siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஜேர்மனிக்கு போலிக்கடவுச் சீட்டில் செல்ல முயற்சித்தவர் கைது.

போலி கடவுச் சீட்டில் ஜேர்மனி செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 31 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 25 ஜனவரி, 2016

தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்ட இளைஞர் விமான நிலையத்தில் கைது.

ஒமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான விசாவை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் குறித்த இளைஞர் ஒமானில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞர் இன்றைய தினம் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரவினர் முன்னெடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வெள்ளி, 22 ஜனவரி, 2016

கோடீஸ்வர தம்பதிகள் நடுவானில் விபத்தால் உடல் கருகி பலி ?

அமெரிக்கா நாட்டை சேர்ந்த கோடீஸ்வர தம்பதி இருவர் சிறிய ரக விமானத்தில் பயணம் செய்தபோது நடுவானில் ஏற்பட்ட திடீர் விபத்தால் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை 
ஏற்படுத்தியுள்ளது.
அரிசோனா மாகாணத்தை சேர்ந்த டொனால்ட் பேகர் (59) என்பவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவர். இதே மாகாணத்தில் மட்டும் இவருக்கு 2.5 மில்லியன் சதுர பரபரப்பளவில் சொத்துக்கள் 
உள்ளன.
டொனால்ட் கடந்த 2012ம் ஆண்டு ஆபரண நகை தயாரிப்பாளரான டான் ஹண்டர் (55) என்பவரை திருமணம் 
செய்துக்கொண்டார்.
இந்நிலையில், நேற்று உட்டாஹ் மாகாணத்தில் ஒரு அலுவலக வேலையை முடித்துக்கொண்டு இருவரும் சிறிய ரக விமானத்தில் அரிசோனா திரும்பியுள்ளனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் திடீரென விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், விமானத்தில் இருந்த இரண்டு என்ஜின்களில் ஒன்றில் இருந்து திடீரென நெருப்பு வெளியாகியுள்ளது.
இதனைக்கண்ட டொனால்ட் உடனடியாக விமானத்தை உட்டாஹ் நகருக்கு திருப்பியுள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக விமான என்ஜின் வெடித்ததில் விமானம் தீப்பற்றி எரிந்தவாறு Cedar Fort என்ற பகுதியில் 
விழுந்துள்ளது.
சம்பவம் அறிந்து வந்த மீட்பு படையினர், உயிரிழந்தது டொனால்ட் மற்றும் அவரது மனைவி தான் என 
உறுதிப்படுத்தினர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 21 ஜனவரி, 2016

வீட்டு வேலை செய்து வந்த பெண்ணின் கை துண்டிக்கப்பட்டுள்ளது !

.சவுதி அரேபியாவில் கை துண்டிக்கப்பட்ட கஸ்தூரி, அந்த நாட்டு அரசாங்கத்திடம் இருந்து உரிய இழப்பீடினை பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 65 வயதான கஸ்துரி சவுதியில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இவரை அந்த வீட்டின் உரிமையாளர் அதிக வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது அந்த வீட்டின் உரிமையாளர் இவரை தடுத்து நிறுத்தும் நோக்கில் தாக்கியதில் இவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுதியில் வசித்த இந்தியர்கள் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாநில அரசின் உதவியுடன் அவர் நாடு திரும்பினார்.
இதனிடையே கஸ்தூரி மற்றும் அவரது மகன் மோகனுடன் வேலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தவர்கள்,
சவுதியில் நடந்து வரும் வழக்கு குறித்த விவரங்களை இந்திய வெளிவிவகாரத்துறை உதவியுடன் தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மத்திய அரசு சார்பில் இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை எனவும், ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என
 கேட்டுக்கொண்டுள்ளனர்.
சவுதியில் நடக்கும் வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்கி தங்களுக்கு சேர வேண்டிய இழப்பீடுத் தொகையை சவுதி அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை
 விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


சனி, 16 ஜனவரி, 2016

திருடிய பாடசாலை மாணவர்கள் மூவர் கைது!

வல்வெட்டித்துறைப் பகுதியிலுள்ள கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் மூவரை, நேற்று முன்தினம் வல்வெட்டித்துறைப் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
கைதான மூவரில் இருவர், வல்வெட்டிப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர், கம்பர்மலை பகுதியினை சேர்ந்த 16 வயதுடைய மாணவர்கள் என பொலிஸார் 
கூறினர். 
கடந்த வருடம் ஜூலை மாதம் குறித்த கைபேசி விற்பனை நிலையத்தினை உடைத்து; 2½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களைத் திருடியிருந்தனர். விசாரணைகளை மேற்கொண்ட இரகசிய பொலிஸார், சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 11 ஜனவரி, 2016

உங்கள் பல்வலி, பல்சொத்தை, பல்புழு நீங்க ???

மிகவும் திறமை வாய்ந்த சித்தமருத்துவர்.  ஒருவர் பல்வலி, பல்சொத்தை, பல்புழு போன்றவைகளிலிருந்து விடுபட ஒரு அருமையான மருத்துவத்தை தெளிவாக கூறியுள்ளார்.
ஒரு கைப்பிடியளவு தும்பை இலைகளுடன்,
நான்கு சின்ன வெங்காயங்களைச் சேர்த்து,
வாயில் போட்டு நன்றாக மென்று துப்ப
பல் சொத்தை, பல் புழு சரியாகும்
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>



வெள்ளி, 8 ஜனவரி, 2016

இயற்கை அனர்த்தங்கள்பற்றிய நாசா அவசர எச்சரிக்கை இலங்கைக்கு!!!

!இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.
எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 2 ஜனவரி, 2016

சர்­வ­தேச விமான நிலை­ய­மாக பலாலி விமான நிலை­யத்தை மாற்­ற அர­சு சம்­மதம்!

பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது
 எட்­டி­யுள்­ளது.
வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல்­வேறு தரப்­பி­னரும் சாத­க­மான கருத்­தி­லுள்­ளனர். ஆனால் அவ்­வாறு மாற்­று­வ­தற்கு மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­டு­வதை நாம் விரும்­பவில்லை.
இதனைத் தெளி­வு­ப­டுத்தி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க ஆகி­யோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­பட்­டு ­வந்த நிலையில் தற்போது இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.
குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச தரத்தில் மாற்­று­வ­தற்கு விமான ஓடு பாதைகள் உட்­பட பல அபி­வி­ருத்­தி­களைச் செய்­வ­தற்கு நிலப்­ப­ரப்பு தேவை­யாக உள்­ளது.
இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­கரிக்கும் நட­வ­டிக்­கைகள் நடை­பெற்­ற­ போதும் நாம் பல பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யதன் பய­னாக மக்­களின் காணி­களை சுவீ­கரிக்­காது கடற்­க­ரை­யோ­ரங்­களில் மண்ணை நிரப்பி அதற்கு ஏற்ற சூழலை உரு­வாக்­கு­வ­தற்­கான திட்­டங்கள்
 முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.
மேலும் இதற்கான திட்ட முன்மொழிவுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வெகு விரைவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது 
என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>