siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

.நாட்டில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் 26-04-2026.அன்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில்
 அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால்
 மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிலாந்தில் இரு குழந்தைகள் மரணம் - ஒருவர் கைது

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
 அறிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம்-11 இல் கல்வி கற்றுவரும் மாணவியான அக்சயா தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சம்பவம்.24.04.2026  வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் குணம் கொண்ட அக்சயா கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில்
 ஆழ்த்தியுள்ளது.
தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவு உங்களை சுற்றி உள்ள உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்று கொஞ்சமாவது யோசிச்சி பாருங்கள் உங்களுக்காக அவர்கள் எவ்வளவு எல்லாம்,கஷ்டபட்டு 
இருப்பார்கள். 
என்ன பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்திடம் மனசு விட்டு பேசுங்கள் அவர்கள் உங்கள் உறவுகள் தானே அவர்கள் பார்த்து கொள்வார்கள் பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு 
நம்பிக்கையை கொடுங்கள். 
அப்போது தான் அவர்களும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பார்கள் . எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஏப்ரல், 2026

இரண்டு பேருந்துகள் பென்டகன் அருகே மோதி விபத்து - 23 பேர் காயம்

இரண்டு பேருந்துகள்  .பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் 
காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் 
கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் 
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வியாழன், 23 ஏப்ரல், 2026

நாட்டில் யாழ் நோக்கிச் சென்ற ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

நாட்டில் பெண் உயிரிழப்பு, முச்சக்கரவண்டிச் சாரதிக்குப் படுகாயம்! வவுனியா தாண்டிக்குளம் திருநாவற்குளம் மூன்றாம் ஒழுங்கைக்கு எதிர்ப் பக்கமாக அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்
 கடவையில் இன்று 

வியாழக்கிழமை (23-04-2026) முற்பகல்- 10.15 மணியளவில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் முச்சக்கர வண்டியொன்று மோதுண்டதில் அதில் பயணித்த பெண்ணொருவர்
 உயிரிழந்துள்ளார். 
முச்சக்கர வண்டியின் சாரதி உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயங்களுடன் வவுனியா மாவட்டப் பொதுவைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

                                                                                                                                                                                                                                                                                                                                

புதன், 22 ஏப்ரல், 2026

யாழ் .உரும்பிராயில் கோர விபத்து- தந்தையும் மகனும் பலி

யாழ் உரும்பிராய் பகுதியில்.22-04-2026. இன்று  அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளுடன் கனரக வாகனம் மோதி, இந்த விபத்து இடம் பெற்றுள்ளது
. விபத்தில், மோட்டார் 
சைக்கிளில் பயணித்த 65 வயதான தந்தையும் 29 வயதான மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 21 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் இராசரத்தினம் வசந்தகுமார் (அப்பன் )

துயர் பகிர்வு-தோற்றம் 28-05-1969--மறைவு-20-04-2024.
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் லண்டனை  
வசிப்பிடமாகக் கொண்ட 
 அமரர் இராசரத்தினம்  வசந்தகுமார் (அப்பன் ) அவர்கள் 
  லண்டனில் 20-04-2026.,திங்கள்க்கிழமை அன்று
 காலமானார்  அன்னார்  காலம்சென்ற  இராசரத்தினம்,இலட்சுமி (பரிமளம்)  தம்பதியினரின் அன்பு மகனும்
 திருமதி சசி. (லண்டன்  )அவர்களின் அன்புக்கணவரும் 
ஆகாஷ்.(லண்டன்  ) அபினயா(லண்டன்  )ஆகியோரின் பாசமிகு தந்தையும்
 மலர்வதான ( வதான ) சுகந்தி   ஆகியோரின்  அன்பு ஆகியோரின் அன்புச்சகோதனும் 
 சரிதா  கீர்த்தன் கீர்த்தி லவன்சி  கிருசான் ஆகியோரின்அன்புமாமனும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியை
06-05-2026-புதன்கிழமை அன்று லண்டலில் நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
இலங்கை  வீட்டு முகவரி: 
(எல்லாளன் வீதி ) 
நவற்கிரி .புத்தூர்
https://navakkiri.blogspot.com/2022/04/3-220422.html