siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 8 டிசம்பர், 2015

சிறுபோகத்தை நிறுத்துவதால் ,2,500 மில்லியன் நட்டம்!!!

அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால், கிளிநொச்சி விவசாய சமூகத்துக்கு 2,500 மில்லியன் நட்டம் ஏற்படும்.
கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்குப் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். எனினும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாம் அதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சி.சிவமோகன் தெரிவித்தார்.
அடுத்த வருடத்துக்கான சிறுபோக செய்கையை நிறுத்துவது தொடர்பான கூட்டம், மாவட்ட செயலக மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக நிறைவு செய்வதற்காகவே, அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்தவேண்டியுள்ளது. அத்தோடு பயிர்ச்செய்கை நிறுத்தப்படுகின்ற போது, பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கவேண்டும்‘ என்று அவர் தெரிவித்தார்.
வாழ்வாதாரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளைத் தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாக பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் எஸ்.சுதாகரன் மேலும் தெரிவித்தார்.-
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக