siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 ஜூன், 2023

மரண அறிவித்தல் திரு. கந்தப்பிள்ளை பொன்னையா 07.06-2023

தோற்றம் 02-04-1929. மறைவு -07-06-2023
யாழ். நவற்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட கந்தப்பிள்ளை பொன்னையா அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ் சென்றவர்களான கந்தப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகனும் சென்றவர்களான கந்தையா (நல்லையா )ராசம்மா ஆகியோரின் மருமகனும் பராசத்தி அவர்களின் பாசமிகு கணவரும் சோபனா(இலங்கை ) பகீரதன் (கந்தன்- ஜெர்மனி )-
சாந்தினி .(சுவிஸ் .இலங்கை -சாந்தி) சுதர்சன் -மகன் (வேலன்-கனடா )சுதர்சினி.மகள்  (சுதா-இலங்கை )ஆகியோரின் அன்புத்தந்தையாரும் ஆவர் 

அன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 10:00 மு.ப — 12:30 பி.ப.மணி  வரை  நவற்கிரி இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம்  11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று
 .  
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு 
சோபனா.மகள் - இலங்கை +9477 205 2946 பகீரதன்-மகன்  (கந்தன்-ஜெர்மனி )-49 1716996550 சாந்தினி-மகள் (சாந்தி.இலங்கை )- +9477 648 1055 சுதர்சன் (வேலன்.கனடா )- 416917 3028/ 0774785352 சுதர்சினி மகள்(சுதாஇலங்கை )- 071131 9768…
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
 நவற்கிரி புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




செவ்வாய், 6 ஜூன், 2023

மட்டக்களப்பில் இடம்பெற்ற உந்துருறுளி விபத்தில் விபத்தில் இருவர் படுகாயம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று
 இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இன்று பகல் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுதாவளையிலிருந்து செட்டிபாளையம் நோக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் 
படுகாயமடைந்த நிலையில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வேகத்தினை கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் 
தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 5 ஜூன், 2023

.நாட்டில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை குறைப்பு

 

நாட்டில் தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் வீழ்ச்சியினை அடுத்து, மருந்துகளின் விலை 16 சதவீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
மேலும் இந்த விலை குறைப்பானது ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலாகும் எனவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்...
என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 4 ஜூன், 2023

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் விபத்துக்கான காரணம் வெளியானது

உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் புலனாய்வாளர்களால் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 இந்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வின் வைஷ்ணவை மேற்கோள்காட்டி, விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அளித்துள்ளதாக தொடர்புடைய தகவல்கள் 
தெரிவிக்கின்றன. 
 இது தொடர்பான விபத்துக்கு காரணமான தரப்பினர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவ் வெளிநாட்டு ஊடகங்களுக்கு மேலும் 
தெரிவித்துள்ளார். 
 இந்த துரதிர்ஷ்டவசமான ரயில் விபத்துக்கான காரணம், "ரயிலை இயக்குவதற்கு சமிக்ஞை செய்யும் எலக்ட்ரானிக் இன்டர்லாக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு" என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. 
 கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த துரதிஷ்டவசமான புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 288 ஆக அதிகரித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளன. 
 மேலும், புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1000க்கும் அதிகமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 3 ஜூன், 2023

வாரத்தின் ஏழு நாட்களும் யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவை

 யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வாரத்தின் ஏழு நாட்களும் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டதாக துறைமுகங்கள், கற்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி
 சில்வா தெரிவித்தார். 
தற்போது வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே யாழ்  பலாலிசர்வதேச விமான நிலையத்திலிருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், யாழ் பலாலி சர்வதேச விமான நிலையத்தின்
 ஓடுதளத்தை விஸ்தரிப்பதற்கான கடன் வசதியை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 
குறிப்பிட்டார். 
இந்த கடனுதவி கிடைக்கப்பெற்றதும் விமான நிலையத்தின் விஸ்தரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 2 ஜூன், 2023

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் விபத்தில் 6 பேர் பலி

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி உள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டம் பாஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே
 கோரமண்டல் விரைவு ரயில் மற்றொரு சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக
 முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கலாம் என தகவல்
 வெளியாகி உள்ளது.
7க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு
 இடையே மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் 6782 262 286 அறிவிக்கப்பட்டுள்ளது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 1 ஜூன், 2023

மரண அறிவித்தல் திருமதி கந்தப்பு செல்வரத்தினம் (சின்னவளக்கா )31.05.23

மறைவு-31-05-2023.
 யாழ் தோப்பு அச்சுவேலி பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கந்தப்பு செல்வரத்தினம் (சின்னவளக்கா )அவர்கள் 31-05-2023-. புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் . 
. திரு கந்தப்பு அவர்களின் அன்புமனைவியும் ஆவர் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 தொடர்புகளுக்கு மனோகரன் சுவிஸ் 41779472134
 செல்வன் இங்கிலாந்து 447432098782.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி