siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

நாட்டில் பாண்னின் விலை எதிர்காலத்தில் நூறு ரூபாவாக குறைக்கப்படும்

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை எதிர்காலத்தில் 100 ரூபாவாக குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் 
தெரிவித்துள்ளது.
 விதிக்கப்பட்டுள்ள பல வகையான வரிகளைக் குறைப்பதற்கு அரசாங்கம் விரைந்து தலையிட்டால், ஒரு பாணின் விலையைக் 
குறைக்க முடியும்.
 அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் முயற்சியின் கீழ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு 450 கிராம் ரொட்டியை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 23 செப்டம்பர், 2023

-நாட்டில் பல்லும்மஹர பகுதியில் பேருந்து விபத்து :பதின் மூண்று பேர் காயம்

கம்பஹா, பல்லும்மஹர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் 
அறிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் 22-09-2023.அன்று  இடம்பெற்றுள்ளது. 
கொழும்பு - கன்னட பிரதான வீதியின் பாலும்மஹார சந்தியில் போக்குவரத்து விளக்குகளுக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்,   திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று  கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்த நிலையில், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இவர்களில் 10 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் யக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கல பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


வெள்ளி, 22 செப்டம்பர், 2023

,மல்லாகம் நீதிமன்றம் ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒருவருட கால முடிவுத் திகதியிடப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்ட ஜூஸ் பக்கெட்களை அழிக்குமாறு ,மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தெல்லிப்பழை பிரதேசத்திலுள்ள ஜூஸ் உற்பத்தி நிலையம் ஒன்றில் முனகூட்டியே அச்சிடப்பட்ட ஒரே உற்பத்தி மற்றும் முடிவுத் திகதி இடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஒரு தொகை ஜூஸ் பக்கெட்களை , 16 குளிரூட்டிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுசுகாதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது. 
அதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை அடுத்து நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு 
தொடரப்பட்டது. 
  “குழந்தைகள் பருகும் ஒரு சில வாரங்களே காலவதி திகதி இடக்கூடிய ஜூஸ் பக்கெட்களை ஒரு வருட காலப்பகுதி குறிப்பிட்டு குடாநாட்டின் 
பல இடங்களில் விற்பனை செய்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் 
மாத்திரமின்றி 
நீண்ட காலத்தின் பின் புற்றுநோய் போன்ற நோய்களும் ஏற்படும் அபாய நிலை காணப்படுகிறது" என பொதுசுகாதார பரிசோதகர் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்யப்பட்டது.  
அதனை அடுத்து , மன்று அனைத்து ஜூஸ் பக்கெட்களையும் அழிக்க உத்தரவு பிறப்பித்ததுடன்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட சகல ஜூஸ் பக்கெட்களையும் மீளபெற்று அழிக்குமாறும் உத்தரவிட்டது. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 21 செப்டம்பர், 2023

பகவந்தலாவ பகுதியை சேர்ந்த மாணவி உலக சாதனை படைத்துள்ளார்

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ சென் மேரிஸ் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி 54 கிலோமீற்றர் தூரத்தை தொடர்ச்சியாக 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் நடந்து சென்று சோழன் சாதனை படைத்துள்ளார்.
 10ம் தரத்தில் படித்து வரும் வசந்தகுமார் நபிஷ்னா என்ற 15 வயது மாணவியே இந்த சாதனை படைத்துள்ளார்.
 நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில்  20-09-2023.அன்று காலை 6.05 மணிக்கு நடைபயணத்தை ஆரம்பித்த அவர், பக்வந்தலாவ நகர மையத்தில் இருந்து 8 மணி 30 நிமிடங்களில் மதியம் 2.35 மணிக்கு அணிவகுப்பை
 நிறைவு செய்தார்.
 நாவலப்பிட்டி, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன் ஊடாகச் செல்லும் போது, ​​வீதியின் இருபுறமும் உள்ள பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வீதியின் இருபுறங்களிலும் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பூரண ஆதரவை பாடசாலை 
மாணவி பெற்றார்.
 இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் பகவந்தலாவ பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியின் பெயர் இடம் பெற்றுள்ளதாக நடைபயணத்தை பார்வையிட வந்த இலங்கை பிரதிநிதி சி.நாகவாணி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 20 செப்டம்பர், 2023

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழப்பவர்கள் அதிகரிப்பு


மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர 
தெரிவித்துள்ளார்.  
கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாகவும் 
அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேபரிசோதனைகள் மூலம் இந்த தகவல் கிடைத்துள்ளதாக அவர் 
குறிப்பிட்டுள்ளார்.  
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை எனவும் இதில் இளைஞர்கள் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 19 செப்டம்பர், 2023

சீதுவ யில் சூட்கேஸில் மீட்கப்பட்ட சடலம்; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உட்பட ஆறு பேர் கைது

சீதுவ பகுதியில்    நபரொருவரை கொடூரமாக கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 6 பேரை 
பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களால் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் கடந்த தினம் தடுகம் ஓயாவில் பயணப் பொதி ஒன்றில் இருந்து கண்டு 
பிடிக்கப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட நபரை சந்தேகநபர்கள் ,புறக்கோட்டை பிரதேசத்தில் வைத்து காரில் ஏற்றிக்கொண்டு சீதுவை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 18 செப்டம்பர், 2023

கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் பாதையை விட்டு விலகி விபத்து இருவர் படுகாயம்

திருகோணமலை - பன்குளம் பகுதியில் கெப் ரக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை – அனுராதபுரம் ஏ - 12 வீதியினூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கெப் ரக வாகனம் பன்குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் வாகனத்தில் பயணித்த இருவர் 
காயமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் வேலையின் நிமிர்த்தம் அம்பாறை – காரைதீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கையில் சாரதியின் தூக்கம் காரணமாக வாகனம் பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக 
தெரிய வருகின்றது.
மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



மரண அறிவித்தல் திருமதி நடராசா திலகவதி ( திலகம் )17.09.2023

துயர் பகிர்வு-மறைவு-17-09-2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. 
 திருமதி  நடராசா திலகவதி ( திலகம் ) அவர்கள் 17-09-2023.ஞாயிருக்கிழமை  அன்று இறைபாதம் அடைந்தார்
அன்னார். காலஞ்சென்ற தியாகராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற அப்பையா தம்பதிகளின் பாசமிகு மகளும் திரு நடராசா அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவர் 
அன்னாரின் இறுதிக்கிரியை 18-09-2023 திங்கள்கிழமை அன்று 10:00 மு.ப -12:30 பி.ப.மணி  வரை  அவரது  இல்லத்தில் நடைபெற்று பின்பு அன்னாரின் நல்லடக்கம் 18-09-2023..திங்கள்கிழமை அன்று
 நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!




ஞாயிறு, 17 செப்டம்பர், 2023

ஏற்பட்ட விமான விபத்தில் பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

பிரேசிலில் சுற்றுலா நகரமான பார்சிலோஸ் நகரில் தரையிறங்க முயன்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் 
உயிரிழந்தனர்.
 இவர்களில் 12 பேர் சுற்றுலா பயணிகள் ஆவார்கள். மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. கனமழை பெய்த நிலையில், வானிலையும் தெளிவாக இல்லை. 
இதனால், விமானம் தரையிறங்க முயன்ற போது 
விபத்துக்குள்ளானது.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 16 செப்டம்பர், 2023

பெர்லினில் பேருந்துக்கு அடியில் சிக்கிய சிக்கியவரை மீட்டுள்ளனர்


ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில்
 சிக்கிக்கொண்டார்.  
உடனடியாக அங்கு ஓடோடி வந்த பொதுமக்கள் சுமார் 40 பேர், பேருந்தை தூக்கி, பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்டுள்ளனர். 
அதிர்ஷ்டவசமாக, அவருக்கு பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்த இளைஞரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த பொதுமக்களை ஹீரோக்கள் என்று கூறி ஜேர்மன் பொலிஸார் பாராட்டியுள்ளார்கள்.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வெள்ளி, 15 செப்டம்பர், 2023

கனந்தராதிவுள்வெவ பகுதியில் இளைஞன் பொல்லால் அடித்துக் கொலை

மதவாச்சி கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் 25 வயதுடய இளைஞன் ஒருவரை பொல்லால் அடித்து கொலைசெய்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மதவாச்சி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (14) இரவு மதவாச்சி பொலிஸ் பிரிவின் கனந்தராதிவுள்வெவ பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்பு பிரிவு 
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தனது தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனையின் போது வாய்த்தர்க்கம் முற்றியதால் தந்தையும் மூத்த சகோதரனும் பொல்லால் அடித்து இக்கொலையினை செய்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதணைகளை மேற்கொள்ளுவதற்காக சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொலைச்சம்பவத்துடன் தொடர்புடய 56 வயது மற்றும் 27 வயதுடய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது 
செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் 
என்பதும் குறிப்பிடத்தக்கது.   .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 14 செப்டம்பர், 2023

யாழ் திருநெல்வேலியில் சிறுமியை கொலை செய்த குற்றச்சாட்டில் பேர்த்தியார் கைது

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து ஊசி போட்டு கொலை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் பேர்த்தியாரான 63 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் 
தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமி, சந்தேக நபரான அந்த பெண்ணின் மகளின் முதல் திருமணத்தின் போது பிறந்தவர் என பொலிஸார் 
குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபரான அந்தப் பெண், சிறுமியை கோப்பாய் விடுதிக்கு கடந்த 9ஆம் திகதி அழைத்து வந்ததாகவும், அங்கு அவருக்கு மாத்திரைகள் மற்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோப்பாய் விடுதியின் அறையொன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதியை சோதனையிட்ட போது சிறுமி அந்த அறையில் கட்டிலில் இறந்து கிடந்ததையும், மேற்படி 
சந்தேகநபர் பக்கத்து படுக்கையில் மயங்கிய நிலையில் 
கிடந்ததையும் கண்டனர். சந்தேக நபரான அந்தப் பெண், கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருகோணமலையைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், திருகோணமலையைச் சேர்ந்த நாகபூசணி சிவநாதன் என அறியமுடிகின்றது. 3 நாட்களுக்கு முன்னரே 
சிறுமி இறந்து விட்டார் எனவும் தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
சிறுமிக்கு உடல்நிலை சரியில்லை எனவும் திருகோணமலையில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக யாழ். வந்ததாகவும் குறித்த பாட்டி ஹோட்டல் முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
இவ்விருவரும் ஒரு தடவை மாத்திரமே ஹோட்டல் அறையை விட்டு வெளியே சென்றுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸாரிடம் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, விடுதி நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு 
அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், அறையை திறந்து பார்த்த போது, சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் 
காணப்பட்டுள்ளது.
அதேவேளை, சிறுமியின் பாட்டி அருகில் இருந்த கட்டிலில் சுயநினைவற்ற நிலையில் காணப்பட்டதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் பொலிஸார் 
அனுமதித்தனர்.
பாட்டியால் எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடிதமொன்று அவ்வறையில் கிடந்துள்ளது. அந்தக் கடிதத்தில் தாம் 
தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடிதம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் கடிதத்தை அடிப்படையாக கொண்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் 
மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>> 

புதன், 13 செப்டம்பர், 2023

அமெரிக்கா வில் சிப்ஸ் சாப்பிடும் போட்டி சிறுவன் உயிரிழப்பு

 

பிரபல அமெரிக்க பன்னாட்டு சாக்லெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ். ஆம்ப்ளிஃபை, டார்டில்லா எனப்படும் சோளமாவு மற்றும் 
கோதுமை மாவினால் செய்யப்பட்ட சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதில் 
முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்துகிறது
இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான மிளகுப்பொடி தூவப்பட்ட ஒரே ஒரு சிப்ஸ், ஒன்றை மட்டுமே ஒருவர் உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்படும். 
அதன்படி வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர். இந்த ஒரே ஒரு சிப்ஸ், மண்டை ஓட்டு அடையாளமிடப்பட்ட சவப்பெட்டி போன்ற தோற்றமுடைய ஒரு சிறு அட்டைபெட்டியில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த 10-வது படிக்கும் ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் 
தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக 
ஆர்டர் செய்தான்.
ஆர்வத்துடன் அதை உண்ட அச்சிறுவனுக்கு பள்ளிக்கு சென்றதும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்த அவன் சிறிது நேரத்தில் நினைவிழந்தான். அவசர உதவி அழைக்கப்பட்டு, காவல்துறையினரும் வந்த போது அவன் சுவாசமின்றி கிடந்ததை அடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு
 செல்லப்பட்டான்.
 மருத்துவர்கள் முயன்றும் நினைவு திரும்பாமல் ஹாரிஸ் உயிரிழந்தான். செய்தி பரவியுடன் அந்த சிப்ஸ் பாக்கெட்டுகள், விற்பனை கூடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்..என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 12 செப்டம்பர், 2023

