siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 மார்ச், 2024

மரண அறிவித்தல் திருமதி துரைசிங்கம் பரமேஸ்வரி 30.03.2024

துயர் பகிர்வு -- உதிர்வு -30-03-2024 
யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் ஸ்கந்தபுரதை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர் திருமதி  துரைசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் .30-03-2024.சனிகிழமை அன்று 
       . இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01,04,2024 திங்கள் கிழமை அன்னாரின் இல்லத்தில் (இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்)நடைபெற்று பகல் 11 மணியளவில் தகனக்கிரியைக்காக பூதவுடல் 
கண்ணகைபுரம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்.
வீட்டு முகவரி
இல113கண்ணகைபரம் ஸ்கந்தபுரம்



சனி, 30 மார்ச், 2024

நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவர் உயிரிழப்பு : விசாரணைகள் ஆரம்பம்

நாட்டில் ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை மட்டத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் ரணவீர தெரிவித்தார்.
கோ-அமோக்ஸிக்லாவ் என்ற தடுப்பூசியை செலுத்திய பிறகு நோயாளி உயிரிழந்துள்ளார். எனினும் தடுப்பூசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மரணம் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் 50 வயதுடையவர் எனவும் காது தொடர்பான சுகயீனம் காரணமாக கடந்த 22ஆம் திகதி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
.என்பது குறிப்பிடத்தக்கது.




 

வெள்ளி, 29 மார்ச், 2024

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஐந்து வயது சிறுமி கொலை

ஐந்து வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து வடக்கு வடக்கு காவல் துணை ஆணையர் ரவி குமார் சிங் கூறுகையில், சிறுமியின் பெற்றோர் பவானாவில் டீக்கடை நடத்தி வருவதாகவும், பகல் நேரத்தில் சிறுமி அவர்களுடன் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
“அவர்கள் அவளை கடைசியாக மார்ச் 24 அன்று மாலை 5 மணியளவில் பார்த்தார்கள். அவர்கள் அவளைக் கண்டுபிடிக்க 
முயற்சித்தனர் ஆனால் பலனளிக்கவில்லை. கடைசியாக 
அவர்கள் 112 ஐ டயல் செய்தனர். 
உடனடியாக பல குழுக்கள் அமைக்கப்பட்டு பெற்றோருடன் சேர்ந்து அப்பகுதியில் விரிவான தேடுதல் தொடங்கப்பட்டது, 
அது தொடர்ந்தது. 
கடைசியாகப் பார்த்த இடத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இரவு முழுவதும், பல சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் இருந்து பெறப்பட்டன, அவற்றில் ஒன்றில், ஒரு ஆணுடன் சிறுமி நடந்து 
செல்வதைக் கண்டார். 
அவர் குடி என்ற தோட்டன் லோஹர் என அடையாளம் காணப்பட்டார், மேலும் அவர் தலைமறைவானார். உள்ளூர் விசாரணையில், அவர் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் மேற்கு வங்காளத்திற்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்பது தெரியவந்தது. 
பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அதற்கு இணையாக, கொல்கத்தாவுக்கு ஒரு குழு அனுப்பப்பட்டது. பிறகு அவர்கள் அவரை அடையாளம் கண்டு பிடித்து, மீண்டும் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்,” என்று டிசிபி 
மேலும் கூறினார்.
மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததையும், பின்னர் கொலை செய்து உடலை அருகில் உள்ள தொழிற்சாலையில் வீசியதையும் குற்றவாளி ஒப்புக்கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது    

 








 

வியாழன், 28 மார்ச், 2024

நாட்டில் களுத்துறையில்பாடசாலையொன்றின் மாணவர்கள் வைத்தியசாலையில்

நாட்டில் களுத்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் குழுவொன்று தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
ஏறக்குறைய  10 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவிக்கின்றன. 
12 மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவொன்றே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 27 மார்ச், 2024

கத்திரிக்கோலால் வெட்டி கொழும்பில் நபர் ஒருவர் படுகொலை

கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவர் கத்திரிக்கோலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
சம்பவத்தில் 36 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது 


செவ்வாய், 26 மார்ச், 2024

மேரிலேண்ட் மாகாணத்தில் இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்த பாலம்

அமெரிக்காவில் பாலமொன்றின் மீது சரக்கு கப்பல் ​மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
மேரிலேண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலம் மீது இலங்கை நோக்கி பயணித்த சரக்கு கப்பல்.26-03-2024. இன்று அதிகாலை 
மோதியுள்ளது. 
இதன்போது பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த பல வாகனங்கள் நீரில் மூழ்கி 20 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
 மீட்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது  







 

திங்கள், 25 மார்ச், 2024

மோட்டார் பந்தையத்தால் மட்டக்களப்பில் நேர்ந்த விபத்து இருவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்.25-03-2024. இன்று  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஓட்டமாவடி - மீராவோடை ஊடாக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபையின்  பேருந்து வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 
இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கில்களில்  ஓட்டப்பந்தயத்தில் ஈடுப்பட்ட இளைஞர்களே விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 இதில், இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் 
சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் 
தெரிவித்துள்ளன. 
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது 





 

ஞாயிறு, 24 மார்ச், 2024

தென் அமெரிக்க பிரேசில் நாட்டை தாக்கிய புயல் பத்து பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 
புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
 பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து 
நடைபெற்று வருகிறது.
புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 
வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த சில தினங்களாக 
கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ்
 வெப்பம் பதிவானது. 
இந்த வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் இந்த வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது .


சனி, 23 மார்ச், 2024

நாட்டில் அஸ்கிரியவில் மாணவர்களின் தலையில் விழுந்த மின் விசிறி இருவர் காயம்.

நாட்டில் கண்டி, அஸ்கிரியவில் உள்ள பாடசாலையொன்றில், தரம் ஐந்து வகுப்பில் மின்விசிறி விழுந்ததால், காயமடைந்த மாணவர்கள் இருவர் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் இருவரும் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மாணவனுக்கு 
கண்ணிலும், மற்றைய மாணவனுக்கு தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மின்விசிறி
 பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது குறித்து பாடசாலை நிர்வாகத்திடம் தெரிவித்தும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


 


 

வெள்ளி, 22 மார்ச், 2024

கோலா பூடான் கடலில் விபத்துக்குள்ளான அகதிகள் படகு அறுவது பேர் மீட்பு

வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து
 வருகின்றனர். 
இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். 
இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்..என்பது குறிப்பிடத்தக்கது .





 

வியாழன், 21 மார்ச், 2024

நாட்டில் வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவருக்கு நேர்ந்த கதி

நாட்டில்வவுனியா, வைரவ புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, வைரவ புளியங்குளம், ரயில் நிலைய வீதியில்.21-03-2024. இன்று மதியம் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது.
 வவுனியா நகரப்பகுதியில் ரயில் நிலைய வீதி ஊடாக சென்ற முச்சக்கரவண்டி கதிரேசு வீதியில் திரும்ப முற்பட்ட வேளையில் வைரவபுளியங்குளத்தில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ள துடன், குறித்த விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  என்பது குறிப்பிடத்தக்கது  


புதன், 20 மார்ச், 2024

பஸ் விபத்துக்குள்ளானதில் சீனாவில் பதின்நான்கு பேர் உயிரிழப்பு

வட சீனாவின் ஷாங்சி மாகாணத்தில்  19-03-2024.அன்று மாலை, 51 பயணிகளை ஏற்றி கொண்டு பஸ் சென்று கொண்டிருந்தது. 
அந்த பஸ் ஹோஹோட் - பீஹாய் விரைவு சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் நுழைந்தது. அப்போது அந்த பஸ் டிரைவரின்
 கட்டுப்பாட்டை இழந்த பஸ் சுரங்கத்தின் தடுப்பு சுவர் மீது 
அதிபயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க்கும்
 பணியில் ஈடுபட்டனர்.
 இந்த விபத்தில் படுகாயமடைந்த 37 பேரை மீட்பு குழுவினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது 

 


 

செவ்வாய், 19 மார்ச், 2024

அமெரிக்காவில் ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட எட்டு வயது சிறுவன் மரணம்

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகமாக சாப்பிட்ட சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த 8 வயது சிறுவன் பாடசாலையில் நிதி திரட்டும் பொருட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு Benadryl அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு 
சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு 
திரும்பியுள்ளனர்.
இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பாடசாலைக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் 
எழுப்பியுள்ளனர். 
சிறுவன் எழும்பாத்தால் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். 
 இந்த நிலையில் வெளியான உடற்கூறு ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது





திங்கள், 18 மார்ச், 2024

நாட்டில் செட்டிகுளம் பகுதியில் யானை தாக்கி ஒருவர் மரணம்

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வீதியால் சென்றவரை யானை தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் 
தெரிவித்தனர். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியில் 17-03-2024.அன்று 
 மாலை வீதியால் பயணித்த முதியவர் ஒருவரை அப் பகுதிக்கு வந்த யானை தாக்கியுள்ளது. 
இதனால் படுகாயமடைந்த குறித்த முதியவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 
செட்டிகுளம், மருதமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய தனபாலகே அனுர தென்னக்கோன் என்பவரே மரணமடைந்தவராவார். 
இச் சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






 

ஞாயிறு, 17 மார்ச், 2024

நாட்டில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

நாட்டில்மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வில்வத்த மற்றும் அம்பேபுஸ்ஸ நிலையங்களுக்கு இடையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 
 கொழும்பில் இருந்து  16-03-2024.அன்று  காலை ரம்புக்னா நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். 
உயிரிழந்த நபர் 62 வயதுடையவர் எனவும், அவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் 
தெரிவிக்கின்றனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





 

சனி, 16 மார்ச், 2024

ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய குடும்பத்தினர் உயிரிழப்பு

கனடாவின் ஒன்டாரியோவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன. 
தீயை அணைத்த பிறகு மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. எவ்வாறாயினும், அவர்களின் அடையாளத்தை அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 
குறித்த வீட்டிற்கு யாரேனும் தீவைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.






