siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 31 ஜனவரி, 2020

அமரர் திரு துரைராஜா இரத்தினம் 4ம் ஆண்டு நினைவஞ்சலி .31.01.20

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016      
நீங்காத நினைவு.நான்காம் ஆண்டு 
திதி-31.01.2020
 அமரர் திரு துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   அன்னார்  யாழ்  நவற்கிரி புத்தூரை 
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர் திரு துரைராஜா இரத்தினம் அவர்களின் நீங்காத நினைவுடன்  நான்காம் ஆண்டு நினைவஞ்சலி 31.01.2020...இன்று  வெள்ளிக்கிழமை 
மறைந்துவிட்ட எங்கள் உறவின்.

நீங்காத நினைவுகள் 
விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு…!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு…!
ஆனால், என்னுள்
உங்கள் நினைவு இல்லாத
நொடிகள் இல்லை…!
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் 
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றன
அன்னாரின் ஆத்மாசாந்தியடைய 
இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் , 
மைத்துனர்மார்கள், மருமக்கள்.
தகவல் குடும்பத்தினர் 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 30 ஜனவரி, 2020

. பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி சிறிபாலகிருஸ்ணன் திக்சிகா மரணம்

தமிழ் இளையோர் அமைப்பு (பிரித்தானியா) பொறுப்பாளர் திக்சிகா புற்றுநோய் காரணமாக.30.01.2020. வியாழக்கிழமை அன்று .சாவெய்தியுள்ளார்.2018ஆம் ஆண்டு பிரித்தானிய தலைநகர் இலண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு எழுச்சியுடன் இடம்பெறுவதற்கு திக்சி காத்திரமான பங்கு வகித்தவராவார்.
Thiksika the leader of Tamil Youth Organisation (UK), has died after being afflicted with cancer. Our thoughts are with her family and fellow activists
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பு.
*********************
எமது பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி திக்சிகா சிறிபாலகிருஸ்ணன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு நாங்கள் ஆறாத்துயரம்
அடைந்துள்ளோம்.
எங்களுடன் கூடிக்குலாவிய எங்கள் நண்பியின் பிரிவுத் துயரத்தில் உறைந்திருக்கும் குடும்பத்தினரின் ஆறாத்துயரில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றோம். தனது சிறு வயதிலிருந்தே தாயகம் நோக்கிய செயற்பாடுகளில் முழுவீச்சாக செயற்பட்டார், புதிய புதிய சிந்தனைகளில் தமிழ் மக்களின் துயரங்களை அனைத்துலகத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில்
 வேரூன்றி நின்றது.
பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பை முன்னேற்றப் பாடுபடுகின்ற தூண்களில் ஒருவராக இருந்தவர் திக்சிகா. அவரின் ஒருங்கிணைப்பில் பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கும் பொழுது புற்றுநோய் என்னும் கொடிய நோய் அவரை எங்களிடமிருந்து
 பறித்துச் சென்றுள்ளது.
தமிழ்ச் சமூகத்தினரிடையே இந்தப் புற்றுநோய் பெருமளவில் பரவிக்காணப்படுகின்றது. இன்று எம்மவர்களிடையே இதனைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இது தொடர்பான கருத்தரங்குகளும் இன்றியமையாத தேவையாக உள்ளன.
தமிழ் மருத்துவ அமைப்புகள் இதற்கான திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டுமென இவ்வேளையில் தாழ்மையாக
 வேண்டுகின்றோம்.
திக்சியின் இழப்புத் தமிழீழம் நோக்கிப் பயணிக்கும் எங்களுக்குப் பேரிழப்பாக அமைந்துள்ள போதும், திக்சிகா வழிகாட்டிய பாதையில் பிரித்தானியத் தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாங்கள் எங்கள் இலட்சியத்தை வென்றெடுக்கும் பணிகளில் மிகுந்த உத்வேகத்துடன் செயற்படுவோமென உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.
பிரிவுத் துயரோடும் இலட்சிய உறுதியோடும்
தமிழ் இளையோர் அமைப்பு
பிரித்தானியா.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்
மற்றைய செய்திகள்


செவ்வாய், 28 ஜனவரி, 2020

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தீர்த்தக் கேணியில் சிறுவனின் சடலம்

