siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 5 ஜூலை, 2018

மரண அறிவித்தல் திரு வேலுப்பிள்ளை நாகலிங்கம்,04.07.18

பிறப்பு : 11 நவம்பர் 1934 — இறப்பு : 4 யூலை 2018
யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நாகலிங்கம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணபதி, சிவக்கொழுந்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
தயாபரன்(லண்டன்), மதுரநாயகி(லண்டன்), பாஸ்கரன்(கனடா), சசிகலா(இலங்கை), சுபாஸ்கரன்(லண்டன்), கெங்காதரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, தங்கம்மா, இரத்தினம், சேனாதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மோகனராஜா, காலஞ்சென்ற சந்திரசேகரம், விஜயசிறி, ஜெயாமதி, பகீரதி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கந்தசாமி, யோகராஜா, பாலசுப்பிரமணியம், விக்கினராஜா, இரத்தினராஜா, இராஜேஸ்வரி, சீதாதேவி  ஆகியோரின் 
அன்பு மைத்துனரும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற ராஜரட்ணம், யோகேஸ்வரி, அரசரட்ணம், நிர்மலாதேவி, அனுசா, தவராசா, கலா ஆகியோரின் தாய்மாமாவும்,
லோசனன் - பிரியந்தி, அபிநயா, அபிசா, கஜன், கயானா, சர்மிலா - திலீபன், கயானி, வர்ஷன், திர்ஷன், லற்றிகா, கிசோன், கிசானா ஆகியோரின் 
அன்புப் பேரனும்,
சதீப் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
வீட்டு முகவரி 
123 Clark Ave,
Thornhill, 
ON L3T 1T1, 
Canada.

தகவல்
பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/07/2018, 07:00 பி.ப — 10:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 11:30 மு.ப — 01:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 01:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada 
தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/07/2018, 04:00 பி.ப — 04:30 பி.ப
முகவரி: Highland Hills,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada 
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +14163193139
தயா — பிரித்தானியா
தொலைபேசி: +447904364609
சுபாஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +447961056023
கெங்கா — பிரித்தானியா
தொலைபேசி: +14168298195
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஜூலை, 2018

யாழில் வேலையில்லை! பட்டாதாரி இளைஞன் விபரீத முடிவு

படித்தும் வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் பட்டதாரி இளைஞன் யாழில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி கச்சாய்ப் பகுதியில் நேற்றுத் திங்கட்கிழமை(02) பதிவாகியுள்ளதாக கொடிகாமம்
 பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்டுள்ள இளைஞன் எழுதியுள்ள கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளது.அந்தக் கடிதத்தில் "பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை...எனது குடும்பத்துக்கு நான் ஒன்றுமே செய்யவில்லை,படித்தும் வேலை கிடைக்கவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சத்தியசீலன்(வயது- 29) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 3 ஜூலை, 2018

ஆறு வயதுச் சிறுவனின் உயிரைப் பறித்த றம்புட்டான்

சிலாபம் – கற்பிட்டி, ஆலங்குடா பிரதேசத்தில் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆலங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய 6 வயதாகிய முஹம்மது நிஜாம் றிகாஸ்தீன் என்ற சிறுவனே
 உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம்
 தெரிவித்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சிறந்த தாயாக் 2018 ஆம் ஆண்டிற்கான விருது பெறும் தாய்

செல்போன் மோகத்தில் ஏற்படும் தவறுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில், செல்போனை அவதானித்துக் கொண்டு தாய் ஒருவர் செய்த காட்சி பரபரப்பினை
 ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையினை மடியில் வைத்துக் கொண்டு அதற்கு சாப்பாடு தயார் செய்யும் அழகினை நீங்களே காணலாம்.செல்போனை அவதானித்துக் கொண்டு ஒரு குழந்தையை இப்படியா பசியில் உட்கார வைப்பது?. இந்த ஆண்டு சிறந்த தாய் என்ற விருது இவருக்குத்தான்
 கொடுக்க வேண்டும்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கோர விபத்து…கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஸ்தலத்தில் பலி

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று காலை  இடம்பெற்றுள்ளது.
பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீடு திரும்பி விட்டார்.
பாதசாரிகள் கடவையை மாணவி கடந்து சென்ற போது கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் மோதியுள்ளது.வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகனசாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளார் எனத்
 தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>