siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 30 செப்டம்பர், 2023

ஜப்பான் உயிரியல் பூங்காக் காவலர் சிங்கத்தின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழப்பு

ஜப்பானிய சஃபாரி பூங்காவில் உள்ள மிருகக்காட்சிசாலை காவலர் ஒருவர், சிங்கத்தை அதன் கூண்டுக்குக் கொண்டு வர முயன்றபோது, அவரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக போலீஸார்
 தெரிவித்தனர்.
ஃபுகுஷிமா பகுதியில் உள்ள தோஹோகு சஃபாரி பூங்காவில் பணிபுரியும் 53 வயதான கெனிச்சி கட்டோ, சிங்கத்தின் கூண்டிற்குள் அவரது
 கழுத்தில் இருந்து இரத்தம் மற்றும் சுயநினைவின்றி காணப்பட்டார் என்று உள்ளூர் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் 
தெரிவித்தார்.
“அவர் சிங்கத்திற்கு உணவளிப்பதாக நம்பப்படுகிறது,” என்று பெயர் வெளியிட மறுத்த செய்தித் தொடர்பாளர் கூறினார். ஒரு மூத்த பூங்கா அதிகாரி முன்பு, கேட்டோ உணவைப் பயன்படுத்தி சிங்கத்தை கூண்டுக்குள் 
இழுக்க முயன்றார், 
ஆனால் பெரிய சங்கத்திலிருந்து அவரைப் பிரிக்க வேண்டிய கதவைப் பூட்டவில்லை. “செயல்முறை என்னவென்றால், நாங்கள் 
கதவைத் திறந்து, உணவை வைப்போம். உணவு வைக்கப்பட்டவுடன், கதவு மூடப்பட்டு பூட்டப்பட வேண்டும்” என்று பூங்காவின் 
துணைத் தலைவர் நோரிச்சிகா குமகுபோ செய்தியாளர்களிடம் கூறினார்.
 ஆனால் அந்த நேரத்தில் கதவு திறந்தே இருந்தது. 
சிங்கங்கள்,
 புலிகள் மற்றும் கரடிகள் போன்ற மாமிச உண்ணிகளுடன் பணிபுரிந்த ஒரு மூத்த மற்றும் சிறந்த ஊழியர் கேட்டோ, என்று தெரிவித்தன.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



அமரர் சரவணமுத்து கந்தசாமி (குஞ்சுமணி.கந்தா) 2ம் ஆண்டு நினைவஞ்சலி 30 09 23

 

பிறப்பு-31-12-1960-இறப்பு-30 10 2021
யாழ்.நவற்கிரி புத்தூரை  பிறப்பிடமாகவும், சுவிஸ் லுசேன்(Luzern) ஐ வதிவிடமாகவும் கொண்ட 
 (பரமேஸ் வரன் .குஞ்சுமணி- கந்தா என அழைக்கபட் ட ) அமரர் சரவணமுத்து கந்தசாமி  அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி.
30-09-2023.சனிக்கிழமை அன்று அன்னார், காலஞ்சென்றவர்களான  சரவணமுத்து அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இளையதம்பி,
 மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,அனோஜன், ஆதினி, அஜானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற மகேஸ்வரன்,
மற்றும்  மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மகேந்திரம், தர்மகுலசிங்கம், நவமூர்த்தி- நாகம்மா, திருச்செல்வம்- வசுந்தரா, இராசதுரை- முகுந்தினி, 
 சிறிகரன்- அருந்தவமலர், சுதாகரன்- சறோசாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ரவீந்திரன், சுமன், சுயீவன், சுஜந்தன், வினோபா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பினில் விளைந்த
ஆரமுதே அளவிலா
இன்பப் பெரும் சுடரேஆனந்தமாய் உள்ளங்கள்
கவர்ந்த உத்தமரே அற்புத
மனிதரின் மாணிக்கமேதொலை தூரம் சென்ற போதும்
தொலையாதது உமது நினைவுகள்
தொடு வானம் போல் தொடரும்
கனவுகள் தோழமையாய்
திகழும் நற்சந்தங்கள் நம்மை விட்டகன்று 

நல்ல குணவாளனுக்காய் நாட்கள்
மாதங்களாய் அகவையும் இரண்டாயிற்று 
 நல்லவரே வானவரே நற்பதவி கண்டீரேசீரும் சிறப்புமாய் நீர் இருந்த
நாட்கள் சிந்தாமல் சிதையாமல்
கதை கவிதை சொல்லுதே சித்திரமே
உம்தோற்றம் சிந்தையிலே சிகரம் ஐயா
 சீரோடு சிறப்பாக நீர் சிவனிடத்தில் இளைப்பாறும்ஆண்டு கடந்தாலும் ஆறாத துயரத்தில்
மீளாது தவிக்கும் அன்பான குடும்பத்தினர்,
உற்றார், உறவினர், நண்பர்கள்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! 
தகவல்: குடும்பத்தினர்


வெள்ளி, 29 செப்டம்பர், 2023

உயர்நிலைப் பள்ளியில் ஸ்பெயின் மாணவனால் கத்திக்குத்து ஐவர் காயம்


ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பலமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். சந்தேக நபர் 14 வயதுடைய மாணவன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஸ்பெயினில் உள்ள Jerez de la Frontera என்ற இடத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சந்தேகநபரான மாணவன் பள்ளியில் வகுப்புத் தொடங்கியதுடன் பையில் மறைத்து வைத்திருந்து இரு கத்திகளை எடுத்து 
ஆசிரியரைத் 
துரத்திச் சென்று கண்ணில் குத்தியுள்ளார். இதேநேரம் இதைத் தடுக்கச் சென்ற 
சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களையும்  கத்தியால் குத்தியுள்ளார். 
கத்திக்குத்து மூன்று ஆசிரியர்களும் இரு மாணவர்களும் காயமடைந்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வியாழன், 28 செப்டம்பர், 2023

நினைவஞ்சலி 2ம் ஆண்டு அமரர் கதிரவேலு இராசலக்சுமி 28.09.2023

தோற்றம்-04-07-1932.-  மறைவு-20 09 2021       
  முதலாம் ஆண்டு திதி 28-09-2023.            
    யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி கதிரவேலு இராசலக்சுமி
அவர்களின் இரண்டாம் ஆண்டு  திதி 28-09-2023.வியாழக்கிழமை இன்று .அன்னார் காலஞ்சென்ற கதிரவேலுவின் பாசமிகு மனைவியாரும் காலஞ்சென்ற அப்புக்குட்டி  வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்
 காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும் 
மற்றும் யோகேஸ்வரன்  அரற்புதமலர் கருணாநந்தன்  ஜெந்தி குகனேசன் சுதமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலச்சுழற்சியில் இரண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னாரின்  ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  



புதன், 27 செப்டம்பர், 2023

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றமும் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது

மீன்பிடிக் கப்பலொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 05 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.
 நீண்ட விசாரணையின் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி திரு நாமல் பலல்லே இந்த முடிவை அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டு, இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக் கப்பலில் 152 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் கடத்தியதற்காக அவர்கள் கைது 
செய்யப்பட்டனர்.
 மீன்பிடி கப்பலில் உள்ள மீன் மற்றும் ஐஸ் சேமிப்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டு தலா 25 கிலோ எடையுள்ள 08 பைகளில் போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 26 செப்டம்பர், 2023

இராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்கள் வீசி தாக்குதல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை (25) மாலை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க 
கடலுக்கு சென்றனர்.
 இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எ
ல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை 
சேர்ந்த ஒரு விசைப்படகு மீது கற்கள் கொண்டு தாக்கியதில் அதில் இருந்த பிராங்கிளின் என்ற மீனவர் கற்கள் பட்டதில் 
படுகாயம் அடைந்தார்.
 இதையடுத்து சக மீனவர்கள் அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். இதையடுத்து படுகாயம் அடைந்த மீனவர்களிடம்
 மத்திய, மாநில உளவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



திங்கள், 25 செப்டம்பர், 2023

பரிஸ் நகரில் தீ விபத்தில் காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில்

பாரிஸ் Porte d'Aubervilliers பகுதியில் Boulevard Ney வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் 25-09-2023.இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
 இதில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறுபேர் லேசான காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர் என பாரிஸ் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
 காயமடைந்த அனைவரும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தீயணைப்பு படையினர் மேலும் 
தெரிவித்துள்ளானர் தீயை அணைப்பதற்கு 45 இயந்திரங்கள், மற்றும் 120 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு. அதிகாலை 5:15க்கு ஏற்பட்ட தீ காலை 8:00 மணிக்கே தீயணைப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என செய்திகள் தெரிவிக்கின்றன .என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் பாண்னின் விலை எதிர்காலத்தில் நூறு ரூபாவாக குறைக்கப்படும்

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் 
தெரிவித்துள்ளது.
 விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக் 
குறைக்க முடியும்.
 அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் ரொட்டியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 23 செப்டம்பர், 2023

-நாட்டில் பல்லும்மஹர பகுதியில் பேருந்து விபத்து :பதின் மூண்று பேர் காயம்

கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் 
அறிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் 22-09-2023.அன்று  இடம்பெற்றுள்ளது. 
கொழும்பு - கன்னட பிரதான வீதியின் பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்,   திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

,மல்லாகம் நீதிமன்றம் ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு ,மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை ஜூஸ் பக்கெட்களை , 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது. 
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு 
தொடரப்பட்டது. 
  “குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெட்களை ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் 
பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் 
மாத்திரமின்றி 
நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது" என பொதுசுகாதார பரிசோதகர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.  
அதனை அடுத்து , மன்று அனைத்து ஜூஸ் பக்கெட்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததுடன்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல ஜூஸ் பக்கெட்களையும் மீளபெற்று அழிக்குமாறும் உத்தரவிட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 செப்டம்பர், 2023

பகவந்தலாவ பகுதியை சேர்ந்த மாணவி உலக சாதனை படைத்துள்ளார்

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி 54 கிலோமீற்றர் தூரத்தை தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார்.
 10ம் தரத்தில் படித்து வரும் வசந்தகுமார் நபிஷ்னா என்ற 15 வயது மாணவியே இந்த சாதனை படைத்துள்ளார்.
 நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  20-09-2023.அன்று காலை 6.05 மணிக்கு நடைபயணத்தை ஆரம்பித்த அவர், பக்வந்தலாவ நகர மையத்தில் இருந்து 8 மணி 30 நிமிடங்களில் மதியம் 2.35 மணிக்கு அணிவகுப்பை
 நிறைவு செய்தார்.
 நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன் ஊடாகச் செல்லும் போது, ​​வீதியின் இருபுறமும் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பூரண ஆதரவை பாடசாலை 
மாணவி பெற்றார்.
 இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் பகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக நடைபயணத்தை பார்வையிட வந்த இலங்கை பிரதிநிதி சி.நாகவாணி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 செப்டம்பர், 2023

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழப்பவர்கள் அதிகரிப்பு


மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர 
தெரிவித்துள்ளார்.  
கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேபரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.  
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சீதுவ யில் சூட்கேஸில் மீட்கப்பட்ட சடலம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட ஆறு பேர் கைது

சீதுவ பகுதியில்    நபரொருவரை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை 
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு 
பிடிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட நபரை சந்தேகநபர்கள் ,புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 18 செப்டம்பர், 2023

கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்து இருவர் படுகாயம்

திருகோணமலை - பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ - 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக 
தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திருமதி நடராசா திலகவதி ( திலகம் )17.09.2023

துயர் பகிர்வு-மறைவு-17-09-2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்கள் 17-09-2023.ஞாயிருக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அப்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும் திரு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2023 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 18-09-2023..திங்கள்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!




ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஏற்பட்ட விமான விபத்தில் பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் 
உயிரிழந்தனர்.
 இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. 
இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது 
விபத்துக்குள்ளானது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 16 செப்டம்பர், 2023

பெர்லினில் பேருந்துக்கு அடியில் சிக்கிய சிக்கியவரை மீட்டுள்ளனர்


ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில்
 சிக்கிக்கொண்டார்.  
உடனடியாக அங்கு ஓடோடி வந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், பேருந்தை தூக்கி, பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்டுள்ளனர். 
அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த பொதுமக்களை ஹீரோக்கள் என்று கூறி ஜேர்மன் பொலிஸார் பாராட்டியுள்ளார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கனந்தராதிவுள்வெவ பகுதியில் இளைஞன் பொல்லால் அடித்துக் கொலை

மதவாச்சி கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் 25 வயதுடய இளைஞன் ஒருவரை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (14) இரவு மதவாச்சி பொலிஸ் பிரிவின் கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பிரிவு 
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது வாய்த்தர்க்கம் முற்றியதால் தந்தையும் மூத்த சகோதரனும் பொல்லால் அடித்து இக்கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதணைகளை மேற்கொள்ளுவதற்காக சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடய 56 வயது மற்றும் 27 வயதுடய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும் குறிப்பிடத்தக்கது.   .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 14 செப்டம்பர், 2023

யாழ் திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் 
தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமி, சந்தேக நபரான அந்த பெண்ணின் மகளின் முதல் திருமணத்தின் போது பிறந்தவர் என பொலிஸார் 
குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபரான அந்தப் பெண், சிறுமியை கோப்பாய் விடுதிக்கு கடந்த 9ஆம் திகதி அழைத்து வந்ததாகவும், அங்கு அவருக்கு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோப்பாய் விடுதியின் அறையொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதியை சோதனையிட்ட போது சிறுமி அந்த அறையில் கட்டிலில் இறந்து கிடந்ததையும், மேற்படி 
சந்தேகநபர் பக்கத்து படுக்கையில் மயங்கிய நிலையில் 
கிடந்ததையும் கண்டனர். சந்தேக நபரான அந்தப் பெண், கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், திருகோணமலையைச் சேர்ந்த நாகபூசணி சிவநாதன் என அறியமுடிகின்றது. 3 நாட்களுக்கு முன்னரே 
சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் திருகோணமலையில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக யாழ். வந்ததாகவும் குறித்த பாட்டி ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விருவரும் ஒரு தடவை மாத்திரமே ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸாரிடம் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு 
அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் 
காணப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் 
அனுமதித்தனர்.
பாட்டியால் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடிதமொன்று அவ்வறையில் கிடந்துள்ளது. அந்தக் கடிதத்தில் தாம் 
தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடிதம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் கடிதத்தை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 

புதன், 13 செப்டம்பர், 2023

அமெரிக்கா வில் சிப்ஸ் சாப்பிடும் போட்டி சிறுவன் உயிரிழப்பு

 

பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ். ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் 
கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் 
முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்துகிறது
இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவப்பட்ட ஒரே ஒரு சிப்ஸ், ஒன்றை மட்டுமே ஒருவர் உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்படும். 
அதன்படி வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். இந்த ஒரே ஒரு சிப்ஸ், மண்டை ஓட்டு அடையாளமிடப்பட்ட சவப்பெட்டி போன்ற தோற்றமுடைய ஒரு சிறு அட்டைபெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த 10-வது படிக்கும் ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் 
தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக 
ஆர்டர் செய்தான்.
ஆர்வத்துடன் அதை உண்ட அச்சிறுவனுக்கு பள்ளிக்கு சென்றதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த அவன் சிறிது நேரத்தில் நினைவிழந்தான். அவசர உதவி அழைக்கப்பட்டு, காவல்துறையினரும் வந்த போது அவன் சுவாசமின்றி கிடந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு
 செல்லப்பட்டான்.
 மருத்துவர்கள் முயன்றும் நினைவு திரும்பாமல் ஹாரிஸ் உயிரிழந்தான். செய்தி பரவியுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள், விற்பனை கூடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்..என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருநெல்வேலிப் பகுதியில் விடுதியில் சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் சடலம்.12-09-2023.  இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு  வந்ததாக 
கூறப்படுவதுடன்,  மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி 
இறந்திருக்கலாம் எனவும் இந்நிலையில்  மேலதிக 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் ,  உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 செப்டம்பர், 2023

நாட்டில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்துக்கு தட்டுப்பாடு

குறைந்த வயதில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும் சர்பாக்டான்ட் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், அரசு மருத்துவமனைகளில் இன்னும் சில நாட்களுக்கு போதுமான அளவு மட்டுமே மருந்து இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 குறித்த வைத்தியசாலைகள் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, மருந்து தட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்த அவர், இன்னும் ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு 
காணப்படும் என்றார்.
 இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்துள்ளமையே இந்த சர்பாக்டான்ட் மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் என சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம்

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று 
இடம்பெற்றுள்ளது.
மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) என்ற சிறுவனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அச் சிறுவன் தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளதாக
 தெரிய வந்துள்ளது.
காயங்களுக்குள்ளான சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுவன் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 9 செப்டம்பர், 2023

புதிய நோய்க்கிருமியால் கனடாவில் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகள்


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் 
எதனால் குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று என சுகாதார அதிகாரிகள் கூறாவிட்டாலும், இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், ஒரே சமையலறையிலிருந்துதான் உணவு விநியோகம் 
செய்யப்படுகிறது.
இந்த ஈ கோலை என்னும் கிருமியிலேயே பல பிரிவுகள் உள்ளன. நச்சுப்பொருளை உருவாக்கும் ஈ கோலை, குடலில் இரத்தம் வரவைக்கும் ஈ கோலை, குடலில் நோயுண்டாக்கும் ஈ கோலை, குடலின் 
தோலுக்குள்ளேயே நுழையக்கூடிய ஈ கோலை என்னும் பல வகை ஈ கோலைகள் உள்ளன.
பல ஈ கோலை கிருமிகள், மலம் கழித்துவிட்டு சரியாக கை கழுவாததால் பரவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட ஈ கோலையில், முதல் வகையான நச்சுப்பொருள் உருவாக்கும் ஈ கோலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே தற்போது டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>