siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 31 மே, 2016

மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிநடைபெரு கின்றது?

முரசுமோட்டையில் மாட்டுவண்டி சவாரி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
கிளிநொச்சிநெற் இணையத்தின் ஊடக அனுசரணையுடன்
 முரசொலி 
விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் மாட்டு வண்டிச் சவாரிப் போட்டி தற்போது முரசொலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 28 மே, 2016

பூமியையொத்த கிரகங்களின் கண்டுபிடிப்பும் எரிகல் வீழ்ந்து பூமி அழியும் சாத்தியமும்!

இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார்.
“இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கமளித்துள்ளார்.
மேலும் இயற்கை மனிதர்களுக்கு அல்லது பூமிக்கு ஏற்படுத்தும் அழிவுகள் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட அழிவுகளைக் குறிப்பிடலாம். இது பற்றியும் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெளிவுபடுத்தியுள்ளார்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள்     



புதன், 25 மே, 2016

கல்வி கற்கும் மாணவிக்கு ஆசிரியர் கொடுத்த விசித்திரமான தண்டனை!

காலியில் பிரபலமான பாடசாலை ஒன்றில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவிக்கு அதே வகுப்பை சேர்ந்த 44 மாணவிகளை அழைத்து தலையில் கொட்டக் கூறிய ஆசிரியர் தொடர்பாக நேற்று தெரியவந்துள்ளது.
இது காலி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
குறித்த மாணவி செய்த சிறு தவறுக்கு இவ்வாறு தண்டனை வழங்க கூறிய அந்த ஆசிரியர், பயிற்சிக்காக வந்த அறிவியல் ஆசிரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தென் மாகாண கல்வி அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களமும் இது தொடர்பாக வேறு ஒரு விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

முடி உதிர்வை இரண்டு வாரத்தில் தடுக்கஓர் தகவல்

இரண்டு வாரத்தில் முடி உதிர்வை தடுத்து அடர்த்தியாக வளர இலகுவான வழி! காணோளியை பாருங்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

புதன், 18 மே, 2016

எச்சரிக்கை கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள்-

கிளிநொச்சியில் மக்களை ஏமாற்றும் போலி ஆசாமிகள் பலர் தங்களது கைவண்ணத்தினை காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நாகரிகமான முறையில் ஆடை அணிந்து தமது பேச்சுத்திறமை மூலம் மக்களை ஏமாற்றி வருவது 
அவதானிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் சற்று நேரத்திற்கு முன்னர் தான் தன் பணப்பை தொலைந்தது.  இதனால் வீடு செல்ல சிறிதளவு பணம் தேவைப்படுகின்றது எனக்கூறி பேருந்து தரிப்பிடங்களில் மக்களை ஏமாற்றி பணம் பெற்று
 வருகின்றனர்.
அத்துடன் கிளிநொச்சி பொதுச்சந்தை மற்றும் பொது இடங்களிலும் இந்த நாகரிக திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 10 மே, 2016

தாயகம் திரும்பியவர் கட்டுநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.!!!

வெளிநாட்டிலிருந்து நாடுதிரும்பிய நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் இந்த மாதத்தில் கைதுசெய்யப்படும் இரண்டாவது தமிழர் இவர். முல்லைத்தீவு – முத்தையன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜெயகாந்தன் என்பவரே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
 இவர் கடந்த 2013ஆம் ஆண்டு
 தொழிலின் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்று கடந்த 12ஆம் திகதி நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு அலுவலகத்திற்கு
 சென்ற அவர்
 இன்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எ.டொமினிக் பிறேமானந் தெரிவித்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், கைதுசெய்யப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு 
செய்துள்ளதாகவும் சட்டத்தரணி டொமினிக் தெரிவித்தார்.இதேவேளை, கைதுசெய்யப்பட்ட நபர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், மன்னார் – அடம்பன் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் கடந்த 
10ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், நேற்று திங்கட்கிழமை கொழும்பு 4 ஆம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> />

சனி, 7 மே, 2016

யாழில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் பலி!!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்று கொண்டிருந்தவேளை, தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் மீது புகையிரதம் மோதியுள்ளது.
இதனையடுத்து, இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றார்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2016

பிறந்து சில மணிநேரமேயான சிசு துண்டங்களான அவலம்!!

இராகலை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில், பிறந்து சில மணிநேரத்தில் கைவிடப்பட்ட சிசு ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று (01) பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவருவதாவது,
சிசு ஒன்றின் சில உடற் பாகங்களை வளர்ப்பு மிருகங்கள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு வந்துள்ளன.
இதனை அவதானித்த அப் பிரதேசவாசிகள் 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பிற்கு தகவல் வழங்கி உள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த, பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து குறித்த சிசுவின் மிகுதி உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிசுவை பிரசவித்தவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் 
குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>