siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 25 பிப்ரவரி, 2026

நாட்டில் .ஹொரணையில் நபர் ஒருவர் அடித்துக் கொலை

நாட்டில் ஹொரணை, பொருவதந்தவில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து 
வருகின்றனர். 
பாதிக்கப்பட்டவர், அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கதவுகள் மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர் வீட்டினுள் இருந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் நிலைமை குறித்துத் தெரிவித்தார்.
பின்னர் மனைவி சம்பவ இடத்திற்கு வந்து, மற்ற பெண்ணுடன் சேர்ந்து, மரக் கம்பத்தைப் பயன்படுத்தி அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 
சம்பவம் தொடர்பில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

நாட்டில் குருநாகல் – தம்புள்ள வீதியில் பாரிய விபத்து

நாட்டில் குருநாகல் – தம்புள்ள பிரதான வீதியில் யக்கபிடிய சந்தியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் பாரவூர்தி சாரதி ஒருவர்
 படுகாயமடைந்துள்ளார் 
வண்டியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் வாகனக் கட்டுப்பாட்டை இழந்து வண்டியை, வீதியின் வலப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீமெந்து ஏற்றிய லொரியில் மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தில் பாரவூர்தியில் இருந்த சாரதி கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும், லொரியில் ஏற்றப்பட்டிருந்த சீமெந்து மூட்டைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

திங்கள், 23 பிப்ரவரி, 2026

.நாட்டில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

.நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட 2ம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கிறது என தேசியகட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
சோமாவதிய வீதி தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதான வீதிகளிலும் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது
பரீட்சைத் திணைக்களத்துடன் இணைந்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஒரு ஒருங்கிணைந்த அவசர காலத் திட்டத்தை 
முன்னெடுத்துள்ளது.
மாணவர்களைப் பரீட்சை நிலையங்களுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், எவ்வித இடையூறுமின்றி பரீட்சைகளை நடத்தவும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். 
எந்தவொரு அவசர நிலைமையையும் கையாளுவதற்கு முப்படைகள், பொலிஸார் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மேலதிக தகவல்களுக்கு 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொள்ள முடியும் என 
அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
வானிலை மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

நாட்டில் வெவெல்தெனிய பகுதியில் விபத்தில் ய இளைஞர் உயிரிழப்பு.

நாட்டில் .கொழும்பு-கண்டி பிரதான வீதியில் வெவெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
 கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 
 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்தவர் இருவரும் காயமடைந்த நிலையில்,   வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
 காயமடைந்த பின்னால் பயணித்தவர் முதலில் வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு
 மாற்றப்பட்டார். 
 இறந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்து டனோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 21 பிப்ரவரி, 2026

நாட்டில் இரண்டு பிள்ளைகளின் தாய் கணவரால் வெட்டிக்கொலை

நாட்டில் குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் 27 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை
 செய்யப்பட்டுள்ளார்.
பன்னலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாகவே இக்கொலைச் சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
நேற்று நள்ளிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதுடைய கணவர், தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது, ஆத்திரமடைந்த கணவர் கூர்மையான ஆயுதத்தால் மனைவியை வெட்டியுள்ளார்.
பாரிய வெட்டுக் காயங்களுக்குள்ளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காகப் பொலிஸார் விசேட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

குழந்தைகளை .கனடாவில் 5 முதல் 17 வயதுக்குட்பட்ட தாக்கும் நிமோனியா

குழந்தைகள் கனடாவில் கடந்த ஆண்டில் நிமோனியா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சுமார் 30 வீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதில் குறிப்பாக 5 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
இந்த வயது பிரிவில் நிமோனியா காரணமான அனுமதிகள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இருமடங்குக்கும் அதிகமாக
 உயர்ந்துள்ளன.
தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஜெஸ்ஸி பாப்பன்பர்க், 2024–2025 சுவாச நோய் பருவம் நிமோனியா நோயாளிகளால் மிகப் பரபரப்பாக இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஆண்டின் கடுமையான காய்ச்சல் (flu) பரவல், நிமோனியா அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என
 தெரிவிக்கப்படுகின்றது. 
வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியா, காய்ச்சலின் ஒரு தீவிர விளைவாக அமையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. . என்பதும்  குறிப்பிடத்தக்கது 

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வியாழன், 19 பிப்ரவரி, 2026

நச்சு வாயு கசிவு காரணமாக நைஜீரியாவில் 37 தொழிலாளர்கள் மரணம்

. நைஜீரியாவில் உள்ள சுரங்கமொன்றில் நச்சுவாயு கசிவு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 26 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஈயம், சல்பர் மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகிய வாயுக்கள் திடீரென வெளிப்பட்டதால் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரிய அரசாங்கத்தின் கூற்றுப்படி, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை கொடிய புகையை சுவாசிப்பதை உணரவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நைஜீரிய அரசாங்கம் சுரங்க தளத்தை மூடியுள்ளதாகவும் வாயு கசிவு குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html