siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 13 ஜூலை, 2026

தீவிபத்த்தில் பாங்காக்கில் இருபத்திஏழு பேர் மரணம் பலரின் நிலை கவலைக்கிடம்

தீவிபத்த்தில் பாங்காக்கில் உள்ள ஒரு பிரபலமான மதுபான விடுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். 
அத்துடன் 60இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் 22 பேரின் நிலைமைகவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் தீவிபத்துக்கான காரணத்தை 
அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 12 ஜூலை, 2026

நிலநடுக்கம் வெனிசுலாவில் உயிர் இழப்புகளும் மற்றும் 17000 பேர் வீடுகளை இழந்து தவிப்பு

வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,333 ஆக உயர்ந்துள்ளது. 
மேலும், உயிரிழந்தவர்களில் 315 பேரின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 
சுமார் 16,740 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகளில் சிக்கியிருந்த 6,462 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
மேலும், இந்தப் பேரழிவால் கிட்டத்தட்ட 17,000 பேர் வீடுகளை இழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கும் பணி அடுத்த வாரம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. 
 என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


சனி, 11 ஜூலை, 2026

அமரர் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) நான்காம் ஆண்டு நினைவஞ்சலி,12 07.26

மலர்வு-02-05.1942-உதிர்வு-26-06-2022.- 
திதி 12-07-2026-,ஞாயிருக்கிழமை  அன்று
 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாகக்கொண்டிருந்த  திருமதி ஆ .க.சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்களின்
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 12-07-2026.அன்று  அன்னார் காலம்சென்ற 
 திரு.ஆ .க . சுப்பிரமணியம்(மணிஐயா)
 அவர்களின் பாசமிகு மனைவியாரும்  காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் 
காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் 
காலம்சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி ஜெயரத்தினம்  
பாலசிங்கம் மற்றும் சிவலிங்கமணி ஆகியோரின் அன்புச்சகோதரியும் தர்மசிறி (இலங்கை )தர்மபூபதி (சுவிஸ் )தர்மதேவி((ஜேர்மன் ) தர்மதேவன்(கனடா )
 தர்மசாந்தினி (நோர்வே )காலம்சென்ற தர்மகுமார் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்
12-07-2026-,ஞாயிருக்கிழமை   அன்று  பிற்பகல்,12,மணிஅளவில்  அன்னாரின் பிள்ளைகளின்  இல்லங்களில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
நீங்காத நினைவுகள்>>>
நான்காம் ஆண்டு நினைவஞ்சலி
       அன்பும் அறனுமாய் இருந்து 
           எங்களை விட்டுப்பிரிந்தாய்
       உன் நினைவுகளே எங்களுக்கு 
           வழிகாட்டும் ஒளிவிளக்கு
காலச்சுழற்சியில் இரண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
சகோதர்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் இணைந்து அன்னாரை நினைவு கூருகின்றார்கள்
அன்னாரின்  ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள்  நவற்கிரி சுவிஸ் ஜெர்மன் கனடா நோர்வே   நண்பர்களும் 
இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
.இங்கனம் -
குடும்பத்தினர்.

https://navakkiri.blogspot.com/2024/07/03-0724.html




வெள்ளி, 10 ஜூலை, 2026

காட்டுத்தீயில் சிக்கி தெற்கு ஸ்பெயினில் பன்னிரண்டு பேர் மரணம்

ஸ்பெயினின் தெற்கு அண்டலூசியா பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீயில் குறைந்தது 12 பேர் 
உயிரிழந்தனர்.
இந்தப் பகுதியில் இதுவரை பதிவானதிலேயே இதுதான் மிகவும் கொடிய தீ விபத்து என்றும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் கடும் வெப்பநிலை நிலவி வரும் வேளையில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்திற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் 
கண்டறியவில்லை.
அல்மேரியா மாகாணத்தில் உள்ள லாஸ் கல்லார்டோஸ் நகராட்சியில், N-340 நெடுஞ்சாலைக்கு அருகில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. 
பலத்த காற்று, தீப்பிழம்புகளை அண்டை நகராட்சியான பெடாருக்கு விரைவாகப் பரப்பியது.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 9 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறை கலவரம் இந்திய பிரஜை ஒருவரும் பலி

