siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 15 மே, 2024

பேருந்து கவிழ்ந்து விபத்து அமெரிக்கா-புளோரிடாவில் எட்டு பேர் மரணம்

அமெரிக்காவின் மத்திய புளோரிடாவில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.

53 விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, ஆர்லாண்டோவின் வடக்கே உள்ள மரியன் மாகாணத்தில் ஒரு டிரக் மீது பேருந்து மோதியதாக புளோரிடா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

தர்பூசணிகளை அறுவடை செய்து வரும் டுனெல்லனில் உள்ள கேனான் பண்ணைகளுக்கு தொழிலாளர்கள் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது, சாலையைவிட்டு விலகிச் சென்ற பேருந்து தடுப்பை உடைத்து பக்கத்தில் ஒரு வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில், இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பண்ணை மூடப்படுவதாக கேனான் பண்ணை அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது  




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக