siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 31 ஆகஸ்ட், 2022

அக்கரைப்பற்ரில் கணவருடன் சென்ற பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த சோகம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில்.31-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் குறித்த பல்கலைக்கழக மாணவி 
உயிரிழந்திருந்தார்.
பல்கலைக்கழக மாணவி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு ஸ்தலத்தில் மரணமடைந்திருந்ததுடன் சம்பவ இடத்தில் காயமடைந்த 
பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
 பெற்று வருகின்றார்.
விபத்தில் உயிரிழந்த நிலையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2 ஆம் வருட மாணவியான காத்தான்குடி 5ஆம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய அக்பர் அலி பாத்திமா அஸ்பா என்பவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.
பின்னர் சடலமாக நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரேத மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் கட்டளையிட்டார்.
மேலும் குறித்த விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையில் இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் குறிப்பிடப்பட்டு பின்னர் உறவினர்களிடம் 
கையளிக்கப்பட்டுள்ளது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

நாட்டில் கர்ப்பிணிகள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவு

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தற்போது வழங்கப்படும் 20,000 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 2,500 ரூபா
 வழங்கப்பட்டவுள்ளது.
நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால பாதீட்டு உரையில் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் தெரிவுசெய்யப்பட்ட 61,000 குடும்பங்களுக்கு 10,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு 
வழங்கப்பட்டவுள்ளது.
4 மாதங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் 
மேலும் தெரிவத்தார்.
அத்துடன், எதிர்வரும் முதலாம் திகதி முதல் பெறுமதிசேர் வரி (VAT) 12% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

நாட்டில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனங்களுக்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கடந்த சில நாட்களாக வரையறைக்கு உட்பட்ட எரிபொருள் விநியோகமே இடம்பெறுகின்றது என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் குசும் சந்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாகவே  மக்கள் வாகனங்களுடன் வரிசையில் காத்திருக்கின்றமை அதிகரித்துள்ளதோடு தற்போது 60 சதவீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் 
அவர் தெரிவித்தார்.
மேலும் முத்துராஜவலை எரிபொருள் முனையத்தில் இருந்து டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுவதோடு பெற்றோல் விநியோகிக்கப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

நாட்டில் பெற்றோருடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த அவலம்

ஹசலக்க, பஹே-எல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர்.28-08-2022. இன்று 
 உயிரிழந்துள்ளார்.
14 நாட்களுக்கு முன்னர் யானை தாக்கி உயிரிழந்த தனது சகோதரரின் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளுக்காக பெற்றோருடன் விகாரைக்கு சென்று கொண்டிருந்தபோதே, யானை தாக்குதலுக்கு
 இலக்கானார்.
பின்னர், அவர் ஹசலக்க வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கங்கேயாய, பஹே-எல பகுதியைச் சேர்ந்த அனுத்தரா இந்துனில் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவர்.
காட்டு யானைகளின் அட்டகாசத்திற்கு உரிய தீர்வை அதிகாரிகள் வழங்காவிடின் மேலும் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவதை தடுக்க முடியாது என கிராம மக்கள் 
தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 27 ஆகஸ்ட், 2022

நாட்டில் கோழிக்கறி, மீன் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

நாட்டில் கோழிக்கறி மற்றும் மீனின் விலை குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் கோழி இறைச்சியின் விலை மற்றும் அதற்கான விலை தொடர்பான தரவுகள் நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீமெந்து, கம்பி மற்றும் இரும்பு ஆகியவற்றின் விலைகளை குறைப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

அக்குரல பிரதேசத்தில் பாம்பு பிடிக்கும் நபர் பாம்பு தீண்டி மரணம்

பிடிக்கப்பட்ட நாக பாம்பை காட்டுக்குள் கொண்டு சென்று விடாது தோளில் போட்டுக்கொண்டு காட்சிப்படுத்திய பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று அம்பலாங்கொடை அக்குரல பிரதேசத்தில் நடந்துள்ளது.சம்பவத்தில் சுதத் குமார என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
அக்குரல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த நாக பாம்பை 
இந்த நபர் பிடித்துள்ளார்.
பிடித்த பாம்பை தோளில் போட்டுக்கொண்டு பாம்பின் இருமுனைகளிலும் பிடித்து அங்கும், இங்கும் இழுத்த போதே அந்த பாம்பு தீண்டியதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பாம்பு தீண்டிய நபர் முதலில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையில் நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
பாம்பு தீண்டி மரணமடைந்த இந்த நபர் இதற்கு முன்னர் பல பாம்புகளை பிடித்து காட்டில் விட்டுள்ளதாகவும் பிரதேச 
மக்கள் கூறியுள்ளார்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் பசியில் உள்ளவர்கள் வந்து உணவை உட்கொள்ளுங்கள் ஒரு ரூபாயேனும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் ஒருவேளை உணவுக்காக
 போராடி வருகின்றனர்.
விண்ணை முட்டும் விலைவாசியால் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, உணவுப்பொருட்களின் விலைகளும் 
அதிகரித்துள்ளன.
இவ்வாறான நெருக்கடியான நிலையில் பலர் உணவின்றி பசியால் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தென்னிலங்கையிலுள்ள வரல்ல, இழுக்கெட்டிய பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளர் அங்கு வருபவர்களை
 நெகிழ வைத்துள்ளார்.
தனது உணவகத்திற்கு வரும் வறுமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் உட்கொள்ள முடியும்.
அதற்கு கட்டணம் அறவிடப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தனது உணவகத்தில் பதாகை ஒன்றையும் அவர் மக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.
அதில், “இல்லாதவர்கள் பசியில் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வந்து உட்கொள்ளுங்கள்.. ஒரு ரூபாயேனும் 
எங்களுக்கு வேண்டாம்.
உண்மையாகவே அவசியம் உள்ளவர்கள் மாத்திரம் இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வந்து உணவுகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
அத்துடன் கர்ப்பிணி தாய்மாருக்கு உட்கொள்ளும் உணவிற்கும் பணம் அறவிடப்படாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகமான விலைவாசி உள்ள போதும் இவ்வாறான மனிதநேயத்துடன் சிலர் செயற்படுவது, பசியால் வாடுவோருக்கு தெய்வமாக தென்படுவதாக பயன்பெற்ற பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





புதன், 24 ஆகஸ்ட், 2022

நாட்டில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஆசிரியர் மரணம்

அதிவேக நெடுஞ்சாலையில்  23-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 47 வயதான கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இவர் 16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் 
தெரிவிக்கப்படுகிறது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

அமரர் இராசு பொன்மலர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி .23.08.22

தோற்றம்-15-05-1949— மறைவு : 14.09-2020  
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட 
அமரர்  இராசு பொன்மலர் 
அவர்களின் இரண்டாம் ஆண்டு  நினைவஞ்சலி .
திதி- 23-08-2022.செவ்வாய்கிழமை.அன்று 
 . அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்  பாசமிகு மகளும்
திரு  இராசு அவர்களின் அன்பு மனைவியும்  சுபாசினி சுதாகரன் ரசீகரன்  வசீகரன்  கயனி  சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின் 
அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா  (ஆசிரியை ) சசிகலா துவாரகா
 (கோப்பாய் ஆசிரிய கலாசாலை  )சற்குணரா  
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும் 
திரு தேய்வேந்திரம்   மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து ஆகியோரின்  அன்புச்சகோதரியும் 
  ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா   அபிஷ்னா கபீஷன்   சங்கீத்  சபீஸ்ணா  ஹரிஷ்வின் யதிஸ்னா 
  பவிஷனன் நைனிஹா  ஆகியரின்   பேத்தியும்  ஆவர்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
காலச்சுழற்சியில் ஓராண்டு  கடந்து போனாலும் இன்னும் 
எம் கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 நித்தம் நாம்
 இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
எங்கள் அம்மா   
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 அன்னாரின்
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவற்கிரி .கொம் நவக்கிரி.கொம் ,நிலாவரை கொம்.இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி
 என்றும் உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் ,கணவர்  பிள்ளைகள் சகோதர்கள் பேரப்பிள்ளைகள் புட்டப் பிள்ளைகள்  
 வீட்டு முகவரி: 
நவற்கிரி புத்தூர் 
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்  
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் 21,000 மெற்றிக் தொன் உரம் கையளிப்பு

21,000 மெற்றிக் தொன் உரத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கை மக்களுக்கு உத்தியோகபூர்வமாக, இன்று (22) கையளித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்ட செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் விசேட உதவித் திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 44,000 மெற்றிக் தொன் உரம் வழங்கப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் மொத்தம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரம் உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரமானது உணவுப் பாதுகாப்புக்கும் இலங்கை விவசாயிகளுக்கு உதவுவதற்கும் பங்களிக்கும் என்று அந்த செய்தியில் 
சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் இந்தியாவுடனான நெருக்கமான உறவுகள் மற்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தின் மூலம் மக்களுக்கு நன்மைகளை வெளிப்படுத்துகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விவசாயம் மற்றும் வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>




ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தெமடபிடிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் பலி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் தெமடபிடிய  20-08-2022.அன்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் 
உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்துள்ள பெண் யார், அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என 
பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த நேற்றிரவு பேலியகொட பகுதியை நோக்கிப் பயணித்த லொறியொன்று, வீதியின் குறுக்கே நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் மீது மோதியுள்ளதாக 
தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணை அங்கிருந்தவர்கள் உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என 
பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் 
வைக்கப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொட்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

சனி, 20 ஆகஸ்ட், 2022

கோர விபத்த்தில் திருகோணமலையில் மூவர் பலி

திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுட்குட்பட்ட 64ஆம் கட்டை பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 3 பேர் 
உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளதுடன் 3பேர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் 
தெரிவித்துள்ளார்.
64ம் கட்டை- பச்சனூர் பகுதியிலுள்ள விகாரைக்கு சேறுவில பிரதேசத்திலிருந்து சிரமதான பணிக்காக உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரத்தின் இணைப்பு பகுதி துண்டிக்கப்பட்டமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

திடீரென அல்ஜீரியாவில் பரவிய காட்டுத் தீ - 37 பேர் உடல் கருகி உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான‌ அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் காட்டுத்தீ பரவுவது வழக்கம். இதேபோன்று தற்போதும் வடபகுதியில் உள்ள 8 மாகாணங்களில் திடீரென காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயில் சிக்கி 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உள்துறை மந்திரி கமெல் பெல்ஜாத் கூறியுள்ளார். இந்நிலையில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புத்துறை வீரர்கள் கடுமையாக
 போராடி வருகின்றனர்.
அதோடு ஹெலிகாப்டர் மூலமாகவும் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து தீ கட்டுக்குள் வராத காரணத்தினால் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த காட்டுத்தீயினால் தற்போது வரை 16 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு அதிபர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



மரண அறிவித்தல் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்19.08.2022

தோற்றம் -07-12-1955-மறைவு-19.08.2022
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் ஐயம்பிள்ளை சந்திரசேகரம்
 ( சந்திரன் )19-08-2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்புமகனும் காலஞ்சென்றவர்களான துரைராஜா சிதம்பரம்(பூரணம் ) தம்பதிகளின் பாசமிகு மருமகனும் சந்திரசேகரம் கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும் சந்திரசேகரம் பண்ணீர்தாஸ் ((பண்ணீர்)(பிரான்ஸ் )
காலஞ்சென்ற சுகதீபா(தீபா)    மற்றும் டர்சிகா (லண்டன்)  (தரிசி)ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுகந்தினி (பிரான்ஸ் )  மற்றும் அமரர்  சுரேஸ்குமார் மற்றும் செல்வகுமரன்  (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பாசமிகுமாமனாரும்
 கவிஷன் தஸ்மிகா  அஸ்விகா  ஆகியோரின்
 பாசமிகு பேரனும்   காலஞ்சென்ற பத்மவதி  காலஞ்சென்ற கந்தசாமி )மற்றும் ராசரத்தினம்(ரத்தி) (கனடா ) 
(கனடா ) சண்முகம் (இலங்கை )நல்லம்மா  (அருந்தவம்)(கனடா ) சுப்பையா (ஞான ன்- இலங்கை) பாக்கியம் (பாக்கி இலங்கை)  அகியோரின் அன்புச்சகோதனும் 
காலஞ்சென்ற தங்கரத்தினம் (தங்காள் )மற்றும் பாலையா ( ஓய்வு பெற்ற யாழ் போதனா வையித்தியசாலை ஊழியர் இலங்கை )காலஞ்சென்ற இரத்தினம்(சின்னம்மான்-சின்னண்ணை ககேசன்துறை சீமெந்து தொழில் சாலை முன்னாள் ஊழியர் ) சரஸ்வதி/(கனடா ) தியாகராஜா(தேவன்-ராஜா  சுவிஸ் ) இராசேஸ்வரி (இலங்கை )கணேசலிங்கம் (கனடா ) சந்திரன் (ஜேர்மனி )ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்  .
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2022.ஞாயிற்றுக்கிழமை   
அன்று அவரது இல்லத்தில்
 நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெறும் 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
. எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி 
அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து ,
 எமது ஆறுதலையும் பகிர்ந்து கொள்கின்றோம் 
ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!! ஓம்சாந்தி !!!
தகவல் குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வியாழன், 18 ஆகஸ்ட், 2022

சர்வதேச சந்தையில் குறைவடையும் தங்கம் மற்றும் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் தங்க விலையானது மூன்றாவது நாளாக  1800 டொலர்களாக சரிந்து காணப்படுகின்றது.
இதற்கமைய, தங்கம் விலையானது சற்று குறையலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.
பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் இருந்து வரும் நிலையில் தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1790.70 டொலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
டொலரின் மதிப்பு தற்போது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் தங்க விலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்துள்ளதாகவும் இருப்பினும் மீண்டும் அதிகரிக்கலாம் என்றும்
 கணிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 17 ஆகஸ்ட், 2022

கோப்பாய் பகுதியில் நண்பர் வீட்டுக்கு சென்றவர் திடீரென உயிரிழப்பு


யாழ் கோப்பாய் பகுதியை சேர்ந்த நபரொருவர் தனது நண்பனின் வீட்டுக்கு சென்று கதிரையில் அமர்ந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது 16-08-2022. அன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே இவ்வாறு
 உயிரிழந்துள்ளார்.
அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்துள்ளதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உடல் கூற்று பரிசோதனையின்போது அவர் கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டடுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற சம்பவம் மூவர் வைத்தியசாலையில்

யாழ்.மண்டைதீவு பகுதியில்.16-08-2022. இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர்
 காயமடைந்துள்ளனர்.
சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து
 மோதியுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் 
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



திங்கள், 15 ஆகஸ்ட், 2022

கண்டி பிரதான வீதியில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பாரிய விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நுவரெலியா பகுதியிலிருந்து லபுக்கலை பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை மேற்பிரிவு பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயணிகளை ஏற்றிக் கொண்டு லபுக்கலை பகுதி நோக்கி நேற்று மாலை பயணிக்கும் போதே பிரதான வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து ஏற்படும் போது பேருந்தில் 30ற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாகவும், விபத்தின் போது, 4 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர் எனவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 4 பேரும், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தொடர்ந்தும் சிகிச்சை 
பெற்று வருகின்றனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குகின்றனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பில் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது, பேருந்து சாரதிக்கு வேக கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து நேர்ந்ததாக  
தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு 
வருகின்றனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

உங்ககளுக்கு இல்லற தர்மம் எது என்பது தெரியுமா

கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யக் கூடாது. கடைசி வரை கட்டிய மனைவியை கண் கலங்காமல் காப்பவன் ஒரு போதும் 
தவம் செய்ய தேவையில்லை.
இருபத்தியொரு வயது வரை அவனவன் சொந்த ஆன்மா கர்ம 
செயலுக்கு வராது.
அந்த ஆன்மாவின் ஸ்தூலத்தை தாய் தந்தை கர்மாவே வழி நடத்தும். 96 தத்துவங்கள் முடிவு பெறுவது 21 வயதிலே.
அதன் பிறகு தான் அவன் சொந்த கர்மா, கர்ம 
செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது. சக்தியோடு 
துணை சேர வேண்டும்.
தியான மூலம், பக்தி மூலம், ஞான மூலம், யோக மூலம், தீட்சை மூலம், சிவசக்தி மூலம் என சிரசு ஏற பல
 வழிகள் உள்ளது.
ஆனால், சிறந்த மூலம் இல்லற தர்மம் ஒன்றே. சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது.
சக்தி மாறி சிவம் சேர்ந்தால் 
பிறவியே சிக்கலே.
உடல் பொருத்தம் பூமியில் ஜெயிப்பதில்லை. ஆன்ம பொருத்தமே
 பிறவியை ஜெயிக்கும்.
அப்பேற்பட்ட சக்தியோடு சிவம் சேரும் போது சர்வமும் சாந்தியாகும்.
சிவசக்தி சங்கமத்தில் ஊடலும் கூடலும் 
உற்சாகம்தானே.
ஆனால் சக்தியின் கண்ணீர் துளிகளுக்கு சிவன் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை.
ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழிகள் தர்மத்தில் உள்ளது.
ஆனால் உறவுகளைக் கொண்டே உலகம் தன்னை வெல்வதும் பிறவிப்பிணி அறுக்கவும் உலகம் அறியாத ஒரு வழி உள்ளது.
சொந்தம் என்பது பழைய பாக்கி என்பதை அறிந்தவனுக்கு சொந்தம் 
ஒரு சுமை இல்லை.
நட்பு என்பது பழைய பாக்கி என்பதை பண்போடு அறிந்தவனுக்கு 
பதற்றம் இல்லை.
எதிரி என்பவன் தன் கர்மாவின் தார்மீக கணக்கே என தனித்தன்மையோடு உணர்ந்தவனுக்கு எதிரி இல்லை.
உனது எதிரியும் நீயே உனது செயலே கர்மாவாகி அந்த கர்மாவே 
நீ எதிரி என நினைக்கும்.
ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கெதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது. உன் எதிரி முகத்தில் உனது கர்மா உன் கண்களுக்கு தெரியவந்தால், எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் 
தேவைப்படுவதில்லை.
உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும்
 பழைய கணக்காய்.
பழைய கணக்கு புரிந்தால் பந்தபாசம் சகோதரத்துவம் மீது பற்றற்ற பற்று வைத்து பிறவி கடனை வெல்லலாம்.
கர்மாவின் கணக்கு புரிந்தால் உனக்கு, பக்கத்தில் சரிபாதி அமரும் மனைவி யார் என்று உனக்கு புரியும்.
தாய் தந்தையரை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாயார் வழி ஏழேழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் 
உனது ஏழேழு ஜென்மத்து சமுதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.
கோவில்கள் செல்வதாலோ குடந்தை சென்று மகாமக திருக்குளத்தில் புண்ய நீராடுவதாலோ உன் வாழ்க்கையில் ஒன்றும் மாறாது சிறிது காலம் சிறு இன்பம் மட்டும் கிடைக்கும்.
ஆனால் ஒரேயொரு உறவை நீ பூஜித்தால் பிறவிப்பிணி இன்னல்
 மொத்தமாய் தீரும்.
அது அந்த புனிதமான உறவு உன் அன்பு மனைவியே.
உலகிலேயே மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது சிரமம்
 மட்டும் அல்ல.
அதுதான் உலகிலேயே தலைசிறந்த தவம். தவம் என்பது 
சாமான்யர்களுக்கு சிரமமே
தாலி கட்டிய மனைவியையும் உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும் உளமார நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ அர்ப்பணித்தால் அதுவே உலகின் தலைசிறந்த தர்மம் 
சிறந்த தவம் ஆகும்.
தினமும் தன் தாய் தந்தையரை வணங்குபவன் பித்ரு தோஷம் நீங்க இராமேஸ்வரம் போக தேவையில்லை.
தன் உற்றார் உறவினர்களை மதிப்பவன் கிரகதோஷம் நீங்க திருவண்ணாமலை சென்று இடைக்காடரை தேட தேவையில்லை. நவக்கிரகங்களையும் சுற்ற தேவையில்லை.
கட்டிய மனைவியை அவள் மூலம் பெற்றெடுத்த குழந்தைகளை அன்போடு நேசிப்பவன், அவர்களை ஒரு கஷ்டமும் இல்லாமல் ஆனந்தமாக வைத்திருப்பவன், கர்ம விமோசனம் தேடி பாபநாசம் சென்று அகத்திய முனிவரை தேட தேவையில்லை.
இதற்காகத்தான் நமது முப்பாட்டன், இல்லற வாழ்க்கை மூலம் அமைத்தான் ஆதியோக வம்சம்.
மனைவி அழும் இல்லம் நரகம், மனைவி சிரிக்கும் இல்லம் சொர்க்கம். உன் இல்லம் நரகமா? சொர்க்கமா? என்பதை நீதான் 
தீர்மானிக்க வேண்டும்.
சக்தியை உணர்ந்தாலே போதும் அங்கு 
சிவம் ஜோதியாக ஜொலிக்கும்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


சனி, 13 ஆகஸ்ட், 2022

மரண அறிவித்தல்அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் ( வெடிமான்)13 08 22


மறைவு-13 08 2022.
யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம்
 ( வெடிமான்) 13/08/2022.அன்று  இறைவனடி சேர்ந்தார் அன்னார், காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும் ஆவர் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-08-2022.சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில்
  அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் நவற்கிரி  நிலாவரை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம்  நடைபெற்றது 
தகவல் குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் திருமதி குணரத்தினம்.கமலராணி (ராணி )13.08.2

தோற்றம் -23-03-1959-மறைவு 14--07-2022.
யாழ் துணுக்காயை  பிறப்பிடமகவும் யாழ் , புத்தூரை வாழ்விடமாகவும்  நவற்கிரியில் வசித்தவரும் தற்போது  சுவிஸ் பேர்ண்னில் வசித்து வந்த திருமதி ,குணரத்தினம்(ராணி)  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 
13-08-2022.சனிக்கிழமை  அன்று   அன்னார் திரு குணரத்தினம்(குணம் ) அவர்களின்  பாசமிகு மனைவியும்
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின்
 பாசமிகு தாயாரும்,ஆவார் அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரத்தனை   நிகழ்வுகள் 13,10,2022,சனிக்கிழமை  அன்று  பிற்பகல்,12,மணிஅளவில் சுவிஸ் பேர்ண் ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்  ஆலய மண்டபத்தில் நடைபெறும்   அன்னாரின்   ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும்  அதனைத்   தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
 இங்கனம் -குடும்பத்தினர் 
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
31ம் நாள் அந்தியேட்டி கிரியை.13-08-2022..சனிக்கிழமை  அன்று 
>>>>> 
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும் 
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே! 
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை 
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
 நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம் சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும் 
கணவர் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் , 
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்-
குடும்பத்தினர்

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

மூளாய் , முன்கோடை பகுதியில் பசு மாட்டுக்கு இடம்பெற்ற கொடூர சம்பவம்

யாழ் -வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டபகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த பசு மாடொன்றின் கால் ஒன்றினை விஷமிகள் துண்டாடியதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை 
ஏற்படுத்தியுள்ளனர்.
மூளாய் , முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வருகின்றார்.
அந்நிலையில் வழமை போன்று தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.
மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று துண்டாடப்பட்ட நிலையில் மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் மாடு கிடந்துள்ளது.
அதனை அங்கிருந்து மீட்ட போதிலும் மாடு வலியினால் உணவு
 உட்கொள்ளாது இருக்கின்றது.
இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால் நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளர் முறைப்பாடு 
அளித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை 
முன்னெடுத்துள்ளனர்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>