siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 27 ஜூன், 2016

ஜேர்மன் குடியுரிமையை எப்படி பெறுலாம்?

ஜேர்மன் நாட்டு குடியுரிமை பெறுவது அல்லது அந்நாட்டில் நிரந்தரமாக குடியிருக்கும் உரிமையை பெறுவது எப்படி என்பதற்கான விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜேர்மன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியிருப்பு உரிமையை பெறுவது என்பது சாதாரணமான விடயம் இல்லை என அந்நாட்டு வெளியுறவு துறை இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், ஜேர்மன் குடியுரிமையை பெறுவதாக இருந்தால் தற்போதையை குடியுரிமையை இழக்கவும் நேரிடும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது
ஆனால், ஜேர்மன் குடியுரிமை பெறுவதற்கும் மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி என்பதற்கான தகவல்களை பார்ப்போம்.
நிரந்தர குடியிருப்பு அனுமதி பெறுவது எப்படி?
நிரந்தர குடியிருப்பு அனுமதி என்பது ஜேர்மன் குடியுரிமை பெறாமல் அந்நாட்டிலேயே நிரந்தரமாக அல்லது நீண்ட வருடங்களாக குடியிருக்கும் உரிமையாகும்.
இந்த அனுமதியை பெறுவதற்கு ஒரு நபர் குறைந்தது 5 வருடங்கள் ஜேர்மனியில் தங்கியிருக்க வேண்டும்.
ஒரு ஜேர்மன் குடிமகனுக்கு இருக்க வேண்டிய அத்தனை திறமைகளும் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியில் பலப்படுத்திக்கொண்டு. சுகாதார காப்பீடு பெற்றுருப்பதுடன் எவ்வித குற்ற வரலாறுகளும் இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்ததாக EC Residence எனப்படும் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் வரையறுக்கப்பட்ட குடியிருப்பு அனுமதியும்(Limited residence permit) கிடைக்கும்.
அதாவது, பணி செய்ய அனுமதிக்கும் அங்கீகாரம் ஆகும். இந்த அனுமதி கிடைத்தால், இதனை பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம்.
அதே சமயம், குடியமர்வு அனுமதியும்(settlement permit) பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இதனை பயன்படுத்தி அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வசிக்க முடியாது.
இந்த அனுமதியை 5 வருடங்களுக்கு குறைவாக வசித்திருந்தாலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஜேர்மன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு மாணவன் 2 வருடங்கள் தங்கியிருந்தாலும் கூட, அவர் குடியமர்வு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அதேபோல், EU Blue Card பெற்றுள்ளவர்கள் (அதாவது 49,600 யூரோ அல்லது 38,688 யூரோக்கு மேல் மொத்த வருவாய் பெறுபவர்கள்) 33 மாதங்கள் அல்லது 21 மாதங்கள் வசித்திருந்தாலும் அவர்களிடம் B1 மொழி அங்கீகாரம் இருந்தால் அவர்கள் நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் 
செய்யலாம்.
மேலும், வெற்றிகரமாக சுயதொழில் செய்து வரும் நபர்கள் 3 வருடங்களில் கூட நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
இதுமட்டுமில்லாமல், பெரும் தகுதிப்படைத்த அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் ஜேர்மனியில் தஞ்சம் அடைந்தால் அவர்களுக்கு விரைவில் நிரந்தர குடியிருப்பு அனுமதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஜேர்மன் குடியுரிமையை பெறுவது எப்படி?
ஜேர்மனில் limited residence permit-ன் கீழ் குடியுரிமையை பெற வேண்டும் என்றால், அவர் அந்நாட்டில் குறைந்தது 8 வருடங்கள் வசித்திருக்க வேண்டும்.