திருநெல்வேலிப் பகுதியில் விடுதியில் சிறுமி சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலிப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் 12 வயது சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் சடலம்.12-09-2023.  இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றது.
குறித்த சிறுமி தனது பாட்டியுடன் விடுதிக்கு  வந்ததாக 
கூறப்படுவதுடன்,  மூன்று நாட்களுக்கு முன்னரே சிறுமி 
இறந்திருக்கலாம் எனவும் இந்நிலையில்  மேலதிக 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் ,  உயிரிழந்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 செப்டம்பர், 2023

நாட்டில் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருந்துக்கு தட்டுப்பாடு

குறைந்த வயதில் பிறக்கும் குழந்தைகளின் நுரையீரல் செயல்பாட்டை சீராக பராமரிக்க உதவும் சர்பாக்டான்ட் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், அரசு மருத்துவமனைகளில் இன்னும் சில நாட்களுக்கு போதுமான அளவு மட்டுமே மருந்து இருப்பு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். 
 குறித்த வைத்தியசாலைகள் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 மேற்படி மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க, மருந்து தட்டுப்பாடு இருப்பதை உறுதி செய்த அவர், இன்னும் ஒரு மாதத்தில் பிரச்னைக்கு தீர்வு 
காணப்படும் என்றார்.
 இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே பதிவு செய்துள்ளமையே இந்த சர்பாக்டான்ட் மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் என சுகாதார திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம்

மூதூரில் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளான சம்பவம் ஒன்று 
இடம்பெற்றுள்ளது.
மூதூர் நடுத்தீவு பகுதியைச் சேர்ந்த எஸ்.சகான் (வயது 14) என்ற சிறுவனே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
அச் சிறுவன் தனது நண்பர்களுடன் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்துக் கொண்டிருக்கும்போது தவறி விழுந்துள்ளதாக
 தெரிய வந்துள்ளது.
காயங்களுக்குள்ளான சிறுவன் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுவன் இடுப்பு எலும்பு முறிவுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 9 செப்டம்பர், 2023

புதிய நோய்க்கிருமியால் கனடாவில் பாதிக்கப்பட்டுள்ள பல குழந்தைகள்


கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில், குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் பரவல் காரணமாக 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் விடப்பட்ட குழந்தைகள் 142 பேர், ஈ கோலை என்னும் பயங்கர கிருமியால் பாதிக்கப்பட்டுளதாக, ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களில் 26 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களில் சில குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.சிறுநீரகம் பாதிக்கப்படும்போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் 
எதனால் குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்று என சுகாதார அதிகாரிகள் கூறாவிட்டாலும், இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், ஒரே சமையலறையிலிருந்துதான் உணவு விநியோகம் 
செய்யப்படுகிறது.
இந்த ஈ கோலை என்னும் கிருமியிலேயே பல பிரிவுகள் உள்ளன. நச்சுப்பொருளை உருவாக்கும் ஈ கோலை, குடலில் இரத்தம் வரவைக்கும் ஈ கோலை, குடலில் நோயுண்டாக்கும் ஈ கோலை, குடலின் 
தோலுக்குள்ளேயே நுழையக்கூடிய ஈ கோலை என்னும் பல வகை ஈ கோலைகள் உள்ளன.
பல ஈ கோலை கிருமிகள், மலம் கழித்துவிட்டு சரியாக கை கழுவாததால் பரவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட ஈ கோலையில், முதல் வகையான நச்சுப்பொருள் உருவாக்கும் ஈ கோலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே தற்போது டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 8 செப்டம்பர், 2023

