siruppiddy

18

siruppiddy

unkal

unkal
நவக்கிரிச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவக்கிரிச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 அக்டோபர், 2020

யாழ் நவற்கிரியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் கார் மோதி ஒருவர் சாவு

யாழ் – அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக .27-10-20.இன்று மாலை பயணித்துக கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து நவற்கிரி விளாத்தியடிப்பாகுதில் மின்னல் வேகத்தில் சென்று மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்தில் 
பலியாகியுள்ளார்
வாகனத்தின் சாரதியான வசாவிளான் பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் லஷ்ச தீபன் (வயது 34) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பயணம் செய்த சிவன் சரல தீபன்(வயது 23) பலத்த காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 9 ஏப்ரல், 2019

நவற்கிரி நிலாவரைப் பகுதியில் கைகுண்டு வெடித்து சிறுவன் காயம்

யாழ் நவற்கிரி புத்தூர் மேற்கு நிலாவரைப் பகுதியில் சிறுவனொருவன்
 கைக்குண்டொன்றை எடுத்து விளையாடியதில் அது வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்தச் சம்பவம் இன்று 09,04,2019,செவ்வாய்க்கிழமை(09)பிற்பகல் 
நடைபெற்றுள்ளது
இந்தச் சிறுவன் தோட்டத்திற்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வெற்றுக் காணியொன்றிலிருந்து கைக்குண்டொன்றை எடுத்து அதனை ஏதோ விளையாட்டுப் பொருள் என நினைத்து வீதியில் எறிந்து 
விளையாடியுள்ளான்.
இதன்போது குறித்த கைக்குண்டு வெடித்தது. சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுப் பின் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தையடுத்து அப்பகுதியில் அச்சுவேலிப் பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தீவிர விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 19 நவம்பர், 2014

நவக்கிரி புத்தூர் கிணற்றிலிருந்து பெண்ணொருவர் சடலம் மீட்பு

யாழ். நவக்கிரிபுத்தூர்ரயை சேர்ந்த பெண்ணொருவர் 17.11.14. ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியிலுள்ள வயல் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே இடத்தை சேர்ந்த சேர்ந்த சின்னையா மகாதேவி (வயது 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார். கணவனை இழந்த மேற்படி பெண் சகோதரர் ஒருவருடன் வசித்து வந்திருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார். இந்நிலையில், வயல் கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் வழங்கியதையடுத்து சடலம் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சனி, 5 ஏப்ரல், 2014

அமரர் திரு நடராசா அற்புதராசா


அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

        தோற்றம் : 17 ஒக்ரோபர் 1957 — மறைவு : 8 மார்ச் 2014
  அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு நடராசா அற்புதராசாஅவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ் எதிர்வரும்.0.....திங்கட்கிழமை


விழிநீர் அஞ்சலி அமரர் திரு நடராசா அற்புதராசா.

நன்றி நவிவிலல்

 மலர்வு.17 ஒக்ரோபர் 1957.,,உதிர்வு.08 மார்ச் 2014.
                                        
    அமரர் திரு நடராசா அற்புதராசா.
 தோற்றமும்.மறைவும் இயற்கை வகுத்த நியதி என்றாலும்
இன்பமும்துன்பமும் வாவின்மேடயில் அரங்கேறும்நாடகமானாலும்பார்த்த்துப்பழகியகண்களும்பேசிப்பழகியவாயும்
கேட்டு மகிழ்ந்தகாதுகளும்நினவுகள்பதித்தநென்சமும்அய்யகோ
அன்னாரின் பிரிவுத்துயரால் தவிக்கிறதே குடும்பம்!
 காலமே விரைந்துவந்து இவர்களுக்குஅறுதல்தராயோ!!
ஓம்சாந்தி!சாந்தி!!சாந்தி!!!அன்னாரின்பிரிவால் துயரும்!!அன்பு மனைவி பிள்ளைகள்அன்பு உறவுகள்!!!
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்