siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 பிப்ரவரி, 2019

மட்டக்களப்பில் ஒரே நாளில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட சடலங்கள்

மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து,27,02,2019, இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.ஆயித்தியமலைப்
 – மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், 
கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபர் தனது 
சகோதரியின் பராமரிப்பில் இருந்து வந்த ஒருவர் என எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, ஏறாவூர் – வந்தாறுமூலை பிரதான வீதியை அண்மித்த கடையொன்றிலிருந்து 25 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் காவற்துறையினர் குறித்த சடலத்தை மீட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதற்கிடை
யில், மட்டக்களப்பு – தாளங்குடா வேடர்குடியிருப்பை 
அண்டிய பகுதியில்
 எரியுண்டநிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சலடம் இன்று காலை மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கதக்கவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.எனினும், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், காத்தான்குடி காவற்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நெல்லைச் சேமிப்பதற்கு யாழ் -கூட்டுறவுச் சங்கங்கங்களும் இணக்கம்

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் நெல்லை கொள்­வ­னவு செய்து சேமிப்­ப­தற்கு கூட்­டு­றவுச் சங்­கங்­க­ளும் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­தாக மாவட்ட செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெல் விளைச்­சல் கடந்த
 காலத்தை விட இந்த வரு­டம் சிறப்­பா­ன­தாக அமைந்­துள்­ளது.
கடந்த வரு­டங்­க­ளில் கால நிலை மாற்­றத்­தால்
 நெல் அழி­வுக்கு உள்­ளா­னது. இத­னால் விளைச்­சல் குறை­வ­டைந்து. இம் முறை சிறப்­பாக அறு­வடை நடை­பெற்று வரு­கி­றது. நெல் சந்தை படுத்­தும் சபை இம்­முறை ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னித்­துள்­ளது.
ஒரு கிலோ சம்பா 41 ரூவா­வுக்­கும் ,ஒரு கிலோ நாடு 38 ரூபா­வுக்­கும் கொள்­வ­னவு செய்­யப்­ப­டு­கி­றது.நெல் விளைச்­சல் அதி­கம் என்­ப­தால் நெல்லை சேமித்து பருவ காலத்­தில் அதனை விற்­பனை செய்­வ­தன் மூலம் விவ­சா­யி­ க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
ஆகவே கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மற்­றும் நெல் சந்தை படுத்­தும் சபை ஆகி­யன இணைந்து இந்த முறை 2 ஆயி­ரம் மெற்­றிக் தொன் நெல்லை கொள்­வ­னவு செய்யத் தீர்­மா­னித்­து ள்­ளன.
இதற்­காக 80 மில்­லி­யன் ரூபா நிதி அமைச்­சி­டம் கேட்­கப்­பட்­டது.அதில் 50 மில்­லி­யன் ரூபா நிதி முதற் கட்­ட­மாக கிடைத்­துள்­ளது.கூட்­டு­றவுச் சங்­கங்­கள் மூலம் கொள்­வ­னவு செய்து சேமிக்­கப்­ப­டும் 
நெல் சில மாதங்­க­ளின் பின்­னர் அவை கேள்வி கோரல் மூலம் விற்­பனை செய்­யப்­ப­டும். இதன் மூலம் விவ­சா­யி­க­ளுக்­கும் நெல்­லின் உரிய விலை கிடைப்­ப­ தோடு கூட்­டு­றவு சங்­கங்­க­ளுக்­கும் இலா­பம் கிடைக்­கும்.
இவ்­வாறு சங்­கங்­கள் கொள்­வ­னவு செய்­யும் நடை­முறை 2015,16 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் இருந்­தது என்று 
தெரி­விக்­கப்­பட்­டது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மருதனார்மடத்தில் படுகாயங்களுடன் உயிர் தப்பிய பயணி

யாழ் மருதனார்மடத்தில் சற்று முன் நடந்த கோர விபத்தில் உந்துருளியில் சென்ற நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;யாழ் மருதனார்மடம் புகையிரத நிலையத்திற்கு சமீபமாக சற்று முன்னர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் பின்னால் வந்த வடி ரக வாகனம் மோதித்தள்ளியுள்ளது.
இதனால், படுகாயங்களுடன் நிலத்தில் வீழ்ந்த நபரை அருகிலுள்ளோர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  யாழில் அண்மைக்காலமாக இவ்வாறான அநாவசியமான விபத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை கவலைக்குரியது. சாரதிகளின் அசண்டையீனமான சாரத்தியமே மேற்படி விபத்துச் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றமையும் 
சுட்டிக்காட்டத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 25 பிப்ரவரி, 2019

பல்கலை அனுமதிக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

018 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தியவர்களில் 76,596 மாணவர்களிடமிருந்து இவ்வருட பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
அந்த விண்ணப்பங்களை பரிசீலனைசெய்து தெரிவுச் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுவதாக, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார 
தெரிவித்தார்.
கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 177,907 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதிபெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 23 பிப்ரவரி, 2019

முழு அடைப்­புப் போராட்­டம் வடக்கில்,25,02,19 திங்களன்று-

வடக்கு மாகா­ணம் முழு­வ­தும் நாளை­ம­று­தி­னம் திங்­கட்­கி­ழமை காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வு­க­ளின் ஏற்­பாட்­டில் முழு அடைப்­புப் போராட்­டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னால் வடக்கு முற்­றாக முடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.
இந்­தப் போராட்­டத்­துக்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ் மக்­கள் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ரஸ், அகில இலங்கை மக்­கள் காங்­கி­ரஸ், ஜன­நா­யக மக்­கள் முன்­னணி, சமத்­து­வம் சமூக நீதிக்­கான மக்­கள் அமைப்பு, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­க­ளது முழு­மை­யான – – தார்­மீக ஆத­ரவை வழங்­கி­யுள்­ளன.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­கள் தமது தொடர் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­பட்டு இரண்டு ஆண்­டு­கள் நிறை­வ­டை­வதை முன்­னிட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் சபை அமர்வை இலக்கு வைத்­தும், நாளை மறு­தி­னம் திங்­கட் கிழமை வடக்கு மாகாணம் தழு­விய முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அறை­கூ­வல் விடுத்­துள்­ள­னர். அன்­றைய தினம் கிளி­நொச்சி நக­ரில் காலை கவ­ன­வீர்ப்­புப் போராட்­ட­மும் நடை­பெ­ற­வுள்­ளது.
இந்­தப் போராட்­டத்­துக்கு அர­சி­யல் கட்­சி­கள், பொது அமைப்­புக்­கள், ஒன்­றி­யங்­கள், சிவில் சமூக அமைப்­புக்­கள் உள்­ளிட்ட பல தரப்­புக்­க­ளும் தங்­கள் ஆத­ரவை வழங்­கி­யுள்­ளார்­கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


யாழ் புத்தூர் பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் 
நடைபெற்றன.
இரவு நிகழ்வில்  காத்தவராயன் சிந்து நடைக்கூத்து இடம்பெற்றது.
மேலும் நாடக கலைஞர் கதிரமலை ,ஆலய பூசகர்
 தேவன் ஐயா இருவருக்கும் வில்லிசைக்கலைஞர் க.சத்தியதாஸ் அவர்களும்  ஓய்வுநிலை அதிபர் அ.அருந்தவநேசன் அவர்களும் பொன்னாடை 
போர்த்தி கௌரவித்தனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




தர்மபுரம் சம்புக் குளத்தில்- ஆணின் சடலம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள தர்மபுரம் 2 ஆம் யூனிற் சம்பு குளத்திலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
8 மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தரே இவ்வாறு சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேச மக்களால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நாட்டில் .இருந்து இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு பயணிகள் கப்பல் சேவை

இந்தியாவின் பிரதான துறைமுகங்களுக்கு யாழ்ப்பாணம் மற்றும் மன்னாா் மாவட்டங்களில் இருந்து பயணிகள் மற்றும் வா்த்தக கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான அடிப்படைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இதனடிப்படையில், காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் பணிகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் கப்பல்துறையையும் புனரமைக்கும் திட்டங்களை இலங்கை துறைமுக அதிகார சபை உருவாக்கி வருகிறது.
காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயப்படுத்தும் போது அதன் இறங்குதுறை முழுமையாக புனரமைக்கப்பட உள்ளது. வணிக கப்பல்கள் மற்றும் படகுகளை கையாள 167 மீற்றர் நீளமும் 22 மீற்றர் அகலமும் கொண்ட புதிய இறங்குதுறை நிர்மாணிக்கப்பட உள்ளது.
இவற்றுக்கான இந்தியாவிடம் இருந்து 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் மானிய கடன் கிடைக்கவுள்ளது.காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்படும் நடவடிக்கையோடு அங்கு பழைய சீமெந்து தொழிற்சாலை அமைந்திருந்த பிரதேசத்தில் புதிய தொழிற்பேட்டை 
நிர்மாணிக்கப்பட உள்ளது.
மேலும், காங்கேசன்துறை பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டங்களை 
உருவாக்கி வருகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

வியாழன், 21 பிப்ரவரி, 2019

நீங்கள் வீட்டில் இருந்தபடி மில்க் ரொபி செய்யும் முறை

தே.பொருட்கள்:-
ரின் மில்க் – 1 ரின்
சீனி – 2 சுண்டு (தலை தட்டி)
வனிலா – 1 மே.க
ஏலப்பொடி – 1 தே.க (மட்டமாக)
தண்ணீர் – 1/2 தம்ளர் / 10 மே.க
மாஜரின் – 1 மே.க (நிரப்பி)
மாஜரின் – 1 தே.க (நிரப்பி) தட்டுக்கு பூசுவதற்கு.
செய்முறை:-
* தாச்சியில் ரின் மில்க் , தண்ணீர் , சீனி மூன்றையும் போட்டு கரண்டியால் நன்கு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
* இந்தக் கலவை உள்ள தாச்சியை ஒரே அளவாக எரியும் அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காதவாறு கிளறிக் காய்ச்சவும்.
* கலவை தடிக்கத் தொடங்கியதும் மாஜரின் , ஏலப்பொடி, வனிலா மூன்றையும் சேர்த்து கிளறவும்.
* சட்டியில் ஒட்டாது திரண்டு வரும் பதத்தில் இறக்கி மாஜரின் பூசிய தட்டு ஒன்றில் கொட்டிப் பரவவும்.
* தட்டு முழுவதும் பரவும் வண்ணம் பூரிக்கட்டையால் நன்றாக பரப்பி, கத்தியால் உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கீறி விட்டு நன்றாக ஆறிய பின் பரிமாறலாம்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 20 பிப்ரவரி, 2019

யாழ்.நீதிமன்று எச்சரிக்கை பொது வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும்-

பொது இடத்தில் - வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி  ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொழுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொழுத்துவதை ஏற்க முடியாது"
இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இருபாளைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த ஹஏஸ் வான் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்த்தால், கண்ணாடி முற்றாகச் சேதமடைந்த்தது.
அந்தப் பகுதியால் வந்த இறுதி ஊர்வலம் ஒன்றில் வெடிகொழுத்தப்பட்ட வெடியே வான் மீது வீழ்ந்து அதன் கண்ணாடி் முற்றாகச் சேதமடைந்த்து.
இதனையடுத்து அந்த இறுதி ஊர்வலத்துடன் வெடி கொழுத்தி வந்த ஒருவரை கண்டுகொண்ட வானின் உரிமையாளர், தனது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளார். அத்துடன், தனது வான் கண்ணாடியை மாற்றியமைப்பதற்கு 57 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறும்  வெடியுடன் வந்த நபரிடம் சாரதி கேட்டுள்ளார்.
எனினும் இரு தரப்புக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டாத்தால் வான் சாரதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெடியுடன் வந்த நபரின் ஒளிப்படத்தை சமர்ப்பித்து முறைப்பாடு வழங்கினார்.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரு தரப்பையும் நேற்று  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
"குற்றஞ்சாட்டப்பட்டவர்தான் வான் மீது வெடிகொழுத்தி போட்டதற்கு ஆதாரம் இல்லை. அவர் வெடியை வைத்திருந்த்தால் அவர் மீது பழிபோட முடியாது. வாகனத்துக்கு வெடிகொழுத்தி எறியவில்லை, அவ் வழியால் பயணித்ததால் வாகனத்தில் பட்டுவிட்டது" என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.
"முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட ஒளிப்பட்டத்தில் வேறு எவருமே வெடி வைத்திருப்பதாக இல்லை.
பொது இடத்தில் - வீதிகளில் வெடி கொழுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலத்தில் வெடிகொழுத்தும் போது பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கக் கூடாது" என்று குற்றஞ்சாட்டப்பட்டவரை எச்சரித்த நீதிவான் ஏ.எஸ்.பி.போல், வழக்கை 
ஒத்திவைத்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

சிராட்டிகுளம் பகுதியில்மகன் இறந்த சோகத்தில் உயிர் விட்ட தாய்

மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் 
இடம்பெறற்றுள்ளது.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த சம்பவம் 
இடம்பெற்றுள்ளது.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியை சேர்ந்த கடந்த முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவனான யோகராசா துசியந்தன் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
 இந்த நிலையில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார் 
 உயிரிழந்த மாணவனின் சடலம் நேற்று அதிகாலை 2 மணிக்கு சிராட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்கு தாய் தந்தையரால் கொண்டு வரப்பட்டுள்ளது. 
மகனது பிரிவை தாங்க முடியாத தாயார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளார். 
 ஏற்கனவே ஒரு மக்களை பறிகொடுத்த தாய் தனது இரண்டாவது பிள்ளையையும் பறிகொடுத்தார்.
 இந்த தாக்கத்தை தாங்க முடியாத யோகராசா சரஸ்வதி என்ற தாயாரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 இந்த சம்பவத்தில் ஊரே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர். 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.மானிப்பாயிலுள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவத்தில் யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம் சிவலோகம்(வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திகிலிவெட்டையில் பெண்ணின் சடலத்தை பார்த்து போலீஸ் அதிகாரி மரணம்

மட்டக்களப்பு சந்திவெளி திகிலிவெட்டை பகுதியில் இடம் பெற்ற இரண்டு துயரச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
காட்டு யானை தாக்கி இரண்டு பிள்ளையின் தாய் உயிரிழப்பு, குறித்த சம்பவத்தின் விசாரணைப் பதிவுக்குச் சென்ற ஏறாவூர் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த உயிரிழந்த பெண் சடலத்தை திறந்து பார்த்தவுடன் ஒரு வித நடுக்கம் ஏற்றபட்ட பின்னர் உடனடியாக சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வழியில் 
உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் முக்கிய விடயம் , அதாவது இறந்தவரின் கணவனார் மயக்கமற்ற நிலையில் தூக்கிவந்தவேளை பொலிசாரையும் தூக்கி சுமந்த பொதுமக்கள், ஒரு முச்சக்கர வண்டியில் 
உயிரிழந்தவரின் கணவர் உட்பட அவர் உறவுகள் ஏறாவூர் பொலிசுக்கு முறைப்பட்டுக்கு சென்றவேளை பொலிசார் கவலைக்கிடமான நிலையில்
 இருந்ததை அவதானித்த ஒருவர் முச்சக்கர வண்டியில் இருந்தவர்களிடம் காரசாரமாக பேசிய பின்னர் அவர்களை 
இறக்கி கவலைக்கிடமான பொலிசாரை ஏற்றி அனுப்பியிருந்தார், மறுகணமே சற்று மணித்துளிகள் கடந்த நிலையில் அந்த பொலிசாரும் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. இதுதான் மனிதனின் இன்றைய வாழ்க்கைளிக் யதார்த்தம் என குறிப்பிடும்
 பிரதேச வாசிகள்…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> </


வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

சாவகச்சேரியில் தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்

தலை கவசம் அணியாமல் பாடசாலை மாணவா்களை மோட்டாா் சைக்கிள்களில் கொண்டு சென்றவா்களுக்கு எதிராக 1100 ரூபாய் சம்பவ இடத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளியில் ஏற்றி வந்த 25க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பவ 
இடத் தண்டம் அறவிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை என்பதால் வழமை போல் மாணவ ர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் பாடசாலைக்கு அழைத்து வந்தபோது பொலிஸாரால் இவர்கள் பிடிக்கப்பட்டனர். சாவகச்சேரி நகரில் உள்ள முன்னணிப் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிவரும் போது தலைக்கவசம் அணியவதில்லை
யென முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் திடீர் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக வங்கிகளில் பேணி வந்தால் கட்டணம் அறவீடு

வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால் மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான பணம் பேணப்பட்டு வந்தால் மாதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்தளவில் மீதியை பேணும் வங்கிக் கணக்குகளை நடாத்திச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமையே இதற்கான காரணம் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.இடைநடுவில் பணம் வைப்புச் செய்தால் வழமை போன்று கணக்கு பராமரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 9 பிப்ரவரி, 2019

அமரர் துரைராஜா இரத்தினம் 3ம் ஆண்டு நினைவஞ்சலி 10.02.19

மலர்வு .28.12.1952    உதிர்வு .15.01.2016
      திதி-- 10-02.2019
நீங்காத நினைவு. மூன்றாம் ஆண்டு 10-02.2019
 அமரர்  துரைராஜா இரத்தினம் (ஓய்வு பெற்ற கங்கசந்துரை சீமெந்து தொழில்சாலை)   இவர் யாழ்  நவற்கிரி புத்தூர்ரை
 பிறப்பிடமா​வும்  சங்கோலை  மாவிட்ட புரத்தை வசிப்பிடமா​கவும்  k .k .s வீதி இனுவில் மேற்கை தற்காலிகவதிவிடமாக கொண்ட 
அமரர்  துரைராஜா இரத்தினம் அவர்களின்
 நீங்காத நினைவுட  மூன்றாம்  ஆண்டு நினைவஞ்சலி 10.02.2019.ஞாயிருக்கிழமை  
.இன்று திதி  ..
 அன்பும் பணிவும் பாசமும் அறிவும் அழகும் துணிவும் மிக்க கணவராகவும், பாசமும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பாசமிகு தந்தையாகவும், அப்பா என்ற கடமையில் எந்த குறையின்றி 
சரியாக நடத்தி வாழ்ந்தீர்கள். அப்பா உங்கள் அன்பான சிரிப்பும் அன்பான பாசம் தன் பிள்ளைகள் எந்த கஷ்டத்தையும் அனுபவிக்ககூடாது என்று எங்களை கவனமாக வளர்த்தீர்கள் நீங்கள் எங்களுக்காக
$ செய்த தியாகம் எவ்வளவு அப்பா என்று கூப்பிட
 எனக்கு அப்பா இல்லாமல் போய்வீட்டீர்கள். உங்களின் திடீர் பிரிவு எதற்கு ஈடு கொடுக்க முடியாது அம்மாவையும் எங்களையும்  ஏங்கி தவிக்கவிட்டு சென்றீர்களே என்றும் இதயத்தில் வாழ்ந்து
 கொண்டுயிருப்பீர்கள். உங்கள் பிரிவால் ஏங்கி தவிக்கும் உங்கள் அன்பு மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரிகள், மருமக்கள்மார்.மைத்துணர்கள் பேரப்பிள்ளைகள்  உங்கள் ஆத்மா சாந்தியடைந்து சொர்க்கவாசல் செல்ல வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கின்றோம் 
 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்^
 அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் -குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 7 பிப்ரவரி, 2019

ஊரிக்காட்டில் எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்

இளைஞன் ஒருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதான குறிப்பிடப்படுகின்றது.
இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19) எனும் இளைஞனே இவ்வாறு சடலமாக 
மீட்கப்பட்டுள்ளார். 
ஊரிக்காடு பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் குறித்த இளைஞன் வேலை செய்து வருவதாகவும் , நேற்றைய தினம் மாலை கோழிப்பண்ணை கழிவு தொட்டிக்குள் விழுத்து கிடந்ததை அவதானித்தவர்கள் அவரை மீட்டு ஊரணி வைத்தியசாலையில் அனுமதித்தனர். 
இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 
ஒப்படைக்கப்பட்டு உள்ளது. 
குறித்த சடலத்தில் சில இடங்களில் எரிகாயம் காணப்படுவதாகவும், அதனால் குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் 
தெரியவந்துள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நுணாவில் 13 வயதுச் சிறுவனை தீண்டிய பாம்பு

யாழ்ப்பாணத்தில் 13 வயதுச் சிறுவனை, வரம்புப் புல்லுக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நுணாவில் மேற்கில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வயலில் நெல் அறுவடை செய்வதைப் பார்த்துக் கொண்டு வரம்பில் நின்ற சிறுவனே இந்த சம்பவத்திற்கு முகம் 
கொடுத்துள்ளார்.
பாம்பினால் கடியுண்ட சிறுவன், சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 6 பிப்ரவரி, 2019

பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் கடமை நேரத்தில் பாவிக்கத்தடை

கடமை நேரத்தில் பேஸ்புக், மற்றும் ஸ்மார்ட் போன் பாவிப்போர் பதவி நீக்கப்படுவீர்கள். மத்திய மாகாண ஆளுநர் எச்சரிக்கை.
தமது கடமை நேரத்தில். அரச அலுவலர்கள், ஃபேஸ்புக் அல்லது ஸ்மார்ட் ஃபோனை பயன்படுத்தினால் அவர்களை பணியில் இருந்து நீக்குவதாக, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன
 தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணத்தில் அரசு தொழில் நியமனம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் செலுத்துகின்ற வரிகளிலிருந்தே அரசு
 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அரிசி, பருப்பு, மின்சாரக் கட்டணம் என எல்லாவற்றுக்குமே அரசாங்கம் வரி அறிவிக்கிறது. இவ்வாறு பெறப்படுகின்ற வரிகளில் இருந்தே அரசாங்கத்தை 
நடத்துகின்றோம்.
இலங்கையில் யாரிடமாவது என்ன வகையான தொழில் வேண்டும் என்று கேட்டால், அரச தொழில் வேண்டும் என்று தான் சொல்லுகின்றனர்.ஏனென்றால் வேலை செய்யத் தேவையில்லை .ஆனால் சம்பளம் கிடைக்கும்.
அரச பணியாளர்கள் தங்கள் வேலையை தொடங்கும் போதே காலை 9.30 ஆகி விடுகிறது. அதன்பின்னர் மெதுவாக தேநீர் அருந்தி, பத்திரிகை பார்த்து,செய்ய வேண்டிய தனிப்பட்ட வேலைகள் அத்தனையையும் முடித்துவிட்டுத் தான், 9.30 க்கு தத்தமது வேலைகளை அரச பணியாளர்கள் 
ஆரம்பிக்கின்றனர்.
வேலையை தொடங்கிய பிறகு அவர்களின் போனிலிருந்து ‘டொக் டொக்’ என்று சத்தம் வரும். உடனே அதனை எடுத்து ‘மேசேஜ்’ அனுப்பத் தொடங்குவர். பிறகு ‘ஃபேஸ்புக்’ பார்க்கத்
 தொடங்குவர்.
அரச சேவையாளர்கள் ஒரு மணி நேரமாவது ஒழுங்காக வேலை செய்கின்றார்களா? என்று நன்றாக சிந்தித்துப் பாருங்கள். நான் நினைக்கின்றேன், இரு மணிநேரம் கூட 
அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. வேலை செய்பவர்கள் கடமையை விட்டுச் செல்லும் வரை வேலை செய்கின்றனர். வேலை செய்யாதவர்கள் வேலை செய்யாமலேயே ‘ஐஸ்’ அடித்துவிட்டுச் செல்கின்றனர்.
எனவே, யாராவது அரச அலுவலர்கள் கடமை நேரத்தில் ஃபேஸ்புக் பயன்படுத்தினால் அல்லது ஸ்மார்ட் ஃபோன் உபயோகித்ததாக எனக்கு முறைப்பாடு கிடைத்தால், அவரை வேலையிலிருந்து நிறுத்தி விட்டுத் தான், அந்த அலுவலர் தொடர்பில் ஒழுக்காற்று 
விசாரணை நடத்துவேன்.
இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே உங்களை நியமித்துள்ளோம். மக்களுக்கான சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதே, எனது எதிர்பார்ப்பாகும், என்று மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன கூறினார்.


செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

மரண அறிவித்தல்,அமரர் .தம்பு சந்திரசேகரராஜா 04-02.19

அன்னை மடியில் 09 ..02 .1955  ஆண்டவன் அடியில் 04 .02. 2019
யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் . தம்பு சந்திரசேகரராஜா  அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பு, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச் சேர்ந்த பொன்னம்பலம் மங்கயக்கரசி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சிவசோதிமலர்(சோதி) அவர்களின் அன்புக் கணவரும், கபிலன், பிரணவன், மாயவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான நடராஜா, பஞ்சராணி, தேவராஜா மற்றும் தியாகராஜா(சுவிஸ்), செல்வராஜா(சுவிஸ்), பரஞ்சோதிராசா(சுவிஸ்), சின்னராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சற்குணதேவி, சிவானந்தி, விமலாதேவி, சிவநங்கை, நந்தினி, சிவகுமார், சிவகணேசன், சிவகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்: குடும்பத்தின
தொடர்புகளுக்கு
 பிரணவன் - மகன் கைத்தோலை பேசி: +94779503389   பரஞ்சோதிராசா - சகோதரர் கைத்தோலை பேசி : +94762335894  கைத்தோலை பேசி : +94766092827   சின்னராசா(அப்பன்) 
- சகோதரர் கைத்தோலை பேசி : +94777382871  
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 4 பிப்ரவரி, 2019

வடமராட்சியில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.இச் சம்பவத்தில் அக்கரை, இடைக்காட்டைச் சேர்ந்த விஷ்ணுகுமார் தனுசன் (வயது-19) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கோழிகள் கொண்டுவரும் பெட்டிகளை நீர்ப்பாச்சியினால் சுத்தம் செய்து கொண்டிருத்த போ‍தே குறித்த இளைஞன் மின்சார தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
அதையடுத்து உடனடியாக வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி 
அவர் உயிரிழந்துள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காதலியுடன் கும்மாளம் போட்ட காதலுனுக்கு நேர்ந்த கதி

மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில்.(02) நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெந்தி உத்தரவிட்டிருந்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வரும் மகளின் சமவயது மாணவன் கடந்த 1 ஆம் திகதி வீட்டிற்கு வந்துள்ளார்.வெளியில் சென்றிருந்த பெண் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வீட்டில் இருந்த மாணவனுக்கும், குறித்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளதுடன் பெண், மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கியுள்ளார்
.சம்பவத்தில் காயமடைந்த மாணவன் தப்பியோடி பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று கொண்டுள்ளார்.மொரஹெல, பல்லேவெல பிரதேசத்தை சேர்ந்த மாணவனின் காதையே பெண் கடித்துள்ளார். துண்டான காது பகுதியுடன் பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு 
செய்துள்ளார்.
உடனடியாக காது பகுதியை பொலிஸார் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற போதிலும் அதனை பொருத்த முடியவில்லை எனக் கூறப்படுகிறது.சந்தேகநபரான பெண்ணின் மகளும், காயமடைந்த இளைஞனும் பலாங்கொடை நகரில் பாடசாலை ஒன்றில் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றனர்.
எவ்வாறாயினும், உடைந்து போன செல்போனை திருத்திக்கொடுப்பதற்காக மாணவன் வீட்டிற்கு வந்திருந்ததாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


