siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 29 ஏப்ரல், 2021

தனியார் பேருந்து, மாகுடுகல பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்து

நுவரெலியா, இராகலையிலிருந்து ஹைபொரஸ்ட் நோக்கி  
.29-04-2021.இன்று.காலை பயணித்த தனியார்  பேருந்து, மாகுடுகல பகுதியில் வைத்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்டோர் 
கயாமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 10 பேர் வரை நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஏனையோர் ஹைபொரஸ்ட் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 26 ஏப்ரல், 2021

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் கிளிநொச்சியில் மரணம்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் ; மரணமடைந்த  நிலையில் அவரது மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டத்தில் அவருக்கு கொவிட் 19 தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

 இந்நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 25-04-2021.அன்று  உயிரிழந்துள்ளார்.
 இப்பெண்ணின் மரணத்தை தொடர்ந்து அவர் கொவிட் 19 காரணமாக இறந்திருக்கலாம் என பரபரப்பு ஏற்பட்ட அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பட்டு அதன் முடிவுகளின் படி, 
அவர் கொவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை எனவும் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம். இசற். எம். எச். பாத்திமா சியானா  வயது 47 என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் 
வைக்கப்பட்டுள்ளது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 ஏப்ரல், 2021

பாதுகாப்பாக கடனட்டைகளை வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

 உடுதும்பர மற்றும் அயகமவில் ஆகிய பிரதேசங்களில் கடனட்டைகள் திருடப்பட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பில் காவல் துறையினர்  விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல் துறையினர்
 தெரிவித்தனர்.
உடுதும்பர பகுதியில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணமும் மற்றும் அயகம பிரதேசத்தில் திருடப்பட்ட கடனட்டையில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் பணமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடக பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
குறித்த கடனட்டைகளுடன் இரகசிய எண்ணையும் வைத்திருந்த காரணத்தால் சந்தேகநபர்களால் குறித்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடனட்டைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அதனுடன் இரகசிய எண்ணை வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் காவல் துறை  ஊடக பேச்சாளர் பொதுமக்களுக்கு
 அறிவுறுத்தியுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

பாரதிபுரத்தில் தாயை அவதூறாக பேசினார் என தந்தையை க்கொன்ற மகன்.

யாழ் கோப்பாயில் குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபரின் இரண்டு மகன்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல் துறையினர் 
தெரிவித்துள்ளனர்.
கோப்பாய் கலாசாலை வீதி- பாரதிபுரத்தில்.23-04-2021. அன்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 5 பிள்ளைகளின் தந்தையான இராசமணி இரத்தினசிங்கம் (வயது-52) என்பவரே உயிரிழந்தார்.
நேற்றிரவு வீட்டுக்கு மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற குடும்பத்தலைவர் மனைவியுடன் முரண்பட்டுள்ளார். வைத்தியசாலையில் பணியாற்றும் மனைவி வீடு திரும்பிய போது தகாத வார்த்தைகளால் தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த மகன் ஒருவன் அவரை கண்மூடித்தனமாகத்
 தாக்கியுள்ளார்.
அத்துடன், மைத்துனர் ஒருவரும் அவரைத் தாக்கியுள்ளார்.
நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குடும்பத்தலைவர் அசைவற்றுக் கிடந்துள்ளார்.
காலையில் அவர் உயிரிழந்தமை தெரிய வந்தததை அடுத்து கோப்பாய் காவல் துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்குச் சென்ற  காவல் துறை  விசாரணைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட காவல் துறை 
 புலனாய்வுப் பிரிவினர்
 முன்னெடுத்த விசாரணையில் கோப்பாய் பகுதியில் பற்றைக் காணியில் மறைந்திருந்த பிரதான சந்தேக நபரான மகனைகாவல் துறையினர்
 கைது செய்தனர்.
மற்றொரு மகனும், மைத்துனர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் நீதிவான், உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>








வெள்ளி, 23 ஏப்ரல், 2021

ஸ்பெயினில் தாயைக் கொன்று சாப்பிட்டதாக மகன் ஒப்புதல்

ஐரோப்பிய நாடானா ஸ்பெயினில் கிழக்கு மாட்ரிட்டில் தாயைக் கொன்று, உடலை வெட்டி, உடலின் பாகங்களை சாட்பிட்டார் என்ற குற்சாட்டில் மகன் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது அந்த நபர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நண்பர் ஒருவர் காவல்துறையினரிடம் கவலையை வெளிப்படுத்தியதை அடுத்து சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் வீட்டைச் சுற்றி உடல் பாகங்கள் சிதறிக்கிடப்பதை கண்டுபிடித்தனர். 
அத்துடன் உடல் பாகங்கள் பிளாஸ்டிக் கொல்கலன்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து மகனை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
26 வயதுடைய ஆல்பர்டோ சான்செஸ் கோமேஸ் (Alberto Sánchez Gómez) என்பவர் 66 வயதுடைய சொந்த தாயின் (மரியா சோலெடாட் கோமேஸ் María Soledad Gómez)  கழுத்தை நொித்துகொன்றுள்ளார். பின்னர் உடலை கூறுகூறாக வெட்டி சாட்பிட்டதாகவும் சில உடற்பாகங்களை நாய்க்கு சாட்பிடக் கொடுத்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் 
அளித்துள்ளார். 
கோமேஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் மனநிலை பாதிக்கப்பட்டும் போதைப்பொருள் பழக்கத்தாலும் அவதிப்பட்டதாகக் 
கூறப்படுகிறது.
விசாரணை தொடர்கிறது. பிரதிவாதி நீதிமன்றத்தில் தனது தாயை துண்டித்து சாப்பிட்டதாக நினைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
 
நிலாவரை.கொம் செய்திகள் >>>





வியாழன், 22 ஏப்ரல், 2021

விரைவில் கொவிட்-19 புரதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை, விரைவான அதிகரிப்பு, தற்போது நாட்டில் பரவுகின்ற வைரஸ்கள் எந்த வகையானவை  மற்றும் அவை
 எவ்வாறு திரிபடைகின்றன என்பதை அறிந்துகொள்ள ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் மற்றும் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு (The Department of Immunology and Molecular Medicine and Allergy, Immunology and Cell Biology Unit of University of Sri Jayewardenepura ) இந்தப் பரிசோதனையை 
ஆரம்பித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மூலம் பல உண்மைகள் வெளிப்படும் என அதன் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவன்தர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா  வைரஸ் குறித்து தற்போது மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் புரதங்களை அடையாளம் காண்பதில் சிரமத்தைக் காட்டுவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.
புரதப் பரிசோதனை தொடர்பான இயந்திரத்தை இலங்கைக்குக் கொண்டு வருமாறு கோரப் பட்டுள்ளதாகவும், இது குறித்த சோதனைகளை அடுத்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் 
மேலும் தெரிவித்தார்.
குறித்த பரிசோதனை இயந்திரமானது ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்குள் முடிவுகளைக் காட்டக்கூடும் என அவர்
 தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துள்ளனர். அதில் இளைஞர்களே  அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றை இனம் காண சரியான பரிசோதனை மேற்கொண்டு இது தொடர்பாகத் தகவல்களை வழங்க முடியும் என அவர் 
மேலும் தெரிவித் துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 21 ஏப்ரல், 2021

அச்சுவேலிப் பொலிஸாரால் காரில் ஹெரோயின் கடத்திய தம்பதி கைது

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் கடத்திய தம்பதியினரை அச்சுவேலிப் பொலிஸார் 
கைது செய்துள்ளனர்.
வல்லைச் சந்தியில் வைத்து 20-04-2021.அன்று செவ்வாய்க்கிழமை மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த 40 வயதுடையவரும் 38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர் எனவும்,சந்தேக நபர்களிடமிருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என அச்சுவேலிபொலிஸார்
 தெரிவித்தனர். 
அத்துடன் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும்
 பொலிஸார் தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 20 ஏப்ரல், 2021

அல்வாய் பகுதியில் வாள் வெட்டுக்கு குடும்பஸ்தர் ஒருவர் பலி


வடமராட்சி பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர்
 வாள் வெட்டுக்கு
இலக்காகி  உயிரிழந்துள்ளார். மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அல்வாயை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு. கௌசிகன் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அல்வாய் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இன்றைய தினம் மதியம் வாய் தர்க்கமாக ஆரம்பித்து வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது என  காவல் துறையின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் சிசு பலி


தம்பலகாமத்தில் தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் .19-04-2021.நேற்றிரவு 
இடம்பெற்றுள்ளது
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த போது 
குழந்தையின் வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து நுரை வழிந்த நிலையில் கிடந்ததாகவும் இதனையடுத்து தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து குழந்தை 
உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கைக்குழந்தையின் சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம். ரூமி பார்வையிட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு காவல் துறைக்கு 
கட்டளையிட்டார்.
இதேவேளை, இச் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் குழந்தையின் சடலம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தம்பலகாமம் காவல் துறைக்கு 
தெரிவித்தனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

அமரர் சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா) 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.20-04-21


பிறப்பு-02 05 1964--இறப்பு--22 03 2021
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வந்தவரும் தற்போது  நவற்கிரியில் வதித்து வந்த
 திரு சின்னத்தம்பி சிவானந்தம் (செல்வா,சிவா.) 
அவர்களின் 31ம் நாள்  வீட்டுகிருத்திய்  கிரீமலை அழைப்பிதழ்
20-04-2021. செவ்வாய்க்கிழமை  அன்று காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 22-04-2021, அன்று வியாழக்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அப்பா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அப்பா !
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அப்பா! 
தரணியில் உம்மை எப்போ காண்போம் அப்பா! உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு மனைவி அம்மா .பிள்ளைகள்,சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>> 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 19 ஏப்ரல், 2021

அமரகள் இரசரட்ணம் செல்லம்மா.55ம் நாள் மயில்வாகனம் இராசரத்தினம் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.19-04-21

பிறப்பு-08-03-1940--இறப்பு-24-02 -2021.-இரசரட்ணம் செல்லம்மா-
பிறப்பு-02-0-1930--இறப்பு-22-03 -2021.மயில்வாகனம்  இராசரத்தினம் ,
யாழ் நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர்கள் இரசரட்ணம் செல்லம்மா-55ம் நாள்-மயில்வாகனம்  இராசரத்தினம் ,
31ம் நாள் அவர்களின் .அந்தியேட்டி 
 வீட்டுகிருத்திய்  அழைப்பிதழ்
19-04-2021. திங்கட் கிழமை. அன்று   காலை 08,மணியளவில் கிரீமலை  தித்தக்கரையில்   ஆத்மா   சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 21-04-2021, அன்று புதன்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில்    அன்னாரின் இல்லத்தில்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம். 
>>>>> 
அப்பா -அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே! 
தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
 பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்
  வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர்
நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

திருமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் நிர்மாணப் பணி ஆரம்பம்

 திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேச செயலகப்பிரிவில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீதியில் குறிஞ்சன்கேணி களப்பினூடாக பாலம் நிர்மாணிக்கப்படுகின்றது.
இந்தப் பாலம் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகர சபைகளையும் இணைக்கும். இதன் நீளம் 120 மீட்டர் ஆகும். இதற்காக ரூ 75 கோடி செலவிடப்படவுள்ளது.. மூன்று கட்டங்களில் இந்த கட்டுமானப் பணிகள் இடம்பெறவுள்ளன..
குறிஞ்சாக்கேணி மற்றும் கிண்ணியாவுக்கிடையில் பொது மக்களுக்கான போக்குவரத்து தற்போது படகு மூலமே 
இடம்பெறுகிறது.
இந்த பால கட்டுமானப் பணிகளின் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போக்குவரத்து வசதியை 
பெறுகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>


 


 

சனி, 17 ஏப்ரல், 2021

முள்ளியில் படையினரின் உத்தரவை மீறி தப்பிச்சென்ற பிக்-அப் ரக வாகனம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் காவல்துறையின் கட்டளையை மீறி பயணித்து, தப்பிச் சென்ற ;பிக்-அப் வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 நெல்லியடி மற்றும் காங்கேசன்துறை காவல்துறை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளையடுத்து துன்னாலை பிரதேசத்தில் குறித்த ;பிக்-அப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 கைப்பற்றப்பட்ட வாகனம் தற்போது நெல்லியடி காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அதனை மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை  முள்ளி 
பகுதியில், கட்டளையை மீறி பயணித்த மேற்படி பிக்-அப் ;வாகனம் மீது, காவல்துறை விசேட அதிரடிப் படையினர் நேற்று(16)  காலை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
 எவ்வாறிருப்பினும், அந்த ;பிக்-அப் ரக வாகனம் தொடர்ந்தும் நிறுத்தாமல் பயணித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், குறித்த வாகனம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
 மேலும் மேற்படி கெப்பில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இன்டியானாபொலிஸ் மாநிலத்தில் துப்பாக்கி சூட்டில் 8 பேர் மரணம்

அமெரிக்க வில்15-04-2021.வியாழக்கிழமை இரவு இண்டியானாபோலிஸின் பிரதான விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஃபெடெக்ஸ் வசதிக்கு வெளியேயும் வெளியேயும் துப்பாக்கி ஏந்திய 
ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், பலரும் காயமடைந்தனர் மற்றும் சாட்சிகளை தனது
 உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பு ஓடினர் என்று போலீசார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில் பொலிசார் இந்த வசதிக்கு அழைக்கப்பட்டனர்.  
மார்ச் 22 அன்று கொலராடோவில் மளிகை துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டதிலிருந்து நாட்டின் மிக மோசமான படப்பிடிப்புக்கு உள்ளூர் நேரம். பாதிக்கப்பட்டவர்கள் அல்லது துப்பாக்கிதாரி
 பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. "(
துப்பாக்கி ஏந்தியவர்) வாகன நிறுத்துமிடத்திற்குள் வந்தார், அவர் தனது வாகனத்திலிருந்து வெளியேறி விரைவாக படப்பிடிப்பு தொடங்கினார் என்று நான் நம்புகிறேன். ... முதல் படப்பிடிப்பு வாகன நிறுத்துமிடத்தில் நிகழ்ந்தது, பின்னர் அவர் உள்ளே சென்று வெகு தொலைவில் (உள்ளே) வரவில்லை,"இண்டியானாபோலிஸ் காவல்துறை துணைத் தலைவர் கிரேக் மெக்கார்ட் வெள்ளிக்கிழமை 
அதிகாலைசி.என்.என். 
பொலிசார் "மிகவும் குழப்பமான காட்சிக்கு வந்தனர், பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் எல்லா இடங்களிலும் ஓடுகிறார்கள்" என்று மெக்கார்ட் கூறினார். அதிகாரிகள் அவரை எதிர்கொண்டதால் துப்பாக்கிதாரி
 தன்னை கொலை செய்ததாக தான் நம்புவதாக மெக்கார்ட் கூறினார். எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை, என்றார். துப்பாக்கிச் சூட்டின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை என்று இண்டியானாபோலிஸ் போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஜெனே 
குக் கூறினார்.
 குறைந்தது நான்கு உயிர் பிழைத்தவர்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், காயமடைந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது,
 மெக்கார்ட் கூறினார். ஒருவர் ஆபத்தான
 நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். துப்பாக்கி ஏந்தியவரிடம் குறைந்தபட்சம் ஒரு 
ஆயுதம் இருந்தது - "ஒருவித துப்பாக்கி" - மற்றும்
 புலனாய்வாளர்கள் அவரிடம் இன்னும் இருக்கிறதா என்று தீர்மானிக்க முயற்சிக்கின்றனர், மெக்கார்ட் கூறினார். ஃபெடெக்ஸ் ஊழியர்களின் உறவினர்கள் அருகிலுள்ள ஹோட்டலில்
 ஒன்றுகூடி தங்கள் அன்புக்குரியவர்களைப்
 பற்றி வார்த்தைக்காகக் காத்திருந்தபோது, பொலிஸ் குற்றச் சம்பவத்தைப் புரிந்துகொள்ள முயன்றது,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இளைஞர் ஒருவர் கிளிநொச்சியில் தூக்கிட்டு தற்கொலை

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில்  இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 நேற்று (15.04.2021) இரவு இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்பகுதியின் கூரையில்  கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
 கோணாவில்  மத்தியை சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 என்ற இளைஞனே தவறான முடிவெடுத்து இவ்வாறு தற்கொலை 
செய்துள்ளார்.
 இதேவேளை கடந்த வாரம் இதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம் யுவதி ஒருவரும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டமை
 குறிப்பிடத்தக்கது

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 15 ஏப்ரல், 2021

பாடசாலையில் தீப்பிடித்து நைஜரில் 20 மாணவர்கள் உடல் கருகி பலி

நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இங்கு சில வகுப்பறைகள் பள்ளி கட்டிடத்துக்குள்ளும், சில வகுப்பறைகள் பள்ளிக்கு வெளியே வைக்கோலால் செய்யப்பட்ட குடிசைகளிலும் நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இங்கு வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. மாணவர்கள் அனைவரும் உன்னிப்பாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பள்ளிக் கூடத்தில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ பள்ளி 
முழுவதும் பரவியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ நாலாபுறமும் சூழ்ந்ததால் மாணவர்கள் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி 
பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து விரிவான விசாரணைக்கு 
உத்தரவிடப்பட்டுள்ளது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஜரோப்பா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 42 பேர் பலி

உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக 
செல்கின்றனர்.
உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைய முற்படுகின்றனர். இதுபோன்ற ஆபத்தான பயணங்கள் பல நேரங்களில் துயரத்தில் 
முடிந்து விடுகிறது.
இந்தநிலையில் ஏமனை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட அகதிகள் படகு ஒன்றில் ஜரோப்பா நோக்கி புறப்பட்டனர். இவர்களில் பெண்கள் சிறுவர்களும் அடங்குவர்.‌ இந்தநிலையில் அகதிகளின் இந்த படகு வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டி அருகே கடலில் சென்று கொண்டிருந்த போது சற்றும் எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஜிபூட்டி நாட்டின் கடலோர காவல் படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அவர்கள் செல்வதற்குள் பெண்கள், சிறுவர்கள் உட்பட 42 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 14 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் சுமார் 10 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 12 ஏப்ரல், 2021

அமரர் வேலுப்பிள்ளை ஜெயச்சந்திரன்.16ம் ஆண்டு நினைவஞ்சலி 12-04-2021

திதி -12-04-2021.இன்று 
.  ஆண்டவன் அடியில் 00 .04. 2005
யாழ் வல்வேட்டித்துறையை பிறப்பிடமாகவும்,  தோப்பு அச்சுவேலியை   வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலுப்பிள்ளை ஜெயச்சந்திரன் அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
எல்லாம் வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சரோசினியுடன்  
நல்லறத்தை நடத்திய எம்(ஜெயசந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
பலஆண்டுகள் இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
 என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
பாசமிகு மனைவி-அன்பு மகன் சகோதர்கள்:
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு 
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

அமரர். சபாரத்தினம் ஞானமணி, 5ம் ஆண்டு நினைவஞ்சலி 12-04-2021

உதிர்வு .08.04.2016 - நினைவஞ்சலி- 12-04-2021        
யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக உரும்பிராயில் வசித்து வந்த  
அமரர்.சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 5ம் ஆண்டு .நினைவஞ்சலி 12-04-2021 இன்று 
காலச்சுழற்சியில் ஐந்து ஆண்டுகள் கடந்து போனாலும் இன்னும் எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் 
. தகவல் குடும்பத்தின

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

நாடு முழுவதும் இன்று முதல் எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள்

தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பி.சி.ஆர். பரிசோதனைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தின் எல்லைகளில் மட்டுமன்றி நாடு முழுவதும் இவ்வாறு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் 
அவர் கூறினார்.
எனவே, அனைத்து மக்களும் கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அமுல்படுத்தப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது நாளாந்தம் சுமார் 200 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நிலைமை கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்றும் கூறினார்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள் என்பதால் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் 
மேலும் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளி, 9 ஏப்ரல், 2021

அகால மரணம் அமரர் சின்னராஜா (அப்பன்) வித்தகன் 08-04-2021

பிறப்பு-11-09-2002--இறப்பு--08-04-2021.  
யாழ். சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பில்  வசித்துவந்த திரு தம்பு சின்னராஜா (அப்பன்)நந்தினி
தம்பதிகளின் மூன்றாவது மகன் (பிறப்பிடம் கொழும்பு ) வித்தகன் அவர்கள்
 08-04-2021 வியாழக்கிழமை  அன்று அகால மரணம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு பறுபதம்  தம்பதிகனதும்  மற்றும்  
காலிங்கராஜாதம்பதிகளின் அன்புப் பேரனும் சுருதி சங்கீர்த்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார் 
அன்னாரின் பூதவுடல் நல்லடக்கம்.11-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று(கொழும்பு ) கல்கிசை மகிந்த 
மலர்சாலை யில்  நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல்: குடும்பத்தினர்

வியாழன், 8 ஏப்ரல், 2021

இரத்மலானையில் 27 வயது இளைஞனின் வங்கிக் கணக்கில் 13 கோடி ரூபாய் பணம்

தனது வங்கிக் கணக்கில் 136 மில்லியன் ரூபாய் பணத்தை  கொண்டிருந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது 
செய்யப்பட்டுள்ளார்
இரத்மலானை பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை  ஊடக பேச்சாளர் பிரதி  காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண
 தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் வங்கிக் கணக்கிற்கு வௌிநாட்டில் இருந்து குறித்த பணத்தொகை வைப்பிலிடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 6 ஏப்ரல், 2021

யாழ்.இருபாலையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த இளம் யுவதி

இளம் யுவதி ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. 
இது தொடர்பில் மேலும் தெரியவருவது ‘யாழ்ப்பாணம் -மடத்தடி, இருபாலை கிழக்கு கோப்பாய் பிரதேசத்தை சேர்ந்த இனுஜா என்கின்ற 21 வயதுடைய இளம் யுவதி ஒருவரே இவ்வாறு தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00மணியளவில் அவரது வீட்டில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.இவரது, இந்த தற்கொலைக்கான பின்னணி என்ன என்பது தொடர்பாக தகவல் கிடைக்காத நிலையில்
,குறிப்பிட்ட பிரதேச பொலிஸ் 
அதிகாரிகளால்- இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதேவேளை நேற்று இரவு 11.45 மணியாகிய போதிலும், சம்பவ இடத்திற்கு – அந்த பிரதேச கிராம சேவகரோ அல்லது அந்த பிரதேசத்திற்குரிய சட்டத்தரணியோ சமூகமளிக்கவில்லை என்பது இதன்போது சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வனாத்துவில்லுவவில் பரீட்சை எழுதிய மாணவி மயங்கி விழுந்து மரணம்

பரீட்சை எழுதிகொண்டிருந்த 14 வயதான மாணவி, மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இந்த சோகமான சம்பவம், புத்தளம்- வனாத்துவில்லுவ பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. அதில். தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு 
மரணமடைந்துள்ளார்.
அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என காவல் துறையினர்  
தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 5 ஏப்ரல், 2021

நாட்டில் பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை அகற்ற நடவடிக்கை

உடனடியாக அமுலாகும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 
தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது:-இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு.05-04-2021. இன்று இரவு 
வெளியாக்கப்படவுள்ளது.
அதேநேரம் தற்போது நாட்டில் பயிரிடப்பட்டுள்ள பாம் எண்ணெய் உற்பத்திக்கான செம்பனை மரங்களை கட்டம் கட்டமாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பரந்தன் வீதியில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலி மகன் படுகாயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த
 தந்தையும் 
மகனும் எதிரே வந்த டிப்பர் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இந்த விபத்தின் போது சுதந்திரபுரம் கொலனி 
பகுதியினை சேர்ந்த 53 அகவையுடைய வள்ளிபுனம் ஜெயராசா என்பவர் உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்த
 நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய டிப்பர் வாகனமும் சரதியும் புதுக்குடியிருப்பு பொலிசரால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>