யாழ். தொண்டமனாறு – செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில், சிறுவனொருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர் .நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவனின் சடலம் 28.01.2020. செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பதை அவதானித்துள்ளனர். இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக வல்வெட்டித்துறை 
பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 27 ஜனவரி, 2020

மட்டக்களப்பில் ரயில் கடவையில் அமர்ந்து பாட்டு கேட்ட நபருக்கு நேர்ந்த சோகம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை, புணாணை பகுதியில் வைத்து மீனகயா என்ற புகையிரதத்தில் மோதுண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதக தெரிவிக்கப்படுகின்றது.வயல் காவலில் ஈடுபட்டிருந்த நிலையில் வாழைச்சேனை புணாணை புகையிர நிலையத்திற்கு இடைப்பட்ட புகையிரத கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாட்டு கேட்டிருந்த வேளையில் குறித்த 
விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், மயிலந்தனை புணாணையைச் சேர்ந்த ஜெய்கப்ஜோன் ஜோன்சன் (வயது 19) என்ற இளைஞனே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
 தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை
 பொலிஸார் மேலதிக விசாரணைகளை 
மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன 
மேலும் தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 26 ஜனவரி, 2020

அமரர் மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

                         பிறப்பு-17 06. 1963 -   இறப்பு-26 01 2018                                 
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி
26 01 2020..அன்புத் தெய்வமே அப்பா ஆறாத்துயரில்
துடிக்கின்றோமே!
எம்மை விட்டு நீங்கள் சென்று
ஆண்டு இரண்டு ஆனதுவோ!காலம் எல்லாம் என்னை
வாழவைத்த கணவாளனே
காலன் அவன் பார்வையில் சென்றதேனோ
என்னை தவிக்க விட்டு?பிரிவினில் உம் மறைவினில்
நாளும் வாடுகின்றோம் கண்ணீரில்பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் தான் தெரிகிறீர்கள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
நேரில் வரமாட்டீர்களோ அப்பா!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

    திதி -.24-01-2020.அன்று 
.அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்)  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி. இல்லறமாம் நல்லறத்தில் இணைந்தினிது
வல்ல இறை அருளினால் வளமாய் வாழ்ந்து
சொல்லிய புகழுடனே யாவும் பெற்று
நல் மனையான் சோதி பிள்ளையென்று
நல்லறத்தை நடத்திய எம்(இந்திரன்)
மனையாளைக் கரம்பிடித்து இல்லறத்தை வினையமாய்
தொடக்கி வைத்த புனித நாளில்
முப்பதாண்டு இல்லறத்தில் இனிதே
வெற்றி இப்போ தான் எனக் காலம் ஓடி
அப்பாடா என மகிழ்ந்து இருக்கும் போதில்
தப்பாது கவர்ந்தான் காலன் உயிரை
அப்பன் சிவன் கதவை அடைய வேண்டி
எப்போதும் பிரார்த்திப்போம்
ஓம் சாந்தி சாந்தி
 என்றும் உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி-பிள்ளைகள்-சகோதர்கள்:
தகவல் குடும்பத்தினர்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
!உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 
வீட்டு  .முகவரி ..இலங்கை. .Get Direction62 E S Fernando Mawatha, Colombo, Sri Lanka
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன்.செல்பேசி : +94779503389   
பரஞ்சோதிராசா - சகோதரர். செல்பேசி  : +94762335894 
 செல்பேசி  +94766092827 
  சின்னராசா(அப்பன்) - சகோதரர் செல்பேசி : +94777382871  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 22 ஜனவரி, 2020

நினைவஞ்சலி 1ம் ஆண்டு அமரர்,தம்பு சந்திரசேகரராஜா(இந்திரன்) 24-01.20

திதி -.24-01-2020.அன்று 
.அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா (இந்திரன்). அவர்களின்  திதி 24-01-2020. வெள்ளிக்கிழமை அன்று 
. அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் 
பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் 
ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, 
நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின்  1ம் ஆண்டு நினைவஞ்சலி.(திதி .24.01.2020.வெள்ளிக் கிழமை .அன்று  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்

மறைந்துவிட்ட உங்கள் உறவின்  
நீங்காத நினைவுகள் 
உதிர்ந்துவிட்ட உங்கள் நினைவின் 
உலராத வாசனை 
இழந்த அன்பானவரின் 
நீங்காத பொழுதுகள் 
இதயம் துடிக்கும் வரை 
மாறாது நினைப்பு 
இயற்கையின் அழைப்பு 
மீற முடியாத பயணம் 
சென்ற தூரமோ
மீள முடியாத பாதை
கண்முன் உங்கள் விம்பம் 
காலத்தை கடந்தும் கலையவில்லை 
நம்மை விட்டு பிரிந்த நம் தாத்தா
நம் நினைவை விட்டு பிரிய மறுப்பதேன்?
 உன் நிழலை நிஜமாக்கி 
நிலைத்திருக்கும்
காலச்சுழற்சியில்  ஈராண்டு  ஆண்டு  கடந்து போனாலும் இன்னும்
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது  புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள்  அப்பா  அண்னா தம்பி 
 உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி
 நிற்கின்றோம்.
   அன்னாரின் ஆத்மாசாந்தி அடைய மணைவி பிள்ளைகள் சகோதரர்  குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உற்றார் உறவினர்கள் சுவிஸ்  வாழ்  நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .... 
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள் சகோதர்கள் மருமக்கள் 
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389   பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894  கைத்தோலை பேசி : +94766092827   சின்னராசா(அப்பன்) 
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871  

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 20 ஜனவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் சரவணமுத்து இரத்தினம்,18.01.20

தோற்றம் --05,01.1936- மறைவு ,18.01-20
யாழ் அச்வேலியை  பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் சரவணமுத்து இரத்தினம்,.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில்  கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வடக்கு வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
Address :-அச்சுவேலி மத்தி எல்லை ஒழுங்கை, அச்சுவேலி தெற்கு, அச்சுவேலி, யாழ்ப்பாணம்.​​
தொடர்புகளுக்கு குடும்பத்தினர்
Mobile : +94770084039
Mobile : +94770869223

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 19 ஜனவரி, 2020

மரண அறிவித்தல் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.18.01.20

தோற்றம் -- மறைவு ,18.01-20
யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் அமரர் ராசையா.கேதீஸ்வரன்.அவர்கள்.18.01.2020. அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி சரஸ்வதியின்  அன்புமகனும் ஆனந்தி திருமால் துசியந்தன் (கனடா) அகியோரின் அண்ணனும் செல்வா. பாலாவின்
 அன்பு மைத்துனரும்  ஆவார்யாழ் கோப்பாய் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கேதீஸ்வரன் ராசையாஅவர்கள்.18.01.2020.  இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற ராசையா திருமதி சரஸ்வதியின்  அன்புமகனும் ஆனந்தி திருமால் துசியந்தன் (கனடா) அகியோரின் அண்ணனும் பாலாவின் அன்பு மாமனரும்  ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள்  பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் 
. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18,-01-2020 வெள்ளிக் கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தினர்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 13 ஜனவரி, 2020

கோர விபத்து முல்லைத்தீவில் இளம் தம்பதியை மோதித் தள்ளிய கடற்படை வாகனம்

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் வாகனம் மோ தியதில் முள்ளிவாய்க்கால் உப தபால் அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய கணவர் சம்பவ இடத்திலேயே ப ரிதாபமாக உயிரிழந்துள்ளார்.விபத்தில் காயமடைந்த மனைவி ஆபத்தான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு
 செல்லப்பட்டுள்ளார்.
வட்டுவாகல் சப்த கன்னியர் ஆலயத்தின் முன்பாக கணவன், மனைவி இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கடற்படையினருடைய வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.விபத்தில் படுகாயம் அடைந்தவர் முள்ளிவாய்க்கால் உப தபாலக அதிபரான ஜீவன் டினுசா (வயது24) என்றும், உயிரிழந்த 
அவருடைய கணவரான துணுக்காயைச்சேர்ந்த கே.ஜீவன் (வயது 32) எனவும் தெரியவருகிறது.விபத்துடன் தொடர்புடைய சாரதியை முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஞாயிறு, 12 ஜனவரி, 2020

குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதில் வாள் முனையில் கொள்ளை

யாழ்ப்பாணம், குப்பிழான் தெற்கு வீரமனைப் பகுதியிலுள்ள வீடொன்றின் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து உள்ளிறங்கிய கொள்ளைக் கும்பல் குறித்த வீட்டிலிருந்தவர்களை 
வாள் மற்றும் கத்தி முனையில் கடுமையாக அச்சுறுத்தி அங்கிருந்த தங்க நகைகள் பெறுமதிவாய்ந்த கைத்தொலைபேசிகள் மற்றும் ஒருதொகைப் பணம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம்  சனிக்கிழமை (11.012020) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த வீட்டின் உரிமையாளர்களான கணவனும், மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் அவர்களது நெருங்கிய உறவினரான இருவர் வீட்டின் பாதுகாப்புக் கருதி வீட்டில் 
தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் வீட்டுச் சமையலறையின் புகை போக்கியைப் பிரித்து மேற்படி வீட்டுக் கிணற்றடியில் வாளியுடன் இணைக்கப்பட்டிருந்த கயிற்றை எடுத்துக் கட்டி உள்ளிறங்கிய கொள்ளையர்கள் வீட்டிலிருந்த இளைஞன் மற்றும் நடுத்தர வயதுடையவரை வாள் மற்றும் கத்தி முனையில் அச்சுறுத்தி வீடு முழுவதும் சல்லடை போட்டுத் 
தேடியுள்ளனர்.
அதிகாலை ஒரு மணி முதல் 02.30 மணி வரை குறித்த வீட்டில் தங்கிநின்ற கொள்ளையர்கள் வீட்டின் பாதுகாப்புக்காக நின்றிருந்த இருவர் மீதும் தாலிக்கொடி எங்கே? எனக் கேட்டும் வேறு சில கேள்விகள் கேட்டும் சரமாரியாகத் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அயல் வீட்டுக்காரர் தொடர்பில் கொள்ளையனில் ஒருவன் வீட்டில் நின்றவர்களிடம் விசாரித்துள்ளான்.
அப்போது பக்கத்து வீட்டில் தாய், தகப்பனுடன் நான்கு பெடியன்களும் தற்போது வசிக்கிறார்கள் என அங்குநின்ற இளைஞன் பதிலளித்துள்ளான். அப்போது "இரண்டு பெடியன்கள் தானே இருக்கிறார்கள் " எனக் கூறியவாறே கொள்ளையர்களில் ஒருவன் அந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதன்போது வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி, கைச் சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட தங்கநகைகளையும், ஒருதொகை வெளிநாட்டுப் பணத்தையும், பெறுமதி வாய்ந்த மூன்று நவீன கைத்தொலைபேசிகளையும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் "இப்போது சத்தம் போடக் கூடாது, வெளியே வரக் கூடாது" எனத் தெரிவித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
சுமார் ஆறு பேர் கொண்ட கொள்ளைக் கும்பலே மேற்படி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் கொள்ளையிட வந்தவர்கள் கறுப்புத் துணிகளால் தங்கள் முகங்களை மறைத்திருந்ததாகவும் 
தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மேற்படி கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்துச் சுன்னாகம் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகள் 
மேற்கொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 11 ஜனவரி, 2020

கிணற்றில் வீழ்ந்து கிளிநொச்சி மலையாளபுர,த்தில் பலியான 11 வயதுச் சிறுமி

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பதினொரு வயது மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.குறித்த இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் 
இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக்கொண்டிருந்த போது சிறுமி தவறி கிண்ற்றில் வீழ்ந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதுடன், மாணவியின் தந்தை நிரந்தர சுகயீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும், தாயின் உழைப்பிலேயே 
அவர்களின் குடும்பம் தங்கியுள்ளதாகவும் தெரியருகின்றது.இந்நிலையில், டிலானியின் இறுதி கிரிகைகளை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்களின் குடும்ப வறுமை காணப்படுகின்றதாகவும் 
தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 8 ஜனவரி, 2020

அமரர் விநாசித்தம்பி ராஜேஸ்வரி,2ம் நினைவஞ்சலி,.09.01.20.

 உதிர்வு : 10 01  2018  
        திதி -09..01.2020
யாழ்.  நவற்கிரி  புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி  விநாசித்தம்பி ராஜேஸ்வரி . அவர்களின்   திதி -09..01.2020 வியாழக்கிழமை  அன்று   அவரது இல்லத்தி  நனைபெறும்  
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை  சின்னத்தங்கம்    தம்பதிகளின் அன்பு மகளும் ,திரு  விநாசித்தம்பி . 
 அவர்களின் அன்பு மனைவியும் 
திருக்குமரன்.சுவிஸ் .  சங்கீதா. லண்டன்  திருச்செந்தூர் கனடா   திருத்தனிகன் இலங்கை . ஆகியோரின் அன்புத்தாயாரும்    
  பாலராஜா  சிவராசா  சிவபாதம்  கலா காலஞ்சென்ற குளந்தை (திரு மதி கோண ராசா  ).  ஆகியோரின்  அன்பு  சகோதரி யும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
நீங்கள் எங்களை பிரிந்து
ஆண்டு 0ஒன்று  சென்றாலும்
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டு
 அகலவில்லை
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொறு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
அருகிலே நீங்கள் வாழ்வதை
நாம் உணருகிறோம்!
எங்கள் அன்பும் பாசமும் எமது உயிர் உள்ளவரை
உங்களுக்காக!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம்!¨
தகவல்
  பிள்ளைகளும்  குடும்ப தினரும்

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வெள்ளி, 3 ஜனவரி, 2020

தொண்டைமனாறு கடல் நீரேரியில் நீராடிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

தொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கபட்டுள்ளது.இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



தொண்டமனாறு கடல் நீரேரியில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் காணாமற்போயுள்ளார்.குறித்த இளைஞனை தேடும் பணியில் பொதுமக்கள், மற்றும் பொலிஸ் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு நீரில் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.யாழ்.தொண்டமனாறு நீரோியில் நீராடிக் கொண்டிருந்த இளைஞன் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளார்.நீரோியில் நீா்மட்டம் அதிகமாக உள்ள நிலையில் குறித்த இளைஞன் நீராடிபோது நீாில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் காணாமல்போயிருந்தார்.இந்நிலையில், கடற்படையினா் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுதல் நடாத்தியபூது இளஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிாிழந்த இளைஞன் 26 வயதான கந்தசாமி கஸ்துாரன் என அடையாளம் 
காணப்பட்டுள்ளாா்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செயதி >>>


வேகக் கட்டுப்பாட்டையிழந்து கோப்பாயில் மதகுடன் மோதிய முச்சக்கர வண்டி

கோப்பாய் பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவா் படுகாய மடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.மருதனார்மடத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை 
இழந்து எதிர்த் திசையில் இருந்த 
மதகுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர், சிறு காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காத்தான்குடியில் காரை தாறுமாறாக செலுத்திய யுவதி ஒருர் கொலை மூவர் படுகாயம்

பெண் ஒருவர் செலுத்திய கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதியதனால் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்தானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் வெள்ளிக்கிழமை (03.01.2020) காலை
 இடம்பெற்றதுட. இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமிருவர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் உறவினர் வீட்டில் இருந்து ஆரையம்பதி நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்றவர்களை மோதித்தள்ளியது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். அதில் ஒருவர் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 
வயது 72 உடையவர் தனது ஊரான அரசடித்தீவுக்கு செல்வதற்கு நின்றவேளை இவ்வாறு விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திருமதி மகாலிங்கம் தனபாக்கியலட்சுமி -02.01.20

யாழ்ப்பாணம் ஓட்டுமடத்தை சேர்ந்தவரும் வவுனியாவை வசிப்பிடமாக்க் கொண்டவருமாகிய எமது அத்தை மகாலிங்கம் தனபாக்கியலட்சுமி(சின்னக்கா,தனம்)அவர்கள் 02.01.2020 அன்று சிவபதம் அடைந்தார். இவர் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் மற்றும் உற்றார் உறவினருக்கும் எமது குடும்ப சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி.
தொடர்புகளுக்கு .கமல்.0094771510389
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம்  
பின்னர் அறிவிக்கப்டும் 
தகவல்: குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>