இந்தியாவில் ஆத்திரத்தில் மாணவன் தாக்கியதில் சக மாணவன் ஆபத்தான நிலையில்

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தபோது, மாதிரி தேர்வுத்தாள்களை கேட்டும் கொடுக்காத ஆத்திரத்தில் சக மாணவன் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன் கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் சதர்காட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வருபவர் சையத் ஆரிப். இவருடைய சக வகுப்பு 
மாணவனான கைஃப் தேர்வுக்கு படிக்க சில கேள்வி தாள்களைத் தரும்படி கேட்டுள்ளார்.
அப்போது தனக்கும் தான் தேர்வு இருக்கிறது. அதனால் தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கைஃப் சையத்தை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனை பார்த்த சக மாணவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். கைஃப் தாக்கியதில் படுகாயமடைந்த சையத்தை மீட்ட சக மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தற்போது ஆரிப் கோமா நிலையில் உள்ளதாக 
கூறப்படுகிறது.
இது தொடர்பாக சையத்தின் பெற்றோர் மற்றும் சகோதரி அளித்த முறைப்பாட்டில், கல்லூரி வளாகத்தில் உள்ள சிசிரிவியை ஆராய்ந்து பார்த்துள்ளனர்.
அதில் சையத்தை கைஃப் தாக்கும் வீடியோ இருந்துள்ளது. இந்த வீடியோ தற்போது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 7 செப்டம்பர், 2023

அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம் ( சந்திரன்) 1ம் ஆண்டு நினைவஞ்சலி 07.09.23

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்(யாழில் பலபாகங்களுக்கு வீடுகளுக்கு  மின்இணைப்பையும் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் மின் மோட்டர் திருத்த வேலைகளின் நவற்கிரியில்   பிரசித்தி பெற்ற முதல்வரான ) திரு ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் ) அவர்களின் .முதலாம் ஆண்டு  திதி  07-09-2023.
வியாழக்கிழமை  இன்று 
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) சண்முகம் (இலங்கை )நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞான ன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் இலங்கை )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (இலங்கை )கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள் 
ஓராண்டு கடுகதியில் கரைந்தோடிச் சென்றாலும் – உங்கள்
நினைவுகள் கல் மேல் பொறித்த எழுத்துக்கள் போல்
எங்களை விட்டு அகலவில்லை!
அப்பா எங்கள் இன்ப துன்பங்களை – நீங்கள்
அருகிருந்து பங்கெடுத்து கொள்வதை
நாம் உணர்கின்றோம் – நீங்கள்
இல்லையெனும் உணர்வே
நெஞ்சுருகி கொல்லுதப்பா!
இருந்தாலும் என்றென்றும் எங்களுக்கு
இறைவன் நீங்கள் தான் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும் அன்பு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,நவற்கிரி வாழ்மக்கள்  உற்றார், உறவினர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!



புதன், 6 செப்டம்பர், 2023

ஸ்காப்ரோவில் சிறுமியொருவர் கத்திக் குத்திற்கிலக்காகி கொல்லப்பட்டுள்ளார்

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.
 இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 5 செப்டம்பர், 2023