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதல்களில் கொல்லப்பட்ட கைதிகளில் இந்திய நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். 
உயிரிழந்தவர் 73 வயதான ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், உயிரிழந்த இந்திய நாட்டவரின் மரணம்
 குறித்து கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 8 ஜூலை, 2026

நாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஏழு பேருக்கு மரண தண்டனை

நாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொடூர படுகொலைச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த 20 வருடங்களாக மிக நீண்ட மற்றும் விரிவான விசாரணைகள் 
நடைபெற்று வந்தன. 
சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக ஆராயப்பட்டு, இறுதியாக இன்று (08) குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.
சட்டவிரோதமாகக் கூடுதல், திட்டமிட்டுக் கொலை செய்தல் மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த 7 பேருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. பிரதிவாதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இந்த மனித படுகொலையானது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 2006ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளுக்கு மத்தியில் இழைக்கப்பட்ட இந்த பாரிய மனித படுகொலைச் சம்பவம் அக்காலப்பகுதியில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. 
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீண்ட காலத்தின் பின்னர் இன்று நீதி கிடைத்துள்ளதாக சட்டத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை
 விதிக்கப்பட்டுள்ள 
போதிலும், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் குற்றவாளிகள் தரப்பு சட்டத்தரணிகள் அடுத்த 14 நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் (Court of Appeal) மேல்முறையீடு செய்வதற்கான சட்ட ரீதியிலான 
வாய்ப்புகள் உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  என்பதும்  குறிப்பிடத்தக்கது


https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


செவ்வாய், 7 ஜூலை, 2026

நாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கி சூடு நடத்திய காரணத்தை வெளியிட்ட காவல்துறை

 

நாட்டில் .சிறைச்சாலைகளில் இரண்டு பிரதான கதவுகள் காணப்படுகின்றன. முதலாவதாக இருப்பது இரும்புக் கதவு, அடுத்ததாக இருப்பது மரப்பலகையிலான கதவு ஆகும். 
இந்த கைதிகள் இரும்புக் கதவையும் உடைத்துக் கொண்டு, மரப்பலகை கதவை நோக்கி வந்துள்ளனர்.
இந்த இரும்பு கதவுக்கும் மரப்பலகை கதவுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் பார்சல் ஸ்கேன் இயந்திரம் (Parcel scan machine), பாடி ஸ்கேன் இயந்திரம் (Body scan machine) மற்றும் தகவல் தொடர்பு நெட்வொர்க் உள்ளிட்ட பெறுமதிமிக்க பல உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன.
எனவே, இந்த கைதிகள் இரும்பு கதவையும் உடைத்துக் கொண்டு, இந்த மரக் கதவையும் கடந்து வெளியே வந்திருந்தால், அங்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவுகளைப் பற்றி என்னால் இந்த சந்தர்ப்பத்தில் 
மதிப்பிட முடியாது. 
அவர்கள் மரக் கதவையும் உடைத்துக்கொண்டு வெளியே வந்திருந்தால், அனைவரும் தப்பியிருப்பார்கள், அனைவரும் சமூகத்திற்குள் வந்திருப்பார்கள். அப்போது ஏற்பட்டிருக்கக்கூடிய அழிவை பற்றி என்னால்
 கூற முடியாது என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html



திங்கள், 6 ஜூலை, 2026

இலங்கையில் தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்


நாட்டில் பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் 06-07-2029இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 
இந்த விழிப்புணர்வு வேலை திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆரம்பித்து வைக்கவுள்ளார். 
விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
 அறிவிக்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


ஞாயிறு, 5 ஜூலை, 2026

மரண அறிவித்தல் அமரர் சின்னையா இராசையா

 

