siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் கொள்ளை!

குருநாகல் மாவத்தகம பகுதியிலுள்ள அம்மன் கோவிலில் துப்பாக்கியுடன் சென்ற குழுவினரால் ஆலயத்திலுள்ள பணம் உள்ளிட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வெள்ளை நிற கார் ஒன்றில் நேற்று  மாலை 3.45 அளவில் வருகை தந்த சிலரே ஆலயத்தில் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
மாவத்தகம  பரந்தன வீதியிலுள்ள அம்மன் கோவிலிலே பெறுமதியான தங்க நகைகளும் பல இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
எனினும் கொள்ளையிடப்பட்டுள்ள பணம் மற்றும் தங்க நகைகளின் மொத்த பெருமதி இதுவரை கணிப்பிடவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 16 அக்டோபர், 2014

, பொலிஸ் நிலையம் முன்பு திரண்ட மக்கள் !

கல்முனை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ்
உத்தியோகஸ்தர் பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
நேற்று மாலை கல்முனை சிறீ முருகன் கோயிலில் பொலிஸ் உத்தியோகஸ்தர், பெண்ணொருவருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் அதனை அறிந்த பொதுமக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இருவரையும் நேரடியாக பிடித்துள்ளனர். அதன்பின்னர்
பொதுமக்களிடம் தாங்கள் இருவரும் காதலர்கள் என தெரிவித்துள்ளனர்.அங்கு வந்த  பொலிஸார்  அங்கு நடைபெற்ற சம்பவத்தை விசாரிக்காமல் ஆலய பிரதம குருவையும்
 இரண்டு இளைஞர்களையும் வலாத்காரமாக பிடித்து பொலிஸ் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர்
 இந்த சம்பவத்தால் கல்முனை மக்கள் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு  சம்மந்தப்பட்டவர்களை  கைது செய்யும்படியும்  அப்பாவிகளை விடுமாறு கோசம் எழுப்பினர்அப்பகுதியில் கட்டுக்கோப்பிற்கு  கொண்டுவரும் பொருட்டு கைது செய்தவர்களை விடுவித்துள்ளனர்

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 15 அக்டோபர், 2014

தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து

பலாங்கொடை வெலேகொட பகுதியிலுள்ள தேயிலை தொழிற்சாலை இன்று அதிகாலை பரவிய தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை மூன்று மணியளவில் தீ பரவியமை தொடர்பான தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீயினால் தொழிற்சாலை முற்றாக சேதமடைந்துள்ள போலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>