல்துறை 
தெரிவித்துள்ளது.
இந்தப் பேருந்தில் நெதர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்ததாக டச்சு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டச்சு சுற்றுலா நிறுவனமான OAD ஏற்பாடு செய்த பயணத்தில் அவர்கள் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் மொத்தம் 48 பேர் இருந்ததாக ‘De Telegraaf’ செய்தி
 வெளியிட்டுள்ளது. 
சுஷ் மற்றும் அருகிலுள்ள ஜெர்னெஸ் கிராமத்திற்கு இடையேயான சாலையில், உள்ளூர் நேரப்படி மாலை 4.45 மணியளவில் பேருந்து தடுப்பு வேலியில் மோதியதாக சுவிஸ் ஒளிபரப்பு நிறுவனமான SRF 
தெரிவித்துள்ளது.
விபத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் பல ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகவும் SRF தெரிவித்துள்ளது 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 9 செப்டம்பர், 2026

நாட்டில் வருடம்தோறும் ஆயிரம் குழந்தைப் புற்றுநோயாளிகள் பதிவு

 தற்போது   இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்


தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு அமைவாக இன்று (09) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


ரத்தப் புற்றுநோய் (லியுகேமியா), நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோய் (லிம்போமா), மூளைப் புற்றுநோய், எலும்புப் புற்றுநோய் மற்றும் கண் புற்றுநோய் ஆகியவையே இங்கு அதிகளவில் கண்டறியப்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டுகிறார்.


எந்தவொரு புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் அதைக் குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.


குழந்தைகள் மற்றும் பருவவயதினருக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் "குழந்தைப் பருவப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

யாழ் செம்மணிப் பகுதியில்மாணவி கிருசாந்தியின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ், செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை செம்மணி பகுதியில் இடம்பெற்றது
. இதன்போது செம்மணிப் பகுதியில் படுகொலை
 செய்யப்பட்ட, அங்கு புதைக்கப்பட்ட ஏனையவர்களும் நினைவு கூரப்பட்டு, அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 7 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் பிரியா பிரஷாந்த் .04.09.26

துயர் பகிர்வு-தோற்றம் 08-05-1987---மறைவு-04-09-2026..
 யாழ் அச்சுவேலி, பத்தமேனியைச் சேர்ந்த அமரர் பதுமதிதி – அறியுகுலராணி (ராணி) தம்பதிகளின் இளைய மகளும் பிரஷாந்தின் அன்பு மனைவியுமாகிய பிரியா பிரஷாந்த் அவர்கள் 04 -09-2026 அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
அச்சுவேலி, பத்தமேனி
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html


ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

நாட்டில் நீர்கொழும்பு கடலில் காணாமல்போன மீனவர் உடலமாக மீட்பு மூவரை தேடும் பணிகள்

 

நாட்டில் நீர்கொழும்பு கடற்பகுதியில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாகக் காணாமல்போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஆபத்தில் சிக்கிய படகுகளையும் மீனவர்களையும் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன  என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 5 செப்டம்பர், 2026

மரண அறிவித்தல் அமரர் கிஷ்ணன் பரமேசுவரன்(கிளி அண்ணை)

துயர் பகிர்வு-தோற்றம் 10-04-1969---மறைவு-05-09-2026..
யாழ் மந்துவில் வடக்கினை பிறப்பிடமாகவும் நவற்கிரி  வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்   கிஷ்ணன்  பரமேசுவரன்(கிளி அண்ணை)அவர்கள்  05.09.2026  சனிக்கிழமை அன்று நவற்கிரி  இறைவனடி சேர்ந்து விட்டார். .
 அன்னார்  கிஷ்ணன் தம்பதியினரின்அன்பு அன்பு மகனும் அன்னார்  காலம்சென்ற சின்னத்துரை தம்பதியினரின் அன்பு மருமகனும் திருமதி பவானி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும் ஆவர் 
 அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில்  மந்துவில் வடக்கு கொடிகாமத்தில் நடைபெறும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
மந்துவில் வடக்கு கொடிகாமம் 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_05.html

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

நாட்டில் கொழுப்பிட்டியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்

நாட்டில் கொழுப்பிட்டியாவில் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த
 ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்த நபர் ஒருவர், வெளிப்புறத்தில் இருந்த இருவரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் 
சூடு நடத்தினார். 
தனிப்பட்ட காரணத்திற்காக இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்ததோடு, துப்பாக்கிச் சூடு நடத்திய 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொழுப்பிட்டி பொலிசார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 04.09.26

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022 -நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026-அன்று 
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .நான்காம்  ஆண்டு  திதி  04-09-2026 வெள்ளிக்கிழமை  அன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் 
திருமதி சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்
 சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்.பிரான்ஸ் )காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  சுருதிகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) அமரர் சண்முகம் மற்றும்திருமதி  நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞானன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர்  )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (கனடா)  சின்னவட்டன் (இலங்கை) கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (குட்டி ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலங்கள் பல கடந்தாலும்,கண்ணை விட்டு மறைந்தாலும்,இதயத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்கும் 
நீங்காத நினைவுகள் அவை!
ஆனாலும் என்ன
நீங்காத நினைவுகள்
நிஜமாக நிறைந்திருக்கும்
காலங்கள் பிரிவின்
காயத்தை ஆற்றலாம்
பிரிவின் வலிகள்
என்றும்பிரிந்திடாமல்
எம் முடன்
உடலும் உயிரும்மறையலாம்
உங்கள் அன்பு என்றும் மறையாது
பூவில் உறையும் தேனினை போல
எங்கள் உள்ளமதில்
உங்கள் நினைவுகளாய்
வாழும் காலங்களில்
பாசத் தந்தையாக
பொறுப்புள்ள தலைமகனாக
பண்பு மிகு சேவையாளனாக
வாழ்ந்து மறைந்தீர்கள்
வீசும் காற்றிலும்
மலரின் மணத்திலும்
எம்முடன் நீங்கள்
கலந்திருப்பதாக எண்ணி வாழ்கிறோம்!
– நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!
https://navakkiri.blogspot.com/2023/09/1-070923.html