siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 26 டிசம்பர், 2013

ஆயிரம் மக்கள் பலியெடுக்கப்பட்ட மெரீனா!!!

கடற்கரையில் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிப்பு
தமிழகத்தில் கடலோர கிராமங்களில் பெருவாரியாக வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25–ம் திகதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய களைப்பில் 26–ம் திகதி அதிகாலையில் நல்ல தூக்கத்தில் இருந்தனர்.

அப்போது கடலில் உருவான சுனாமி பேரலைகள் ஆக்ரோஷமாக ஊருக்குள் புகுந்தது.
அயர்ந்த தூக்கத்தில் இருந்த மக்களை அப்படியே வாரி சுருட்டி கடலுக்கு கொண்டு சென்றது.
நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி தொடங்கி குமரி மாவட்டத்தின் கன்னியாகுமரி, மணக்குடி, கொட்டில்பாடு, குளச்சல் என பல மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சில நிமிடங்களிலேயே மாண்டு போனார்கள்.



10 நிமிடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவு வாங்கியது சுனாமி. இயற்கையின் சீற்றம் ஏற்பட்டு இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திங்கள், 21 அக்டோபர், 2013

இரும்புக்கடையில் வெடிப்பு : ஒருவர் படுகாயம்


மாதம்பை சுதுவெல்ல பகுதியிலுள்ள இரும்புக்கடையொன்றில் இன்று திடீரென இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழைய இரும்புப் பொருளொன்றை வெட்டும் போது இவ்வனர்த்தம் பதிவானதாகவும் ஆட்லெறிக்கு பயன்படுத்தப்படும் ஒரு வகை ரவைகள் சில வெடித்ததிலேயே குறித்த வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவம் பதிவான இடத்துக்கு அருகில் இரும்பு - உருக்கு தொழிற்சாலையொன்றும் உள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சனி, 19 அக்டோபர், 2013

புகைத்தலினால் நாளாந்தம் 60 பேர் உயிரிழக்கின்றனர்:


 புகைத்தலுடன் தொடர்புபட்ட சுகாதார பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொற்றா நோய்கள் பலவற்றின் முக்கிய காரணியாக விளங்குவது புகைப்பிடித்தல் செயற்பாடாகும். புகைப்பிடித்தலுடன் சம்பந்தப்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளினால் தினமும் ஏறக்குறைய 60 பேர் மரணிப்பதுடன் வருடமொன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை உயிர் துறக்கின்றனர்.
புகைத்தலினால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மைகளை மாணவர்கள்

நேரடியாக காண்பதற்காக மஹரகம புற்று நோய் வைத்தியசாலையை பார்வையிட அனுமதிக்க வேண்டும். மேலும், கொழும்புக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும் சிரேஷ்ட தர வகுப்பு மாணவர்களை அங்கொடை தேசிய உளச் சுகாதார நிறுவனத்திற்கும் மஹரகம புற்று நோய் வைத்தியசாலைக்கும் அழைத்துச் செல்ல வேண்டும்.

மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் புற்று நோயாளர்களில் அதிகமானோர் 35 வயதுக்கும் 45 வயதுக்குமிடைப்பட்டவர்கள். இவர்களில் அதிகமானோர் தீவிர புகைப்பிடித்தல் பழக்கமுடையவர்களாக காணப்படுகின்றனர்.

வாய் மற்றும் நுரையீரல் புற்று நோய்ச்சிகிச்சைக்காக அரசாங்கம் வருடமொன்றுக்கு 15 மில்லியன் ரூபாவை செலவு செய்கிறது. புகைத்தலால் பாதிக்கப்படுவோரை மருந்துகளினால் பாதுகாக்க முடியாது. ஒரு புற்றுநோயாளருக்கு ஊசி ஏற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா செலவிடப்படுகிறது. இருந்தும் புற்று நோயாளர்களை மருந்துகளினால் காப்பாற்ற முடியாமல் இருக்கிறது என்றார்.

புதன், 16 அக்டோபர், 2013

இணையத் தொடர்பு சேவைகள் மூலம் தகவல் திரட்டும் அமெரிக்க !


 
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இதுகுறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி, தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
   
அமெரிக்காவில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இதைத் தடுக்க அமெரிக்க அரசின் கீழ், பல உளவுப் பிரிவு அமைப்புகள் இயங்கி வருகின்றன. பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் மற்றும் ஊடுருவல்களை இந்த அமைப்புகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் என்எஸ்ஏ, இணையதள சேவைகள் மூலம்

அமெரிக்கர்கள் உள்பட லட்சக்கணக்கானவர்களின் விவரங்களை சேகரித்து வைத்துள்ளதாக அமெரிக்காவின் "வாஷிங்டன் போஸ்ட்' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு

 லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.அமெரிக்க உளவுப் பிரிவுகளின்

செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இதுகுறித்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை

என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40,000க்கும் அதிகமான இ-மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயல்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

திங்கள், 14 அக்டோபர், 2013

யானையிடமிருந்து தப்பியவர் முதலையிடம் சிக்கி


மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் தன்னை பாதுகாப்பதற்காக ஆற்றில் குதித்த விவசாயியொருவர் முதலையிடம் சிக்கி படுகாயமடைந்துள்ளார்..
போருக்கு பின்னர் மீள்குடியேற்ற கிராமமான உறுகாமம் கிராமத்தில் நேற்று இந்த பரிதாபகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதே கிராமத்தில் சம்பவத்திற்கு முதல்நாள் சனிக்கிழமை யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மோதலில் 12வயது டைய் ஜெமில் தஸ்லிம் என்ற மாணவன்; யானையின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளான்.

தமது கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை வேண்டி பிரார்;த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்த மாணவன் சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது..

குறித்த சம்பவம் இடம்பெற்று 24 மணி நேரத்திற்குள் யானைக்கும் மனிதனுக்குமிடையிலான மற்றுமோர் மோதலில் தப்பி முதலையின் பிடியில் சிக்கி காயமடைந்த விவசாயி 27வயதான பி. செல்வக்குமார்

தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தனது கால்நடை பண்ணையில் பால் கறப்பதற்காக சென்றவேளை எதிர்கொண்ட யானையால் துரத்தப்படடு ஆற்றில் பாய்ந்ததாக இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுகின்றது.

காட்டு யானைகளின் தொல்லை தற்போது இரவில் மட்டுமல்ல பகலிலும் அதிகரித்து வருவதாவே உறுகாமம் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற இந்த சம்பவங்களையடுத்து சில குடும்பங்கள் தற்போது வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும்

வனஜீவராசிகள் தினைக்களத்திற்கு அறிவிக்கும் போது வருகை தந்து யானைகளை காடுகளுக்குள் விரட்டினாலும் பழக்கப்பட்ட யானைகள் போன்று அவை மீண்டும் அதேயிடங்களுக்கு வருவதாகவும் உள்ளுர் மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேவேளை செங்கலடி- பதுளை நெடுஞ்சாலையை அண்மித்த காடுகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் காணப்பட்ட யானைக் கூட்டமொன்று வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரிகளினாலும் காவல் துறையினராலும் பகல் முழுவதும் கண்காணிக்கப்பட்டு மாலையில் சத்த வெடிகள் மூலம் காடுகளுக்குள் விரட்டப்பட்டன.

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

மாலியில் படகு விபத்து: 20 பேர் பலி - 200 பேர் மாயம்


மத்திய மாலியில் சுமார் 400 பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

மாலியில் உள்ள கொன்னா என்ற இடத்தில் இருந்து சுமார் 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு திம்புக்டு நகரை நோக்கி நைஜர் ஆற்றில் சென்ற படகு திடீரென்று நீரில் மூழ்கியது. படகில் பயணித்த பலருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி தத்தளித்தனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் 210 பேரை உயிருடன் மீட்டனர். மிதந்து வந்த 20 பிரதேங்களையும் கைப்பற்றினர். காணாமல் போன மேலும் 200 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலைவன பிரதேசமான வடக்கு மாலியில் சரியான சாலை வசதி இல்லாததால் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு செல்லும் மக்கள் பெரும்பாலும் படகு போக்குவரத்தையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சனி, 12 அக்டோபர், 2013

அமெரிக்க படைகளிடம் சிக்கிய தலிபான் தளபதி


கிழக்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளிடம் தலிபான் இயக்கத்தின் முக்கிய தளபதி லத்தீப் மசூத் சிக்கியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் தங்கியுள்ள தலிபான், அல்கொய்தா தீவிரவாதிகளை ஒழித்து கட்டும் நோக்கில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன.

சமீபத்தில் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத தலைவர் லத்தீப் மசூத் என்பவர் அமெரிக்க படையிடம் பிடிபட்டார். இவர் கிழக்கு ஆப்கானிஸ்தான் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இத்தகவலை அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேரி ஹெர்ப் உறுதி செய்தார்.
அல்கொய்தா மற்றும் முல்லா ஓமர் தலைமையிலான தலிபான் இயக்கங்களுடன் லத்தீப் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கடுமையான பனிப்பொழிவு முதன் முறையாக ஜேர்மனில்


 முதன் முறையாக கடுமையான அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் தெற்கு ஜேர்மனியின் பவேரியா பகுதியில் பனிப்பொழிவு ஆரம்பித்துவிட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் சிறுகுழந்தைகளுக்கு விளையாட்டுக் கூடம் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் மக்களுக்கும், வாகன ஓட்டுனர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெர்லினில் வெப்பநிலை ஆறு டிகிரி C முதல் 14 டிகிரி C  வரை காணப்படும் என்றும், முனிச்சில் 8 டிகிரி C-க்கு மேல் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

வியாழன், 10 அக்டோபர், 2013

சுற்றுலா பயணிகளுக்கு விசா விதிகள் தளர்வு !


 இந்திய அரசு இந்தியாவுக்கு சுற்றுலா வர விரும்பும் பயணிகளுக்கு விசா வழங்குவதில் சில விதிகளை தளர்த்தியிருக்கிறது.

அமெரிக்கா பிரிட்டன் பிரான்ஸ் ஆஸ்திரேலியா சீனா போன்ற 40 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் இந்தியாவுக்கு சுற்றுலா விசா பெற அவர்களின் நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகாமலேயே இணையத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பிவிட்டு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தவுடன் விமான நிலையத்தில் அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று இந்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பில் தெற்காசிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.ஆனால் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள 60வயதுக்கு மேற்பட்ட அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தவுடன் விசா வழங்கும் வசதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய், 8 அக்டோபர், 2013

இதோ உங்களுக்கான உணவுகள்!! எடை அதிகரிக்க


ஆரோக்கியமான உடலை அடைய வேண்டுமெனில் எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே உண்ண வேண்டும்.
பருமனாக உள்ள பல பேர் உடல் எடையை குறைக்க வேண்டி பாடுபடுவதை போல, ஒல்லியான தேகம் கொண்டவர்கள் உடல் எடையை அதிகரிக்க விரும்புகின்றனர்.

உடல் எடையை அதிகரிப்பது சுலபம் என்று நீங்கள் நினைக்கலாம்.
எண்ணெயில் பொரித்த கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதுமானது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல.
உடல் எடை அதிகரிக்கும் போது ஆரோக்கியமாக இருப்பது பெரிய சவாலாக விளங்கும். ஆனால் அது ஒன்றும் அவ்வளவு கடினமானது கிடையாது.
போதுமான கலோரிகள் மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளையே உண்ணுங்கள்.
புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொண்டால், உடல் தசைகள் பெரிதாகி உடல் எடையும் அதிகரிக்கும்.
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்
உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ்களில் கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் வளமையாக உள்ளது.
அதனால் உலர் திராட்சை, பாதாம், வால்நட் மற்றும் முந்திரி பருப்புகளை உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் உலர் திராட்சையில் 449 கலோரிகளும், ஒரு கப் பாதாமில் 529 கலோரிகளும் அடங்கியுள்ளது.
அவைகளை ஐஸ்க்ரீம் அல்லது தயிரின் மேல் தூவி விட்டு உண்ணலாம். வேண்டுமானால், சாலட் மற்றும் உணவு தானியங்களிலும் கலந்து உண்ணலாம்.
சீஸ்
மற்ற அனைத்து பால் பொருட்களை போல சீஸிலும் (பாலாடை கட்டி) அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது.
இதில் ஆரோக்கியமான நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளதால், வேகமாக உடல் எடை கூட விரும்புபவர்கள் இதனை உட்கொள்ளலாம்.
கலோரிகள் மட்டுமின்றி, இதில் புரதம், கால்சியம், மற்றும் கொலஸ்ட்ராலும் அதிகமாக உள்ளது.
அதனால் உணவுகளில் கொஞ்சம் சீஸை தூவி விட்டால் போதும், உணவின் சுவை இன்னமும் அதிகரித்துவிடும். ஒரு முறை பரிமாறப்படும் சீஸில் 69 கலோரிகள் உள்ளது.

வேர்க்கடலை வெண்ணெய்
வேர்க்கடலை வெண்ணெயில் புரதமும், கொழுப்பும் அதிகளவில் உள்ளது. உடல் எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
ஒரு ஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெயில் தோராயமாக 100 கலோரிகள் உள்ளது. மேலும் இதில் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்

அடங்கியுள்ளது. இதில் உள்ள கொழுப்பு தெவிட்டாத வகையை சேர்ந்ததாகும்.
அதனால் இது இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலை வெண்ணெயை முழுதானிய ரொட்டியில் தேய்த்து உண்ணுங்கள் அல்லது ஆப்பிள் உண்ணும் போது இதனை தொட்டுக் கொள்ளுங்கள்.
கொழுப்பு நீக்காத முழுமையான பால்
கொழுப்பு நீக்காத முழுமையான பாலை ஓட்ஸ் அல்லது தானியங்களுடன் கலந்து உண்ணலாம்.

வேண்டுமென்றால் ஒரு டம்ளர் பாலையும் அப்படியே குடிக்கலாம். வேண்டுமென்றால் அதனுடன் கொஞ்சம் சாக்லெட் பொடியையும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
கலோரிகள் அதிகமுள்ள இதில் வைட்டமின் டி மற்றும் ஏ சத்துக்களும் அடங்கியுள்ளது.
கொழுப்பு நீக்கிய பாலுக்கு பதில், கொழுப்பு நீக்காத பாலையே தேர்ந்தெடுங்கள்.

இது தான் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கொழுப்பு நீக்காத ஒரு டம்ளர் பாலில் 120-150 கலோரிகள் அடங்கியுள்ளது.
உருளைக்கிழங்கு

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பொதுவாக தவிர்க்கும் ஒரு காய் தான் உருளைக்கிழங்கு.
ஆனால் ஏன் அதை விட்டு ஓடி போகிறீர்கள்? அதற்கு காரணம் அ
தில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட். இது வேகமாக உடல் எடையை அதிகரித்துவிடும்.

அதே போல் இதில் ஸ்டார்ச், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. உருளைக்கிழங்கின் தோளில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால், தோலோடு சேர்த்தே உண்ணுங்கள்.
மேலும் அதனை மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்ணலாம். ஒரு இடைநிலை உருளைக்கிழங்கில் 150 கலோரிகள் அடங்கியிருக்கும்.
பாஸ்தா

கலோரிகள் நிறைந்த சுவைமிக்க உணவு தான் பாஸ்தா. மேலும் இதில் கார்போஹைட்ரேட் கூட அதிக அளவில் உள்ளது.
பல காய்கறிகளை இதனுடன் சேர்த்தால் அதிமுக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் சேர்ந்துவிடும். ஒரு கப் மக்ரோனியில் 300 கலோரிகள் உள்ளது. இதுவே சமைத்த உணவில் 22 கலோரிகள் இருக்கும்.
வெண்ணெய்

தெகட்டாத கொழுப்பு வகையை சேர்ந்தவை வெண்ணெய். சமையலுக்கு அதனை சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதனை பிரட்டில் தேய்த்து உண்ணலாம் அல்லது நொறுக்குத் தீனியை வறுக்கும் போதும் இதனை கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
பொதுவாக உணவுகளுக்கு சுவையை கூட்ட வெண்ணெயை சேர்ப்பது

வழக்கமான ஒன்று தான். வெண்ணெய் மற்றும் நெய்யில் நல்ல வாசனையும், சுவையும், உடல் எடை அதிகரிக்க தேவையான கலோரிகளும் உள்ளது.
ஆரோக்கியமான இனிப்பு பழங்கள்
மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம் மற்றும் அன்னாசிப்பழம் போன்ற பழங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

இவைகளில் இயற்கையான சர்க்கரை உள்ளது. அவைகள் உடலின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.
குறிப்பாக உடல் எடை கூடுவதற்கு சரியான தேர்வாக விளங்குவது தான் அவகேடோ என்னும் வெண்ணெய் பழம்.
கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்த இந்த பழத்தில் 300 கலோரிகள் அடங்கியுள்ளது.

அதனால் இவை இனிப்பாகவும், ஆரோக்கியமாகவும் விளங்கும். இதனை பழங்களை கொண்டு தயாரிக்கும் சாலட், டெசர்ட் மற்றும் ஜூஸ்களில் கலந்து உண்ணலாம்.
முட்டைகள்

கலோரிகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதம் நிறைந்துள்ளது தான் முட்டை. ஒரு முட்டையில் தோராயமாக 70 கலோரிகளும் 5 கிராம் கொழுப்பும் உள்ளது.
அதனால் தான் உடலை வளர்க்கும் ஆண் மகன்கள் முட்டையை விரும்பி உண்ணுகிறார்கள். இதில் ஒமேகா-3 கொழுப்பமிலங்களும் அதிகமாக உள்ளது.
முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமில்லாத கொலஸ்ட்ரால் உள்ளதால் அதனை தவிர்த்திடுங்கள்.

ஆனால் இந்த முட்டையை முட்டை பொறியல், அவித்த முட்டை அல்லது ஆஃப்-பாயில் எடையை வேகமாக அதிகரிக்கச் செய்யும்.
கொழுப்பில்லா இறைச்சி

கொழுப்பில்லா இறைச்சி கலோரிகளால் நிறைந்துள்ளது. அதனால் அதனை உட்கொண்டால், உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
ஆரோக்கியமான உடலை பெற இதனை ஆரோக்கியமான உணவுடன் சேர்த்து உட்கொள்ளுங்கள். இவைகளில் புரதமும் அதிகமாக உள்ளதால், தசைகள் வளர்ச்சியடைய உதவும்.

அதிலும் அதனை வறுத்து அல்லது வேறு விதமாக சமைத்தும் உண்ணலாம். இதனால் உடல் எடையும் வேகமாக அதிகரிக்கும்.

 

திங்கள், 7 அக்டோபர், 2013

அட்டகாசம் 6 வயது இரட்டை குழந்தைகளின்


இங்கிலாந்தில் 6 வயது இரட்டை குழந்தைகள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இங்கிலாந்தின் செயின்ட் ஈவ்ஸ் நகரைச் சேர்ந்த அஷ்லே கிரிபித் என்பவருக்கு 6 வயதில் ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர்.
இரட்டை குழந்தைகளான இவர்கள் செய்த அட்டகாசத்தால் தந்தை அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.

அதாவது, கடந்த வார இறுதியில் அப்பிள் இணையத்தள நிறுவனத்தில் இருந்து கிரிபித்துக்கு தபால் ஒன்று வந்துள்ளது.
இதனை பிரித்த பார்த்த போது, 4 பக்க அளவுக்கு பில்கள் இருந்துள்ளது.
அதில் ரூ.97,010 கட்ட வேண்டும் என்றும், பாஸ்வேர்டுகளுக்காக ரூ.7,425 கட்ட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

தவறாக பில் அனுப்பிவிட்டார்களோ என்று ஆச்சரியமாக பார்த்தபோது, தன் பெயருடன் முகவரியும் சரியாகத்தான் இருந்தது.

தன்னுடைய குழந்தைகள் தான் சுட்டியாச்சே, அவர்கள் இதை வாங்கினார்களா என்று கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது.
அவரது குழந்தைகள் தந்தையின் ஐபேடை தங்களுடைய படிப்புக்காக பயன்படுத்திக் கொள்வது வழக்கம்.

அதில் இருந்த தந்தையின் பாஸ்வேர்டை நினைவில் வைத்து கொண்டு, இன்டர்நெட்டில் இவ்வளவையும் வாங்கியுள்ளனர்.
உடனடியாக இணையத்தள நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு நடந்ததை எடுத்துக்கூறவே, அவர்களும் பில்களை வாபஸ் பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து தன்னுடைய பாஸ்வேர்டை மாற்றி விட்டாராம்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

நாங்கள் என்ன பாவம் செய்தோம்! 11 வயது சிறுவனின் கதறல்


சிரியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.
இதில் ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் பலியாகி உள்ளதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உட்பட பலரும் கொடூரமாக கொலை செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிரியாவில் நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த திட்டமிட்டன.

ஆனால் இதற்கு தொடர்ந்து ரஷ்யா மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் ரஷ்யாவின் கோரிக்கையின் படி, தங்களிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்படி அமெரிக்காவின் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முகாம்களில் சிரியா அகதிகளின் நிலை குறித்து பிபிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்குள்ள மக்களின் நிலை சற்றே கண்கலங்க வைக்கிறது.

பசியில் துடிக்கும் பிஞ்சுக் குழந்தைகள், கையில் எதுவுமே இல்லாத நிலையில் அடுத்த என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் விழி பிதுங்கி இருக்கும் பெற்றோர்கள்.
11 வயது சிறுவன் ஒருவன், கடுமையான வலி வேதனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நான் பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது ஏன் குண்டு போட்டார்கள்? ஏன் அவ்வாறு செய்தார்கள்? என அழுது கொண்டே கூறியிருப்பது நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.
 

சனி, 5 அக்டோபர், 2013

பேர்மிங்ஹாமில் இலங்கைப் பெண் மரணம்:


 
இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இலங்கைப் பெண்ணொருவர் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை 6.45 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
அவர் பயணித்த சைக்கிள் லொறியொன்றுடன் மோதியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

முத்துமனகா பின்ஹாமி என்ற 55 வயதான பெண்ணே விபத்தியில் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் 5 பிள்ளைகளின் தாயெனவும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகள் இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்  பேர்மிங்ஹாமில்  ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவரெனவும் காலையில் தொழிலுக்கு செல்லும்  போது ஹே மில்ஸ் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் லொறி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், லொறி சாரதியிடம் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வியாழன், 3 அக்டோபர், 2013

பிரான்ஸ் நாடு நியூயார்க் அல்ல! தொழிற்சங்க தலைவர்


பிரான்ஸ் நாட்டில் உள்ள கடைகள் அதிக நேரம் திறந்திருக்க கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் சட்டம் விதித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் உள்ள செப்போரா (Sephora) ஒப்பனை தயாரிப்பு நிறுவனத்தில் இரவு 9.00 மணிக்கு மேலும் கூடுதல் சம்பளத்திற்கு பணியாளர்கள் வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடைகள் கூடுதல் நேரம் திறந்து வைக்க கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டமானது முட்டாள்தனமானது என்றும் பணியாளர்கள் குறைந்த அளவு வேலையை செய்துவிட்டு அதிக சம்பளம் வாங்குகின்றனர். மேலும் நாங்கள் இதற்காக அதிகமாக வரி செலுத்துகிறோம் என்று ஒரு வாசகர் டுவிட் செய்துள்ளார்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து தொழிற்சங்கங்களின் தலைவர் எரிக் செர் கூறுகையில், பிரான்சில் கடைகளானது அதிகாலை 4.00 மணிக்கு திறந்து பின்பு இரவு 11.00 மணிக்கு மூடுவதையே ஒரு சட்டமாக கொண்டுள்ளது.

ஆனால் இந்த நேரத்தினையும் மீறி தொழிலாளர்கள் வேலை செய்வது சட்டத்தை மீறுவதாகும். மேலும் பணியாளர்களையும் நாம் மதிக்கவேண்டும்.
ஏராளமான நாடுகளில் குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து

சட்டங்கள் உள்ளன. நாமும் அந்த சட்டத்தினை பின்பற்ற வேண்டும்.
மேலும் சில தொழிலாளர்கள் அதிக நேர உழைப்பினை விரும்புகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதற்கான நேரத்தினை நீட்டித்தால் நாட்டில் மற்றவைகளுக்கும் விதிவிலக்குகள் செய்யவேண்டும்.
எனவே இது சட்டத்தினை மீறுவதாகும், ஆகவே பிரான்ஸ் நாட்டின் சட்டத்தினை பின்பற்றுவது நம் கடமையாகும்.

நியூயார்க் போன்ற நாடுகளில் கடைகள் நீண்ட நேரம் திறந்திருக்கின்றன என்றும் ஆனால் நாம் வாழ்வது பிரான்ஸ் நாட்டிலேயே தவிர நியூயார்க்கில் அல்ல எனவும் கூறியுள்ளார்.

புதன், 2 அக்டோபர், 2013

இளம் பெண் மரணம் கணவர் படுகாயம்


   
 
யாழ். தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இராணுவ வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இளம் குடும்பப் பெண் பஸ் சில்லில் நசியுண்டு உயிரிழந்தார். கணவன் படுகாய மடைந்தார். இராணுவ வாகனம் மோட்டார் சைக்கிளின் பின்புறம் மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். யாழ். தட்டாதெருச் சந்தியில் நேற்றிரவு 10.15 மணியளவில் இந்த விபத்து

இடம்பெற்றது. இராச வீதி, கோப்பாயைச் சேர்ந்த திருமதி சதீஸ்குமார் கீர்த்தனா (வயது 20) என்ற இளம் குடும்பப் பெண்ணே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார். இவரது கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவத்தினரை ஏற்றிக்கொண்டு கே.கே.எஸ். வீதி வழியாக பயணித்த இராணுவ பஸ், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை தட்டாதெருச் சந்தியில் வைத்து மோதித்தள்ளியது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற பெண் வீதியில்

விழுந்தார். அவர் மீது பஸ் சில்லு ஏறியதில் அதில் நசியுண்டு அவர் உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் விபத்துக்குள்ளான பஸ்ஸையும் அவ்விடத்திலிருந்து எடுத்துச்செல்ல அனுமதித்தனர் என்று கூறப்பட்டது. சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியது


கனடாவில் மக்கள்தொகை 35 மில்லியனை தாண்டியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
கனடாவின் புள்ளிவிபரவியல் மக்கள்தொகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கனடாவில் மொத்த மக்கள்தொகை 35,158,300 என்று கணக்கிடப் பட்டுள்ளதாகவும், இது கடந்தாண்டை விட 404, 000 அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 1.2 சதவிகித அதிகரிப்பு, கடந்த 30 வருடங்களாக ஒரே மாதிரியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு தேசிய அளவில் அல்பேர்ட்டாவில் 3.4 சதவிகித அதிகரிப்பும், Nunavut 2.5 சதவிகிதமும், Saskatchewan 1.9 சதவிகிதமும் அதிகரித்து காணப்பட்டுள்ளது.

மேலும் அல்பெர்ட்டாவில் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுவதற்கு சர்வதேச குடிவரவும், மற்ற மாகாணங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்களுகமே காரணம் என்றும் புள்ளிவிபர ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நோவஸ்கோசியாவில் அரை சதவிகிதம் குறைந்து காணப்படுகிறது என்றும், அட்லாண்டிக் மாகாணங்களில் வளர்ச்சி குறைந்தும் காணப்படுகிறது.

இதற்கு குடியேறியவர்களின் வெளியேற்றமும், குறைந்த அளவு பிறப்புமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

ரூ. 2.50 கோடிக்கு விற்பனையான இந்தியரின் ஓவியம்


அமெரிக்காவில் இந்தியர் வரைந்த ஓவியம், அமெரிக்காவில் 2.54 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது.

கடந்த 18ம் திகதி மார்ட்டின் அண்டு கான்டெம்பொரரி சவுத் ஆசியன் ஆர்ட் நிறுவனம், நியூயார்க்கில் ஏற்பாடு செய்த கண்காட்சியில் நடைபெற்ற

ஏலத்தில், இந்திய ஓவியரான பூபென் காகர் வரைந்த 'அமெரிக்க கணக்கெடுப்பு அதிகாரி' என்ற ஓவியம் 4 லட்சம் டொலருக்கு விற்பனையானது.
ஆறு பேர், இந்த ஓவியத்தை வாங்க போட்டியிட்டதில் ஏறக்குறைய இரு மடங்கு விலைக்கு விற்பனையானது.

இந்த ஏலத்தில் இடம் பெற்ற மற்றொரு இந்தியரான பிரான்சிஸ் நியூட்டன் ஷுஜா வரைந்த ஓவியம், 1.30 கோடிக்கு விற்பனையானது.
இந்த கண்காட்சி மற்றும் ஏல விற்பனையில் அமைப்பாளர்களுக்கு 20 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
 

2 வயது சிறுவன் மாடியிலிருந்து தூக்கி ஏறியப்பட்டு கொலை


சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மாகாணம் குவாங்ஸி ஷுயாங்.
இங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 6–வது மாடியில் இருந்து 2 வயது சிறுவன் ஒருவன் வெளியே தூக்கி வீசப்பட்டான்.

இதனால் ரோட்டில் விழுந்த சிறுவனி்ன் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி மரணமடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸர் அங்கு விரைந்து வந்து சிறுவனை வீசி கொலை செய்த நபரை கைது செய்தனர். கொலையாளின் பெயர் லூ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறுவனின் தாயாருக்கும், லூவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்து இருந்தனர்.
இந்த நிலையில் சிறுவனின் தாயாரை நேரில் பார்த்த லூ அவரிடம் பேசும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த லூ அருகில் நின்ற சிறுவனை தூக்கி வெளியே வீசி கொலை செய்தான்.
 

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வேலை நிச்சயம்! கொமடி செய்தால்

 
நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை என, சமீபத்தில் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை கிடைப்பதற்கு உள்ள தகுதிகள் குறித்த ஆய்வு ஒன்றை, அமெரிக்காவின், மனித வள மேம்பாட்டு நிறுவனம் நடத்தியது.
இதற்காக, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மேலாளர்கள் மற்றும் மனித வள அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஒரே விதமான கல்வித் தகுதி படைத்த இருவரில், சமுதாயம் மீது அக்கறை உள்ளவர்களுக்கும், நன்றாக உடை அணிந்தவர்களுக்கும் வேலை கிடைப்பதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

பொதுவாக உள்ள அம்சங்களில் இருந்து சற்று மாறுபட்டு சிந்திப்பவர்களையே, நிறுவன மேலாளர்கள் தேர்வு செய்கின்றனர். உடல் ரீதியாக, நல்ல தகுதி படைத்தவர்கள், தற்போதைய நடைமுறை சூழலை

நன்கு அறிந்தவர்கள், சமூக ஊடகங்களில் பங்கேற்பவர்கள், விளையாட்டுத் துறையில் ஆர்வம் போன்ற தகுதியை பெற்றுள்ளவர்களுக்கே வேலை கொடுப்பதில், முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலை கொடுப்பவர்கள், தொழில் ரீதியாக மட்டும் திறமை படைத்தவர்களை தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எல்லா விதத்திலும் தகுதி படைத்தவர்களைத் தான் தேர்ந்தெடுக்கின்றனர். நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

பதவி உயர்வு குறித்து கேட்பவர்களுக்கே, அது தொடர்பான முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில், சில வகையினருக்கு, பதவி உயர்வுகள் மறுக்கப்படுகின்றன. அதாவது, "இது என்னுடைய வேலை இல்லை' என, மறுப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

பணிக்கு தாமதமாக வருவது, மற்றவர்களது வேலையை பார்த்துவிட்டு, அதில் இருந்து ஆதாயம் அடைய முயலுவது, வேலை நேரம் முடிவதற்கு முன்னதாகவே வீட்டுக்கு சென்றுவிடுவது போன்ற காரணங்களாலும், பதவி உயர்வு கிடைப்பது தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

ஓயாமல் வம்பு பேசுபவர்கள், மற்றவர்கள் குறித்து புகார் அளிப்பவர்கள், அலுவலக பணத்தை செலவு செய்வதில் அதிக உரிமை எடுத்துக் கொள்பவர்கள், பணிக்கு ஏற்றபடி உடை அணியாதவர்கள் ஆகியோருக்கும் பதவி உயர்வுகள் என்பது வெறும் கானல் நீராகவே உள்ளது.

நீங்கள் வேலைக்கு செல்ல தயார் என்றால், உங்களது தனிப்பட்ட திறமைகள் தான் அதன் திறவுகோல் என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் தலைவர், ரோஸ் மேரி ஹப்னர்.

சனி, 14 செப்டம்பர், 2013

பல்கலைக்கழக மாணவர் விடுதி மீது தாக்குதல்


களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியின் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத சிலர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கன்னங்கர விடுதியினுள் நுழைந்த கும்பலொன்று மேற்படி தாக்குதலை நடத்தியுள்ளது.
இதன்போது விடுதியின் ஜன்னல்கள்,கதவுகள், மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள்,  கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.
இத் தாக்குதலால் எவரும் காயங்களுக்குள்ளாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

திங்கள், 9 செப்டம்பர், 2013

விற்பனையில் களைகட்டிய பிள்ளையார் சிலைகள்


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பிள்ளையார் சிலைகள், தோரணங்கள் மற்றும் பூஜை சாமான்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
முழுமுதல் கடவுள் விநாயகப்பெருமானின்
சதுர்த்தி விழாஇன்று கொண்டாடப்படுகிறது.
                                                                                                                               
   இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று  அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு தரிசன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் வீடுகளில் சிறிய களிமண் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட்டு, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். சென்னையில் கொசப்பேட்டை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்

களிமண் விநாயகர் பிள்ளையார் சிலைகள் ஏராளமாக செய்யப்பட்டன.
இந்த சிலைகள் கோயம்பேடு மார்க்கெட், பூக்கடை, பாரிமுனை, மயிலை, போன்ற இடங்களில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
கடந்த ஆண்டில் இந்த பிள்ளையார் சிலைகள் அதன் உயரத்துக்கு ஏற்ப ரூ.30 முதல் ரூ.200 வரை விற்கப்பட்டன.

இந்த ஆண்டு இவை ரூ.75ல் தொடங்கி ரூ.400 வரை விற்கப்படுகிறது. அதே போல, வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகள் 5 அடி முதல் 18 அடி வரையான உயரங்களில் விற்கப்படுகின்றன.

இவை ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.40 ஆயிரம் வரையான விலையில் விற்கப்படுகின்றன. நகைக் கடைகளில் நவரத்தின விநாயகர் சிலைகள் லட்சக்கணக்கான ரூபாயில் விற்கப்படுகின்றன.
பிள்ளையாருக்கு பயன்படுத்தும் குடைகள் சிலைகளின் உயரத்துக்கு ஏற்ற வகையில் விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டில் ரூ.10க்கு கிடைத்தது. இந்த ஆண்டு ரூ.15ல் தொடங்கி ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இது தவிர கரும்பு ஒரு கட்டு (15 கழிகள்) ரூ.300 க்கு விற்கப்படுகிறது.
மாவிலை மற்றும் தோரணம் ஒரு ஜோடி அடங்கியது ரூ.30க்கும், பொரி, அவல், கடலை, சர்க்கரை கலந்து ஒரு லிட்டர் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் முதல் முறையாக ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, சாத்துக்குடி, விளாம்பழம், சோளம், கம்பு, இலந்தை பழம் ஆகியவை அடங்கிய ஒரு பேக்கிங் ரூ.100க்கு விற்கப்படுகிறது
 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

வாகன விபத்து !கிளிநொச்சியில் 4 பேர் படுகாயம்


 
கிளிநொச்சி பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் வானும் உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து இன்று காலை 10 மணிக்கு பூங்காவனம் சந்தியில் இடம்பெற்றுள்ளது

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்,{புகைப்படங்கள்}



 

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

மனைவிக்கும் மகனுக்கும் எமனான தந்தை


 வன் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது மோட்டார் சைக்கிள் பாதையை விட்டு ஆற்றில் பாய்ந்ததால் இரண்டரை வயது ஆண் குழந்தையும் மனைவியும் உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு 7.30 அளவில் அரகங்வில பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய கணவர் அதிகமான போதையில் இருந்துள்ளார். கட்டுப்படுத்த முடியாத நிலையில் பாதையின் அருகிலுள்ள ஆற்றில் பாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த அவரது மனைவியும் இரண்டரை வயது ஆண் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களது சடலங்கள் அரகங்வில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கோக்கோ கோலா' 127 ஆண்டுகால தயாரிப்பு ரகசியத்தை பெட்டகத்தில் வைத்து


18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.
இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல் விடுத்தது நினைவிருக்கலாம்.
1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை சந்தித்தது.
மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு செய்யப்பட்டது.
கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான்.
ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின் பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அந்த பாதுகாப்பு பெட்டகத்தை தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் கண்டு களைப்பு நீங்கி, களிப்படைந்து வருகின்றனர்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

இதுவரை இலங்கையர்கள் 720 0பேர் நாடுகடத்தல்

 

சட்டவிரோத இலங்கைப் பணியாளர்கள் 7200 பேர் இதுவரையில் சவுதி அரேபியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் பணியாளர்களை திருப்பி அனுப்புவதற்கான பொது மன்னிப்புக் காலத்தினை சவுதி அரசாங்கம் வழங்கியிருந்தது. எனவே இக் காலப்பகுதியினை பயன்படுத்தி இலங்கையைச் சேர்ந்த 7 ஆயிரத்து 200 சட்டவிரோத பணியாளர்கள் நாடு திரும்பியுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சவுதி அரேபியாவின் தொழில் உறவு அமைச்சருக்கும் சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்திக்குமான சந்திப்பொன்றும் நடைபெற்றிருந்தது.
அதன் போது சவுதி அரேபியாவில் வேலை பார்க்கும் இலங்கைப் பணியாளர்கள் அங்கு தொடர்ந்தும் இன்னல்களுக்கு உட்படுவதற்கான குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அவர்களின் தொழில் உரிமைகள் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு இலங்கை பணியாளர்களுக்கான தொழில் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தப்படுவதாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

இரு வாரங்களில்மரணமான பெண் உயிருடன் வந்த


அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார்.
அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி பொலிஸில் புகார் அளித்தார்.
புகார் அளிக்கப்பட்டு சில நாட்கள் கழிந்த நிலையில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வந்தது. அந்த பெண்ணின் உடலை அருகிலுள்ள வைத்தியசாலையின் பிணவறையில் வைத்திருந்த பொலிஸார் இதுபற்றி ஊடகங்களில் விளம்பரம் வெளியிட்டனர்.
விளம்பரத்தைப் பார்த்த கேர்ரி மின்னி அந்த பிணம் தனது மகள் ஷரோலின் ஜாக்சன்தான் என்று கூறி பிணத்தை பெற்றுக் கொண்டார்.
உரிய மரியாதைகளுடன் பிணமும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒருவாரத்திற்கு முன்னர் ஷரோலின் ஜாக்சன், திடீரென வீட்டு வாசலில் வந்து நின்றார். மகளின் கால்கள் தரையில் பதிந்திருக்கிறதா? என்று உற்றுப் பார்த்த கேர்ரி மின்னி தனது கையையும் கிள்ளிப் பார்த்துக் கொண்டார்.
வந்திருப்பது ஷரோலின் ஜாக்சன்தான் என்பதை உறுதி செய்து கொண்ட அவர், நாம் அழுது புலம்பி அடக்கம் செய்தது யாருடைய பிணத்தை? என்று சிந்திக்கத் தொடங்கினார். இவ்விவகாரம் மீண்டும் பொலிஸாரின் காதுகளுக்கு எட்டியது.
உயிருடன் வந்த பெண்ணின் கை ரேகையை ஷரோலினின் பழைய கை ரேகை பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்த பொலிஸார், இது ஷரோலின்தான் என்பதை உறுதி செய்தனர்.
புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து அது யாருடைய பிரேதம்? என்பதை கண்டறியும் முயற்சியில் தற்போது பிலடெல்பியா பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்

சனி, 24 ஆகஸ்ட், 2013

அச்சுவேலியில்முஸ்லிம் பெண்ணைப்போல் வேடமணிந்து கொள்ளையிட்ட இராணுவம் -


இராணுவ பொது சேவை படையணியை சேர்ந்த கப்டனான ஏ.எம்.யூ. சமரகோன் என்பவரே இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

பொலிஸார் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு பாதிவு செய்துள்ள நிலையில், இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக முதன் முறையாக இராணுவ நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சிவில் சமூகத்தில் குற்றங்களை செய்யும் இராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர்களை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் எனவும் இராணுவத தளபதி தயா ரத்நாயக்க , இராணுவத்தின் சட்ட ஆலோசனை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

அச்சுவேலியில் துவிச்சக்கர வண்டி கொள்ளையிட்ட படைவீரர் கைது

அண்மையில் அச்சுவேலி மக்கள் வங்கிக்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக் கரவண்டி ஒன்று காணாமல் போனது தொடர்பாக குறித்த வங்கியில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டதுடன், இராணுவ வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

வங்கிக்கு முன்னாள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இராணுவவீரர் துவிச்சக்கர வண்டி திருடியது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரித்ததில் செல்வநாயகபுரம் பகுதியில் 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக குறித்த வீரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்

று ஆடை அணிந்து கண்டியில் தேசிய சேமிப்பு வங்கியில் கொள்ளையிட முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் இராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஆப்பிளை விட சக்தி வாய்ந்த ஸ்ட்ராபெர்ரி!


தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ளது.
ஆனால் ஆப்பிளின் சக்தியையே ஸ்ட்ராபெர்ரி பழம் மிஞ்சும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் படைத்தது.
அத்துடன் எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும் பிலேவனாய்டு என்ற பொருள் இப்பழத்தில் உள்ளது.
மேலும் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளது.
செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.
இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது.
இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.
மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

வெடித்துச் சிதறியது ஜப்பானிய எரிமலை! -


5000 மீற்றர் உயரத்துக்கு சாம்பலைக் கக்கியது.
ஜப்பானின் ககோஷிமா நகர் அருகே உள்ள 1117 மீற்றர் உயரமுடைய சகுரஜிமா எரிமலை நேற்று வெடித்து சிதறியது. சுமார் 5,000 மீற்றர் தூரத்திற்கு மேலே சாம்பலை கக்கியது.எரிமலை சாம்பல் அந்த நகரின் பெரும்பாலான பகுதியில் பறந்ததால் ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அனைத்தும் விளக்குகளை ‌போட்டுதான் செல்ல முடிந்தன.

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

கப்பல் வெடிப்பிற்கு பாதுகாப்பு விதிமுறை மீறல் காரணம்: ரஷ்யா


மும்பையில் கடந்த புதன்கிழமையன்று அதிகாலை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்தியக்கப்பற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் தமிழக வீரர் வெங்கட்ராஜூ உள்பட 18 பேர் இறந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. இந்த கப்பலானது ரஷ்யாவில் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று இந்தியா வந்ததாகும்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரஷ்ய துணை பிரதம மந்திரி டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அந்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ரஷ்யாவில் 1997-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐ.என்.எஸ். சிந்து ரக்‌ஷக் என்ற இந்திய கடற்படை கப்பலானது வெடித்து சிதறியது என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த கப்பலில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துகொள்கிறேன்.
அந்த கப்பலானது சமீபத்தில்தான் ரஷ்யாவில் முழுமையாக பழுதுபார்க்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். 15,000 கடல் மைல்களுக்கு மேல் அந்த கப்பல் பயணம் செய்துள்ளதால், இந்த விபத்திற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்க முடியாது.
இதற்கான காரணம் குறித்து ஆராயப்படுகிற வேலையில், கப்பலில் உள்ள கருவிகள் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்ப கோளாறு காரணம் என்று இந்தியா இதுவரை கூறவில்லை. பாதுகாப்பு விதிமுறைகள் மீறலே இந்த நீர்மூழ்கி கப்பல் விபத்துக்கான காரணமாக இருக்க முடியும்.
இந்த கப்பலில் பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யப்படுகிற பகுதியில் வெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த பகுதியானது கப்பலில் உள்ள அனைத்து பாதுகாப்பு கருவிகளுடனும் இணைக்கப்பட்டுள்ள மிகவும் பாதுகாப்பான பகுதியாகும். 18 கடற்படை வீரர்கள் இறந்திருக்க அஞ்சப்படுகிற இந்த விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது

சனி, 17 ஆகஸ்ட், 2013

மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய??

 
 
ஆசன வாயிலில் மறைத்து இரத்தினக் கற்களை கடத்திய இலங்கையர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது- தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
ஆசன வாயிலில், 80 லட்ச ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு இரத்தினக் கற்களை கடத்தியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
பேருவளையைச் சேர்ந்த 56 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலப் பவளம், வைடூரியம உள்ளிட்ட பெறுமதி மிக்க இரத்தினக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆணுறைகளில் இரத்தினக் கற்களை நிரப்பி, ஆசன வாயிலில் வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது
இலங்கையிலிருந்து தங்கம் கடத்திய இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடிக்கரையைச் சேர்ந்த ஒருவரும் மற்றுமொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து மூன்றரை கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட தங்கம் திண்டுகல் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 21.5 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தை கடத்திய அறிவழகன் என்பவரின் சகோதரரான சுப்ரமணியம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகு மூலம் இந்த தங்கம் கடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

கடும் நிலநடுக்கம்! - ரயில், விமானப் ரத்து.


நியூசிலாந்து தலைநகர் வெலிங்டன் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் ஆரம்பக்கட்டத்தில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்தனர். வேலைக்குச் சென்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் வீதியில் நின்றுவிட்டனர்.நியூசிலாந்தின் தெற்குத் தீவின் வடக்கு முனைப் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் 6.0 என்ற அளவில் முதலில் நிலநடுக்கம் பதிவானது. இதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக கணிக்க முடியவில்லை என்று அந்நாட்டின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே துறை அனைத்து ரயில் பாதைகளையும் சோதனை இட்ட பிறகே ரயில் சேவை தொடங்கும் என்று தெரிவித்தது.

இள வயது திருமணங்கள் அதிகரிப்பு -


இலங்கையில் இள வயதில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதிய (யுனிசெப்) நிபுணர் குழு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இள வயது திருமணங்கள் நடைபெறுவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகள் குறித்த சிறந்த புரிந்துணர்வை எட்டும் வகையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் (யுனிசெப்) தரம் தழுவிய விசாரணையொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கென குழுவொன்றை நியமித்திருந்தது.
இலங்கையில் குறிப்பாக அபிவிருத்தி குன்றிய மாவட்டங்களில் இள வயது திருமணங்களும் சட்டபூர்வமான கற்பழிப்புச் சம்பவங்களும் அதிகரித்துக்காணப்பட வாய்ப்புக்கள் உள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வொன்றை அடிப்படையாகக் கொண்டே மேற்படி விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
இத்தகைய இள வயதுத்திருமண முறையானது சிறுமியர் தங்கள் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக்களை மட்டுப்படுத்தி வருவது மட்டுமின்றி, கர்ப்ப காலத்திலும் பிரசவ காலத்திலும் தாய் மற்றும் குழந்தைக்கு அபாயம் ஏற்படக்கூடிய நிலை, குழந்தைகள் மத்தியில் காணப்படும் போஷாக்கின்மை மற்றும் பிந்திய அறிவு வளர்ச்சி உள்ளிட்ட எதிரிடையான தேகாரோக்கிய விளைவுகளுடனும் அது அடிக்கடி தொடர்புடையதாக விளங்கி வருவது குறித்தும் கண்டறியப்பட்டுள்ள இத்தகைய விடயங்கள் யுனிசெப் நிறுவனத்தை கரிசனை செலுத்த வைத்துள்ளன.
இது குறித்து இலங்கையில் உள்ள யுனிசெப் நிறுவனப் பிரதிநிதி ரெஸா ஹொசெய்னி தெரிவிக்கையில், இள வயது திருமணம் செய்யும் சிறுமியரும் அதிகரித்த வகையிலான வன்முறை, அவதூறு மற்றும் சுரண்டல் ஆகியவற்றுக்கு உள்ளாகி வருவதாக குறிப்பிட்டார்.
இத்தகைய இள வயது திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள 71 பேர் குறித்த பகுப்பாய்வொன்றை அடிப்படையாக கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் மேற்கெள்ளப்பட்டுள்ள தரம் சார் விசாரணைகள் மூலம் இள வயது திருமணங்கள் அதிகரித்த நிலையில் நிகழ்ந்து வருவதாகவும்  பராயம் அடையாதவர் பாலியல் தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வி காணப்பட்டிருந்த 71 சிறுமியருள் 21 பேர் (30%) பதினெட்டு வயதை அடைவதற்கு முன்னரே கர்ப்பம் தரித்திருந்தமை தெரிய வந்துள்ளது. இது தேசிய சராசரியை விட 20 சதவீத உயர்வாகும்.
நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய பரிந்துரைகளில் இளம் பருவத்தினருக்கான பயன் தரும் இன விருத்தி சுகாதார சேவைகள் மற்றும் தகவல் வழங்கல் சேவைகள், இள வயது திருமணத்தின் விளைவு பற்றிய தெளிவூட்டல் பற்றிய இயக்க செயற்பாடுகள் பலவந்தமாக திருமணம் செய்தல் மற்றும் இளம் வயதில் கர்ப்பம் தரித்தல் சம்பந்தமான சட்டத்தை மீளாய்வு செய்தல் என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

விமானத்தை விட வேகமான வாகனம்: அமெரிக்காவில் புதிய ,,


போக்குவரத்து முறைகள் காலத்துக்கேற்ப மாற்றம் கண்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் எத்தகைய போக்குவரத்து முறைகள் எப்படி இருக்கும் என்பதற்கான அடையாளங்களும் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk), ஹைபர் லூப் (Hyperloop) என்ற பெயரில் புதிய போக்குவரத்து முறை குறித்த செயல்திட்டத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரயிலை போன்றே தோற்றம் கொண்ட இந்த வாகனம் ஒலியை விட வேகமாக பறக்கும் கன்கார்டு விமானத்தின் தொழில் நுட்பத்தை கொண்டதாக இருக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.
மின்காந்த அலைகளை கொண்டு இயங்கும் இந்த வாகனம் தரையை தொடாமல் காற்றின் மேல் வழுக்கிக் கொண்டும் செல்வதாக இருக்கும். அமெரிக்காவின் முக்கிய நகரங்களான சான் ஃபிரான்சிஸ்கோவுக்கும் லாஸ் ஏஞ்சலிசுக்கும் இடையிலான 600 கிலோ மீட்டர் தூரத்தை இந்த வாகனம் அரை மணி நேரத்தில் கடக்கும் என எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்.
இது விமான பயணத்தை விட இரு மடங்கு வேகமானதாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) கூறினார். மணிக்கு 800 மைல் வேகத்தில் செல்லும் இந்த வாகனம் செலவு குறைவானதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் இருக்கும் என்றும் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்தார்
 

புதன், 14 ஆகஸ்ட், 2013

விடுமுறையில் உச்சப் பாதுகாப்பு!!


தனது விடுமுறை வாசஸ்தலமான villa du Cap Nègre (Var) இற்கு விடுமுறைக்குச் சென்றுள்ள முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்சோலா சார்க்கோசிக்கு அதி உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உயர் பிரபலங்களின் பாதுகாப்புச் சேவையான (Service de protection des hautes personnalités) SPHP யின் சிறப்புப் படையினர் பத்துப் பேரும் 15 குடியரசுப் பாதகாப்புப் படை வீரர்களும் (CRS) ஓகஸ்ட் மாதம் முதல் நிக்சோலா சார்க்கோசிக்குச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதை உறுதி செய்த நிக்சோலா சார்க்கோசி முன்னைய ஜனாதிபதிகள் போல் தனக்கும் இந்தச் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இச் சட்டமானது 1985ம் ஆண்டு பிரதமரின் ஒரு சுற்றறிக்கை மூலம் உள்துறை அமைச்சினால் நிறைவேற்றப்பட்டது. பிரபலமானவர்கள் வெளிவரும் போது அவர்களிற்கு ஏற்படக்கூடிய உயிராபத்தினைக் கருத்திற் கொண்டே இச்சட்டம் நடைமுறைப்படுத்ப்பட்டது

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு


வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெலிவேரிய தொழிற்சாலைக்கு அருகாமையில் உள்ள நீர் மற்றும் மண்ணில் நச்சுப் பதார்த்தம் உள்ளடங்கியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டள்ளது.

பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தினால் குறித்த பிரதேச நீர் மற்றும் மண் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் மண் வகைகளில் ஒரு வகை நச்சுப் பதார்த்தம் காணப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையை அண்டிய 25 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும், தொழிற்சாலைக்கு வெளியில் 35 சதுர கிலோ மீற்றர் பரப்பிலும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. மண் மற்றும் நீரில் அமிலத்தின் செறிவு அதிகாமாகக் காணப்படுவதுடன் ஐட்ரஜன் மற்றும் பி.எச் பெறுமானங்கள் குறைவாககக் காணப்படுவதாக பூவியியல் மற்றும் கனிமவள ஆய்வு மையத்தின் தலைவர் செனரத் ஜயசுந்தர தெரிவித்தள்ளார்

இதேவேளை, குறித்த பிரதேச நீர் தொடர்பில் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளதாக நீர் வளச் சபை அறிவித்துள்ளது.

நிதானமின்றி வீதியில் நின்ற கனடா மேயர்



கனடாவின் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.

இன்னுமொரு வீடியோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும் குடிபோதையை குறைக்க) பாதசாரிகளுடன் படமெடுப்பது படமாக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)


வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

34 பேர் கைது வெளிநாட்டுக்கு செல்லவிருந்த


வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் இருவரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியா, நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

புருவ பராமரிப்பில் செய்யக் கூடாதவை


பொதுவாக பல ஆண்கள் முகத்தை சீர் செய்யும் போது புருவத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.
முக அலங்காரம் மற்றும் முக பராமரிப்பு என்று வந்தால், ஆண்கள் புருவத்தை கணக்கிலேயே எடுத்துக் கொள்வதில்லை.
அதற்கு காரணம் நம்முடைய சமுதாயத்தில் பெரும்பாலான ஆண்கள் தங்களின் நேரத்தை சலூனில் செலவிட விரும்புவதில்லை. சொல்லப்போனால், புருவ பராமரிப்பு என்பதை மெட்ரோ செக்ஷுவல் வகை ஆடவர் மட்டுமே விரும்புவார்கள்.
அப்படிப்பட்ட ஆண்கள் ஆடை அலங்காரம், மேக்-கப் மற்றும் முக பராமரிப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள். முக வசீகரத்தை கொண்டு பிறரை ஈர்க்க வேண்டுமென்றால், அதற்கு புருவங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கண்டிப்பாக புருவ பராமரிப்புக்கான காரணங்கள் ஆண்களிடமும், பெண்களிடமும் வேறுபடுகிறது. ஆண்களை பொறுத்த வரை புருவ பராமரிப்பு என்பது இயற்கை அழகை தக்க வைக்கவும், சீராக இல்லாத ரோமத்தை நீக்குவதற்கு மட்டுமே.
இது சற்று குழப்பமாக இருந்தாலும், கீழ்கூறிய செய்யக்கூடியவையையும் செய்யக்கூடாதவையையும் படித்தால், புருவ பராமரிப்பைப் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
* ரேசரை பயன்படுத்தி புருவத்தை பராமரிக்க கண்டிப்பாக பரிந்துரைக்க மாட்டோம். அதனை பயன்படுத்தினால், அதன் விளைவு விபரீதமாக கொண்டு போய் முடியும்.
* ரேசரை வைத்து புருவத்தை ட்ரிம் செய்யும் போது, அதிகமாக எடுத்து விட வாய்ப்பு உள்ளது. அதனால் தாடியை போல புருவம் அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் அபாயம் உள்ளது.
இது போக சீரான திசையில் அதன் வளர்ச்சி இருக்காது. இதனால் அது அழகை பாதிப்பதோடு மட்டுமல்லாது, வெட்டுக்காயங்களையும் ஏற்படுத்தும்.
* பொறுமை இல்லாத சமயம் புருவத்தை பராமரிக்கும் போது, அதிக அளவில் புருவத்தை எடுத்துவிடும் வாய்ப்பு உள்ளது. எனவே நேரத்தை எடுத்துக் கொண்டு, பொறுமையாக ஒவ்வொரு முடியாக உருவ வேண்டும்.
* நடுவில் எப்படி இருக்கிறது என்று பார்க்காமல் அவசரம் அவசரமாக முடியை நீக்கிக் கொண்டே போனாலும், அளவுக்கு அதிகமான முடியை நீக்க வாய்ப்பு உள்ளது. ஒரு முறை போனால் போனது தானே. அதனால் பொறுமையுடன் செயல்பட்டு, சங்கடத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
* நீளமான முடிகளை புடுங்க வேண்டும் என்ற அவசியமில்லை. காடுகளை போன்ற தோற்றத்தை தடுக்க, அவைகளை ட்ரிம் செய்தால் மட்டுமே போதுமானது. அதிலும் புருவத்தை மேல்நோக்கி சீவினால், அது நீளமான முடியை காட்டிவிடும்.
* மேலும் சிறிய சீப்பை பயன்படுத்த வேண்டும் அல்லது புருவங்களை மேல்நோக்கி தேய்த்தால், அவைகள் ஒரே திசையை நோக்கி இருக்கும். புருவத்தை ட்ரிம் செய்ய சிறிய கத்தரிகோலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் கண்டிப்பாக ட்ரிம் செய்ய வேண்டும்.
* புருவ ரோமங்களை புடுங்குவதற்கு முன் அல்லது வேக்சிங் செய்வதற்கு முன், அந்த இடத்தை சுத்தமாகவும் அழுக்கு இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மேலும் அவ்விடத்தில் எண்ணெயையும் தேய்த்துக் கொள்ள வேண்டும். வேண்டுமெனில் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சுத்தமாகவும், துவாரங்கள் திறந்தும் ரோமங்கள் மென்மையாகவும் இருக்கும். அதனால் ரோமங்களை புடுங்கும் போது வலி இல்லாமல் இருக்கும்.
* ரோமங்களை புடுங்கவும், வேக்சிங் செய்யவும் நல்ல தரமுள்ள கருவிகளில் முதலீடு செய்ய வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தாமல், மலிவான பொருட்களை பயன்படுத்தினால் விளைவு மோசமாக இருக்கும்.
* மேலும் ரோமங்கள் சீராக வளராமல் போகலாம். அதனால் நல்ல படியாக புருவங்களை பராமரிக்க, நல்ல பொருட்களில் முதலீடு செய்ய வேண்டும்.
* புருவங்களுக்கு மத்தியில் வளரும் முடிகள் ஒரு போதும் நாகரீகமாக இருந்ததில்லை, இருக்க போவதுமில்லை. மேலும் அது ஈர்க்கும் வண்ணம் இருப்பதில்லை.
அதனால் அதை உடனே நீக்குங்கள். அருகில் இருக்கும் சலூனுக்கு சென்று முதலில் அதை த்ரெட்டிங் மூலமாக நீக்குங்கள். இப்படி வளரும் முடியை வைத்திருப்பதை விட, அதனை நீக்க த்ரெட்டிங் செய்வது ஒன்றும் பெரிய அவமானம் கிடையாது.
* மூக்கின் மேல் முடிகள் உள்ள ஆண்களை எந்த பெண்ணும் வலை வீசி தேடுவது கிடையாது. இதனை நீங்களே நீக்க வேண்டும் என்று எண்ணினால், வேக்சிங் அல்லது புடுங்குதல் மூலம் செய்யுங்கள்.
* மாறாக ஷேவ் செய்யாதீர்கள். பெண்கள் மட்டும் தான் புருவங்களை பராமரிக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அதனை உடைத்தெறியுங்கள். மேற்கூறிய செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை மனதில் வைத்துக் கொண்டு, புருவ பராமரிப்பில் ஈடுபடுங்கள்
 

செவ்வாய், 30 ஜூலை, 2013

சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை இடம்பெறவுள்ளது


சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கையை இன்று மாலை 3 மணிக்கு முன்னெடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
நாட்டி தெரிவு செய்யப்பட்ட 14 கரையோர பிரதேசங்களில் இந்த ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக மத்திய நிலையத்தின் ஊடகப்பிரிவின் பிரதிப் பணிப்பாளர் லால் குமார தெரிவித்தார்.
சுனாமி பேரலை உருவாகுமாயின் அதன் போது செயற்படும் விதம் குறித்து இதன்போது விளக்கமளிக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாகவும் சுனாமி ஒத்திகை நடவடிக்கைகள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும், தேவையற்ற பதற்ற நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் முகமாகவே இந்த செய்திகுறிப்பு வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

வர்த்தகர் மீது அசிட் வீச்சு கிளிநொச்சியில் தாக்குதல்



கிளிநொச்சியில் பிரபல வர்த்தகர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிருஷ்ணசாமி திவாகரன் என்ற வர்த்தகரே அசிட் வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வைத்து  குறித்த வர்த்தகர் மீது மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத நபர்களே அசிட் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உடலில் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான வர்த்தகர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

றோயல் கல்லூரி ஆசிரியை பாடசாலை கூரை மீது ஏறி


 
கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கறுவாத் தோட்டப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 17ஆம் திகதி தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்யாணி திசாநாயக்க என்ற ஆசிரியையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த இடமாற்றமானது தன்னை பழிவாங்கும் செயல் என குறித்த ஆசிரியர் குறிப்பிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் அவருக்கான இடமாற்றம் உரிய நடைமுறைகளுக்கு அமையவே வழங்கப்பட்டதாக கல்லூரி அதிபர் உபாலி குணசேகர தெரிவித்தார்.
பாடசாலைகளில் தேவைக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்கள் இருப்பார்களாயின் அவர்களின் விபரங்களை கல்வியமைப்பு கோருவது வழமையான விடயமாகும்.
இதன்படி, வழங்கப்பட்ட பெயர் பட்டியலில் குறித்த ஆசிரியையின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக அதிபர் குறிப்பிட்டார்.
எனினும், தமது இடமாற்றத்தை அவர் விரும்பாத காரணத்தினால் அதனை ரத்து செய்யக் கோரி இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பிள்ளை யார் பக்திப்பாடல்கள்


வேண்டுவோர்க்கு வேண்டும்வரம் அருளும் வினை தீர்க்கும்அருள் மிகுபிள்ளை யாரின்  மிகவும் பக்த்திப் பரவசம் ஊட்டும் சிறந்த பாடல்கள்