 

வெள்ளி, 15 மார்ச், 2024

கனடா ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட வர்களின் இறுதிச் சடங்கு நாளை

கனடா- ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது
இலங்கையர்களின் இறுதிக்கிரியைகளை, ஒட்டாவா நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் மேற்கொள்ள நடவடிக்கை
 எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை , உயிரிழந்த ஆறு பேரின் இறுதிக் கிரியைகள் அவர்களின் உறவினர்களின் விருப்பப்படி மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது.




 

வியாழன், 14 மார்ச், 2024

மரண அறிவித்தல்அமரர் சிதம்பரப்பிள்ளை கந்தையா 14.03.2024

 துயர் பகிர்வு மலர்வு .02-10-1936-- உதிர்வு -14-03-2024
யாழ். பலாலியை பிறப்பிடமாகவும்  ஆவரங்கால் சந்தை வீதியை வதிவிடமாகவும் கொண்ட. 
அமரர்   சிதம்பரப்பிள்ளை கந்தையா 
        அவர்கள் .14-03-2024.இன்று  வியாழக்கிழமை. இறைபாதம் அடைந்தார்.  அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
அன்னார். காலஞ்சென்ற திரு திருமதி சிதம்பரப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும். 
செல்லம் அவர்களின் அன்புக்கணவரும். 
செல்வக்கந்தராணி,நல்லக்கந்தராணி,மாவைக்கந்தராணி,செந்தமிழ்கந்தராசா(லண்டன்) செல்வக்கந்தராசா ( சுவிஸ்) மதுராம்பிகை ( பிரான்ஸ்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகட்க்கு. 
மகன். செந்தமிழ். +44 7446 102616


புதன், 13 மார்ச், 2024

நாட்டில் நான்கு வயது சிறுமிக்கு எமனாக மாறிய காய்ச்சல் மாத்திரை

மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளதாக 
குறிப்பிட்டுள்ளனர்
மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி 11-03-2024.அன்று 
 உயிரிழந்துள்ளார். ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். தாய் வௌிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து 
வந்துள்ளார்.
தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து 
தெரியவந்துள்ளது.
 மஹியங்கனை வைத்தியசாலையில் சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த மாத்திரை அகற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலைக்கு 
மாற்றப்பட்டுள்ளார்.
விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்திருந்தார்
.என்பது குறிப்பிடத்தக்கது





 

செவ்வாய், 12 மார்ச், 2024

ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு

ஜப்பானின் வடக்குப் பிரதான தீவான ஹொக்கைடோவில் பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். 
1,898 மீட்டர் உயரமான யோடேய் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இருவரும் நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஜப்பானின் கியோடோ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஆறு பேர் கொண்ட குழு பனிச்சரிவில் ஈடுபட்டதாகவும், மூன்று பேர் பனிச்சரிவில் சிக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உயிர் பிழைத்தவரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது 





 

திங்கள், 11 மார்ச், 2024

சாவகச்சேரி ஏ-9 வீதி தபால் கந்தோர் வீதி சந்தியில் விபத்து இருவர் காயம்

யாழ் சாவகச்சேரி ஏ-9 வீதி , தபால் கந்தோர் வீதி சந்தியில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்கள்.
விபத்தில் காணமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார 
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
. சாவகச்சேரி பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது







 

ஞாயிறு, 10 மார்ச், 2024

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்தோனேசியாவில் பத்ஒன்பது பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island). மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து 
நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.
இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.
20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.
 பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன..என்பது குறிப்பிடத்தக்கது.



சனி, 9 மார்ச், 2024

நாட்டில் ரம்பேவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி

நாட்டில் ரம்பேவ பிரதேசத்தில்.09-03-2024. இன்று  காலை இடம்பெற்ற விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 
விபத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  
ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று வீதியில் பயணித்த  ஐந்து பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 
இந்த குழுவினர் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.  
விபத்தை ஏற்படுத்திய கேப் அங்கிருந்து தப்பிச் சென்றது.
 சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதாகும் 





 

வெள்ளி, 8 மார்ச், 2024

நாட்டில் வெடுக்குநாறிமலை ஆதி சிவனுக்கு நீர் கொண்டு சென்ற நபர் மருத்துவமனையில்

நாட்டில் வெடுக்குநாறிமலை ஆதிசிவனுக்கு குடிநீர் கொண்டு செல்ல முயன்ற சஞ்சீவன் என்ற இளைஞன் தண்ணீர் தாங்கி சரிந்து
 படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து 
செல்லப்படவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொலீஸ் இராணுவ அராஜகம் தமிழர்களுக்கு குடிநீர் தரவும் மறுக்கிறது தொடர்ந்து போராடுவோம் வெடுக்குநாறிமலை 
ஆதிசிவன் ஆலய பிரதேசத்துக்குள் பல்வேறு தடைகளை 
தாண்டி இறை
 வணக்கத்திற்காக உள்ளே சென்ற மக்களை குடிநீரை
 தடுத்து அட்டகாசம் புரிந்த நெடுங்கேணி பொலீஸ் அதிகாரிகள்
 இரண்டு மணி நேரம் தொடர்ந்து போராடி
 குடிநீரை உள்ளே 
கொண்டு செல்ல முயன்ற போது தண்ணீர் தாங்கி சரிந்து சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>