siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 29 நவம்பர், 2015

ஆள் கடலில் மூழ்கி இளைஞன் மரணம்

தொண்டமானாறு அக்கரை கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வல்வெட்டித்துறை, இமையானன் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சங்கீத்தன் (வயது 18) என்ற இளைஞன் நீரில் மூழ்கி 
உயிரிழந்துள்ளான்.

நேற்று வெள்ளிக்கிழமை கடலுக்கு குளிக்க சென்றிருந்த நிலையிலே குறித்த இளைஞன் அலையில் அடித்து 
செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை (28) சடலத்தை மீட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் 
ஒப்படைக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 25 நவம்பர், 2015

எசமான் ஒருவரை அவரது நாய் 'சுட்டதால்' காயம்அடைந்துள்ளார் !

வேட்டைக்கு சென்ற ஒருவர் அவரது நாயால் 'சுட்டு' காயப்படுத்தப்பட்ட விநோத சம்பவம் பிரான்சில்
 நடந்திருக்கிறது.
தென்மேற்கு பிரான்ஸ் பகுதியில் வேட்டையாடிக்கொண்டிருந்த ஒருவரை அவரது நாய் 'சுட்டு' காயப்படுத்திவிட்டது.
பிரான்ஸின் மெஸ்ப்ளீட் என்ற நகருக்கருகே, அவர் தன்னுடைய வேட்டைத் துப்பாக்கியை ஒரு மரத்தின் மீது சாய்த்து வைத்துவிட்டு, தான் சுட்டு வீழ்த்திய பறவை ஒன்றை எடுக்கச் சென்றிருக்கிறார். அப்போது அவருடைய நாய் அந்தத் துப்பாக்கியை தள்ளிவிட்டிருக்கிறது
 போலத்தெரிகிறது 
. விழுந்த துப்பாக்கி மீது ஏறி அந்த நாய் நடந்த போது அந்த துப்பாக்கியை தற்செயலாக வெடிக்கச் செய்திருக்கிரது.
ஓய்வூதியம் வாங்கும் இந்த நபர் கையில் துப்பாக்கிக் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார். பிரான்சில் கடந்த ஆண்டு மட்டும் வேட்டை ஆடும்போது ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் விலங்குகள் என்று தவறுதலாகக் கருதப்பட்டு 
சுடப்பட்டவர்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

இறக்கும் குழந்தைகளுக்கு உடனே பிறப்பு பதிவு கட்டாயம்?

பிறந்தவுடன் இறக்கும் குழந்தைகளின் பிறப்புகளை பதிவு செய்வதை கட்டாயம் என அறிவித்து சுகாதார அமைச்சு அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு சுற்றறிக்கை 
அனுப்பியுள்ளது.
பிறந்த குழந்தை இறந்தால், அது குறித்து உடனடியாக பிரதேசத்தில் உள்ள பதிவாளர் அல்லது உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சு வைத்தியசாலைகளுக்கு ஆலோசனை 
வழங்கியுள்ளது.
பிறக்கும் குழந்தை இறப்புகள் குறித்து இதுவரை சில பிரதேசங்களில் மாத்திரமே பதிவு செய்யப்பட்டு வந்துள்ளது.
கடந்த வருடத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
 பிறந்த 402 குழந்தைகள் இறந்துள்ளதாக மகபேறு வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட ஆலோசகருமான கே.ஈ.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இந்த சிசு மரணங்களில் 201 மரணங்கள் மகபேறு அறையில் நிகழ்ந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 


ஞாயிறு, 22 நவம்பர், 2015

பெண் ஒருவர்க்கு முகமாற்று அறுவை சிகிச்சைசாதனை?

அகோர முகம் படைத்த போலந்து பெண் ஒருவருக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் பெரிய சாதனை புரிந்துள்ளனர்.
போலந்து நாட்டின் வாழும் 26 வயது பெண் Joanna என்பவர். இவருக்கு பிறவியிலேயே neurofibromatosis என்ற நோய் தாக்கியதால் அவருடைய முகம் நாள் ஆக ஆக அகோரமாக மாறிக்கொண்டே வந்தது. பிறரிடம் பேசுவதற்கும், சாப்பிடுவதற்கும் கூட மிகுந்த கஷ்டப்பட்டார். எனவே அவருடைய முகத்தை 80% மாற்றி வேறு முகத்தை பொருத்த மருத்துவர்கள்
 முடிவு செய்தனர்.
23 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை செய்து Joannaவின் முகத்தை அழகிய முகமாக மாற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்தார்கள். மீண்டும் அவருக்கு பழையபடி கோரமான நோய் தாக்காது என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.
முகமாற்று அறுவை சிகிச்சை முடிந்து நேற்று அழகிய முகத்துடன் வெளியே வந்த Joanna,தனக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கும், தனக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்த தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>



வெள்ளி, 20 நவம்பர், 2015

இரு இளைஞர்கள் தாடிவளர்த்ததால் பொலிசாரால் கைது?

