siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 30 ஜூன், 2023

கொழும்புக்கு யாழிலிருந்து சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.

கொழும்பு நோக்கி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பஸ் ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து 
எரிந்துள்ளது.
இதன்போது, குறித்த பஸ் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 29 ஜூன், 2023

ஆழ்கடலில் கோடீஸ்வரர்களை பலிவாங்கிய டைட்டன் நீர்மூழ்கி மீட்பு

  டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்களும் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இந்த நீர்மூழ்கியில் பயணம் செய்த 5 பேரும் இறந்துவிட்ட நிலையில் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கனடாவின் செயின்ட் ஜான்ஸ் நகருக்கு கொண்டு வரப்பட்டன.
டைட்டனின் தரையிறங்கும் சட்டமும் பின்புற உறையும் இந்தப் பாகங்களில் அடங்கும் என கடலோரப் படை அதிகாரிகள் 
தெரிவித்தனர்.
பவுல் ஹென்றி நர்கோலெட் – 77 வயதான இவர் பிரெஞ்சு கடற்படையில் ‘டைவர்’ பணியில் இருந்தவர். டைட்டானிக் சிதைவுகளில் அதிக நேரம் ஆய்வு மேற்கொண்டவர், முதல் பயணத்தில் இடம் பெற்றவர் ஆகிய 
பெருமைகளைக் கொண்ட இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உண்டு.
ஸ்டாக்டன் ரஷ் – 61 வயதான இவர்தான் இந்த டைட்டானிக் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன் கேட் நிறுவனத்தின் நிறுவர் மற்றும், தலைமை செயல் அதிகாரி ஆவார்.
வடக்கு அட்லாண்டிக்கில் 3,800 மீ (12,500 அடி) ஆழத்தில் மூழ்க்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்ப்பதற்காக ஜூன் 18-ஆம் திகதி சென்ற 5 பேரும் இறந்தனர்.
அதேவேளை இந்த விபத்துக்குப் பிறகு முதல் முறையாக டைட்டனின் பாகங்கள் வெளி உலகுக்குக் காட்டப்படுகின்றன. புதன்கிழமை கனடாவின் செயின்ட் ஜான்ஸில் உள்ள ஹொரைசன் ஆர்க்டிக் கப்பலில் இருந்து டைட்டன் நீர்மூழ்கியின் உலோகச் சிதைவுகள் இறக்கப்பட்டன.
.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






புதன், 28 ஜூன், 2023

மட்டக்கிளப்பில் இறால் பண்ணையின் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழப்பு

இறால் பஇந்நிலையில் , குறித்த பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த கடற்தொழிலாளர் மின்சார வேலியில் சிக்கி 
உயிரிழந்துள்ளார். 
இதேவேளை குறித்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இதுவரையில் யானை ஒன்றும் மூன்று கால் நடைகளும் இறந்துள்ள போதிலும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையிலையே நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊரவர்கள் குற்றம் சாட்டு கின்றார்கள். 
ண்ணைக்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
மட்டக்களப்பு ஓட்டமாவடியை சேர்ந்த முத்துவான் அன்சார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி ஆற்றில் உள்ள ஆமை ஓடை குடா பகுதியில் இறால் பண்ணை அமைந்துள்ள தனியார் ஒருவர் இறால் பண்ணை பாதுகாப்புக்கு என சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியை அமைத்துள்ளார். 
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 27 ஜூன், 2023

இலங்கையில் ஜூலை 01 முதல் டிஜிட்டல் மின் கட்டண பட்டியல்

மூன்று பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டண பட்டியலை வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக 
இலத்திரனியல் 
பட்டியல் ஒன்றை இவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கு பின்வருமாறு SMS மூலம் பதிவு செய்யலாம்.
type REGfollowed by your A/C Number and send it to 1987
என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 26 ஜூன், 2023

இலங்கையில் சமையல் எரிவாயு விலை குறைகிறது

எதிர் வரும் ஜூலை மாதம், நான்காவது முறையாகவும் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக
 தெரிவிக்கப்படுகிறது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்பட்டு 3,186 ரூபாவிற்கு விற்பனை 
செய்யப்படுகிறது.
அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டு 1281 ரூபாவாக விற்பனையாகிறது.
அத்துடன் 2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டு 598 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை  என்பதும் குறிப்பிடத்தக்கது. .

