siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 டிசம்பர், 2013

ஆயிரம் மக்கள் பலியெடுக்கப்பட்ட மெரீனா!!!

கடற்கரையில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழகத்தில் கடலோர கிராமங்களில் பெருவாரியாக வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25–ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய களைப்பில் 26–ம் திகதி அதிகாலையில் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

அப்போது கடலில் உருவான சுனாமி பேரலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்தது.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மக்களை அப்படியே வாரி சுருட்டி கடலுக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி தொடங்கி குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் என பல மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களிலேயே மாண்டு போனார்கள்.



10 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது சுனாமி. இயற்கையின் சீற்றம் ஏற்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.