காவலர்களை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் அதிகாரி யாழில் மரணம்

யாழ் செய்திகள்:யாழ்ப்பாண சாவகச்சேரி காவல் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது 20 சிங்கள காவல்துறை உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தரான பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை
 இயற்கை எய்தியுள்ளார்.
கடந்த 1984 ஆம் அண்டு சாவகச்சேரி காவல் நிலையம் மீது ரெலோ அமைப்பினர் தாக்குதல் நடத்தியிருந்த போது அங்கு கடமையில் இருந்த 20 சிங்கள காவல்துறையினரை பின்புறமாக பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காட்டு பாதையூடாக அழைத்து சென்று பின்னர் வான் ஒன்றில் அவர்களை ஏற்றி சென்று ஆனையிறவு இராணுவ முகாமில் பாதுகாப்பாக ஒப்படைத்திருந்தார்.
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் இருபது பேரையும் காப்பற்றிய குறித்த தமிழ் காவல்துறை உத்தியோகஸ்தர் பருத்தித்துறையை சேர்ந்தவராவர். 1937ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது 25வயதில் 1962ஆம் ஆண்டு காவல்துறை சேவையில் கான்ஸ்டபிளாக இணைந்து 
கொண்டுள்ளா
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

அச்சுவேலி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நடந்த துயரம்! அச்சத்தில் ஊர் மக்கள்

யாழ் செய்திகள்:அச்சுவேலி – பத்திரகாளி ஆலயத்தில் கொடியேற்றத்தை தடுத்தார் தர்மகத்தா -ஊர் மக்கள் கவலை, தீமை நடக்கலாம் என அச்சம்-
அச்சுவேலி – பத்தமேனி வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கவிருந்த வருடாந்த மகோற்சவம் ஆலய தர்மகத்தாவின் எதேட்சாதிகாரமான செயற்பாட்டால் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமது ஊரில் துன்பியல் சம்பவங்கள் நடைபெறக்கூடும் என பிரதேச மக்களும் திருவிழா உபயகாரர்களும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி ஆலயத்தில் வருடா வருடம் ஒளியமைப்புச் செய்யும் ஒருவரை இவ்வருடம் அதைச் செய்யவிடாமல் வேறு ஒருவரைத் தான் ஏற்பாடு செய்வார் என ஆலய தர்மகத்தா கூறினார் எனவும் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்தே கொடியேற்ற விடாமல் தர்மகத்தா தடுத்துள்ளார் என பிரதேச மக்கள் 
தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இவ்வருடம் புதிய சித்திரத் தேர் செய்யப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் நாளை வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், கொடியேற்றம் இடம்பெறாமையால் தேர் வெள்ளோட்டம் எப்படி நடைபெறும் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆலய அர்ச்சகர் உட்பட பிரதேச மக்கள் பலரும் தர்மகத்தாவிற்கு எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் இம்மியும் இளகவில்லை எனத் தெரியவருகின்றது.
இதனால், நேற்றைய கொடியேற்றத்திற்காக நேற்று முன்தினம் வைக்கப்பட்ட கும்பங்கள் அனைத்தும் நேற்றுக் காலை கலைக்கப்பட்டு வழக்கமாக நடைபெறும் நித்திய பூசை மட்டும் இடம்பெற்றது எனவும் மக்கள் கூறுகின்றனர்.
அண்மையில் வரணியில் ஜே.சி.பி வாகத்தால் தேர் இழுக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள நிலையில், நேற்று ஒரு ஆலயத்தில் கொடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.