யாழில் இரு இளைஞர்கள் தாடியுடன் வீதியில் நடந்து சென்றமையால் அவர்களை கைது செய்து மானிப்பாய் பொலிசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் மகன் மற்றும் மகனின் நண்பர் ஆகிய  இரு இளைஞர்களுமே அவ்வாறு கைது செய்யப்பட்டு தாக்குதலுக்கு இலக்கானவர்கள் ஆவார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவிக்கையில்,

நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் எனது மகன் உட்பட இரு இளைஞர்கள் மானிப்பாய் பகுதிக்கு தமது சொந்த அலுவல் காரணமாக சென்று இருந்தனர்.

நவாலி முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் வைத்து அவர்கள் இருவரையும் மானிப்பாய் பொலிசார் கைது செய்து தமது வாகனத்தில் ஏற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

அங்கு எனது மகனின் நண்பர் எதற்காக எம்மை கைது செய்தீர்கள் என்று கேட்டதற்கு  ஆறு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சேர்ந்து அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

பிளாஸ்ரிக் குழாய்க்குள் மண்ணினை இட்டு அதனால் தாக்கி யுள்ளனர் மாலை 5 மணிக்கு நான் அவரை  பொலிஸ் நிலையத்தில் பார்த்த போது அவரின் தலையில் பெரிய வீக்கம் இருந்தது. அந்தளவுக்கு பொலிசார் தலையில் கூட மிக மோசமாக தாக்கியுள்ளனர்.

அங்குள்ள அதிகாரியை கேட்டேன் எதற்காக இவர்களை கைது செய்துள்ளீர்கள் என, சந்தேகத்தின் பேரில் கைது செய்தோம். என்றார்.

யாழில் இளைஞர்கள் வீதியில் நடந்து சென்றால் பொலிசார் சந்தேகத்தின் பேரில் என கைது செய்ய முடியுமா ? அவசரகால சட்டம் இருக்கின்றதா ? என்ன அடிப்படையில் கைது செய்தீர்கள்  என கேட்டேன். அவர்கள் தாடி வளர்த்து இருக்கிறார்கள். அதனால் எமக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது என கூறினார்.

அவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்தவர்கள் விரத காலத்தில் தலைமுடி வெட்டுவதோ  சேவ் எடுப்பதோ இல்லை என அவருக்கு விளங்க படுத்தினேன்.

நண்பகல் 12 மணிக்கு வீதியால் நடந்து சென்ற குற்றத்திற்காக இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்து தாக்கி உள்ளனர். அத்துடன் எந்த விதமான முறைப்பாடும் அவர்கள் மீது பொலிசார் எழுதவில்லை.மனித உரிமை மீறப்பட்டு உள்ளது.

நண்பகல்  12 மணிக்கு  கைது  செய்யப்பட்டவர்களை சுமார் எட்டு  மணித்தியாலங்கள் தடுத்து  வைத்து இருந்து இரவு எட்டு மணிக்கு தான் எனது மகனையும் அவரது நண்பரையும் பொலிசார் விடுவித்தனர் அதுவரை எந்தவிதமான முறைப்படும் எழுதவில்லை. சந்தேகம் எனும் பெயரில் இருவரையும் கைது செய்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தினேன்.

அவர்கள் அது தொடர்பில் முறைப்பாட்டினை தம்மிடம் தருமாறு கோரியுள்ளனர். முறைப்பாட்டினை கொடுக்க வுள்ளேன்.அந்த முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் இந்த விடயத்தை அணைந்து மேல் மட்டத்திற்கும் எடுத்து செல்வேன்.

வடமாகாண  எதிர்கட்சி  தலைவர் என்பதாலும் சிங்களம் தெரியும் என்பதாலும் என்னால் எனது மகனுக்காக கதைக்க முடிந்தது இதுவே ஒரு சாதாரண குடும்ப பின்னணியினை கொண்ட  இளைஞர்களுக்கு நடந்து இருந்தால் பொலிசாரை கேள்வி கேட்டு இருக்க முடியாது.

எனவே இந்த சம்பவத்தை  சாதாரண சம்பவமாக விடாது இதற்கு உரிய நடவடிக்கையினை பொலிஸ் உயர் அதிகாரிகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதன், 18 நவம்பர், 2015

சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிப்பு விழா

அமெரிக்க அரசின் யு.எஸ் எயிட் நிறுவனத்தின் அனுசரணையுடன் புரைலர் கோழி முகாமைத்துவ பயிற்சி திட்டத்தின் கீழ் சிறந்த உற்பத்தியாளர்களுக்கான பட்டமளிக்கும் விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூண் ஹோட்டலில் நடைபெற்றது.
யு. எஸ். எயிட்டின் வாழ்வாதார அபிவிருத்தி உதவி வழங்கும் சொலிட் திட்டத்தில் கீழ் ஓட்டமாவடி, மாங்கேணி, காத்தான்குடி,
 பாலமுனை ஆகிய 
பிரதேசங்களில் புரைலர் கோழி வளர்புத் திட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி புரைலர் முகாமைத்துவ பயிற்சியில் கலந்து கொண்டு பரீட்சையில் சித்தி பெற்ற 80 பயணாளிகளுக்கு சான்றிதழ்கள் 
வழங்கப்பட்டன.
ஒரு பயனாளிக்கு 100 கோழிக் குஞ்சுகள் வீதம் 8000 குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. குஞ்சுகளை வளர்ப்பதற்காக போதிய வசதி வாய்ப்புக்கள் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், யு எஸ். எயிட்டின் பிரதி குழுத் தலைவர் அந்திரோ பேக்கர், குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் ரி.சக்திவேல் உட்பட கலந்து கொண்டனர்.
இதன்போது புரைலர் முகாமைத்தவ பயிற்சி கைநூல் அரச அதிபர் பி.எஸ்.எம். சாள்சிற்கு குழுத்தலைவர் கலாநிதி டேவிட் டையர் 
வழங்கி வைத்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 13 நவம்பர், 2015

பதுங்கியிருந்த 450 மில்லியன் டொலர் வெளியே வந்தது!

சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்த 450 மில்லியன் டொலர் பணம் இலங்கை வங்கிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுவிஸ் 
வங்கிகளில் 
வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத்தை மீள இலங்கைக்கு கொண்டு வருமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கணக்கு உரிமையாளர்கள், இலங்கை வங்கிகளில் சுமார் 450 மில்லியன் டொலர் பணத்தை வைப்புச் 
செய்துள்ளனர்.
இலங்கையர்கள் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்திருந்த பணத்தை இலங்கை வங்கிகளில் வைப்புச் செய்ய ஆரம்பித்துள்ளனர். சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் வைப்பாளர்களது பணமும் இவற்றில் அடங்குகின்றது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

யாழ் நல்லூர் முருகன் ஆலய முன்றலில் காட்சி கொடுத்த மயில்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில்01.11.2015
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் காட்சி கொடுத்தது.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள்,தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள்,வெளிநாட்டவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.பலரும் தங்கள் புகைப்படக் கருவிகள் மற்றும் கைபேசிகளில் புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
ஆலயத்தி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் மயிலானது கடந்த சில நாட்களாக திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.ஆனால் ,நீண்ட நாட்களின் பின்னர் ஆலய 
முன்றலில் குறித்த மயிலானது காட்சி கொடுப்பதாகவும் ,இவ்வாறான
 காட்சியைக் காண்பது அபூர்வமெனவும் நாள்தோறும் ஆலயத்துக்கு வருகை தரும் அடியவர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை,குறித்த மயிலைச் சீண்ட முனைபவர்களையும் ,வேடிக்கை பார்த்த சிலரையும் இந்த மயில் துரத்திக் கொத்தியதையும் அவதானிக்க முடிந்தது.ஆன போதும் நல்லூரானைத் தரிசிக்க வந்த அடியவர்களுக்கு மயிலால் தொல்லை எதுவும் ஏற்படவில்லை என்பதும்
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>