siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 31 டிசம்பர், 2015

மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு நிதியுதவி!

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா 
வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார். 
வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணசபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டில் இருந்து பனை, 
தென்னை மரங்களில்
 இருந்து வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதார நிதியாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். 
அத்தோடு, அண்மையில் 2016 ஆம் ஆண்டுக்கான தனது அமைச்சுக்கான நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இதனைத் தெரிவித்திருந்தார். 
இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆறு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. 
வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை
 உறுப்பினர்கள், 
பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார் ஆகியோரும் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 22 டிசம்பர், 2015

நான் முன்பே வாக்குக் கொடுத்திட்டேன்???

தாய்: ஏண்டி சேஷலூ குட்டி அவன் சாயபு ஆச்சுதேடி அவன்கிட்டே என்னடி ரகசியம் பேசுறே.
மகள்: இல்லே அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கச்சே வீதியிலே விளையாண்டிருந்தப்போ மணலிலே ஒரு வீடு கட்டினேன். அதை வந்து இந்த அடுத்த ஆத்து சுக்கூர் இடிக்க வந்தான். நான் இடிக்காதடா என்று சொன்னேன், அப்படியானால் என்னைக் கட்டிக்கிறாயா என்று கேட்டான், நானு வீடு இடிந்துபோமேன்னு ஆகட்டுமென்று சொல்லிட்டேன். அதை இத்தனை நாள் மனசிலே வெச்சிண்டிருந்து இப்ப வந்து கேக்கராண்டி.
தாய்: நீ என்னடி சொன்னாய்.
மகள்: நான் என்னம்மா சொல்லட்டும், ஆகட்டுமென்னுதான் சொல்லித் தொலைச்சேன்.
தாய்: அடிஅடி நாசமாப்போன முண்டே! துலுக்கனையா கட்டிக்கிரேண்ணு சொன்னே, நீ பேதியிலே போக, நீ பிளேக்கிலே போக, உனக்கு ஒரு உளமாந்தை வர.
மகள்: கோவிச்சுக்காதே அம்மா! அப்ப நான் ஆகட்டும் என்னு சொல்லியிருந்தேன் அல்லவா, அதை வச்சிண்டு வந்து கேட்டான். பின்னே நான் என்ன சொல்றது.
அப்ப நான் அப்படி சொல்லாதெ இருந்தா வீட்டை இடிச்சிருப்பானம்மா?
தாய்: உன் தலையிலே நெருப்பைக் கொட்ட, நான் 2, 3 வருஷத்திற்கு முன்னையே உன்னைக் கல்யாணம் பண்ணனும்
 என்னு உங்கப்பா
ஓடே சொன்னபோது, உங்கப்பா சாரதா சட்டமோ லக்ஷிமி சட்டமோ என்னமோ பேரெழவு சட்டம் குறுக்கிடறதடி என்று சொன்னார் அந்தப் பிராமணன். இப்போ நீ மண்ணுக் கொளிச்சிண்டு விளையாடற போதே அவனுக்கு வாக்குக்கொடுத்துட்டேன் என்கின்றாயே, இன்னம் கொஞ்ச நாள் போனா பறையனுக்கும் சக்கிலிக்கும் பால் குடிக்கிறபோதே வாக்குக்கொடுத்துட்டே னென்றல்லவாடி சொல்லுவாய். என் வயிறு பத்தி எறியரதேடி, நீ அந்த சுக்கூரோடு கொஞ்சினதைப் பார்த்து.
மகள்: இல்லே அம்மா உன்னெதிரிலே நான் கொஞ்சுவேனா அம்மா? 2, 3, வருஷத்திற்கு முன்னே கல்யாணம் ஆயிருந்தால் கூட அப்பவும் நான் வாக்குத் தவறமாட்டேனம்மா. இதுக்கு நீதான் ஒரு வழி சொல்லேன். இப்ப அவன் வந்து நீ சொன்ன வார்த்தை என்னடி சேஷலூ குட்டி என்றானே, அப்பவும் இப்படித்தானே கேட்பான்.
தாய்: அடி சண்டாளி சொன்ன வார்த்தையாவது மண்ணாங்கட்டியாவது அவன் இனிமே இங்கே வந்தா உன் மயிரை அறுத்துடுவேன் தெரியுமா?
சின்னக் குழந்தையாய் இருக்கும்போது என்னமோ சொன்னாளாம் அவன் வந்து இப்போ கேக்கறானாம் என்னடி அனியாயம் இது?
மகள்: நீ மயிரை அறுக்கவாண்டாம் அம்மா சுக்கூரே என் மயிரைக் கத்தரிச்சூடறேன் என்று சொல்லி இருக்கான். யாரோ சரோஜனி குட்டிகளாம் அதுகள் மயிரைக் கத்திரிச்சிண்டிருக்காம். அதுமாதிரி என்னையும் கத்தரிச்சு விட்றேன்னு சொன்னான்.
