siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 7 பிப்ரவரி, 2026

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக 103 குழந்தைகள் பெற்றோர் இன்றி தவிப்பு

நாட்டில் தித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் 103 குழந்தைகள் ஒரு தாய், தந்தை அல்லது இரு பெற்றோர்களையும் இழந்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் 
தெரிவித்தார். 
 பதுளை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (6) நடைபெற்ற நிகழ்ச்சியின் போது அவர் இந்தக் கருத்துக்களை
 தெரிவித்தார். 
 ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், இந்தக் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக 
அமைச்சர் பால்ராஜ் கூறினார். 
 பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்குப் பொறுப்பேற்க பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்,  அவர் மேலும் கூறினார். 
 இதுபோன்ற அனைத்து ஏற்பாடுகளும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

கிரான்ஸ்-மொன்டானா விடுதி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி

சுவிற்சர்லாந்தில் கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் வலைஸ் மாகாணம் முதல்க்ட்ட அவசர உதவியாக 10,000 பிராங்கை வழங்கியுள்ளது.
48 பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. “கோரப்பட்ட ஆவணங்கள் பெறப்பட்டதும் கோப்புகள் சரிபார்க்கப்பட்டு, பணம் செலுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படுவதாக வலைஸ் மாகாணம் நேற்று அறிவித்துள்ளது.
செலுத்தப்பட்டுள்ள 48 கொடுப்பனவுகளில், 14 வெளிநாட்டு கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளன, அவற்றில் பிரான்சில் ஏழு,
 இத்தாலியில் ஆறு மற்றும் பெல்ஜியத்தில் ஒன்று என வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 5 பிப்ரவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில்

நாட்டில்   கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் 
இடம்பெற்றுள்ளது. 
மாணவர்கள் குளவி கொட்டுக்குள்ளானதில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள் நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குளவி கூட்டின் ஆபத்து குறித்தும் அதை அகற்ற வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லைஎன்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 4 பிப்ரவரி, 2026

பாலம் இடிந்து விழுந்ததில் சீனாவில் 05 தொழிலாளர்கள் மரணம்

 கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று சீனாவில் இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியில் 03 பேரின் சடல்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவித்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

கடும் பனிப்பொழிவால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது.
சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் 
துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 100ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

திங்கள், 2 பிப்ரவரி, 2026

இராணுவ வாகனம் மோதி யாழ். மயிலிட்டியில் முதியவர் பலி

இன்று யாழ் மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது 


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

கிளிநொச்சி நீதிமன்றம் கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது

.நாட்டில்  கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02) மரண தண்டனை
 வழங்கப்பட்டுள்ளது.
 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மேற்படி
 தீர்ப்பளித்துள்ளது. 
கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில்  வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
 அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு  மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது
. என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html





 

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

நாட்டில் கிளிநொச்சியில் 03 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

நாட்டில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் A9 வீதியில் 
இடம்பெற்றுள்ளது. 
 கொழும்பு நோக்கி பயணித்த காரினது சக்கரம் காற்று போன நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே பயணித்த வேனுடன் மோதி விபத்தை ஏற்படுத்தி பின்னர் மற்றுமொரு வேனுடன்
 மோதியுள்ளது.
 முதல் விபத்தில் சிக்கிய வேன் தடம் புரண்டுள்ளது. வேனில் பயணித்த பயணிகள் சிறு காயங்களுடன் பிரதேச மக்களின் உதவியுடன் வெளிவேற்றப்பட்டனர். 
 விபத்துக்குள்ளான மற்ற வேனின் சாரதி விபத்தை தவிர்க்க முயற்சித்த போதிலும், குறித்த வேனும் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த வேனில் பயணித்தவர்களும் சிறு காலங்களுடன் 
வெளியேறினர். 
 விபத்து காரணமாக A9 வீதி ஊடான போக்குவரத்து 30 நிமிடங்கள் வரை ஸ்தம்பித்தது. விபத்தினை ஏற்படுத்திய காரினை பிரதேச மக்கள் இணைந்து வீதி போக்குவரத்துக்கு தடை இல்லாதவாறு
 அப்புறப்படுத்தினர்.
விபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றுவதற்கு 1990 இலக்க சேவையை பெற்றுக்கொள்ள அழைத்தபோது, குறித்த சேவையை அணுக முடியாத நிலையில், 021 2 285329 இலகத்திற்கு அழைத்து கிளிநொச்சி வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சேவையை தருமாறு ஊடகவியலாளர் உதவி கோரினார். 
 தம்மால் சேவை வழங்க முடியாது எனவும், 1990 சேவைக்கே மீண்டும் மீண்டும் அழைக்குமாறு கூறி தொடர்பு 
துண்டிக்கப்பட்டுள்ளது. 
 தொடர்ந்து அவ்வீதி ஊடாக பயணித்த தேர்தல்கள் திணைக்கள வாகனம் மற்றும் பொது மக்களின் வாகனங்களில் காயமடைந்தவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டமை  என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html