siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

தந்தை, மகன் மினுவாங்கொடவில் அடித்துக் கொலை!

மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் இரு சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இன்று (26.08.2017) காலை மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கைகலப்பின்போது இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக தற்பொழுது மினுவாங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 26 ஆகஸ்ட், 2017

ஓட்டமாவடியில் கடைகளை உடைத்து தொலைபேசிகள் திருட்டு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி. 
மேமன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர், வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையங்களை உடைத்து திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிஇருந்து நான்கு தொலைபேசிகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் உதிரிபாகங்கள் சிலவும்
 கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி.மேமன் தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபரிடம் இருந்து பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்திய போது பதில் நீதவான் ஹபீப் றிபான் சந்தேக நபரை பதிநான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு
 உத்தரவிட்டார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




எரிபொருள் நிலையம் தீயினால் எரிந்து நாசம்!

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கம்பஹா - கலகெடிஹேன பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் ஒன்றில் ஏற்பட்ட தீ, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியுள்ளது.
இதன்காரணமாக, கண்டி - கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சம்பவத்தை அடுத்து, கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்த கம்பஹா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

சர்வோதய நகர் கிராமத்தில் யானையின் அட்டகாசம் பயிர்கள் சேதம்

மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கிராமமான சர்வோதய நகர் கிராமத்தில் யானை வளவுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் விரட்டியுள்ளது. நேற்று இரவு சுமார் ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் 
தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சனை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 
யானை வேலி அடைப்பதற்கான கட்டைகள் பல இடங்களில் போடப்பட்டு அவைகளும் கவனிப்பார் அற்று இறந்து போகும் நிலையில் காணப்படுகின்றது. இந்த வயல் கிராமங்களில் அண்மைக்காலமாக யானைகள் மூலம் பல உயிர் சேதங்களும் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 17 ஆகஸ்ட், 2017

கார் விபத்தில் தந்தையும் மகனும் மரணம்!

கேகாலை - பிடகல்தெனிய, குருகொடை ஓயாவில் பாய்ந்து கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த தாய், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுகண்ணாவை பிரதேசத்தினை சேர்ந்த குடும்பத்திற்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், 57 வயதுடைய தந்தையும், 20 வயதுடைய மகனும் இதில் பலியாகியுள்ளனர்.
கொழும்பிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காணொளியை பார்வையிடுவதற்கு..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல்,திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.

யாழ்அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட  திருமதிகதிரவேல் சந்திராதேவி -15.08.17.அன்று சிவபதம் அடைந்தார்இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல் 
குடும்பத்தினர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல்,திரு நாகலிங்கம் ஐயாத்துரை -16.08.17.

பிறப்பு : 21 ஓகஸ்ட் 1923 — இறப்பு : 16 ஓகஸ்ட் 2017
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், நவற்கிரி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ஐயாத்துரை அவர்கள். (இவர்  ஓய்வு பெற்ற நவற்கிரி அ .மி. த. க. பாடசாலை ஆசிரியர் ஆவார்)16-08-2017 புதன்கிழமை அன்று 
சிவபதம் அடைந்தார்.
அன்னார், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவற்கிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, சிவக்கொழுந்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(அவுஸ்திரேலியா), இராகுலன்(கனடா), காலஞ்சென்ற இரஞ்சினி(கௌரி) ஆகியோரின் அன்பு தந்தையும்,
உமாதேவி(அவுஸ்திரேலியா), மாலினி(கனடா) ஆகியோரின் 
அன்பு மாமனாரும்,
பவித்திரா, பிரணவன், தேவனி(அவுஸ்திரேலியா), வியாசன், தனுஜன்(கனடா) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
வீட்டு முகவரி: 
5 Morano Ct,
Croydon North VIC 3136,
Australia.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia 
நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/08/2017, 02:00 பி.ப
முகவரி: Bunurong Memorial Park, 790 Frankston - Dandenong Rd, Dandenong South VIC 3175, Australia 
தொடர்புகளுக்கு
இராகுலன் — கனடா
தொலைபேசி: +14162609418
செல்லிடப்பேசி: +14167213982
கிருபா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61397238309
செல்லிடப்பேசி: +61411389415
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் முச்சக்கர வண்டி குடை சாய்ந்து இருவர் படுகாயம்

ஹற்றன் - மஸ்கெலியா பிரதான வீதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் நோக்கி சென்ற முச்சக்கரவண்டியே, நோர்வூட் - ரொக்குட் பகுதியில் குடைசாய்ந்து 
விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவருமே காயமடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வுட் பொலிஸார் கூறியுள்ளனர்.
அதிக வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் செல்வன் சுதர்சன் அபிஷேக்-14-08-17.

மண்ணில் : 27 மார்ச் 2017 — விண்ணில் : 14 ஓகஸ்ட் 2017
சுவிஸ் (Thurgau) துர்காவுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் சுதர்சன் அபிஷேக் அவர்கள் 14-08-2017 திங்கட்கிழமை அன்று 
இறைவனடி எய்தினார். அன்னார் அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன் உமாதர்சினி-  தம்பதிகளின் அன்பு மகனும் 
 அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான காத்திகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்ற இராசரத்தினம், வசந்தலாராணி(பவா) தம்பதிகள், பரமசாமி, சிவபாக்கியம்(வரணி இயற்றாலை) தம்பதிகளின் 
அன்புப் பேரனும்,
அச்சுவேலி தெற்கு விக்கினேஸ்வரா வீதியைச் சேர்ந்த இராசரத்தினம் சுதர்சன்(சுதன்- சுவிஸ்) உமாதர்சினி(உமா- சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
அபிநாஷ் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41716200617
சுதன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41795517714
ரவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41793827796
அக்‌ஷறன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41792311904
வைஷ்ணவி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765693462
தயா — இலங்கை
செல்லிடப்பேசி: +94772200678
பரமசாமி — இலங்கை
செல்லிடப்பேசி: +94770416168
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 14 ஆகஸ்ட், 2017

விரைவில் புதிய மின்சார ரயில் இலங்கையில் சேவை!

இலங்கையில் மின்சார புகையிரதசேவையினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை, பொல்காவலை, கோட்டை, நீர்கொழும்பு, களனி வெளி பகுதிகளில் 158 கிலோ மீற்றர்களை கொண்ட புகையிரத பாதைகளில் இந்த மின்சார புகையிரத சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை
 சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 12 ஆகஸ்ட், 2017

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தில் தீக்குள் வீழ்ந்த பெண்!

யாழ் நல்லூர் முருகன் ஆலயத்தின் முன்புறத்தில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஆலயத்தின் முன்பாக கற்பூரம் கொளுத்தப்படும் பகுதியில் கற்பூரம் கொளுத்த முற்பட்ட போது அவர் தீக்குள் தவறி விழுந்தார் என்று 
தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்றும் கூறப்படுகின்றது.
காயமடைந்த பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கையிலும், முகத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>







லிந்துலையில் பச்சிளம் சிசுவை புதைத்து வைத்த இரு பெண்கள் கைது

தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை ஏழாம் இலக்க கொலனியில் பிறந்த சிசுவை யாருக்கும் தெரியாமல் புதைத்த இரு பெண்களை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
லிந்துலை பகுதியில் நேற்று முன்தினம் பிறந்த பச்சிளம் சிசு ஒன்றை சிசுவின் தாயாரும், பாட்டியும் இணைந்து புதைத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லிந்துல பொலிஸார் குறித்த சிசுவின் தாயையும், சிசுவின் பாட்டியையும் இன்றைய தினம் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த விசாரணைகளின் பின்னர் சிசுவின் தாய் லிந்துல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் நாளைய தினம் நுவரெலியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


மரண அறிவித்தல் திரு வல்லிபுரம் கார்த்திகேசு.09.08.17

பிறப்பு : 29 மே 1940 — இறப்பு : 9 ஓகஸ்ட் 2017
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கார்த்திகேசு அவர்கள் 09-08-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்தம்பி நாகமுத்து தம்பதிகளின் 
அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமாரன்(சுகு- சுவிஸ்), சுமங்கலா(சுமதி- லண்டன்), சுதாகரன்(கரன்– ஜெர்மனி), மோகனாம்பாள்(மோகனா- லண்டன்), விஜேந்திரன்(விஜய்- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலசிங்கம், கருணாகரன், சிறிதரன், விஜிதா, பகிர்தா, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபாசினி, சுபாஸ்கரன் ஆகியோரின் அன்பு பெரிய தந்தையும்,
இலக்கியா, தாரங்கி, இலக்‌சன், சங்கீர்த்தனா, கெளசிகன், சந்தூஸ்யா, சாம்பகி, காவியன், கவிநயன், அக்‌ஷயன், அனுஷயன்,
 அஸ்மிதன், நிறோசன். கபிலன், டிலக்சன், கஸ்தூரி, கயனிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நயனியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்,
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் 
செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறி, சுபா — இலங்கை
தொலைபேசி: +94212050443
சுகுமாரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41787951750
சுமதி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447476186167
மோகனா — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447496278011
விஜய் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765159149
கெளசி — கனடா
தொலைபேசி: +15143519492
கரன் — ஜெர்மனி
தொலைபேசி: +491736987773
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

கிளிநொச்சியில் யாழ் இளைஞர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சி, இயக்கச்சியில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் தனிப்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியை சேர்ந்த பெண்ணொருவரின் முறையற்ற உறவுமுறை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மனைவியின் செயற்பாடு காரணமாக மனஉளைச்சல் அடைந்த கணவன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
விஷம் அருந்திய நிலையில், பாதிக்கப்பட்ட கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் குணமடைந்த நிலையில் மூன்று நாட்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றிருந்த அவரின் நண்பர்கள், குழப்பத்திற்கு காரணமான பிறிதொரு நபரை
 தாக்கியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் யாழிலிருந்து சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 35, 25, 19 வயதுடையவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி இருந்தனர்.
அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுத் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 7 ஆகஸ்ட், 2017

மஸ்கெலியாவில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கரவண்டி!

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பிரதேத்தில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து வித்துக்குள்ளாகியுள்ளது
இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலை அதிகாரிகள் 
தெரிவித்தனர்
காயமடைந்த இருவரும் பிரவுஸ்வீக் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.



ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நீதிபதி இளஞ்செழியன் வட்டுக்கோட்டை படுகொலை விசாரணையை நடத்த தடை!

வட்டுக்கோட்டை கொலை வழக்கு விசாரணையை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் விசாரணை செய்யக்கூடாதென மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி 
இளஞ்செழியனின் தீர்ப்பில் நம்பிக்கையில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேன்முறையீடு செய்திருந்தார். இதற்கமையவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014 மார்ச் 15ம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் யாழ்ப்பாண கல்லூரிக்கும், சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த துடுப்பாட்ட போட்டியில் கைகலப்பு இடம்பெற்றது. இதன்போது அமலன் என்பவர் அடித்து கொல்லப்பட்டிருந்தார்.
இதில் தொடர்புடையவர்கள் என 6 பேருக்கு எதிராக யாழ் மேல்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு சந்தேகநபரிற்கு எதிராக எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியிருந்தார். இந்த வழக்கு 
விசாரணையொன்றின் பின், நீதிபதி இளஞ்செழியன் வழக்கு பற்றி கருத்து கூறினார் என சந்தேகநபரால் சுமந்திரனிடம் கூறப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்கும் தகுதி இளஞ்செழியனிற்கு இல்லையென்றும், வேறொரு மேல்நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முன்தினம்  ஏற்றுக்கொண்டது. இந்த மனு தொடர்பான பதில் அறிக்கையை சட்டமா அதிபர் எதிர்வரும் ஒக்ரோபர் 20ம் திகதி வரை மன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும், அதுவரை கொலைவழக்கு விசாரணையை யாழ் மேல்நீதிமன்றில் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என மேன்முறையீட்டு நீதிமன்று அறிவித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



காடுகளில் தீ வைப்பதற்கு காரணமாக யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்! இராணுவத்தினருக்கு உத்தரவு

உலகில் காடுகளை பாதுகாப்பதில் அரசாங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக சிரத்தை எடுத்துவருகின்றன.
ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களைப் பாதுகாப்பதில் உரித்துடையவர்களாகின்றார்கள். மரம் வளர்ப்போம், இயற்கையை பேணுவோம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக அமைந்திருக்கிறது.
மரங்களை அழிப்பதனால் இயற்கையாக கிடைக்கும் மழை பொய்த்துப் போய்விடுகின்றது. இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர் மட்டுமன்றி, குடிநீர்க்காகவும் அலைய வேண்டியிருக்கிறது.
மரங்கள் பூமித்தாயின் சொத்து. அதனை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பல்வேறு நாடுகளில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதியில்லை.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மரங்களை வெட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமாயின், அதற்கு முறையான அனுமதி பெறப்படுவதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக மற்றொரு கன்று நாட்டப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டும் இருக்கின்றன
 பல நாடுகளில்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்க்கைக்குமானது. ஆனால் சில தனி நபர்களின் அசமந்தப் போக்கினாலும், அசட்டையீனங்களினாலும் மரங்கள் 
அழிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் தனிநபர் சண்டையினை மையப்படுத்தி காடுகளுக்கு தீ வைப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது. இது தொடர்பாக பல காடுகள் தீக்கு இரையாகியிருக்கின்றன.
மனிதர்களால் மாத்திரமன்றி இயற்கையின் வறட்சியினால் காட்டுத் தீ ஏற்படுவதும் உண்டு.
அதேபோன்று இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் அடிக்கடி தீப்பிடித்து பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக வறட்சியான காலங்களில் ஏற்படும் காட்டுத் தீயானது, அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் வரை பரவும்.
இந்த ஆண்டின் கோடைக்காலம் தொடங்கும் முன்பே, காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவம் மிக அதிகமாக உள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஜூலை 27-ம் திகதி நிலவரப்படி 173 இடங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள பகுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து ஜூலை 30-ம்திகதி 239 இடங்கள் மிகவும் வெப்பம் அதிகம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த இராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுடன் தேசிய பேரிடர் தடுப்பு முகமையும் போராடி வருகின்றது.
எனினும், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, காடுகளில் சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை சுட்டுத் தள்ளும்படி ஜாம்பி மாகாண இராணுவ அதிகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தெற்கு சுமத்ரா மாகாணத்திலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் காட்டுத் தீயின் உக்கிரம் மேலும் அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் தடுப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அத்தனை வளங்களையும் பாதுகாக்க வேண்டியது 
மனிதனது கடமையாகும்.
ஆனால் மனிதர்கள் தங்களின் அசிங்கத்தை காடுகளில் காட்டுவது முறையற்றது என்று சூழலியலாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
இந்நிலையில் இராணுவ அதிகாரியின் இந்த உத்தரவிற்கு அமைய கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சனி, 5 ஆகஸ்ட், 2017

மரண அறிவித்தல் திருமதி. தயாபரன் நந்தினி .04.08.17

மறைவு  04-08-2017 
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாபரன் நந்தினி அவர்கள் 04-08-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுந்தரலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரட்ணம், இராசலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,தயாபரன் அவர்களின் அன்பு மனைவியும்,திவீஷன், திஷாந், திவர்ஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,குமுதினி, காலஞ்சென்ற தயாபரன், சுபேந்தினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,தயாநிதி, சந்திரமோகன், நவனீதமோகன், பரமேஸ்வரன், ரவீந்திரராஜா, சந்திதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சியானா, சகானா, சகீசன, சிந்துஜன், சஞ்ஜித் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்..
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல் குடும்பத்தினர்
கணவர் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216243849
மகன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41791748485
செல்லிடப்பேசி: +41798550565
ரவி(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41794232712
சந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41786640397
பதிதாஸ் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41779242573
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 07/08/2017, 07:30 மு.ப — 06:00 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/08/2017, 11:00 மு.ப — 03:00 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 08/08/2017, 07:30 மு.ப — 06:30 பி.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 09/08/2017, 07:30 மு.ப — 09:00 மு.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland 
கிரியை
திகதி: புதன்கிழமை 09/08/2017, 09:30 மு.ப — 11:45 மு.ப
முகவரி: Chemin du Capelard 5, 1007 Lausanne Switzerland
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய நாமும் இறைவனை
 பிரார்த்திக்கின்றோம்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

புதன், 2 ஆகஸ்ட், 2017

நாளையும் குறிகாட்டுவான் நயினாதீவு படகுச் சேவை நடக்காது

குறிகாட்டுவான் – நயினாதீவு இடையே படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளரகள் நேற்றுத் தமது சேவைகளை நிறுத்தினர். அவர்களின் சேவைப் புறக்கணிப்புப் போராட்டம் இன்றும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் திடீரென இங்கு படகுச் சேவையில் ஈடுபடுகின்றனர். அதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைகின்றது. இது தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர்கள் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் உரிய பதில் வழங்கப்படாததால் நாளையும் போராட்டம் தொடரும் என்று அவர்கள்
 தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




மரண அறிவித்தல் திருமதி. பாலசிங்கம் கமலாதேவி.01.08.17

 உதிர்வு- 01-08-2017
யாழ் சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட திருமதி.  பாலசிங்கம் கமலாதேவி.
அவர்கள் 01-08-2017 அன்று இறைபதம் அடைந்தார்.
இவர்காலம்சென்ற வ. பாலசிங்கத்தின் அவர்களின்அன்பு மனைவியும், நந்தன்அவர்களின் பாசம்மிக்கதாயாரும் , (காலஞ் சென்ற கந்தசாமி) பரமேஸ்வரி, ‌சின்னத்துரை ( காலம்சென்ற செல்லத்துரை, 
சின்னராஐாவினது சகோதரியும் )
பரமேஸ்வரி, செல்லம்மா, மலர் (காலஞ் சென்ற பரராசசிங்கம், பூபாலசிங்கம் ) பரமேஸ்வரியின் மைத்துனியும்
விக்கினேஸ்வரன், ஸ்ரீஸ்கந்தராஐா, கலா ,லீலாவதி, சுதாகரன் ஆகியோரின் சித்தியும்
மகேந்திரராஐா (காலஞ்சென்று புஸ்பராணி) சாந்தகுமாரி,ஸ்ரீகண்ணதாஸ்,ஐெயலஸ்மி, ஐெயறஞ்சினி, ஐெயகிருஸ்ணா, ஐெயறுாபனா, ஐெயசந்தரா, ஐெயசித்திரா, ஐெயபாரதி, ஐெயறுாபவேல், ஐெயசத்திவேல், ஐெயகுகவேல், ஐெயராஐவேல், ஐெயப்பிரகாஸ், ஐெயதர்சன், ஐெயா மதன், ரதி (காலம் சென்ற றஞ்சன்) நளினி,ஆகியேரின் பாசமிகுமாமியாரும் ஆவர்
அன்னாரின் இறுதித்தகனம் 02.08,2017 இன்று நடைபெற்றது  
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் .
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திப்போம்
தகவல் குடும்பத்தினர்