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




ஞாயிறு, 25 ஜூன், 2023

தங்கச் சுரங்கம் இடிந்து விபத்துக்குள்ளானதில் தென் ஆப்பிரிக்காவில் 31 பேர் பலி

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் இறந்தனர். 
மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். 
2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 24 ஜூன், 2023

நாட்டில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் தூக்கில் சடலமாக மீட்பு

பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் , தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
மிரிச துறைமுக பொலிஸாரினால் 47 வயதுடைய நபர் ஒருவர் பாலியல் துப்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
அந்நிலையில் குறித்த நபர் பொலிஸ் தடுப்பு காவலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 23 ஜூன், 2023

பயணித்த 05 கோடீஸ்வரர்களும் டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியது உயிரிழப்பு

டைட்டானிக் கப்பலை பார்க்க, டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சென்ற 5 பயணிகளும் உயிரிழந்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 1600 அடி பிரதேசத்தில் நீர் மூழ்கி கப்பலின் ஐந்து பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதை அமெரிக்க கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கி கப்பல், கடலின் மேற்பரப்புடனான தொடர்பை இழந்த சிறிது நேரத்திலேயே அமெரிக்க கடற்படை ஒரு வெடிப்புடன் ஒத்துப்போகும் சத்தத்தை கண்டறிந்ததாக முன்னரே அறிவித்து இருந்தமை
என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 22 ஜூன், 2023

நன்றி நவிலல்திரு குமரேஸ்வரன் பரமநாதர்(குமரேசு ).22.06.2023

 

13 Okt 1956 – 23 Mai 2023
யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்களின் நன்றி நவிலல்அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி !  சாந்தி  சாந்தி.
தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருசனா - மகள்
mobile :
+41799310287

மிதுனா - மகள்
mobile :
+41799043798

கணேஸ்வரன் - சகோதரன்
mobile :
+41764301644

சுலோசனாம்பிகை - மனைவி
mobile :
+41793775633

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


மரண அறிவித்தல் திருமதி பூதத்தம்பி கண்மணி 21.06.2022

தோற்றம்-28-08-1933 . மறைவு -21-06-2023
யாழ்.  புத்தூர் மேற்கு சிவன்கோவிலாடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  
கொண்ட அமரர் கொண்ட திருமதி பூதத்தம்பி கண்மணி அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் நல்லடக்கம் 23-06-2023.வெள்ளிக்கிழமை அன்று புத்தூர் மேற்கு கிந்துப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! ஓம் சாந்தி  ஓம் சாந்தி..
வீட்டுமுகவரி-
சிவன்கோவிலாடி புத்தூர் மேற்கு புத்தூர்   
தகவல்
குடும்பத்தினர்..




புதன், 21 ஜூன், 2023

இலங்கையில் விபத்துகளால் வருடாந்தம் 12000 பேர் உயிரிழப்பு

நாட்டில் பதிவாகும் பல்வேறு விபத்துகளினால் வருடாந்தம் 40 இலட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைவதாக சுகாதாரப் பிரிவு 
தெரிவித்துள்ளது.
பல்வேறு விபத்துகளால் வருடாந்தம் 13 இலட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சைக்காக அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்றாநோய் ஆய்வு பிரிவின் விசேட வைத்திய 
நிபுணர் சமித சிறிதுங்க
அதேவேளை அவசர விபத்துகளினால் வருடாந்தம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 12000 இற்கும் அதிகமானதாக காணப்படுவதாக 
அவர் கூறினார்.
மேலும் இந்த விபத்துகளைத் தவிர்ப்பதற்காக 9 மாகாணங்களையும் உள்ளடக்கி, சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருவதாக விசேட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 20 ஜூன், 2023