எனினும், அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ள ஜேர்மன் மொழி கற்பிக்கும் வகுப்புகளில் பங்கேற்று இருந்தால், 7 வருடங்களில் கூட குடியுரிமையை பெற்று விடலாம்.
இவை அனைத்தையும் விட முக்கியமானதாக, ஜேர்மன் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஜேர்மன் மொழியில் பேசுவது மட்டுமில்லாமல், அம்மொழியில் எழுதவும், அதிகாரிகள் அளிக்கும் பயிற்சியினை ஜேர்மன் மொழியில் செய்து முடிக்கவும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். இது தான் மிக அவசியமான 
தகுதியாகும்.
அதே போல், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர் அவருடைய தாய்நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டும். ஒரு வேளை அவரது தாய்நாடு இதை அனுமதிக்காவிட்டால், அவருக்கு சில விதிவிலக்கு 
அளிக்கப்படும்.
மேலும், அரசு நிதியுதவியை எதிர்ப்பார்க்காமல் சொந்தக்காலில் நின்று தனது செலவுகளை பார்த்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். ஏற்கனவே கூறியது போல், எவ்வித குற்றப்பின்னணியும்
 இருக்க கூடாது.
இறுதியாக, ஜேர்மன் குடியுரிமையை பெறுவதற்கு B1 வரிசையில் ஜேர்மன் மொழியில் 33 கேள்விகள் கேட்கப்படும்.
ஜேர்மன் நாட்டின் வரலாறு, சட்டங்கள், குடிமக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கேள்விகள் அமைந்திருக்கும்.இந்த 33 கேள்விகளில் குறைந்தது 17 கேள்விகளுக்கு சரியாக பதில் 
அளிக்க வேண்டும்.
இவ்வாறு மேற்கூறிய அனைத்து விதிமுறைகளையும் சரியாக பின்பற்றினால், உங்களுக்கு ஜேர்மன் குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு அனுமதி நிச்சயமாக கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.



புதன், 22 ஜூன், 2016

நீராடச் சென்ற இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!!

ஊவாபரணகம பிரதேசத்தில் 8 பேருடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
விகாரையொன்றில் நடைபெற்ற பொசன் தன்சல் நிகழ்வுக்கு சென்று விட்டு நண்பர்கள் 8 பேர் நீராடச் சென்ற போது 21 வயது இளைஞர்ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெலிமடை வெலிமடைகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஊவபரணகம பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 9 ஜூன், 2016

வருகிறது மருத்துவமனை பேஸ்புக் அடிமைகளை மீட்க?

இதோ பேஸ்புக்குக்கு அடிமையானவர்களை மீட்க பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக மருத்துவமனை அல்ஜீரியாவில் தொடங்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் புளு கம்யூனிட்டி என்ற பெயரில் தீவிரவாத சிந்தனைகளுக்கு மக்களை ஆட்படுத்த பிரசாரம் மேற்கொண்டு, அதன்மூலம் மூளைச்சலவை செய்ய தீவிரவாத இயக்கங்கள் முயற்சி செய்து 
 வருவதாகக்கூறப்படுகிறது.
பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சாதாரண மக்களையும் தீவிரவாதிகளாக மாற்ற பயங்கரவாதிகள் முயன்று வருவதாக எழுந்த புகாரை அடுத்து இது தொடங்கப்பட்டுள்ளது.
இதைத்தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இதுபோன்ற மூளைச் சலவைக்கு உட்படுத்தப்பட்டவர்களை மீட்க அல்ஜீரியாவின் கான்ஸ்டண்டீன் நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தால் பிரத்யேக மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 6 ஜூன், 2016

பஸ் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு அன்பளிப்பு!

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் பஸ் ஒன்று அன்பளிப்பாக பாடசாலை மாணவர்களிடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அலரி மாளிகையில் வைத்து வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

புதுக்குளம் சித்திவிநாயகரின் 16 வது மாபெரும் விளையாட்டு விழா ஆரம்பம்

வவுனியா புதுக்குளம் சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 68வது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் 16 வது மாபெரும் விளையாட்டு விழா இன்று உற்சாகத்துடன் ஆரம்பமானது.
இந்த விழா கழகத்தின் தலைவர் திரு.பார்த்தீபன் தலைமையில் 04.06.2016 காலை 8.00 மணிக்கு கழக மைதானத்திலிருந்து கிளிநொச்சி பரந்தன் சந்தி வரையான இருவழி தூர (115 கிலோமீற்றர்) சைக்கிளோட்ட போட்டியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
ஏனைய போட்டிகள் கழக மைதானத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாலை பரிசளிப்பு விழா இடம்பெற்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>