siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 29 நவம்பர், 2023

தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்

எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம்.
29-11-2023. இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது
. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் 
காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் 
செயல்படக்கூடியது. 
இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 28 நவம்பர், 2023

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ் சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், 
நுணாவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையினை கண்காணிப்பதற்காக, நீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது



திங்கள், 27 நவம்பர், 2023

ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளனர்.
 இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம்
 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.
 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 
இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும்
 உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி 
உயிர் இழந்துள்ளார்.
 இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கத.
 இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 26 நவம்பர், 2023

பண்ணை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்.26-11-2023. இன்று நோயாளர் காவு வண்டியுடன்,  மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த
 முச்சக்கரவண்டி, 
 நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல 
முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி,  நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் 
சிக்கிக் கொண்டது. 
குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

சனி, 25 நவம்பர், 2023

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் மரணம்

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள்
 உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
 ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும்
 ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
 கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


   

வெள்ளி, 24 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞனின் நீதிமன்றின் உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தன்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு 
தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார் .என்பதும் குறிப்பிடத்தக்கது 








 

வியாழன், 23 நவம்பர், 2023

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து மூன்று பேர் காயம்

நாட்டில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று, கார்  ஒன்றுடன் மோதி  விபத்துக்குள்ளாகியுள்ளது. 
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம பகுதியில்.23-11-2023. இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், ஆடைத் 
தொழிலாளி உட்பட மூவர் காயமடைந்து
 வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக வீதியின் கலனிகம போக்குவரத்துப் பொலிஸார் 
தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் இருவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் இருவரும் மற்றும் பேருந்தில் பயணித்த ஆடைத் தொழிலாளி ஒருவருமே காயமடைந்துள்ளனர். 
பேருந்து சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் 
தெரிவித்தனர். 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது