siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 19 நவம்பர், 2014

நவக்கிரி புத்தூர் கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலம் மீட்பு

யாழ். நவக்கிரிபுத்தூர்ரயை சேர்ந்த பெண்ணொருவர் 17.11.14. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்திருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.