siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 ஏப்ரல், 2026

யாழ் புத்தூர் வாள்வெட்டுச் சம்பவம்: சிறுப்பிட்டி வயல் பகுதியில் நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்

யாழ் புத்தூரில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் மர்ம நபர்களை, சிறுப்பிட்டிப் பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்த விபரங்கள்:
புத்தூர் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பியோடிய கும்பலைச் சேர்ந்த சில நபர்கள், சிறுப்பிட்டி வயல் பகுதியில் பதுங்கியிருப்பதாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, விழிப்புடன் செயற்பட்ட கிராம மக்கள் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தனர். இதன்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
பொலிஸாரிடம் ஒப்படைப்பு:
பிடிபட்ட நபர்களின் கைகளைக் கட்டிய பொதுமக்கள், உடனடியாக அச்சுவேலிப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
தற்போதைய நிலை:
பிடிபட்டவர்களிடம் இருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர
குறித்த நபர்கள் வாள்வெட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர்களா அல்லது வேறு ஏதும் பின்னணி கொண்டவர்களா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுங்கியிருந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்களைத் துணிச்சலுடன் மடக்கிப் பிடித்த சிறுப்பிட்டி மக்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

நாட்டில் தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

நாட்டில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் மின்சாரம் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் 
என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு 
நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரைப் பொருத்த
 முயன்றபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

சனி, 11 ஏப்ரல், 2026

கார் ஒன்று மினிபஸ் மீது மோதியதில் இங்கிலாந்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

பிரித்தானியாவில், கார் ஒன்று சாலைப் பாலத்திலிருந்து விலகி, கீழே நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு மினிபஸ் மீது மோதியதில், இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் 
உயிரிழந்தனர்.
லெய்செஸ்டர்ஷையரில் உள்ள லட்டர்வொர்த்தை நோக்கி கில்மோர்டன் லேனில் சென்றுகொண்டிருந்த ஒரு நீல நிற கார், சாலைப் பாலத்திலிருந்து எம்1 நெடுஞ்சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அந்தக் கார், எம்1 நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு வெள்ளை நிற ஃபியட் டுகாடோ மீதும் மோதியதாக லெய்செஸ்டர்ஷையர் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர்
 குறிப்பிட்டுள்ளார்.
நீல நிற காரில் இருந்த பதின்ம வயது இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
மினிபஸ்ஸில் இருந்த ஓட்டுநர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர், உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 10 ஏப்ரல், 2026

நாட்டில் பட்டானிச்சூர் பகுதியில் லொறி மோதி சைக்கிளில் சென்றவர் பலி

 

நாட்டில் வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானார். வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி ஒன்று பயணித்த நிலையில் பட்டானிச்சூர் பகுதியில் அதன் ஓட்டுநர் பாதையின் மறுபக்கத்திற்கு திரும்புவதற்கு முற்பட்டுள்ளார். இதன்போது அதே திசையில் பின்னால் சென்ற லொறி ஒன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது
விபத்து இடம்பெற்ற உடனேயே, லொறியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து
 வருகின்றனர்.
அத்துடன் தப்பியோடிய லொறியின் சாரதியைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 9 ஏப்ரல், 2026

மரண அறிவித்தல் அமரர் நாகமுத்து குமாரசிங்கம்

 துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-09-04-2026
யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட 
அமரர் நாகமுத்து குமாரசிங்கம் 
அவர்கள் 09-04-2026.வியாழக்கிழமை .இன்று  நவற்கிரியில்  காலமானார். அன்னார்  காலம்சென்ற
 நாகமுத்து தம்பதியினரின் அன்புமகனும் திருமதி  ராசு (கனடா )அவர்களின் அன்புக்கணவரும் 
திருமதி சுபா (சுவிஸ் )திருமதி சொக்கி (கனடா )திரு செட்டி(கனடா )
திரு  கண்ணன் (கனடா )
ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவர் அன்னாரின்  நல்லடக்க விபரம்  
இந்த இணையத்தில்  இணைக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.

நாடில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாட்டில்  நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிருந்துள்ளனர்.
இதன்போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம்
 ஏற்பட்டுள்ளது.
23 வயதான யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது
மக்களே அவதானமாக இருங்கள் மின்னல் மழை போன்ற நேரங்களில் உங்கள் பாதுகாப்பினை முதலில் பார்த்து கொள்ளுங்கள்
தொலைபேசிகளை பாவிப்பதை குறைத்து கொள்ளுங்கள் மின்சாரங்களை கவனமாக பாவிங்கள் .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஏப்ரல், 2026

திருகோணமலையில் திடீரென தீக்கிரையான ரயில் இயந்திரம்

திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
திருகோணமலை புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இயந்திரம் இன்று (08) மாலை 3.00 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. தூரப் பிரதேசங்களில் இருந்து நிலையத்திற்கு வரும் ரயில்களை, நிலைய எல்லைக்குள் இழுத்துச் சென்று நிறுத்தும் பணிகளுக்காக இந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த ரயிலின் பெட்டிகளை இடமாற்றும் பணியில் குறித்த இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதே, திடீரென இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து கருத்து தெரிவித்த பிரதான புகையிரத நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், “தீப்பிடித்தமைக்கான காரணம் குறித்து தற்போது உறுதியாகக் கூற முடியாதுள்ளது. எனினும், தீயணைப்புப் படையினர் இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் தகவல்களை வழங்குவார்கள்,” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீ விபத்தினால் ரயில் இயந்திரம் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஏப்ரல், 2026

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்

யாழ்மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம்.07-06-2026. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

திங்கள், 6 ஏப்ரல், 2026

முதியவரை மோதி விட்டு யாழில். தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி - விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் 
குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு தனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரை மோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து 
தப்பி சென்றுள்ளனர்.
முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான விடயத்தினை வீட்டாருக்கு தெரிவித்த பின்னர் , சிறிது நேரத்தில்
 மயங்கி சரிந்துள்ளார். 
உடனடியாக வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார். 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


. கெருடாவிலில் இடிமின்னலுடன் பலத்த மழை - மின்னல் தாக்கத்தால் வீடொன்று சேதம்

யாழில்  மின்னல்  தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை வேளை பல இடங்களில் இடி மின்னல் உடன் கூடிய 
மழை பெய்தது. 
அதன்போது, வடமராட்சி, கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் அருகில் நின்ற தென்னை மரத்தின் மீது மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி கொண்டதுடன் , குறித்த மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர்களில் ஓட்டைகள் விழுந்துள்ளதுடன் , ஜன்னல் மற்றும் கதவு நிலைகளும்
 சேதமடைந்துள்ளன. 
இருந்த போதிலும் வீட்டில் இருந்தோர் காயங்கள் எதுவும் இன்றி தப்பித்துக்கொண்டனர். 
தென்னை மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி எரிவதனை கண்ட அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளனர்  
அதேவேளை குறித்த மின்னல் தாக்கத்தினால் அயலவர்களின் தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்கள் சிலவும் சேதமடைந்துள்ளன என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

