siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 30 ஜூலை, 2013

சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை இடம்பெறவுள்ளது


சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையை இன்று மாலை 3 மணிக்கு முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
நாட்டி தெரிவு செய்யப்பட்ட 14 கரையோர பிரதேசங்களில் இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மத்திய நிலையத்தின் ஊடகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் லால் குமார தெரிவித்தார்.
சுனாமி பேரலை உருவாகுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், தேவையற்ற பதற்ற நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் முகமாகவே இந்த செய்திகுறிப்பு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

வர்த்தகர் மீது அசிட் வீச்சு கிளிநொச்சியில் தாக்குதல்



கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி திவாகரன் என்ற வர்த்தகரே அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து  குறித்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

றோயல் கல்லூரி ஆசிரியை பாடசாலை கூரை மீது ஏறி


 
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த இடமாற்றமானது தன்னை பழிவாங்கும் செயல் என குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவருக்கான இடமாற்றம் உரிய நடைமுறைகளுக்கு அமையவே வழங்கப்பட்டதாக கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார்.
பாடசாலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் இருப்பார்களாயின் அவர்களின் விபரங்களை கல்வியமைப்பு கோருவது வழமையான விடயமாகும்.
இதன்படி, வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் குறித்த ஆசிரியையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.
எனினும், தமது இடமாற்றத்தை அவர் விரும்பாத காரணத்தினால் அதனை ரத்து செய்யக் கோரி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பிள்ளை யார் பக்திப்பாடல்கள்


வேண்டுவோர்க்கு வேண்டும்வரம் அருளும் வினை தீர்க்கும்அருள் மிகுபிள்ளை யாரின்  மிகவும் பக்த்திப் பரவசம் ஊட்டும் சிறந்த பாடல்கள்