siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 28 மார்ச், 2015

யாராலும் இதுவரை வாசிக்க முடியாத மர்ம புத்தகம் ???

 மர்ம புத்தகம் Voynich..!! வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா?வாய்னிச் கைப்பிரதி என்னும் புத்தகம் அச்சடிக்கப்படாத இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வரி வடிவங்களாலும் படங்களாலும் கையால் எழுதப்பட்டுள்ளது.இது எப்போது எழுதப்பட்டது
என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.கதிரியக்க கார்பன் தேதியாக்க முறைமூலமாக இது எழுதப்பட்ட காலம் 15ம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில் வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டது என்று அரியப்படுகின்றது.புத்தகப் பதிப்புரிமையாளர் ஒருவர் 1912 ம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் இந்தக் கைப்பிரதி புத்தகத்தை வாங்கினார்.இதில் காணமால் போன அல்லது தவறிப் போன பக்கங்களைத் தவிர 240 பக்கங்கள் இந்தக் கைப்பிரதியில் மீதம் இருக்கின்றது.
இதில் உள்ள எழுத்துக்கள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாண்மையான பக்கங்களில் ஏதாவது ஒன்றை விளக்கும் வகையில் உள்ளது அல்லது படங்கள் இருக்கின்றது .பெரும் பாண்மையான மக்கள் இதனைப் பார்த்துவிட்டு இதில் உள்ள புரியாத எழுத்துக்களும் படங்களும் முட்டாள்தனமானது என்று கூறுகின்றார்கள்.
2013 ம் ஆண்டு மான்செஸ்டர் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதனை பேப்பரில் பதிப்பித்தும் இதில் கண்டுள்ள விசயங்கள் சங்கேதக் குறியில் எழுதப்பட்டுள்ள விசயங்கள் என்று கூறுகின்றார்கள்.
சில ஆராய்ச்சியாளர்கள் இது முழுக்க 
முழுக்க எந்த ஒரு விசயத்தையோ செய்தியையோ வெளிப்படுத்துவதற்காக வெளியிடப்படவில்லை என்று கூறுகின்றார்கள்.ஆனால் இது ஏதோ ஒரு அர்த்தத்துடன் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புகளாக இருக்கலாம் எனபது ஒருசாராரின் கருத்து.ஆனால் எப்படியோ நமக்கும் இது புரிந்த மாட்டில் இல்லை.இந்தப் புத்தகம் கூறும் மர்மம் 
விளக்கப்பட முடியுமா ?
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>