siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 30 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி :28:01:16

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



முதல் முறையாக இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலரின் 151 ரூபாக்குமேல்?

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா டொலரின் பெறுமதி நேற்றைய தினம் 151 ரூபாவை கடந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விடயம்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 151.07 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி 150.59 ரூபாவாக காணப்பட்டது.
இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றமையினால் இலங்கைக்கு கொண்டு வரும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை விலைகள் உயர்வடைவதாக
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 29 நவம்பர், 2016

பாரிய விபத்து முறிகண்டியில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

முறிகண்டியில் இடம்பெற்ற இவ் வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது,
அக்கரைப்பற்றில் இருந்து  யாழ். நோக்கிச் சென்று  கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை ஏழு மணியளவில்  கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த  வேளையே  இவ் விபத்து 
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தில்  பயணித்துக் கொண்டிருந்த  பத்து  ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு பேர் படுகாயமடைந்த  நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் அவசர சிகிச்சைப்  பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 28 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி:28:11:16

 மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
 தொர்புகளுக்கு தொலைபேசிஇலக்கம்  
00497031224307 மருமகன் சுந்தரராஜா (யேர்மன்: Böblingen)

செவ்வாய், 22 நவம்பர், 2016

யாழ் நகரை அண்டிய பகுதிகள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவ மழையைத் தொடர்ந்து வழக்கம்போல யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு 
வருகின்றனர்.
வருடந்தோரும் பருவ மழை ஆரம்பித்ததும் இவ்வாறான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்ட போதும் இதற்கான நிரந்தரத் தீர்வுகாணப்படவோ அல்லது இங்கு குடியிருக்கும் மக்களுக்காக நிரந்தர மாற்று வீடுகளுகளுக்கான ஏற்பாடுகளோ
 மேற்கொள்ளப்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

மகிழ்ச்சியான செய்தியை இலங்கை அகதிகளுக்கு 'UNHCR' கொடுத்துள்ளது ?

இலங்கை அகதிகள் 26,615 பேருக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா முகவர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 888,294 அகதிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
இவர்களில் 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த அகதிகளாவர். மியான்மாரை அடுத்து, இலங்கை அகதிகளுக்கே அதிகளவில் புகலிடம்
 அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், இலங்கையைச் சேர்ந்த 26,615 அகதிகளுக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் அகதிகளுக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 17 நவம்பர், 2016

செல்வி அர்ச்சனா செல்லத்துரை டென்மார்க் நாட்டின்விமானியானர்

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.
முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.
பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.
நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும்
 மறைந்துள்ளது.
பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 16 நவம்பர், 2016

ஈழத்தமிழர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது !

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி 
கருத்து வெளியிடுகையில்,
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது என்று அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுவருகின்றார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 நவம்பர், 2016

யாழில் 20 வயது பெண் பகலில் கடத்தல்- தந்தை பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர்
 தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை கல்யாணம் முடித்து தருமாறும் 
அவர் கேட்டுள்ளார்.
ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாக தந்தை தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஆவா குழு, கஞ்சா கடத்தல், கள்ள சாரயம் என்று பல விடையங்கள் அரங்கேறிய நிலையில். தற்போது ஆள்கடத்தல் கூட மிக சர்வசாதாரணமாக இடம்பெற்று 
வருகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

கூடுதல் விலைகளிள் மருந்துகள்விற்பனையா ? உடனே அழையுங்கள்!

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு
 தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி, 011 3071073 அல்லது 011 3092269 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமோ 011 2686113 என்ற பெக்ஸ் இலக்கத்துக்குத் தகவல் அனுப்புவதன் மூலமோ, மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 5 நவம்பர், 2016

அகதிகள் படகு இத்தாலி கடலில் மூழ்கி விபத்து 100க்கும் மேற்பட்டோர்பலி!

இத்தாலி கடற்பரப்பில் அகதிகள்  படகு  ஒன்று மூழ்கி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது 140 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த படகில் பயணித்த 2 பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா.அகதிகளுககள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் மற்றும் ஸ்தீரமற்ற அரசியல் தன்மை  போன்ற காரணங்களினால் சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணத்தை 
மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு செல்லும்போது அடிக்கடி ஏற்படும் படகு விபத்துகளினால் நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் உயிரிழக்கும் சோகமான சம்பவம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது 
குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக 
உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் போது 39 பேர் மட்டுமே தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இத்தாலி கடற்பரப்பில் மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்

யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்  (முன்னாள் லொறி சாரதி) (ஆனந்தன் ) அவர்கள் 31,10,2016  திங்கக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு   மகனும் , 
திருமதி ஞானேஸ்வரி   
 அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2016 . செவ் ய்க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர் 

 .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>