துயர் பகிர்வு-தோற்றம் 05-08-1947--மறைவு-04-07-2026..
யாழ்.ராசாவீதி நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் கொட்டுவேளி  நவற்கிரி  பிள்ளையார் கோவிலடியை வசிப்பிடமாகக்கொண்ட
 அமரர் சின்னையா இராசையா  ( ராசு )அவர்கள் 04-07-2026...அன்று காலமானார் அன்னார்  காலம்சென்ற 
(தேய்வானைலொறி உரிமையாளர்  ) சின்னையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின்அன்புமகனும் தங்கமலரின் பாசமிகு கணவரும் காலம்சென்ற நடராசா பொன்னுத்துரை தங்கரத்தினம் 
மற்றும் திரு  வேலுப்பிள்ளை (அமுதசுரபிலொறி உரிமையாளர்  )திரு  கொணராஜா -
திரு ,அழகரத்தினம் .திருமதி தங்கம்மா, திருமதி .தவமணி .)ஆகியோரின்  அன்புச்சகோதனும்
மற்றும் ராஷ்குமார்(சுவிஸ்), சிவகுமார்,(இலங்கை) றயனி (லண்டன்), யசோதை(பிரான்ஸ்)ஆகியோரின் தந்தையும் மற்றும் சர்வானந்தம், பாஸ்கரன், சுமித்திராதேவி, நிதர்சா ஆகியோரின் மாமனும் சசிபன், மதிஷ்கா, சியானா, ஜெசினா, பவீனா, அஸ்வினா, ஆதிரன், அபினாஷ், ஆதிஷ், அகிஷ் ஆகியோரின் பேரனும் ஆவார்  
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  07-07-2026.. செவ்வாய்க்கிழமை  10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
07-07-2026.. செவ்வாய்க்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம்சாந்தி சாந்தி சாந்தி 
இலங்கை  வீட்டு முகவரி: 
நவற்கிரி கொட்டுவேளி
பிள்ளையார் கோவிலடி.
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/2026/07/blog-post_05.html



சனி, 4 ஜூலை, 2026

நாட்டில் பெற்றோரின் கவனத்திற்கு குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு

நாட்டில் குழந்தைகளிடையே டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சில குழந்தைகள் நோயிலிருந்து குணமடைந்த பிறகும் கூட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் (LRH) குழந்தை நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா, அரிதான சந்தர்ப்பங்களில் 
டெங்கு மூளை பாதிப்பிற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்துள்ளார். 
அத்துடன் கடுமையான தசை மற்றும் எலும்பு 
வலியை ஏற்படுத்தி, இதயத்தையும் பாதிக்கக்கூடும் என்றும் கூறியுள்ளார். 
வழக்கமாக குணமடைய ஏழு முதல் எட்டு நாட்கள் ஆகும் என்றும், சில காலங்கள் கழித்தும்கூட பசி திரும்புதல், சுறுசுறுப்பாகவும் 
மகிழ்ச்சியாகவும் மாறுதல் போன்ற முன்னேற்றத்தின்
 அறிகுறிகள்
 தென்படாமல் போகலாம் எனவும் அவர எச்சரிக்கை விடுத்துள்ளார்த. 
அது ஹீமோஃபேகோசைடிக் லிம்ஃபோஹிஸ்டியோசிஸ் (HLH) எனப்படும் அரிதான நோயெதிர்ப்பு தொடர்பான நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் எச்சரித்தார்.
கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைத் தொடர்ந்து அகற்றுமாறும், குறிப்பாக மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை கொசுக்கடியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html




 

வெள்ளி, 3 ஜூலை, 2026

நாட்டில் ஹட்டன் - கொழும்பு வீதியில் கன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்து

நாட்டில் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுகல பகுதியில்-03-07-2026- இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற கன்ரர் வாகன விபத்தில் நால்வர் 
காயமடைந்துள்ளனர்.
கடுவலையிலிருந்து நுவரெலியா நோக்கி அலுமினியம் உபகரணங்களை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனமே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாலமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து நேரிட்ட சமயம் வாகனத்தில்
 ஐவர் பயணித்த 
நிலையில், காயமடைந்த நால்வர் உடனடியாக மீட்கப்பட்டு நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்...என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

