siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 மே, 2026

நாட்டில் காட்டுயானைத் தாக்குதல் தந்தை, மகள் பலி

 நாட்டில் வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தந்தை மற்றும் மகள் ஆகியோர் 
உயிரிழந்துள்ளனர். 
இருவரும் 15-05-2026.இன்று காலை  துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானை தாக்குதலுக்கு 
உள்ளாகியுள்ளனர். 
 இச்சம்பவத்தில் 56 வயதுடைய தந்தை மற்றும் அவரது 25 வயதுடைய மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்
. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 14 மே, 2026

மூன்று பெண்களின் உடல்கள் பிரித்தானியாவில் கடற்பகுதியில் இருந்து மீட்பு

இன்று .பிரித்தானியாவின் பிரைட்டன் கடற்பகுதியில் இருந்து மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
மடீரா டிரைவ் அருகே ஆற்றில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டதை சசெக்ஸ் காவல்துறை உறுதிப்படுத்தியதுடன் தலைமை கண்காணிப்பாளர் ஆடம் ஹேய்ஸ் இதனை ஒரு “சோகமான சம்பவம்” 
என விவரித்தார்.
பெண்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தவும் என்ன நடந்தது என்பதன் சரியான சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளவும் சிசிடிவி பகுப்பாய்வு உட்பட விரைவான விசாரணைகள் தற்போது நடைபெற்று
 வருகின்றன.
அவசர சேவைகள் தங்கள் பணியைத் தொடரும் வரை, பொதுமக்கள் சம்பவ இடத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 13 மே, 2026

நாட்டில் கொழும்பு கதிர்காமம் வீதியில் பேருந்துகள் மோதி விபத்து:

நாட்டில்  கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில் இன்று இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து காரணமாக அந்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 12 மே, 2026

நாட்டில் தங்கெதர பகுதியில் காரில் வந்த கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

நாட்டில் காலி, தங்கெதர பகுதி (டிக்ஸன் சந்திக்கு அருகில்). இன்று காலை சுமார் 7.30 மணியளவில். சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபரை நோக்கி T-56 ரகத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 44 வயதுடைய நபர், கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காலி பகுதியில் அண்மைக்காலமாக பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்புதான் காலி சிறைச்சாலையிலிருந்து தப்ப முயன்ற கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது.
இன்றைய சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஆகியவற்றைக் கொண்டு, இது திட்டமிடப்பட்ட ஒரு பழிவாங்கல் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் 
சந்தேகிக்கின்றனர்.
காலி பொலிஸார் அந்தப் பகுதியில் உள்ள CCTV காட்சிகளைச் சேகரித்து வருவதுடன், தப்பிச் சென்ற சொகுசு காரைக் கண்டறிய விசேட விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

நாட்டில் மாமண்டல பகுதியில் சிலையில் தொங்கிய நிலையில் துண்டிக்கப்பட்ட தலை மீட்பு

நாட்டில் அம்பலாங்கொடை, மாமண்டல பகுதியில் உள்ள சிலை ஒன்றில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை மாமண்டல சந்திப்பிற்கு அருகில் உள்ள சிலை ஒன்றில், கழுத்து வெட்டப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று தொங்கவிடப்பட்டிருப்பதை வழிப்போக்கர்கள் கண்டுள்ளனர். இது குறித்து உடனடியாக பொலிசாருக்குத் தகவல் 
வழங்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சிலையில் தொங்கவிடப்பட்டிருந்த தலையை மீட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.
தனிப்பட்ட பகை காரணமாகவோ அல்லது பாதாள உலகக் குழுக்களின் எச்சரிக்கையாகவோ இந்தச் கொடூரச் செயல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு 
மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவரின் உடல் எங்கே உள்ளது என்பது குறித்தும், கொலையாளிகளைக் கண்டறியவும் அம்பலாங்கொடை பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 
இச்சம்பவம் காரணமாக மாமண்டல பகுதியில் தற்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.htm


திங்கள், 11 மே, 2026

நாட்டில் விமான நிலையத்திற்கு சென்ற வேன் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

நாட்டில் மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று 10-05-2026. அன்று இரவு திடீரென தீப்பற்றி 
எரிந்துள்ளது. 
இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி
 தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேனே இவ்வாறு தீப்பற்றி எரிந்ததாக
 கூறப்படுகிறது. 
சம்பவத்தில் வேன் முற்றாக எரிந்துள்ளதாகவும்,  தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பொறுப்பதிகாரி தெரிவித்தார். 
 இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும் 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 10 மே, 2026

மரண அறிவித்தல் அமரர் நவரத்தினம் சிறிதரன் (ஶ்ரீ)

துயர் பகிர்வு-தோற்றம் 00--மறைவு-09-05-2026.
யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், அளவெட்டியை வதிவிடமாகவும்,தற்போது  
சுவிஸ் பெர்ன் (Swiss.Bern )னில்  வாழ்ந்தவருமான. 

அமரர்  நவரத்தினம் சிறிதரன்
( ஓய்வு நிலை Swiss 🇨🇭 Bern தமிழ் பாடசாலை பொறுப்பாளர் ஶ்ரீ)
ANRV பழைய மாணவர் சங்கம் சுவிஸ் கிளை 
செயலாளர் 

    அவர்கள் இன்று 09/05/2026 சனிக்கிழமை  இறைபதம் அடைந்தார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

அன்னார்.  காலஞ்சென்ற நவரத்தினம் சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும். 
காலஞ்சென்ற சுப்பிரமணியம் சிதம்பரேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மருமகனும். 
நாகநந்தினியின் அன்புக் கணவரும். 

சுகன்யா, பிரமீனா ஆகியோரின் பாசமிகு தந்தையும். 
நிக்கி யின் அன்பு மாமனாரும். 

செல்வராணி ( ராணி சுவிஸ்) 
காலஞ்சென்ற ஶ்ரீபரன் ( சின்னத்தம்பி) மற்றும் பாலராணி( பாலம்மா இலங்கை) , 
ஶ்ரீபாஸ்கரன் ( கிளியன் சுவிஸ்) 
, உதயராணி ( உதயம் சுவிஸ் )  
பகீதரன் ( பகீர் லண்டன்)
 ஆகியோரின் அன்புச் சகோதரனும்.  

கோணேஸ்வரன், சீதாரட்ணம் , தவக்குகன் , ரோகினி, குணசீலன்,சயரூபி,
சிவவதனி,சிவாஜினி,
உதயகுமாரி,முகுந்தன்,
துளசி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் இந்த இணையத்தில்  பின்னர் அறியத்தரப்படும். 

தொடர்புகட்க்கு. 

நந்தினி ( மனைவி)
+41 79 236 98 15
சுகன்யா ( மகள்)
00 41 (0) 79 254 25 68
மீனா ( மகள்)
+41 79 937 14 83
கிளி ( சகோதரன்)
00 41 77 940 64 51
குணா ( மைத்துணர்)
00 41 78 323 46 78
பகீர் ( சகோதரன்)
00447877 661474
ராணி( சகோதரி)
00 41 76 324 96 62
உதயம் ( சகோதரி)
+41 77 905 32 76
பாலம்மா ( சகோதரி)
00 94 (77) 554 3780
முகுந்தன் ( மைத்துணர்)
00447982 915768
தவக்குகன்(மைத்துணர்)
00 94 (77) 669 9687

தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/04/blog-post_21.html



சனி, 9 மே, 2026

இலங்கையில் குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ்; வெளியான தகவல்

நாட்டில் .மாத்தறை - தெனியாய பகுதியில் குழந்தைகளிடம் பரவும் வைரஸ் நோய், மூளைக்காய்ச்சலுடன் தொடர்புடையதாக 
இருக்கலாம் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கடந்த 2–3 வாரங்களில் தெனியாய அடிப்படை மருத்துவமனையில் 45 முதல் 50 குழந்தைகள் காய்ச்சல், தலைவலி போன்ற 
அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட தகவலின்படி, இந்த நோய் அசுத்தமான நீர் மூலம் பரவும் வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடும் என சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், சுவாசம் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலமாகவும் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து வலி, வாந்தி, ஒளி பார்த்தால் கண் எரிச்சல், உடல் வலி போன்றவை முக்கிய அறிகுறிகளாக 
காணப்படுகின்றன.
பள்ளிகள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிப்பயிற்சி வகுப்புகள் போன்ற இடங்களில் குழந்தைகள் அதிகமாக கூடுவதால், அங்கு பரவல் அபாயம் அதிகம் இருக்கலாம் என அதிகாரிகள்
 எச்சரித்துள்ளனர்.
நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்த பரவல் தெனியாய பகுதிக்குள் மட்டுமே காணப்படுவதாகவும், நாட்டின் பிற பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் இல்லை என்றும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுமக்கள் சுத்தமான அல்லது கொதிக்கவைத்த குடிநீரைப் பயன்படுத்தவும், கைகளை முறையாக கழுவவும், சுகாதார பழக்கங்களைப் பின்பற்றவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html