siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஏப்ரல், 2026

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சின்னத்தம்பி அசுவதி 30.04.26

யாழ் மீசாலையைப்  பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்ட  
  (கடந்த .11-05-2025-அன்று சிவபதமடைந்த) அமரர்  சின்னத்தம்பி அசுவதி
  அவர்களின்முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..திதி -30-04-2026. வியாழக்கிழமை அன்று 
 . அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அப்பு மனைவியும் திருமதி. தங்கேஸ்(இலங்கை )
.மற்றும்காலஞ்சென்ற சிவானந்தம் (,சிவா.) மற்றும் திரு .அருளானந்தம் (சுவிஸ் )செல்வா  (சுவிஸ் ) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்  
-------------
நீங்காத நினைவுகள்>>>
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் 
உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
தகவல் .
குடும்பத்தினர் 

https://navakkiri.blogspot.com/2022/04/1-090422.html



புதன், 29 ஏப்ரல், 2026

நாட்டில் ஹட்டன் - டிக்கோயா வீதியில் தனியார் பேருந்து விபத்து: பலர் காயம்

நாட்டில் டயகமவில் இருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் 
காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து ஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் டிக்கோயா பட்டல்கல தோட்டப் பகுதியில் இன்று (29) பிற்பகல் 3:00 மணியளவில்
 இடம்பெற்றுள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, எதிரே வந்த மற்றொரு பேருந்துக்கு இடமளிக்க முற்பட்ட போதே வீதியை விட்டு விலகி பள்ளத்தில் சரிந்து விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 35 பயணிகள் இருந்துள்ளனர். இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 20 பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா மருத்துவமனையின் மருத்தவர் ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரும் அடங்குவர் என காவல்துறையினர்
 குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   என்பதும்  குறிப்பிடத்தக்கது                                                                                                                                              

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 28 ஏப்ரல், 2026

பானி பூரி இந்தியாவில் சாப்பிட்ட ஆறு வயது சிறுவன் மரணம்

.இந்தியாவில்  ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் பகுதியில் வீதியோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன்
 உயிரிழந்துள்ளார்.
மேலும் பானி பூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று 
வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள்
 தெரிவித்துள்ளன.
முஃபசில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
சிறுவன் உயிரிழப்பிற்கு உணவு விஷம் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பானி பூரி விற்பனையாளர் தலைமறைவானதையடுத்து அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 27 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

.நாட்டில் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் 26-04-2026.அன்று பிற்பகல் மூவர் நீராடிய நிலையில் ஒருவர் நீரில் மூழ்கிய நிலையில்
 அவரை தேடும் பணி நேற்று மாலை முதல் இடம்பெற்ற நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் இரணைமடு நன்னீர் மீனவர்களினால்
 மீட்கப்பட்டது.
குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தைச்சேர்ந்த 32வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 26 ஏப்ரல், 2026

குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிலாந்தில் இரு குழந்தைகள் மரணம் - ஒருவர் கைது

பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 02 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பத்தில் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக
 அறிவிக்கப்பட்டது.
இரண்டு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமாக இருந்ததாக அல்லது அதற்கு அனுமதித்ததாகச் சந்தேகத்தின் பேரில், 30 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான சரியான சூழ்நிலைகளைக் கண்டறிய, மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறையும் தீயணைப்புத் துறையும் இணைந்து ஒரு கூட்டு விசாரணையை நடத்தி வருகின்றன.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

சனி, 25 ஏப்ரல், 2026

நாட்டில் கிளிநொச்சியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் தரம்-11 இல் கல்வி கற்றுவரும் மாணவியான அக்சயா தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் 
ஏற்படுத்தியுள்ளது. 
இந்தச் சம்பவம்.24.04.2026  வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சிரித்த முகத்துடன் எப்போதும் நண்பர்களுடன் கலகலப்பாகப் பழகும் குணம் கொண்ட அக்சயா கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தயாராகி வந்த நிலையில் திடீரென தவறான முடிவெடுத்து உயிரிழந்தமை குடும்பத்தினர், நண்பர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில்
 ஆழ்த்தியுள்ளது.
தயவு செய்து நீங்கள் எடுக்கும் முடிவு உங்களை சுற்றி உள்ள உறவுகளை எந்தளவு பாதிக்கும் என்று கொஞ்சமாவது யோசிச்சி பாருங்கள் உங்களுக்காக அவர்கள் எவ்வளவு எல்லாம்,கஷ்டபட்டு 
இருப்பார்கள். 
என்ன பிரச்சனையாக இருந்தாலும் குடும்பத்திடம் மனசு விட்டு பேசுங்கள் அவர்கள் உங்கள் உறவுகள் தானே அவர்கள் பார்த்து கொள்வார்கள் பெற்றோர்களே நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு 
நம்பிக்கையை கொடுங்கள். 
அப்போது தான் அவர்களும் உங்களிடம் வெளிப்படையாக இருப்பார்கள் . எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 24 ஏப்ரல், 2026

இரண்டு பேருந்துகள் பென்டகன் அருகே மோதி விபத்து - 23 பேர் காயம்

இரண்டு பேருந்துகள்  .பென்டகன் பேருந்து நிறுத்தம் அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பாதுகாப்புத் துறைப் பணியாளர்கள் உட்பட 23 பேர் 
காயமடைந்துள்ளனர்.
ஓம்னி ரைடு மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் கனெக்டர் போக்குவரத்துப் பேருந்துகள் சற்று முன்னதாக மோதிக்கொண்டன.
காயமடைந்தவர்களில் 18 பேரை மேலதிக மருத்துவப் பரிசோதனைக்காக அவசரப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் 
கொண்டு சென்றனர்.
ஐவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த 23 பயணிகளில் பத்து பேர் பாதுகாப்புத் துறையைச் 
சேர்ந்தவர்கள்.
இந்த விபத்து காரணமாகப் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் என்பதும்  குறிப்பிடத்தக்கது.
.
https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html