வியாழன், 2 ஜூலை, 2026

நாட்டில் விபத்துகளால் தினமும் முப்பது பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு தகவல்

நாட்டில்  சராசரியாக ஒவ்வொரு 3 மணித்தியாலத்திற்கும் 4 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இலங்கையில் வருடாந்தம் சுமார் 8,000 முதல் 10,000 பேர் வரை விபத்துகளால் உயிரிழப்பதாக
 மதிப்பிடப்பட்டுள்ளது.
மறைக்கப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பொதுவாக நாட்டில் போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது. ஆனால், அதைத் தவிர வேறு பல முக்கிய காரணங்களாலும் அதிகளவில் உயிர்கள் இழக்கப்படுகின்றன.
உயரமான இடங்களிலிருந்து கீழே வீழ்தல்.
நீரில் மூழ்குதல்.
மின்சாரம் தாக்குதல்.
பாம்புக் கடிக்குள்ளாகுதல்.
இந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் விழிப்புணர்வு மூலம் தடுக்கக்கூடியவை ஆகும். 
எனினும், முறையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்மையால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிர்கள் நாளாந்தம் இழக்கப்படுவது தேசிய அளவில் ஒரு பெரும் துயரம் என மருத்துவ நிபுணர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, வீடு, பணியிடம், பாடசாலை மற்றும் வீதிகள் என அனைத்து இடங்களிலும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


புதன், 1 ஜூலை, 2026

மே மாத வெப்ப அலை காரணமாகபிரான்சில் முண் நூறு மரணங்கள் பதிவு

வெப்ப அலை காரணமாக, 17 மாகாணங்களில் ஆரஞ்சு எச்சரிக்கைகளைத் தூண்டிய மே மாத வெப்ப அலை காரணமாக, ​​பிரான்சில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளன என்று பிரெஞ்சு சுகாதார அமைச்சகம்
 தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைக்கப்படாத அனைத்துக் காரணங்களாலும் ஏற்படும் இறப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த இறப்பு எண்ணிக்கை ஒரு பூர்வாங்க மதிப்பீடு என்றும், இதில் பெரும்பாலும் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களே அடங்குவர் என்றும் அமைச்சகம்
5 குறிப்பிட்டுள்ளது.
மே 24-28 திகதிகளில் வடமேற்கு பிரான்சின் ஆறு மாகாணங்களில் 95 மரணங்கள் பதிவாகியுள்ளது. 
மே 26 மற்றும் மே 30க்கு இடையில் மேற்கு மற்றும் மத்திய பிரான்ஸில் 300 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளது, இது எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விட சுமார் 14 சதவீதம் அதிகமாகும்.
இந்தக் கூடுதல் இறப்புகளில் சுமார் 230 பேர் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர். 
பிரெஞ்சு வானிலை ஆய்வு நிறுவனமான மெட்டியோ-பிரான்ஸ், மே 26ம் திகதி அந்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வெப்பமான நாளாகப் பதிவானதாகவும் அன்றைய தேசிய சராசரி வெப்பநிலை 24.9 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

செவ்வாய், 30 ஜூன், 2026

குழந்தை கருவில் இழந்த துயரத்திலும் களமிறங்கிய காக்போ: கோலுக்குப் பின் கண்ணீர்

காக்போ: தனது குழந்தை 3 நாட்களுக்கு முன்னர் கருவிலே உயிரிழந்தநிலையில், நெதர்லாந்து வீரர் கோல் அடித்ததும் மைதானத்திலே கதறி அழுதுள்ளார். 2026 பிபா உலக கிண்ண கால்பந்து தொடரில், நெதர்லாந்து மற்றும் மொரோக்கோவிற்கு இடையேயான போட்டியில், முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. 
போட்டியின் 2ஆம் பாதியில் 72வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ(cody gakpo) ஆட்டத்தின் முதல் கோலை அடித்தன்மூலம் 1-0 என்ற கணக்கில் நெதர்லாந்து முன்னிலை பெற்றது. 
ஆட்டத்தின் 91வது நிமிடத்தில் மொராக்கோ வீரர் இசா தியோப், அணியின் முதல் கோலை பதிவு செய்து ஆட்டத்தினை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனையடுத்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட் ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி மொராக்கோ வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்குள் நுழைந்தது. 
நெதர்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த 
போட்டியில், நெதர்லாந்து வீரர் கோடி காக்போ 
கோல் அடித்த பின்னர் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த சனிக்கிழமை கோடி காக்போவின் துணைவி நோவா வான் டெர் பிஜ்(Noa van der Bij), தங்களது குழந்தை கருவிலே
 உயிரிழந்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் அறிவித்தார். இந்த சோகமான சூழலில் கோடி காக்போ அவருடயை குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அணி நிர்வாகம் விடுப்பு வழங்கியது. ஆனால், இது தனது தேசிய அணிக்கு முக்கியமான போட்டி என்பதால் கோடி காக்போ ஆட்டத்தில் கலந்து கொண்டார். 
கோடி காக்போ கோல் அடித்ததும் உணர்ச்சிவசப்பட்டு அழுத நிலையில், வீரர்கள் சுற்றி நின்று அவருக்கு ஆதரவு வழங்கினர். மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டல் மூலம் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இது குறித்து பேசிய நெதர்லாந்து 
கோமன், "எங்களால் இயன்றவரை அவருக்கு ஆதரவளித்து வருகிறோம். 
நிச்சயமாக, முதல் சில நாட்களுக்கு அவர் தனது 
குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடன் இருப்பதற்கு சுதந்திரம் இருந்தது. ஆனால் 'நான் திரும்பிச் செல்ல விரும்புகிறேன், நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்' என்று அவர் ஒரு கணம் கூட கூறவில்லை" என தெரிவித்துள்ளார்.என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


மரண அறிவித்தல் அமரர் நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா )

துயர் பகிர்வு-தோற்றம் -08-06-1933--மறைவு-28-06-2026
யாழ். தோப்பு  அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது 
கனடா (Ontario )ஒன்றாரி ஓவில் வசித்துவந்த 
 /அமரர்  நன்னித்தம்பி முத்துப்பிள்ளை (பாலம்மா ) அவர்கள்
28-06-2026-ஞாயிற்று கிழமை  அன்று இறைபதம் அடைந்தார் அன்னார்  காலம்சென்ற நன்னித்தம்பியின் அன்பு 
மனைவியும் மற்றும் பாத்மமார்  (மலர் )காலம்சென்ற ஜெயசீலன்  தயாசீலன் (சீலன் ) மற்றும் சாந்தநாயகி(சாந்தி )
ஆகியோரின்அன்புத்தாயாரும்  ஆவர் அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
https://navakkiri.blogspot.com/



திங்கள், 29 ஜூன், 2026

நாட்டில் கென்டக்கியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நால்வர் மரணம்

.நாட்டில் கென்டக்கி முழுவதும் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் குறைந்தது நான்கு பேர் 
இறந்துள்ளனர்.
இந்நிலையில், அவசரகால குழுக்கள் உயிர் பிழைத்தவர்களைத் தொடர்ந்து தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு சேதத்தை மதிப்பிடுவதற்கும் கூட்டாட்சி பேரிடர் உதவியைப் பெறுவதற்கும் பணிபுரிந்த் 
வருகின்றனர்.
"நாங்கள் இன்னும் தேடுதல் மற்றும் மீட்பு கட்டத்தில் இருக்கும்போது, ​​கூட்டாட்சி உதவிக்கான கோரிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக சேதத்தை ஆய்வு செய்ய நாங்கள் விரைவாகச் செயல்படுகிறோம்" என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கென்டக்கி கவர்னர் அவசரகால நிலையை அறிவித்தார் மற்றும் இருட்டிற்குப் பிறகு சாலைகளில் இருந்து விலகி இருக்குமாறு குடியிருப்பாளர்களை வலியுறுத்தினார்..என்பதும்குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html

ஞாயிறு, 28 ஜூன், 2026

அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )நான்காம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்-23-03-1959---விண்ணில்-14-07- -2022 
திதி -28-06-2026.இன்று 
முல்லைத்தீவு துணுக்காயைப்  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் புத்தூர் மற்றும் நவற்கிரியை
 வாழ்விடமாகவும் தற்போது சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen)  மாநிலத்தில் வசித்துவந்த அமரர் குணரத்தினம் கமலராணி (ராணி )அவர்களின்  நான்காம் ஆண்டு ..நினைவஞ்சலி  திதி -28-06-2026-இன்று  அவரது இல்லத்தில் நடைபெறும் அன்னார் திரு குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும் ராசா றயித்தா பிரபா ஆகியோரின் அன்புத்தாயாரும் 
 காலஞ்சென்ற வீரகத்தி  மற்றும் நாகம்மா தம்பதியினரின் 
பாசமிகு மருமகளும் ஆவர் 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_28.html

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி 
சுவிஸ் பெர்ன்  (Bern Rubigen) 

சனி, 27 ஜூன், 2026

திரைக்கதை மன்னன்' கே.பாக்கியராஜ் மாரடைப்பால் காலமானார்



பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் .27-06-2026.இன்று  காலமானார்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
அண்மையில் காலமான புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவின், உதவி இயக்குநராக ஆரம்பத்தில் பாக்யராஜ் பணியாற்றினார். பின்னர் 1979-ம் ஆண்டு ‘சுவரில்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பிறகு இயக்குநராகவும், நடிகராகவும், கதை, திரைக்கதை, வசன ஆசிரியராகவும் பெரும் வெற்றி பெற்றார். நகைச்சுவை, குடும்ப உணர்வு, சமூகக் கருத்துகள் ஆகியவற்றை அழகாக இணைத்து திரைப்படங்களை உருவாக்கியவர்.
இவரது திரைக்கதைகளில் எதிர்பாராத திருப்பங்களும் இயல்பான உரையாடல்களும் முக்கிய அம்சங்களாகும். இயக்குநர் கே. பாக்யராஜ் தமிழ் சினிமாவில் தனித்துவமான திரைக்கதை, இயல்பான நகைச்சுவை, குடும்பக் கதைகள் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் இன்று வரை ரசிகர்களால்  கொண்டாடப்படுகிறது. 
அவருக்கு திரைத்துறையினர் மற்றும் இரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். .என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html






வெப்ப அலை காரணமாக பிரான்சில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை உயர்வு

வெப்ப அலை காரணமாக பிரான்சில்  உயிரிழந்த சிறு குழந்தைகளின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.மேலும், நீரில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55ஆக பதிவாகியுள்ளது.
ஐரோப்பாவைத் தாக்கி வரும் கடும் வெப்பம் கிழக்கு நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், 35°C (95°F) வெப்பநிலையில் 15 கோடி மக்கள் மூச்சுத்திணறி வருகின்றனர்.
இந்த வெப்ப அலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையானதாகவும் பரவலானதாகவும் உள்ளது என்றும், இப்பகுதியின் 850 பெரிய நகரங்களில் கிட்டத்தட்ட பாதி நகரங்கள் முன்னெப்போதும் இல்லாத வெப்ப அழுத்தத்துடன் போராடி வருவதாகவும் விஞ்ஞானிகள்
 தெரிவித்தனர். 
புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதால் ஏற்படும் காலநிலை நெருக்கடியே இந்த அதீத வெப்பநிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் அவர்கள் கூறினர்.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


வெள்ளி, 26 ஜூன், 2026

அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில் 21-01-1948--விண்ணில் -08-07-2025- 
திதி -27-06-2026.இன்று 
 யாழ் ஓட்டுமடத்தை  பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வசித்துவரும் தற்போது ஓட்டுமடத்தை   வசித்து வந்த   
( 08-07-2025-அன்று சிவபதமடைந்த) அமரர் பாலசுந்தரம் பூபாக்கியட்சுமி  அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 
திதி -27-06-2026.அன்று ஓட்டுமடத்தில் அவரது இல்லத்தில் நடைபெறும் 
அன்னார் காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியரும் 
திரு சீலன் (டென்மார்)திருமதி சொரூபி (லண்டன் )திரு பாலமுரளி (நோர்வே ) திருமதி சுதா (டென்மார்)
ஆகியோரின் அன்புத்  தாயாரும் ஆவார் 
27-06-2026-,சனிக்கிழமை  கிழமை அன்று  பிற்பகல்,11,மணிஅளவில்  அன்னாரின் இல்லத்தில்  அன்னாரின்  ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
அழைப்பிதழ்கிடைத்தவர்களுக்கு   மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
    நினைவஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி!

https://navakkiri.blogspot.com/

 இங்கனம் -குடும்பத்தினர்.
வீட்டுமுகவரி
 -ஓட்டுமடம் 
யாழ்பாணம்.


வியாழன், 25 ஜூன், 2026

மரண அறிவித்தல் அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)

துயர் பகிர்வு-தோற்றம் 00-மறைவு-24-06-2026.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 
அமரர் நல்லையா கமலாதேவி(தேவிஅக்கா)அவர்கள் நவற்கிரியில் காலமானார்  அன்னார்  காலம்சென்ற
வல்லிபுரம்  தம்பதியினரின் பாசமிகு மககளும்  காலம்சென்ற அன்னலக்சுமி  காலம்சென்ற பரராஜசிங்கம்  காலம்சென்ற திருநாவுக்கரசு மற்றும் விசாலாட் சி   (தங்கராணி)  தங்கவேலு 
ஆகியோரின் அன்பு  சகோதரியும் விஜயலட்சுமி(விஜயாஇலங்கை.) பாஸ்கரன்  இலங்கை)  விஜயராணி(ராணி (பிரான்ஸ்  ) 
விஸ்ணுகுமார் (பிரான்ஸ் )  விஸ்னராஜா( இலங்கை) ஆகியோரின்அன்புத்தாயாரும்  
 ஆவார் 
அன்னாரின் இறுதிக்கிரியை 
திகதி-  26-06-2026- வெள்ளிக்கிழமை 10:00 மு.ப — 12-30 பி.ப.மணிக்கு  அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின்  நல்லடக்கம்
 26-06-2026.. வெள்ளிக்கிழமை அன்று ;நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல் 
குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு  
  மகள் விஜயராணி(ராணி)
+33 7 69 25 94 22
+33664324453 பேரன் . சுமன் 

17 boulevard Camille saint sans 
77185 logne

https://navakkiri.blogspot.com/2026/06/blog-post_25.html


புதன், 24 ஜூன், 2026

நாட்டில் .லாவோஸில் குகைக்குள் சிக்கிய நபர் பத்து நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு

நாட்டில் லாவோஸில் வெள்ளப்பெருக்கால் குகைக்குள் சிக்கியிருந்த கிராமவாசிகளை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து 
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், 10 நாட்களுக்கும் மேலாக குகைக்குள் சிக்கியிருந்தவர்களில் இரண்டாவது உயிர் பிழைத்த நபர் மீட்புக் குழுவினரால் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார்.
மிகவும் ஆபத்தான மற்றும் சவாலான சூழ்நிலையில் நடைபெற்ற இந்த மீட்பு நடவடிக்கையில், குகையின் குறுகிய மற்றும் வெள்ளநீர் நிரம்பிய வழித்தடங்களை கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரை வெளியே 
கொண்டு வந்தனர்.
குகைக்குள் சிக்கியிருந்த பலர் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேவேளை, காணாமல் போன மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நெகிழ்ச்சியான மீட்புக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன
.என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html