siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 18 அக்டோபர், 2024

நாட்டில் கெப் வாகனம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து பாடசாலை மாணவன் பலி

நாட்டில்மாத்தளை, நாவுல மின்சார சபை அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (17) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் கெப் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் நாவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 
உயிரிழந்துள்ளார்.
நாவுல, பெனலபொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து, 46 வயதுடைய கெப் வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக