siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

பேருந்து நிறுத்தத்தில் பிரான்சில் கூட்டம் மீது கார் மோதியது: இருவர் உயிரிழப்பு:ஒன்பது பேர் காயம்

பிரான்சில் -26-08-2026-புதன்கிழமை அன்று வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தற்போதைக்கு நாங்கள் பயங்கரவாத நோக்கத்தை ஊகிக்கவில்லை, ஆனால் விசாரணை இப்போதுதான் தொடங்கியுள்ளது என்று துணை அரசு வழக்கறிஞர் பிலிப் லியோனார்டோ வியாழக்கிழமை அதிகாலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என விவரிக்கப்பட்ட 26 வயது நபர் ஒருவர், புதன்கிழமை இரவு நகரின் பிரதான ரயில் நிலையம் அருகே மக்கள் கூட்டத்தின் மீது காரை ஓட்டிச் சென்றதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவலில் வைக்கப்பட்டார்
சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் மற்றொருவர் பின்னர் உயிரிழந்ததாகவும் பிரெஞ்சு காவல்துறை தெரிவித்துள்ளது. 
ஓட்டுநர் தப்பி ஓடினார், ஆனால் சம்பவ இடத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் கைது செய்யப்பட்டார் என்று பிரெஞ்சு ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு ஒரு தகவல் மூலம்
 தெரிவிக்கப்பட்டது.
அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்ததாக உள்ளூர் ஊடகங்கள் 
தெரிவித்தன. 
தாக்குதலுக்குப் பிறகு, சந்தேக நபர் உளவுத்துறைக்கு அறிமுகமானவர் அல்ல என்றும், ஆனால் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு முன்பு காவல்துறையுடன் தொடர்பு இருந்ததாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 26 ஆகஸ்ட், 2026

நாட்டில் ,அறிவியல் நகரில் புகையிரதக் கடவையில் விபத்த்தில் யுவதி உயிரிழப்பு

நாட்டில் ,கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக் கழக வீதியில் உள்ள புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி பலியாகியுள்ளார். குறித்த விபத்து முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரம் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது. 
விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 25 ஆகஸ்ட், 2026

மருந்துகளை யாழ்.போதனாவிற்கு ஏற்றி வந்த வாகனம் தடம்புரன்டு விபத்து

மருந்துகளை  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் 
தடம்புரண்டுள்ளது 
கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் முல்லைத்தீவு, கொக்காவில் பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தடம்புரண்டு விபத்துக்கு
 உள்ளாகியுள்ளது
விபத்தில் சாரதி மற்றும் உடன் பயணித்த இரு ஊழியர்களும் , பாதுகாப்பாக உள்ளதாகவும், தடம்புரண்ட வாகனத்தில் இருந்த மருந்துகளை பாதுகாப்பாக இறக்கி, மற்றுமொரு வாகனத்திற்கு மாற்றி எடுத்து வர நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டதாக , வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 
அதேவேளை குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 24 ஆகஸ்ட், 2026

நாட்டில் அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

நாட்டில் அவிசாவளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, போலியான இலங்கைத் தரச் சான்றிதழ் (SLS) முத்திரையிடப்பட்ட சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கைப்பற்றியுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த குடிநீர் அமித்திரிகல–ருவன்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்பட்டு, விநியோகத்திற்காக அவிசாவளை பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக 
தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களில் 500 மில்லிலிற்றர் முதல் 19 லிற்றர் வரையிலான பல்வேறு அளவிலான குடிநீர் கொள்கலன்கள்
 இருந்துள்ளன.
அவற்றில் போலியான SLS சான்றிதழ் குறியீடும், 894 என்ற சான்றிதழ் இலக்கமும் குறிப்பிடப்பட்டிருந்ததாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த குடிநீர் போத்தல்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னரே அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், பொருட்களை கொள்வனவு செய்யும் போது மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், நுகர்வோர் சான்றிதழ் குறியீடுகள் மற்றும் பொருட்களின் தகவல்களை
 கவனமாக
 சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் தொடர்பில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2026

அடுக்குமாடிக் கட்டிடத்த்தில் சுவிட்சர்லாந்தில் தீ விபத்தில் இருவர் மரணம்

 

சுவிட்சர்லாந்தில் தீயில் எரிந்துபோன அடுக்குமாடிக் கட்டிடத்திற்குள் இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. 
கிழக்கு சுவிட்சர்லாந்தின் துசிஸ் பகுதியில், உணவகம் மற்றும் குடியிருப்பு அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தில் வியாழக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. 
இந்நிலையில், "கட்டிடத்திற்குள் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன" என்று கிராபுண்டன் மாகாண காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
மேலும், "இறந்தவர்களை அடையாளம் காணும் பணி இன்னும் நிலுவையில் உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது
தீப்பிடித்து எரிந்த கட்டிடத்திலிருந்து பதினான்கு பேர் தப்பித்ததாகவும் அவர்களில் எட்டு பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் அறியப்படுகிறது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 22 ஆகஸ்ட், 2026

இந்து வியாபாரி ஒருவர் பாகிஸ்தானில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொலை

இந்து வியாபாரி ஒருவர் பாகிஸ்தானின் பலுசிஸ்தானில்,  ராகேஷ் குமார் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நொஷ்கி பஜாரின் காதிராபாத் ஸ்டாப் பகுதியில் உள்ள அவரது கடைக்குள் சில ஆயுததாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மாவட்ட மருத்துவமனைக்கு
 கொண்டு சென்றனர். 
அங்கு உயிரிழந்தவர் ராகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார். பின்னர், அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

மரண அறிவித்தல் ஆசிரியர் அமரர் ஞானசுந்தரம் (சுந்தரம்) ஐயா

துயர் பகிர்வு-தோற்றம் 00--மறைவு-21-08--2026..
யாழ்.புத்தூரை பிறப்பிடமாகவும்  (புத்தூர் வைரவர் கோவிலடியை) வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் ஐயா ஞானசுந்தரம் ஆசிரியர் ( யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா முன்னாள்)-மற்றும் ரியூசன் ஆசிரியர் சுந்தரம் ஐயா) அவர்கள் 21-08--2026..அன்று காலமானார் 
அன்னாரின்  நல்லடக்கம் பின்னர் இணைக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: ஐயா 
புத்தூர் வைரவர் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
மற்றும் யாழ் ஸ்ரீ சோமாஸ் கந்தா பழைய மாணவர்கள் 
ரியூசன் பழைய மாணவர்கள் 

https://navakkiri.blogspot.com/2026/08/blog-post_21.html