siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 27 ஏப்ரல், 2016

வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் – வரி திருத்தத்தால்!

மே மாதம் 2ம் திகதி முதல் இடம்பெறும் வரித்திருத்ததுடன் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறு திருத்தப்படும் என குறிப்பாக கூற முடியாது என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நுகர்வோர் இந்த காலகட்டத்தில் சந்தையில் காணப்படும் வாகனங்களை கொள்வனவு செய்தால் பொருத்தமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய நிலவரப்படி வாகன சந்தை உறுதியற்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலரின் மாற்றம் மற்றும் தற்போது ஜப்பானில் காணப்படும் பொருளாதார நிலைமையும் இதனை பாதித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 6 ஏப்ரல், 2016

சாரதிகளே கவனம் !மது அருந்தி வாகனம் செலுத்தினால் கைது

சித்திரை புதுவருடத்தின்  போது வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்வதற்காக பொலிஸ்  விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் 20ம் திகதி வரை மது அருந்திவிட்டு வாகனத்தை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக பொலிஸ்
  தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் ,பொலிஸ்  சீருடையிலும் , சிவில் உடையிலும் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கபடுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>