யாழ் ஊர்காவற்துறையில் குழந்தை பிரசவித்து மனைவியை தாக்கிய கணவன் மறியலில்

குழந்தை பிரசவித்து ஆறு நாட்களேயான தாயை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். 
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 
தெரியவருவதாவது, 
அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் சேவையில் இணைந்து களுத்துறை பகுதியில் பொலிஸ் கடமை யில் இருந்த வேளை அங்கு சிங்கள பெண்ணொருவரை காதலித்து திருமணம்
 செய்து கொண்டுள்ளார். 
பின்னர் தனது பொலிஸ் சேவையை விட்டு , தனது சொந்த ஊரான ஊர்காவற்துறைக்கு திரும்பி அங்கு குடும்பமாக தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். 
அந்நிலையில் கடந்த 06 நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. குழந்தையும் , மனைவியையும் , வைத்திய சாலையில் இருந்து அழைத்து வந்து வீட்டில் தனியே விட்டு விட்டு , கொண்டாட்ட நிகழ்வொன்றுக்காக வெளியூர் செல்ல முற்பட்டுள்ளார். 
தன்னையும் குழந்தையையும் தனியே விட்டு விட்டு செல்ல வேண்டாம் எனவும், தமக்கு உதவிக்கு யாரும் இல்லை என கூறியுள்ளார். அதனால் இருவருக்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டு உள்ளது. 
அதனை அடுத்து குழந்தை பிரசவித்து 06 நாட்களேயான தனது மனைவியை கடுமையாக தாக்கி , சித்திரவதை புரிந்துள்ளார். அதனால் மனைவிக்கு இரத்த பெருக்கு ஏற்பட்டு அவர் வலியினால்
 கதறியுள்ளார். 
அதன் போது கணவர் வீட்டை விட்டு வெளியேறி சென்ற பின்னர் வலியினால் அவல குரல் எழுப்பி கத்தியுள்ளார். அதனை அடுத்து  அயலவர்கள் அவரை மீட்டு ஊர்காவற்துறை வைத்தியசாலையில் 
அனுமதித்தனர். 
இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசாரிடம் மனைவி முறையிட்டதை அடுத்து கணவரை கைது செய்த பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை நீதிமன்றில் முற்படுத்தியை அடுத்து அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 19 ஜூன், 2023

செயின்ட் கேலன் நகரில் வாகனத்தை செலுத்த தெரியாத வாலிபர் விபத்துக்குள்ளானார்

செயின்ட் கேலன் நகரில்.18-06-2023. ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில் 19 வயதான சாரதி வாகனம் செலுத்த முடியாதவர் எனக் குறிப்பிடப்பட்டு சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
19-06-2023.திங்கட்கிழமை காலையிலிருந்து செயின்ட் கேலன் நகர காவல் துறையினர் விபத்து குறித்து தகவல் வெளியிடுகையில்-  19 வயதுடைய நபர் ஒருவர் தனது காரை செயின்ட் லியோன்ஹார்ட்-ஸ்ட்ராஸ்ஸில் ரோசன்பெர்க்ஸ்ட்ராஸ்ஸின் திசையில் ஓடிக் கொண்டிருந்தார்.
பின்னர் அவர் A1 ஆட்டோபானில் நுழைய எண்ணினார். தற்போதைய அறிவின்படி, அவர் காரைத் திருப்பும்போது மிக அதிகமாக
 வேகப்படுத்தினார், அப்போது அவர் காரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு தூணில்
 நேருக்கு நேர் மோதினார்.
 இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவரை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. செயின்ட் கேலன் நகர காவல் துறையினர் ஓட்டுநரை வாகனம் ஓட்ட தகுதியற்றவர் என வகைப்படுத்தியுள்ளனர்.
 வழக்கறிஞர்கள் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். மீட்புப் பணியின் போது Rosenbergstrasse (வீதி) மூடப்பட வேண்டியிருந்தது. பின்னர் தெருவை சுத்தம் செய்ய செயின்ட் கேலன் தொழில்முறை தீயணைப்பு படை அழைக்கப்பட்டனர்காரிற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 18 ஜூன், 2023

நாட்டில் அதிகரிக்கும் இதயநோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் இதயநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் அதிகளவில் உள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிந்து பத்திரன 
தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு அதிகரித்துள்ளமையே இதற்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆபத்தை குறைக்க வெளியில் நடமாடும் போது முடிந்தவரை முகக்கவசங்களை அணிய வேண்டும் என வைத்தியர் 
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு மற்றும் இதய நோய் தொடர்பில் முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


அமெரிக்காவில் மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக்கொன்ற தந்தை!!!

அமெரிக்காவிலுள்ள ஓஹியோ மாநிலத்தில் சாட் டோர்மேன் (வயது 32) என்பவர், தனது மனைவி, மூன்று மகன்கள், ஒரு மகளுடன்
 வசித்து வந்தார். திடீரென டோர்மேன் துப்பாக்கியால் தனது 
மூன்று மகன்களை வரிசையாக நிற்க வைத்து சுடத் தொடங்கினார். இதில் இரண்டு மகன்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்
. என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


சனி, 17 ஜூன், 2023

இலங்கையில் புதிய மின்கட்டண திருத்தம் தொடர்பில் சிக்கல்


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய மின்சார கட்டணத் திருத்தத்திற்கு, குறித்த காலத்திற்குள் அனுமதி வழங்கப்படாவிட்டால், தற்போதைய மின்சாரக் கட்டணத்தை 
தொடர்ச்சியாக அமுல்படுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
சபையின் தலைவர் பதவி இன்னும் வெற்றிடமாக இருப்பதால், மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு தீர்மானம் எடுக்க முடியாது என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த காலத்திற்குள் புதிய கட்டணங்கள் தொடர்பான 
யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கினால் மாத்திரம் ஜூலை முதலாம் திகதி முதல் அதனை
 நடைமுறைப்படுத்த முடியும் என மின்சார சபை தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது..

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 16 ஜூன், 2023

கோரவிபத்தில் கனடா நெடுஞ்சாலையில் குறைந்தது 15 பேர் பலி

கனேடிய மாகாணமான மனிடோபாவில் நடந்த சாலை விபத்தில் குறைந்தது 15 பேர் இறந்துள்ளனர் என்று ரோயல் கனடியன் மவுண்டட் காவல்துறை (RCMP) தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் வயதானவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் டிரெய்லர் டிரக் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
வின்னிபெக்கிற்கு மேற்கே இரண்டு மணிநேரத்தில் கார்பெரிக்கு அருகில் உள்ள டிரான்ஸ்-கனடா நெடுஞ்சாலையில் இவ்விபத்து நடந்தது.
  15-06-2023. வியாழக்கிழமை அன்று  (17:35 பிஎஸ்டி) உள்ளூர் நேரப்படி 11:43 மணிக்கு விமான ஆம்புலன்ஸ் மற்றும் 12 ஆம்புலன்ஸ்கள் 
உள்ளிட்ட அவசர வாகனங்கள் சம்பவ இடத்திற்கு 
அனுப்பப்பட்டன.
பேருந்தில் இருந்த பெரும்பாலான முதியவர்கள் டாபின், மனிடோபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள்
 எனக் கூறப்படுகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 15 ஜூன், 2023

இந்நாட்டில் பதிவாகும் தோல் நோய்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அண்மைக்காலமாக இந்நாட்டில் பதிவாகும் தோல் நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவ திணைக்களம் 
சுட்டிக்காட்டியுள்ளது.
 தோல் நோய்களில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள், பலர் சரியான ஆய்வு இல்லாமல் சருமத்தை வெண்மையாக்க சில அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
 இந்நாட்டில் தோல் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவத் துறைகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு நபரின் தோலின் நிறமும் மெலனின் எனப்படும் நிறமியால் தீர்மானிக்கப்படுகிறது.
 மெலனின் சூரியன் மற்றும் வெளிப்புற நோய்களில் இருந்து புற ஊதா கதிர்கள் இருந்து தோல் பாதுகாக்க உதவுகிறது.
 மெலனின் வழங்கும் பாதுகாப்பை இழப்பது தோல் நோய்களுக்கு ஆளாகிறது மற்றும் தோல் புற்றுநோயின் அபாயத்தை
 அதிகரிக்கிறது.
 சமீபகாலமாக சருமத்தை வெண்மையாக்க பலர் பயன்படுத்தும் சில மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களும் தோல் புற்றுநோயை பாதித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 14 ஜூன், 2023

தொலமுல்ல வில் பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியை கொலை

மாத்தறைஇ ஊருபொக்கஇ தொலமுல்ல பிரதேசத்தில் பெண் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
 பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த ஆசிரியை காதலனால் கொல்லப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
 தம்பஹல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 அவரது காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


செவ்வாய், 13 ஜூன், 2023

உயிருக்கு நடுவானில் போராடிய பயணி: ஸ்ரீலங்கன் விமான பணிக்குழுவின் நெகிழ்ச்சி செயல்


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஒருவரின் உயிரைக் காப்பாற்ற அந்த விமானத்தின் பணிக்குழாமினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்படி, விமானத்தின் வழித்தடத்தை மாற்றி இந்தோனேசியாவில் விமானத்தை தரையிறக்க விமானி தீா்மானித்ததாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் உயிருக்கு போராடியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அவர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குணமடைந்த நபர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு தனது நன்றியை தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 12 ஜூன், 2023

பொகவந்தலாவையில் 10 வயது மாணவனின் முடிவால் அதிர்ச்சியில் பெற்றோர்

 தன்னுடைய வீட்டின் மலசலக்கூடத்துக்குள் பத்து வயதான மாணவன் ஒருவன், உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
ஓல்டி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5இல் கல்விப்பயிலும் மாணவன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதே, மலசலக்கூடத்துக்குள் சென்று தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மாணவனின் உடல், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில், பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதவான் ஸ்தல பரிசோதனைக்குப் பின்னர் மேலதி விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொகவந்தலாவை பொலிஸார் 
தெரிவித்தனர்.
எனினும் மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்கது..
 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 11 ஜூன், 2023

நாட்டில் மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து

மிஹிந்தலைக்கு அண்மையில் A9 வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மீது ஒரு சொகுசு பேருந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து தற்பொழுது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் இவ்வாறு விபத்துக்குள்ளானவர் மல்லாவி கல்வலங் பிரதேசத்தில் உள்ள 
பாடசாலை ஒன்றின் அதிபராவர்,அவரது பெயர் நிக்சன் என குறிப்பிடப்பட்டுள்ளது .
இந்த விபத்தால் தற்போது அப்பிரதேசத்தில் பாரிய வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 10 ஜூன், 2023

இந்தோனேசியாவுக்கு தேனிலவிற்காக சென்ற இந்திய புதுமண தம்பதி நீரில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 
ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, 
தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
 மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 9 ஜூன், 2023

சட்டவிரோத மணல் அகழ்வில் மாந்தை மேற்கு பகுதியில் ஈடுபட்டோர் கைது

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேத்தாவாடி பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் 
ஈடுபட்டவர்கள் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த புவிச்சரிதவியல் சுரங்க பணியக திணைக்கள அதிகாரிகளிடம் மற்றும் மன்னார் மாவட்ட புவிச்சரிதவியல் சுரங்க பணியக அதிகாரிகள் பார்வைக்காக வந்த போது இச்சம்பவம் 
நடைப்பெற்றது.
இதன் போது தேத்தாவாடி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்தமை தெரிய வந்துள்ளது. 
குறித்த தேத்தாவடி பகுதியில் அனுமதிப்பத்திரம் உள்ள 
இடங்களில் மட்டும் அகழப்படும் மண் களஞ்சியப்படுத்தும் இடங்களில், சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்ட மண்ணையும் சேர்ந்து களஞ்சியப்படுத்தி விற்பனை செய்யப் படுகின்றமை இதன் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 10 உழவு இயந்திரங்கள், 3 ஜே.சி.பி (J.C.P) இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
 அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.. 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>