அமரர் வாரித்தம்பி நடராஜா ( பஞ்சட்ச்சரம்) 2ம் ஆண்டு நினைவஞ்சலி 05.09.23

தோற்றம்-29 04 1940--மறைவு-27 08 2021
கிளிநொசசி பெரியகுளம் கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை நவற்கிரி, கொழும்பு  ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி நடராஜா( பஞ்சட்ச்சரம்)
 அவர்களின்   இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி 05-09-2023.இன்று அன்னார், காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி  தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சிவலிங்கமணி (சிவலிங்கம் ) அவர்களின் அன்புக் கணவரும்,ஜெபா (இலங்கை ) றதி (லண்டன் ) றஞ்சினி (கனடா) மைதிலி  (லண்டன் ) 
 ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 காலஞ்சென்றவர்களான துரைராஜா செல்வராஜா ஜெயரத்தினம் ஞானமணி   வித்திலாமணி  பாலசிங்கம் சின்னமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் காலஞ்சென்றவர்களான பூரணம் சுப்பிரமணியம்  திலகவதி சபாரத்தினம் ஐயாத்துரை கமலாதேவி மற்றும் பூமணி (கனடா) ஆகியோரின் 
சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
05.09.2023  செவாய்க்கிழமை  இன்று  
அமரர் வாரித்தம்பி நடராசா  ( பஞ்சட்ச்சரம்)அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவாக முல்லைதீவு கைவேலி இயங்கி வருகின்ற இனியவாழ்வு  இல்ல  குழந்தைகளுக்கு விசேட சிறப்பு உணவு 
VCC 93 O/L & 96 A/L ன் "நட்புடன் கரம் கொடுப்போம்" (ஊரோ டு உறவாடும் பழைய மாணவர்கள்)  அமைப்பின் அனுசரனையுடன் சிறப்பு உணவு வழங்கப்பட்டது அமரர் வாரித்தம்பி நடராசா அவர்களை எமது அமைப்பின் சார்பாக  நினைவுகூர்ந்து பிராத்திப்போம்🙏🏼🙏🏼🙏🏼
அத்துடன் இந்த நிகழ்வுக்கான பணத்தினை வழங்கிய தாசன் மைதிலி(லன்டன்)குடும்பத்தினருக்கு எமது அமைப்பின் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
நீங்காத நினைவுகள் 
 இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்,
அப்பாவின் அன்பான நினைவுகள் மறைவதில்லை.
மடியில் அமர்த்தி மகிழ்வாய் சோறு ஊட்டியதை மறக்க முடியுமா..!
கரம்கோர்த்து கல்லூரிக்கு
அழைத்து செல்வதை சொல்லவா..!
நல்லாசிரியராய் இருந்து
நன்மைதீமை சொல்லியதை
மறக்க முடியுமா..!
நல்ல நண்பனாய் இருந்து
நன்மைகள் பல புரிந்ததை சொல்வவா..!
கண்ணுக்கு அழகான கணவனை கரம்பற்ற வைத்ததை சொல்லவா..!
அப்பா உங்களைப்பற்றி ஆயிரம் சொல்லலாம்..!
இப்படி பல செய்து எங்கள் மனதில் இடம்பிடித்த எங்கள் அப்பா..,
எங்கு சென்றீர்கள் எங்களை விட்டு..!
இனி எப்பிறவியில் காண்போம் உங்களை..!
இன்னொரு பிறவி இருந்தால்
எங்கள் தந்தையாக பிறக்க வேண்டும் அப்பா
தகவல்: குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால்
  துயருறும்  மனைவி  பிள்ளைகள் சகோதரர்கள் 
மைத்துனர்கள் மைத்துனிகள் பெறாமக்கள்
பேரப்பிள்ளை ,உற்றார் உறவினர்  நண்பர்கள்
அனைவருக்கும்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! சாந்தி !!! சாந்தி !!!

 

திங்கள், 4 செப்டம்பர், 2023

பரிஸ் நகரில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்று மோதி விபத்து

பிரான்ஸின் பரிஸ் நகரில்சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. 
இதில் 16 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில்   02-09-2023.சனிக்கிழமை  அன்று இரவு இடம்பெற்றுள்ளது. port of Grenelle 
பகுதியில் சென் நதியில் இரு படகுகள் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், இரவு 11 மணிக்கு பின்னதாக இரு படகுகளும் ஒன்றுடன் 
ஒன்று மோதியுள்ளது. 
 இச்சம்பவத்தில் மொத்தமாக 16 பேர் இலேசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

மதுக்குளம் ஏரிக்கரையில் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் சிறுவன் பலி

வவுனியா, பூவரசங்குளம், மதுக்குளம் ஏரிக்கரையில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பூவரசங்குளம் 
பொலிஸார் தெரிவித்தனர். 
 இரண்டு சிறுவர்கள் உழவு இயந்திரத்தின் பின்னால் பயணித்த வேளையில் உழவு இயந்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் கரையில் இருந்து தவறி விழுந்ததில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பூவரசங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.சதுஷான் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான்.
 காயமடைந்த மற்றைய குழந்தையும் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 2 செப்டம்பர், 2023

நாட்டில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்குள் ஏற்றுமதி வருமானமானது வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏற்றுமதி வருமானம் 10.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 6,891 மில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றுமதி வருமானம் பதிவாகியுள்ளது.
பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்து ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் அறிவிப்பில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பெற்றோலிய உற்பத்திகள் சார்ந்த ஏற்றுமதி வருமானம் 24.5 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.  என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>