தாய்: அய்யய்யோ கெட்டுப்போச்சடி காரியம். நம்ம குடும்பத்தையே ஜாதியையே பாழாக்கீட்டாயே நான் காவேரியில் போய் வீழ்ந்துடறேண்டி உன்னாலே.
மகள்: அம்மாம்மா, வேண்டாம்மா பின்னெ நான் என்னாம்மா சொல்லட்டும் சுக்கூருக்கு?
தாய்: என்னடி சொல்லறது. நான் அப்போ கொழந்தையா இருக்கச்சே வேடிக்கையா சொன்னா இப்ப என்னமாடா வந்து இத்தனை தைரியமாக் கேக்கறாய் என்று அதட்டிச் சொல்லடி
மகள்: இப்பவும் நான் கொழந்தை தாம்மா.
இப்ப யாரையாவது கட்டிண்டா கட்டின ஆம்படையானை இன்னும் 10 நாள் பொறுத்து நான் கொழந்தையா இருக்கும்போது கல்யாணம் செய்தூண்டேன் நீ வாண்டாம் போண்ணு சொன்னா போய்டுவானா? அப்படிதாம்மா சுக்கூரும் கேட்பான். ஒரு தடவை வாக்குத் தவறினால் என்ன? இரண்டு தடவை வாக்குத் தவறினால் என்ன? அப்புறம் தினம் தினம் வாக்குத் தவறினால் தான் என்னம்மா?
நான் சுக்கூர் கிட்ட சொல்லீட்டேன். கட்டினா அவனைக் கட்டிக்கிறேன். இல்லாவிட்டால் கன்னியா மடத்தில் சேர்ந்துக்கிறேன். எனக்குப் புருஷனே வாண்டாம், சுக்கூர் முகத்தில் மறுபடியும் நான் எப்படி 
விழிப்பேன்.
தாய்: உங்கப்பா வரட்டுமடி, நாளை காலையில் வரப்போரார். இதெல்லாம் அவரிடம் சொல்லி உன்னை இந்த வாரத்துக்குள்ளாகவே எவன் தலையிலாவது கட்டித்தொலைத்து விட்றேன்.
மகள்: அப்படியா என்னமோ செய்துக்கோ நான் என்னமோ சுக்கூருக்கு வார்த்தை கொடுத்திட்டேன்.
தாய்: உம், உம் கொடுப்பேடி ஆள் எளபபாளியாய் இருந்தால் (என்று சொல்லி விட்டு பேச்சை முடித்து விட்டாள்.(இரவு 1 மணிக்கு சுக்கூரும் சேஷலூக் குட்டியும் டப்பிள். தகப்பனார் வந்தார்.)
தாய்: ஏம் பேசலே கேட்டீளா சேஷலூ குட்டி அடுத்தாத்து சுக்கூருடன் ராத்திரி ஓடிட்டா.
தகப்பன்: அவனோடு தான் போனாள் என்று உனக்கு எப்படிடீ தெரியும்.
தாய்: நேற்று அவனோடு சிரிச்சிண்டு பேசிகிண்டிருந்தா. நான் கண்டிச்சேன். அவள் ஒரு தைரியம் சின்ன கொழந்தையாய் மண்ணுக்
 கொளிச்சிண்டு 
விளையாடும்போது அவனைக் கட்டிக்கிறேண்ணு வாக்குக் கொடுத்துட்டாளாம். அதுக்காக அவனை கட்டிக்கணுமாம். அப்படின்னு என்னிடம் சொல்றா, வஸ்சேன் அப்பா வந்த சொல்ரேண்ணே. பயந்துண்டு ஓடிட்டா முண்டை.
தகப்பன்: சனியன் தொலைந்தது போ. அவன் மேலே அவளுக்கு ஆசை வந்துட்டுது என்னமோ சொல்லிண்டு ஓடிட்டா. நல்லகாரியம் இந்த நம்ம அயோக்கிய ஜாதியிலேயே அவளுக்கு தகுந்த மாப்பிள்ளை வேணுமுண்ணா 5000 ரூ வரதக்ஷணை கல்யாணச் செலவு 2000 ரூ ஆக 7000 ரூபாயிக்கு எங்கே போரது யாரை விக்கிறது.
போகட்டும் போ அவனும் SSLC. பாசுபண்ணி இருக்கான். நல்ல அசல் சாயபு. பிராமணனாட்டமா செக்கச்செவேரெண்ணு இருக்கான். பிராமணன் M.A. படிக்கிறதும் சரி சாயபு SSLC படிக்கிறதும் சரி, சீக்கிரத்திலெ ஏதோ வேலைக்கு வந்துடுவன், நம்மை விட்டது சனியன்.
தாய்: ஐயய்யோ அசட்டு பிராமணா அப்படிதான் இருந்தாலும் ஒரு முதலி நாயக்கன் இல்லையா சாயப்போடவா ஓடரது.
தகப்பன்: என்னமோ அவ கண்ணுக்கு பிடிச்சவனோடு போய்ட்டா. நம்ம ஜாதியில் இல்லாவிட்டால் வேறு யாரோடு போனால்தான் என்ன? முதலிக்கும் சாயபுக்கும் என்னடி வித்தியாசம் மொட்டை ஒன்றுதானே, உனக்கு என்னத்துக்கடி இத்தனை ஆத்திரம்
தாய்: சுக்கூர் அவாத்திலே பொண்ணை மூடி போட்டல்லவா வெச்சூடுவா. இனி அவளைப் பார்க்க முடியும்
தகப்பன்: நீ வேணுமன்னா அவாத்துக்கு போய் தினம் பாத்துட்டு வாடி யாரு வாண்டாமென்றா.
தாய்: சரி சரி அவாத்துக்கு போனா நாலுபேரு என்ன சொல்லுவா.
தகப்பன்: என்னமோ சொல்லுவா நான் சம்மதிச்சா அப்பரம் யார்டீ கேக்ரெவா இனி அப்படித்தாண்டி எல்லாம். ராஜகோபாலாச்சாரியார் சேட்டுக்கு பெண் கொடுக்கலையா?
சூரியராவ் நாயுடு ஒரு சாயபுக்கு பெண் கொடுக்கலையா? நீலகண்ட சாஸ்திரி வெள்ளைக்காரனுக்கு பெண் கொடுக்கலையா? சடோபாத்தியாயா நாயுடுக்கு பெண் கொடுக்கவில்லையா? நாம்தானா கெட்டுப்போயிட்டோம். அதுவும் நாமா கல்யாணம் செய்து கொடுத்தமா அவளே ஓடிட்டா.

நமக்கு என்னடி பயம் ரூ 7000 மிச்ச மாச்சடி சுக்கூர் அவப்பா சிபார்சிலே நம்ம மணிக்கி கூட ஒரு உத்தியோகம் வந்துடும். நீ ஒண்ணும் சத்தம் போடாதே. யாராவது கேட்டால் காங்கிரஸ்காரர் கேட்டா இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லடி. ஜஸ்டிஸ்காரர் கேட்டா சுயமரியாதையில் சேர்ந்துட்டோம் என்று சொல்லடி, அப்பரம் யார் நம்மண்டை வருவா 
பார்ப்போம்.
தாய்: சரி பகவானே காலம் இப்படியா கெட்டுப்போகணும்?
தகப்பன்: என்னடி கெட்டுப்போச்சி? நாளவருஷத்துக்குப் பார்டீ சேஷலூகுட்டி தங்க விக்கிரகமாட்டமா பிள்ளை பெத்துடப்போரா எங்கயோ அவா சௌக்கியமாய் இருந்தால் சரி, போய் வேலையைப் பார்.
 சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் எழுதியது --- “பகுத்தறிவு” - ஜனவரி 1936
Labels: பெரியார்
29.12.10
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?
பார்ப்பனர் எதிர்ப்பா? பார்ப்பனீய எதிர்ப்பா? எது சரி?
நீங்கள் வெறுப்பது பார்ப்பானையா? அல்லது பார்ப்பனீயத்தையா? அல்லது பார்ப்பனீயம் என்பது என்ன? என்ற கேள்விகளுக்குப் பதில் என்பது என்ன? பார்ப்பானில் இருந்துதானே பார்ப்பனீயம் வந்தது; எனவேதான் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்கிறேன்.
திருடனை வெறுக்கிறாயா அல்லது திருட்டை வெறுக்கிறாயா என்பது போல் இருக்கிறது; திருடனாக இருப்பதால்தானே அவன் திருடுகிறான்; எனவே இது அர்த்தமற்றதாகும். திருட்டுதனத்தை வெறுக்கும்போது திருடனையும் வெறுப்பதாகத்தானே அர்த்தம்? எனவே பார்ப்பானில் இருந்துதான் பார்ப்பனீயம் வந்தது; மூலத்தை 
ஒழிக்கப்பாடுபடுகிறேன்.
31.08.1959 சிதம்பரத்தை அடுத்த கண்ணன்குடியில் பெரியார் ஈ.வெ.ரா.சொற்பொழிவு. “விடுதலை” 11.09.1959
Labels: பெரியார்
முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா?
யாகம் என்னும் கலாச்சாரம்!
யாகம் என்ற பெயரால் தீயில் உயிர்களைப் பலி கொடுப்பது என்பது ஆரியர்களின் கலாச்சாரம்.
ஆரியர்களின் இந்தத் தாக்கத்தால் தமிழ் அரசர்களும் கெட்டுக் குட்டிச் சுவர் ஆனதும் உண்டு. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிகள் தோன்றினார்கள். சிலப்பதிகாரத்திலும் பார்ப்பன யாகக் கடை விரிக்கப்பட்டுவிட்டது.
வடபுலம் என்று வீரப் பராக்கிரமம் காட்டி கனக விசயன் தலையில் கல்லேற்றி வந்த வீராதி வீரன் செங்குட்டுவன் மாடல மறையோன் என்னும் பார்ப்பன நஞ்சு, ஊட்டிய மதப் போதையில் சிக்கி யாகம் நடத்தி, மானம் 
கெட்டான்.
பார்ப்பனர்களின் இந்த யாகத்தை எதிர்த்து கவுதமப் புத்தர் 2500 ஆண்டுகளுக்குமுன் போர்க் கொடி தூக்கினார்.
ஆடு, மாடுகளைத் தீயில் பலி கொடுத்து சொர்க்கம் போக முடியும் என்றால், உமது தகப்பனாரை யாகத் தீயில் போட்டுப் பொசுக்கி, நேரடியாக மோட்சம் போவதுதானே? என்ற அறிவு சார்ந்த வினாவை நாக்கைப் பிடுங்கும்படிக் கேட்டார்.
தசரதன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகம், காட்டு விலங்காண்டித்தனமானது. வெட்டுண்ட குதிரைகளுடன் தசரதனின் பட்டத்தரசிகள் கட்டிப் புரண்டனர் என்பது என்னே கண்ணராவி!
யாகப் புரோகிதர்களுடன் பட்டத்தரசிகளை அனுப்பி வைத்து அவர்கள்மூலம் கர்ப்பமாக்க வைத்த காரியம்தான் இந்து மதக் கலாச்சாரத்தின் 
உச்சகட்டம்.
ஆரியர்களின் யஜுர் வேதம் என்பது முழுக்க முழுக்க உயிர்க் கொலை யாகங்கள் பற்றியே பிரஸ்தாபிப்பதாகும். 30 வகை யாகங்கள்பற்றிக் கூறப்படுகின்றன. அதில் ஒன்று அஸ்வ, மனுஷ்ய, அஜ, கோ பசுப்ர சமஸா என்பதாகும்.
குதிரை, மனிதன், ஆடு, மாடு முதலிய உயிர்களைக் கொன்று யாகம் நடத்துவதாகும்.
அரிச்சந்திரன் என்ற அரசன் புத்திரப் பேறில்லாது வருந்திக் கொண்டிருந்தபோது வருண தேவனின் கட்டளைக்கிணங்கி அஜூகர்த்த முனிவரின் புத்திரனான சுன சேபன் என்பவனை விலைக்கு வாங்கி, அவனைக் கொன்று நரமேத யாகம் செய்த தகவல் ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. விசுவாமித்திரனின் சகோதரியின் மகன் அச்சிறுவன்; கடைசி நேரத்தில் தன் தவ வலிமையால் காப்பாற்றினாராம் முனிவர்.
இந்தக் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்த பவுத்தர்களையும், சமணர்களையும் படுகொலை செய்தது பார்ப்பனியம்.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றிய கொலைகார மதம்தான் இந்தப் பார்ப்பன இந்து மதம்.
வேத வேள்வியை நிந்தனை செய் துழல்
ஆத மில்லிய மனோடு தேரரை
வாதில் வென்றழிக்க திரு வுள்ளமே
வேதங்களை யாகங்களைப் பழிக்கும் சமணர்களை வென்று அழித்திட அருள்புரிவாயாக என்று கடவுளுக்கு விண்ணப்பம் போடுகிறான் தேவார திருஞான சம்பந்தன்.
யாகங்களை பவுத்த சமணர்கள் எதிர்த்ததும், அவர்களைப் பார்ப்பனர்கள் அழித்ததும் நமது வரலாறாகும்
இவ்வளவு பீடிகையும் எதற்காக? அண்மைக்காலமாகப் பார்ப்பனர்கள் யாகக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார்கள். உலக க்ஷேமத்தை யாகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
எத்தனை எத்தனை ஆண்டுகாலமாக இத்தகைய யாகங்களை நடத்தி வருகிறார்கள்? நாட்டில் அமைதி தாண்டவம் ஆடிவிட்டதா?
இதோ ஒரு செய்தி:
கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பையடுத்த குமாரகுடியில் ஏகாதசி மகா ருத்ர யாகமாம்.
இதில் ஜப்பான் நாட்டினர் நூறு பேர்கள் கலந்துகொண்டனராம். (முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே ஏக போகமா? என்று தந்தை பெரியார் கேட்ட கேள்விதான் நினைவிற்கு வருகிறது).
150-க்கும் மேற்பட்ட வேதப் பார்ப்பனர்கள் இந்த யாகத்தை நடத்தினார்களாம். ஸ்ரீ அகத்திய நாடி ஜோதிட நிலையம் மற்றும் ஜப்பான் நாட்டின் அபி இண்டர்நேஷனல் இன் கார்ப் நிறுவனமும் இணைந்து உலக நன்மை வேண்டி இந்த யாகத்தை நடத்தினவாம்.
எவ்வளவு உணவுப் பொருள்கள் பாழாகி இருக்கும்? எவ்வளவுப் பட்டுச் சேலைகளைக் கொளுத்தியிருப்பார்கள்?
உற்பத்தி நாசம் செய்யும் இந்தக் கொடியவர்களைத் தண்டிக்க வேண்டாமா?
வேதப் பார்ப்பனர்கள் சுரண்டிக் கொழுத்து, பார்ப்பனக் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்தத்தான் இத்தியாதி யாகங்கள்.
சிந்திக்கும் திறனிருந்தால் 
சிந்தியுங்கள்!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 19 டிசம்பர், 2015

இலவச தொலைபேசிகள் ஊடகவியலாளர்களுக்கு?

நாட்டிலுள்ள சகல ஊடகவியலாளர்களுக்கும் இலவச ஸ்மார்ட் தொலைபேசிகளை வழங்கும் திட்டம் ஒன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ
 தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அடுத்த வருடம் முதல் இலவச ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் மானிய விலையில் இணைய தரவு பக்கேஜ் வழங்க திட்டமிட்டுள்ளோம்.
அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகளுக்கு மானிய தொலைபேசி இணைப்பு வழங்கப்படவுள்ளதுடன், பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து TAB உபகரணமும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 16 டிசம்பர், 2015

கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்

கொழும்பின் புறநகர் கந்தானை கப்புவத்த பிரதேசத்தில் சனிக்கிழமை காலை இடம்பெற்ற ரயில் - கார் விபத்தில் இருவர் உடல் நசுங்கிப் பலியாகினர்.
ரயில் கடவையைக் கடக்க முயன்ற கார் ஒன்று ரயிலுடன் மோதியபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பங்கதெனியவிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கடுகதி ரயிலுடன் பட்டுகமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் கப்புவத்தை புகையிரத கடவைக்கு அருகில் வைத்து மோதியதால் காரில்
 பயணித்த இருவர்
 பலியாகினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் மினுவாங்கொடையைச் சேர்ந்த நிமல் ராஜபக்ஷ பண்டார (வயது 42) என்ற கார் சாரதியும் ஜா - எலையைச் சேர்ந்த பெட்றிக் அருணோத் கனகப்பெருமாள் (வயது 24) என்ற இளைஞரும் பலியாகியுள்ளனர் என்று கந்னைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

இதோ டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு

மெக்ஸிக்கோவில் உலகிலேயே முதல் முறையாக டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Aedes aegypti மற்றும் Aedes albopictus எனும் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலானது சளி, இருமல், என சாதாரண அறிகுறிகளாக ஆரம்பித்து இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் 
கொண்டதாகும்.
‘ஸனோஃபி’ என்ற பிரான்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் டெங்கு நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈடுபட்டு, ‘டெங்வாக்ஸியா’ எனப்படும் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்து மெக்ஸிகோ நாட்டின் ஒப்புதலையும் 
பெற்றுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வியாழன், 10 டிசம்பர், 2015

மணப்பெண்ணிற்கு வழக்கமாகஅம்மாஅறிவுரை கூறுவார் மாறாக தந்தை???

திருமணமாகப் போகும் தன் மகளுக்கு ஒரு தந்தையின் அறிவுரை :
வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும்
தானே அறிவுரை கூறுவார்கள், பின்
ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன்
என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா?
செல்லமே!
அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..
1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா...என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடம் , என்
அப்பாதான் 'பெஸ்ட்' என்ற எண்ணமும் உன்
மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள். வார்த்தைகளில் வெளிப்படுத்தி 'உன்னவரின்' மனதில்
எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
.உன் கணவரிடம், "என் அப்பா நேரம் தவற மாட்டார்"," என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்" என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா....
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.
2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே. என்
வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை கண் மறைத்திருக்கலாம்.
அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு. முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி,
அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.
3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள்
இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், "நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் ","
எனக்கு என் அப்பா இருக்கிறார் " என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம்
போட்டு உட்கார வைக்கும்.
சுருக்கமாக கூற வேண்டுமானால்....
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*'அப்பா செல்லம் ' என்ற பட்டம் பயன் தராது .
*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.
22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.
நீடுடி வாழ வாழ்த்துகள்....!
அன்புடன் அப்பா.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்வதற்காகவே, அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்தவேண்டியுள்ளது. அத்தோடு பயிர்ச்செய்கை நிறுத்தப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்‘ என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளைத் தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாக பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுதாகரன் மேலும் தெரிவித்தார்.-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



திங்கள், 7 டிசம்பர், 2015

பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பதனால் தேயிலை உற்பத்தி வீழ்ச்சி!

இலங்கையின் தேயிலை உற்பத்தி கடந்த மூன்று வருட கால வீழ்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்ப்டடுள்ளது.
தேயிலை வர்த்தக அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை மற்றும் குறைந்த விலை என்பன இதற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதம் ஐந்து சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்த மொத்த தேயிலை உற்பத்தி, 26.7 மில்லியன் கிலோவாக பதிவாகி
 இருந்தது.
ஜனவரியில் இருந்து ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 279.8 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டிருந்ததுடன், இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 1.4 சதவீத வீழ்ச்சியாகும்.
குறிப்பாக கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் மே மாதம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகவும் குறைவாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 3 டிசம்பர், 2015

இருவர்.குளாய் கிணற்றுக்குள் மூச்சுத் திணறிபலி!!!

யாழ் உடுப்பிட்டி பகுதியில் குளாய் கிணற்றுக்குள் ஏற்பட்ட பழுது பார்ப்பதற்கு இறங்கிய 2 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார்.
புலோலி பகுதியினைச் சேர்ந்த மகாநாயகம் (வயது 56), பருத்தித்துறையினைச் சேர்ந்த கிருஸ்னமூர்த்தி (வயது 61) ஆகிய இருவருமே
 இச் சம்பவத்தில்
 உயிரிளந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேற்படிப் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளாய் கிணற்று மோட்டர் பழுது பட்டுள்ளது. இதனை
 திருத்துவதற்கு
 பாரிய பள்ளத்திற்குள் இறங்கி ஒருவர் முயசித்துள்ளார்.
திருத்த வேலைக்காக பள்ளத்திற்குள் இறங்கியவரை நீண்ட நேரமாக காணவில்லை என்ற காரணத்தினால் அவருடன் வந்த மற்றைய நபரும் அந்த பள்ளத்திற்குள் இறங்கியுள்ளார். ஆனால் இருவருமே வெளியில் 
வரவில்லை.
 பள்ளத்திற்குள் சடலமாகவே இனங்காணப்பட்டுள்ளார். இருவரும் பள்ளத்திற்குள் மூச்சு திணறி உயிரிளந்திருக்கலாம்
 என்று நம்பப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளான்.

நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து 
செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்
 நடந்திருக்கிறது.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது.
பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது
 போலத்தெரிகிறது 
. விழுந்த துப்பாக்கி மீது ஏறி அந்த நாய் நடந்த போது அந்த துப்பாக்கியை தற்செயலாக வெடிக்கச் செய்திருக்கிரது.
ஓய்வூதியம் வாங்கும் இந்த நபர் கையில் துப்பாக்கிக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார். பிரான்சில் கடந்த ஆண்டு மட்டும் வேட்டை ஆடும்போது ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் விலங்குகள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு 
சுடப்பட்டவர்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை 
வழங்கியுள்ளது.
பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
 பிறந்த 402 குழந்தைகள் இறந்துள்ளதாக மகபேறு வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆலோசகருமான கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சிசு மரணங்களில் 201 மரணங்கள் மகபேறு அறையில் நிகழ்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண் ஒருவர்க்கு முகமாற்று அறுவை சிகிச்சைசாதனை?

அகோர முகம் படைத்த போலந்து பெண் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் பெரிய சாதனை புரிந்துள்ளனர்.
போலந்து நாட்டின் வாழும் 26 வயது பெண் Joanna என்பவர். இவருக்கு பிறவியிலேயே neurofibromatosis என்ற நோய் தாக்கியதால் அவருடைய முகம் நாள் ஆக ஆக அகோரமாக மாறிக்கொண்டே வந்தது. பிறரிடம் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட மிகுந்த கஷ்டப்பட்டார். எனவே அவருடைய முகத்தை 80% மாற்றி வேறு முகத்தை பொருத்த மருத்துவர்கள்
 முடிவு செய்தனர்.
23 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து Joannaவின் முகத்தை அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்தார்கள். மீண்டும் அவருக்கு பழையபடி கோரமான நோய் தாக்காது என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.
முகமாற்று அறுவை சிகிச்சை முடிந்து நேற்று அழகிய முகத்துடன் வெளியே வந்த Joanna,தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், தனக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்த தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>



வெள்ளி, 20 நவம்பர், 2015

இரு இளைஞர்கள் தாடிவளர்த்ததால் பொலிசாரால் கைது?

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய  இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு தமது சொந்த அலுவல் காரணமாக சென்று இருந்தனர்.

நவாலி முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் வைத்து அவர்கள் இருவரையும் மானிப்பாய் பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு எனது மகனின் நண்பர் எதற்காக எம்மை கைது செய்தீர்கள் என்று கேட்டதற்கு  ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேர்ந்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

பிளாஸ்ரிக் குழாய்க்குள் மண்ணினை இட்டு அதனால் தாக்கி யுள்ளனர் மாலை 5 மணிக்கு நான் அவரை  பொலிஸ் நிலையத்தில் பார்த்த போது அவரின் தலையில் பெரிய வீக்கம் இருந்தது. அந்தளவுக்கு பொலிசார் தலையில் கூட மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

அங்குள்ள அதிகாரியை கேட்டேன் எதற்காக இவர்களை கைது செய்துள்ளீர்கள் என, சந்தேகத்தின் பேரில் கைது செய்தோம். என்றார்.

யாழில் இளைஞர்கள் வீதியில் நடந்து சென்றால் பொலிசார் சந்தேகத்தின் பேரில் என கைது செய்ய முடியுமா ? அவசரகால சட்டம் இருக்கின்றதா ? என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள்  என கேட்டேன். அவர்கள் தாடி வளர்த்து இருக்கிறார்கள். அதனால் எமக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது என கூறினார்.

அவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் விரத காலத்தில் தலைமுடி வெட்டுவதோ  சேவ் எடுப்பதோ இல்லை என அவருக்கு விளங்க படுத்தினேன்.

நண்பகல் 12 மணிக்கு வீதியால் நடந்து சென்ற குற்றத்திற்காக இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து தாக்கி உள்ளனர். அத்துடன் எந்த விதமான முறைப்பாடும் அவர்கள் மீது பொலிசார் எழுதவில்லை.மனித உரிமை மீறப்பட்டு உள்ளது.

நண்பகல்  12 மணிக்கு  கைது  செய்யப்பட்டவர்களை சுமார் எட்டு  மணித்தியாலங்கள் தடுத்து  வைத்து இருந்து இரவு எட்டு மணிக்கு தான் எனது மகனையும் அவரது நண்பரையும் பொலிசார் விடுவித்தனர் அதுவரை எந்தவிதமான முறைப்படும் எழுதவில்லை. சந்தேகம் எனும் பெயரில் இருவரையும் கைது செய்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தினேன்.

அவர்கள் அது தொடர்பில் முறைப்பாட்டினை தம்மிடம் தருமாறு கோரியுள்ளனர். முறைப்பாட்டினை கொடுக்க வுள்ளேன்.அந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த விடயத்தை அணைந்து மேல் மட்டத்திற்கும் எடுத்து செல்வேன்.

வடமாகாண  எதிர்கட்சி  தலைவர் என்பதாலும் சிங்களம் தெரியும் என்பதாலும் என்னால் எனது மகனுக்காக கதைக்க முடிந்தது இதுவே ஒரு சாதாரண குடும்ப பின்னணியினை கொண்ட  இளைஞர்களுக்கு நடந்து இருந்தால் பொலிசாரை கேள்வி கேட்டு இருக்க முடியாது.

எனவே இந்த சம்பவத்தை  சாதாரண சம்பவமாக விடாது இதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸ் உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,
 பாலமுனை ஆகிய 
பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் 
வழங்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி வாய்ப்புக்கள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், யு எஸ். எயிட்டின் பிரதி குழுத் தலைவர் அந்திரோ பேக்கர், குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரி.சக்திவேல் உட்பட கலந்து கொண்டனர்.
இதன்போது புரைலர் முகாமைத்தவ பயிற்சி கைநூல் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்சிற்கு குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் 
வழங்கி வைத்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ் 
வங்கிகளில் 
வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச் 
செய்துள்ளனர்.
இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பணத்தை இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர். சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வைப்பாளர்களது பணமும் இவற்றில் அடங்குகின்றது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் காட்சி கொடுத்த மயில்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.ஆனால் ,நீண்ட நாட்களின் பின்னர் ஆலய 
முன்றலில் குறித்த மயிலானது காட்சி கொடுப்பதாகவும் ,இவ்வாறான
 காட்சியைக் காண்பது அபூர்வமெனவும் நாள்தோறும் ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை,குறித்த மயிலைச் சீண்ட முனைபவர்களையும் ,வேடிக்கை பார்த்த சிலரையும் இந்த மயில் துரத்திக் கொத்தியதையும் அவதானிக்க முடிந்தது.ஆன போதும் நல்லூரானைத் தரிசிக்க வந்த அடியவர்களுக்கு மயிலால் தொல்லை எதுவும் ஏற்படவில்லை என்பதும்
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வெள்ளி, 30 அக்டோபர், 2015

இலங்கைக்கு விண்ணிலிருந்து விழும் மர்மப்பொருளால் ஆபத்து இல்லை?

நவம்பர் 13ம் திகதி விண்ணில் இருந்து விழும், WTF1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப் பொருளினால் இலங்கைக்கு எந்த ஆபத்தோ, சேதமோ ஏற்படாது என்று கலாநிதி சந்தன ஜெயரத்ன 
தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் மூத்த விரிவுரையாளரும், ஆர்தர் சி கிளார்க் மையத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞானத்துறை ஆலோசகருமான கலாநிதி சந்தன ஜெயரத்ன இதுகுறித்து மேலும் தகவல் வெளியிடுகையில்,
வானில் இருந்து விழும் பொருள் பெரும்பாலும் வெடித்து, புவி மேற்பரப்பை அடைய முன்னர் எரிந்து விடும். எனவே இதுகுறித்து அச்சமடைய வேண்டிய தேவை இல்லை.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்ற இடத்தில், இந்த மர்மப் பொருள் விழும் என்று எதிர்பார்க்க முடியாது. அது கடைசி நேரத்தில் மாறக் கூடும்.
கடந்த காலங்களில் விண்ணில் இருந்து பொருட்கள் பற்றிய விஞ்ஞானிகளின் எதிர்வுகூறல்கள் மாறியிருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.
விண்ணில் இருந்து விழும் குறித்த மர்மப் பொருள், வரும் நவம்பர் 13ஆம் நாள் அம்பாந்தோட்டைக்குத் தெற்கே 100 கி.மீ தொலைவிலுள்ள கடற்பகுதியில் விழும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 28 அக்டோபர், 2015

தொலைக்காட்சி திருட்டில் திருடர்கள் சிக்கினர்

 மல்லாகம் ரயில் நிலைய வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து தொலைக்காட்சியைத் திருடிய 4 சந்தேகநபர்களை, நேற்று கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி வீட்டில் கடந்த 23ஆம் திகதி குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.  இது தொடர்பில் குறித்த வீட்டைக் கண்காணிக்கும் பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு 
செய்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வீடு ஒன்றில் பட்டப்பகலில் கொள்ளையர்களினால் திருட்டு


சுன்னாகம் kks வீதி கொத்தியாலடி சந்தியில் உள்ள வீடு ஒன்றில் கூரை வழியாக சென்று கொள்ளை இடம்பெற்றுள்ளது.
இவ் வீட்டில் தம்பதிகள் வேலைக்கு சென்ற வேளையில் இந்த திருடர்கள் தம் கைவரிசையை காட்டியுள்ளனர்.வீட்டின் கூரை வழியாக உள்நுழைந்த திருடன் வீட்டில் இருந்த பெரும் மதிப்புள்ள கணணியை களவாடி வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளான்.
மாலை வேலை முடிந்து வீடுதிரும்பிய தம்பதியினர் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின்னர் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சில பகுதிகள் யாழ்- கண்டி ஏ9 வீதியின் உடைவு!

யாழ்ப்பாணம் கண்டிவரையான ஏ-9 வீதியின், கடுகஸ்தொட மற்றும் அம்பதென்ன வரையான வீதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பிரதேசத்தில் பெய்யும் அதிக மழையுடன் கூடிய காலநிலையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் பல பகுதிகளிலும் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளப்பெருக்குகம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணங்களில் பல பிரதேசங்கள் அதிகரித்த மழை வீழ்ச்சியினால் வீதிப் போக்கு வரத்து தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன...
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சரணாலயத்தில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்???

யால வனவிலங்கு சரணாலயத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் ஒருவர் திடீரென மரணித்துள்ளதாக திஸ்ஸமஹாரம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யால வனவிலங்கு சரணாலயத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்த போது குறித்த வெளிநாட்டுப் பெண் திடீரென சுகவீன
முற்றுள்ளார்.
சுகவீனமுற்ற பெண் திஸ்ஸமஹாரம தெபரவௌல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிந்தவர் சீனப் பெண் எனவும் கடந்த 24ம் திகதி அவர்
 இலங்கைக்கு 
வந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த பெண்ணுடன் மற்றுமொரு சீனப் பெண்ணும் இருந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் திஸ்ஸமஹாரம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>