யாழ் போதனா வைத்தியசாலை உயிர்களை காப்பாற்றிய இயந்திரத்திற்கு பிரியாவிடை

யாழ்  போதனா வைத்தியசாலை  இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath lab machine நேற்றைய தினம் சனிக்கிழமை சேவையில் இருந்து விடை பெற்றது.
Cath Lab என்பது இதய நோய்களைக் கண்டறிந்து, 
அறுவை சிகிச்சை இல்லாமல் (Angiogram, Angioplasty) சிகிச்சை அளிக்கும் உபகரண தொகுதி. இதில் x-ray உதவி உடன் இதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகள் மற்றும் Pacemaker போன்ற சிகிச்சைகள் 
அளிக்க படுகிறது.
சுகாதார அமைச்சு,   இவ் உபகரணத்துக்கு பதிலாக புதிய cath lab உபகரண தொகுதியை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
இம்மாத இறுதிப்பகுதியில் புதிய உபகரணம் சேவையை
 ஆரம்பிக்கும்.
இதே சமயம் இம்மாதம்  மேற்படி சிகிச்சைகள் வைத்தியசாலையில் இருக்கின்ற DSA இயந்திரத்திலும் வவுனியா பொது வைத்தியசாலையில் இருக்கின்ற Cath lab பகுதியிலும் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
குறித்த  இயந்திரத்தை இவ்வளவு காலம் சரியான முறையில் பயன்படுத்தி வந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கதிரியக்கவியலாளர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள், இதனை வழங்கிய நிறுவன பொறியாளர் உள்ளிட்டோருடன் பணிப்பாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டமையும் .என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



சனி, 4 ஏப்ரல், 2026

உணவகம் மீது பிரேசிலில் விமானம் மோதியதில் நால்வர் உயிரிழப்பு.

.பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில், ஒரு சிறிய ரக விமானம் உணவகம் மீது மோதி தீப்பிடித்ததில் நான்கு பேர் 
உயிரிழந்துள்ளனர்.                              
சாவோ பாலோவிலிருந்து வந்த பைப்பர் மாலிபு விமானத்தில் பயணித்த ஒரு தம்பதியினரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர்.
கபாவோ டா கனோவா விமான நிலையத்தை நெருங்கும்போது விமானம் கீழே இறங்கியது. 
குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்த அந்த உணவகத்தில் மோதுவதற்கு முன்பு, ஓடுபாதையின் முடிவில் இருந்த ஒரு கம்பத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த நேரத்தில் உணவகம் மூடப்பட்டிருந்ததால், தரையில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

.

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

கொடிகாமத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை சந்தேகநபர் சரண்

யாழில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த 
சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது.
கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி  சம்பவ இடத்திற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். 
பொலிசாரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸார் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். 
உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட்  (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே 
உயிரிழந்துள்ளார். 
அவருடன் சென்ற மற்றைய பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
 அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 2 ஏப்ரல், 2026

கிரீட் தீவில் உள்ள சூடாவில் பிரான்சின் விமானம் தாங்கி கப்பல் நிறுத்தப்பட்டது

மத்திய கிழக்கில் நடந்துவரும் போரின் பின்னணியில், பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கோல் இன்று காலை கிரீட் தீவில் உள்ள சூடா வளைகுடாவிற்கு வந்தடைந்தது.
கிறீஸ் ஊடகங்களின் தகவல்படி அந்தப் போர்க்கப்பல் ஏப்ரல் 7 வரை அந்த இடத்தில் நங்கூரமிட்டு நிலைநிறுத்தப்படும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சைப்ரஸைச் சுற்றியுள்ள கிழக்கு மத்தியதரைக் கடலில் பணியாற்றிய குழுவினர். அதிலிருந்து மீண்டு ஓய்வெடுக்க
 இது வழிவகுக்கும்.
மார்ச் மாதத் தொடக்கத்தில் சைப்ரஸில் உள்ள பிரிட்டிஷ் தளத்தின் மீது ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலில் ஐரோப்பியப் போர்க்கப்பல்களின் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ள ஒரு காலகட்டத்தில் இந்த நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த விமானம் தாங்கி கப்பலின் பிரசன்னம், அந்தச் சிறிய ஐரோப்பிய ஒன்றியத் தீவுக் குடியரசுடன் பிரான்ஸ் கொண்டுள்ள ஒற்றுமையின் தெளிவான அடையாளமாகக் கருதப்படுகிறது. மேலும், பிரான்ஸ் ஏற்கெனவே சைப்ரஸில் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளது.
கிரீட் தீவில் உள்ள சூடா வளைகுடா, மத்தியதரைக் கடலில் நடைபெறும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய இராணுவ நடவடிக்கைகளுக்கான 
ஒரு முக்கிய தளவாட மையமாகும். அங்கிருந்து, சார்லஸ் டி கோல் போர்க்குழுவால் ஒரு நாளுக்குள் சைப்ரஸை சென்றடைய முடியும். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

புதன், 1 ஏப்ரல், 2026

ரஷ்ய விமானம் கிரிமியாவில் விபத்துக்குள்ளானது: 29 பேர் பலி

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியில் ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் , அதில் பயணித்த 29 பேர் உயிரிழந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் நேற்றுப் புதன்கிழமை 
தெரிவித்தன.
சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவல்களின்படி, விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களும் 23 பயணிகளும் உயிரிழந்தனர் என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி டாஸ் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் புலனாய்வுக் குழுவும் இந்த விபத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் உயிரிழப்புகள் குறித்த விவரங்களை
 வழங்கவில்லை.
2026 மார்ச் 31 அன்று, கிரிமியா குடியரசின் பக்சிசரே மாவட்டத்தில் உள்ள குய்பிஷேவோ கிராமத்திற்கு அருகே, பறந்துகொண்டிருந்த ஏஎன்-26 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. அதில் 7 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் இருந்தனர் என்று அக்குழு 
தெரிவித்துள்ளது.
விமானப் பாதுகாப்பு விதிமீறல் தொடர்பாக குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 31 மார்ச், 2026

பருத்தித்துறையில் வீட்டாருடன் முரண்பாடு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

யாழ், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு ,
 உடற்கூற்று 
பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
குறித்த முதியவர் நேற்றைய தினம் திங்கட்கிழமை தனது வீட்டாருடன் முரண்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 
வீட்டை விட்டு வெளியேறியவர் நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடி வந்தனர். 
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முதியவர் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


திங்கள், 30 மார்ச், 2026

நினைவஞ்சலி முதலாம் ஆண்டு அமரர் செல்வராஜா பூமணி 30.03-2026

மண்ணில் 12.06-1934-விண்ணில் 30-03-2025.
முதலாம்  ஆண்டு திதி 28-09-2024  இன்று 
யாழ்.நவற்கிரி புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா– நவற்கிரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்
கொண்டிருந்த அமரர் செல்வராஜா பூமணி அவர்களின்  முதலாம்  ஆண்டு திதி .30-03-2026..திங்கள்ட்கிழமை இன்று .நவற்கிரியில்  அன்னாரின்  இல்லத்தில் ஆத்மசாந்திபிராத்தனையும்  மதிய போசனமும்  நடைபெறும் 
அன்னார் காலம்சென்ற செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற ராமலிங்கம் தம்பதியினரின் பாசமிகு மக்களும் காலம்சென்ற தம்பு மாணிக்கம்
தம்பதியினரின் அன்பு மருமகளும் காலம்சென்ற கந்தசாமி சத்தியபாமா (பாமா) நவரத்தினம் (குணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்
திரு பாலசுப்பிரமணியம் (பாலா.கனடா ) காலம்சென்ற சரஸ்வதி (சரஸ்) மற்றும்
திரு பாலேஸ்வரன் (பாலா.கனடா )திரு பாலராஜா (அப்பன்.கனடா )பாக்யராஜா (ராஜா.கனடா ) ஆகியோரின்
பாசமிகு தாயாரும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், 
உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் நீங்காத நினைவுகள்
காலங்கள் கடந் தாலும் விழிகளில் என்றும் உங்கள் உருவம் தான்கேட்டவை எல்லாம் கிடைக்கும் வரம் ஒன்று இருந்தது
போல் உணர்கின்றோம் இப்போது
வானம் கைகளால் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும்
நிலவை அன்னத்தில் கதையாக்கி ஊட்டிடுவாய் நெஞ்சில்
நம்பிக்கை எனும் விதையை விதைத்த முதல் 
கடவுள் நீங்கள்!
மின்னல் வெளிச்சத்தில் பரவும் ஒளிப்பாம்பைப் போல்
கண்களின் கண்ணீரில் பரவும் ஆனந்த 
கீதம் உங்கள் அன்பு
ஒரு உயிராய் இந்த உலகில் உள்ள அத்தனை உறவுகளின்
அன்பையும் எமக்கு 
தந்தவர் நீங்கள்!
மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத அன்பை
காட்டிச்சென்றவர் நீங்கள்
உங்கள் அன்பை தோற்கடிக்கும் அளவுக்கு அன்பை
இவ்வுலகில் எவரும் தந்துவிட
 முடியாது!
என்றும் உங்கள் நினைவுகளுடன் நாம்
உங்கள் ஆன்மா சாந்திக்காக பிராத்திக்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்.

எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/


ஞாயிறு, 29 மார்ச், 2026

கொடிகாமத்தில் உயிரிழந்த பொலிஸ்சாரின் கொலையாளி கைதாகவில்லை

யாழ்   கொடிகாமத்தில் நேற்றையதினம் சட்டவிரோத மணல் கடத்தற்காரர்களின் உழவுஇயந்திரம் மோதி உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரான கெட்டியாராட்சிக்கே அல்பிரட் இவர் தான்.
1969ஆம் ஆண்டு பிறந்த இவர் நிற்றம்பூவ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார்.
இதனிடையே கொலையாளி கைதாகவில்லையென தகவல்கள்  தெரிவிக்கிக்கின்றன.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 27 மார்ச், 2026

தரிசனம் செய்ய சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றவர் திடீர் மரணம்

 

நாட்டில் சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர்.27-03-2026. இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக 
உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.தெகிவளைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சம்பத் பெர்னாந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது உறவினர்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்றுகொண்டிருந்தபோது, மல்வத்தை – நல்லதண்ணி பாதையிலுள்ள கங்குலதென்ன பகுதியில் வைத்து திடீரென உடல்நலக்குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.
உடனடியாகச் செயற்பட்ட அவரது உறவினர்கள் மற்றும் கங்குலதென்ன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இணைந்து, அவரை நல்லதண்ணி நகருக்குத் தூக்கி வந்துள்ளனர்.
அங்கிருந்து நோயாளி காவு வண்டி மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அவர் கொண்டு 
செல்லப்பட்டார
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய அ
திகாரி தெரிவித்தார்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது  என்பதும்  குறிப்பிடத்தக்கது-

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வியாழன், 26 மார்ச், 2026

ஏவுகணை சிதைவு விழுந்ததில் அபுதாபியில் இருவர் உயிரிழப்பு

அபுதாபியில் ஏவுகணை சிதைவு விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
வான் பாதுகாப்பு அமைப்புகள் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்த பின்னர், சிதறி விழுந்த பாகங்களால்
 ஏற்பட்ட சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததை அபுதாபி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும், பல வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
ஏவுகணை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 25 மார்ச், 2026

மர்மமான முறையில் காணாமல் போன தம்பதியினர் சடலங்களாகக் கண்டெடுப்பு.

நாட்டில்  கொரோனா காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட தம்பதியினர், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வாய்க்காலில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் 
வெளியாகியுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொட்டுவ வத்தை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று(24) இவர்களின் உடல் எச்சங்கள் 
மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமண்டா சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இந்திகா லோகுஹெட்டி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.
 அதில், தனிப்பட்ட தகராறு காரணமாக தம்பதியினர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தம்பதி மற்றும் அவர்களது உதவியாளர் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



செவ்வாய், 24 மார்ச், 2026

மட்டக்களப்பு, ஏறாவூரில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம்

நாட்டில் .மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று இரவு இரு
 குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.
கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற கண்காட்சி ஒன்றின் போது, இரு தரப்பினருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு 9.00 மணியளவில் ஒரு குழுவினர் மற்றைய தரப்பினரின் வீட்டிற்குச் சென்று வாள்வீச்சுத் தாக்குதலை 
நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்களும் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



ஞாயிறு, 22 மார்ச், 2026

துருக்கி நாட்டில் அகாலமரணம் . க.ஜெயந்தினி, க.விபூசன் சுவிஸ், 20.03.2026

.யாழ் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டில் வசிப்பவருமான 
திரு குமாரசாமி கணேசலிங்கம் (சின்னதம்பி) என்பவரது அன்பு மனைவி திருமதி கணேசலிங்கம் .ஜெயந்தினி, அன்பு மகன் செல்வன் க.விபூசன் என்பவரும்
 துருக்கி நாட்டில் ஏற்பட்ட வாகன  விபத்தில் .20.03.2026).அகாலமரணம் அடைந்து விட்டார்கள் என்ற துயர செய்தியை அனைவருக்கும் 
அறியத்தருகின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி இணையம்  நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!

https://navakkiri.blogspot.com/2026/03/130326.html




 

சனி, 21 மார்ச், 2026

நாட்டில் வவுனியாவில் மயானத்தின் வடிகானுக்குள் சடலம் மீட்பு

நாட்டில் வவுனியா – இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
 மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா – இரட்டை பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொது மயானத்தின் வடிகான் ஒன்றிலிருந்து அடையாளம் காண முடியாத வகையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம்
 மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளதாகவும், அது சுமார் 5 அடி 6 அங்குல உயரமுடைய சாதாரண உடல்வாகு கொண்ட ஒரு ஆணின் சடலம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



வெள்ளி, 20 மார்ச், 2026

அமரர் திரு,ஆ ,க,சுப்பிரமணியம்.15ம் ஆண்டு நினைவஞ்சலி 21.03.2026


மண்ணில் : 06- 02 1932 — விண்ணில் : 06 04 2011
யாழ். மாவிடடபுரத்தை பிறப்பிடமாகவும், நவற்கிரி புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட.அமரர் திரு ..(ஆ.க) கந்தையா. சுப்பிரமணியம் (மணிஐயா  ) அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி./(திதி)  21-03-2026.சனிக்கிழமை அன்று 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 

தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையாரைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி
பதின் ஐந்து   ஆண்டுகளாய்  
வளர்ந்து நிற்பது உங்கள் பிரிவின் சோகம்
அனைவராலும் ஐயா ஐயா என அழைக்கபட உங்கள்
நீங்காத நினைவுகளுடன்
ஒன்பது ஆண்டுகளல்ல இன்னும் ஓராயிரம் ஆண்டுகள்
நாம் வாழ்ந்தாலும்..
வாழும் காலமெல்லாம் உன் பிரிவின் ஏக்கம் தொடரும்…
நினைவு அஞ்சலி
காலங்கள் கடந்தாலும்
ஆண்டுகள் சென்றாலும்
எங்கள் மனதில்
என்றும் நிலைத்திருப்பாய்
அன்பின் அடையாளமாக
அறத்தின் புதல்வனாக

தர்மத்தின் தலைவனாக
பொன்னம்மாவின் செல்வனாக
காலத்தை வென்ற தலைமகனாக
ஆறுமுகம்.கந்தையா
பொன்னம்மாவின்
அன்பில் சிவமாக
என்றும் எங்களில்
வாழ்கிறீர்கள் அன்பின்ஐயா
என்றென்றும் எங்கள் தெய்வம் நீங்கள்
…அன்பும் ஆற்றலும்
பண்பும் பாசமும்
உறுதியும் உன்னதமும்
உண்மையும் உழைப்பும்
உற்ற தோழமையும்

இனிக்கும் இன்முகமும்
கொண்ட ஈடுஇணையற்ற
எங்கள் தந்தையே !
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறோம் ஐயா
ஓம் சாந்தி ஓம் சாந்தி சாந்தி,,,
உங்கள் பிரிவால் என்றும் வாடும்
அன்புப் ,பிள்ளைகள்,
சகோதர்கள் மருமக்கள்
பேரப்பிள்ளைகள் புட்டப்பிள்ளைகள்
உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தகவல்:-குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2023/03/12-24032023.html